Jump to content

`எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்குத்தான் வாக்கு விழுகிறது!' - திருமாவளவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"இரவில் மின்சாரத்தை அணைத்தைவிட்டு, அதிகாரிகளின் துணையோடு ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். இது தேர்தல்தானா, ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா" என திருமாவளவன் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

                                              355_19214_13027.jpg

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனது தாயார் மற்றும் குடும்பத்துடன் வந்து வாக்கைப் பதிவுசெய்தார்.

 

                                           vck_08361_13398.jpg

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல் திருமாவளவன், ``தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றுவரும் 39 மக்களவைத் தொகுதியிலும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு விழுவதாக ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். இதனை மாவட்டத் தேர்தல் அதிகாரி கவனத்தில்கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். ஒருபுறம் நரேந்திர மோடி தலைமையிலான மதவாத சக்திகள், இன்னொரு புறம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஜனநாயக சக்திகள் இரு அணிகளாகப் பிரிந்து நின்று தேர்தலைச் சந்திக்கிறோம். ஜனநாயக சக்திகள் வெற்றிபெற்றால், நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்படும் என நம்புகிறேன். காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், ஆளும் கட்சியான அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளுக்கு வெளிப்படையாகவே ஒரு சார்பாக ஆதரவு நிலையெடுத்துச் செயல்பட்டு வந்துள்ளார்கள். இன்றைக்காவது நடுநிலைமையோடு இருந்து தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழகம் மற்றும் அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் வெற்றிபெறுவார்கள். மோடி தலைமையிலான ஆட்சி அகற்றப்படும்.

                                               WhatsApp_Image_2018-06-26_at_4.57.57_PM_

மத்தியில் ஒரு நல்ல அரசு அமையும். தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சி அமையும். இந்திய அளவில் தமிழகத்தில்தான் வாக்குக்கு பணம் என்ற கலாசாரம் மேலோங்கியுள்ளது. இது கவலை அளிக்கும் செயல். ஆளும் தரப்பைச் சேர்ந்த யார் மீதும் வருமான வரித் துறை சோதனை நடத்தியதாகத் தகவல் இல்லை. ஆனால் தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைக் குறிவைத்து வருமான வரித் துறை சோதனை நடத்திவருகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த, தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளை ஆட்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என்பது வேதனை அளிக்கிறது. அதேபோல, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில், இரவு  மின்சாரத்தை அணைத்தைவிட்டு பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இது எல்லாம் அதிகாரிகளுக்குத் தெரியாதா. இதை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டப்போகிறார்கள். நேர்மையாகத் தேர்தலை நடத்தக்கூடிய துணிவும் அதிகாரமும் தேர்தல் ஆணையம் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்" எனக் கூறினார்.

https://www.vikatan.com/news/tamilnadu/155426-vck-leader-thirumavalavan-alleges-malfunction-in-evm-machines.html?artfrm=trending_vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.