Jump to content

பாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது

porn-age-checks-720x405.jpg

பிரித்தானியாவில் பாலியல் தளங்கள், ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது.

ஜூலை 15 ஆம் திகதி முதல் இத்தகைய காணொளிகளைப் பார்ப்பவர்களின் வயது எல்லை பரிசீலிக்கப்படும் திட்டமானது கடுமையானமுறையில் நடைமுறைக்குவரும் என்று டிஜிட்டல் கலாசாரத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களைப் பாதுகாக்கும் சமூகத்திட்டத்தின் அங்கமாக இத்திட்டம் கொண்டுவரப்படுகின்றது. பொருத்தமற்ற உள்ளடக்கத்திலிருந்து சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இலக்காக உள்ளது.

ஆபாசத் தளங்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் வயது எல்லையைச் செயற்படுத்த மறுக்கும் தளங்கள் மீது £ 250,000 வரை அபராதம் விதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 15 ஆம் திகதி முதல் பாலியல் தளங்கள் தமது காணொளிகளைப் பார்ப்பவர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும். தவறுகின்ற பட்சத்தில் அத்தகைய இணையத் தளங்கள் தடுக்கப்படும்.

porn-age-checks-2.jpg

 

http://athavannews.com/பாலியல்-தளங்கள்-பார்ப்பத/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இதையெல்லாம் கண்காணிப்பார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

எப்படி இதையெல்லாம் கண்காணிப்பார்கள்?

இது கண்காணிப்பதற்காகவல்ல  இன்னும் ஊக்கத்துடன் அவர்களை பார்க்க வைப்பதற்கு....!  😄

Link to comment
Share on other sites

8 hours ago, Nathamuni said:

எப்படி இதையெல்லாம் கண்காணிப்பார்கள்?

பதிந்து கடவுச்சீட்டு எடுக்கும் போது பிறந்த திகதியை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையில் உள்ள தகவல்களை வழங்க வேண்டி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

பதிந்து கடவுச்சீட்டு எடுக்கும் போது பிறந்த திகதியை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையில் உள்ள தகவல்களை வழங்க வேண்டி இருக்கும்.

நான் தாத்தாவின் பாஸ்ப்போட்டினை கொடுக்க மாட்டேன் என்று அவயளுக்கு எப்படி தெரியவருமாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஐ.எஸ்.பி மூலம் கட்டுப்படுத்தப்படும்.

https://en.wikipedia.org/wiki/Internet_censorship_in_the_United_Kingdom

கூகிளின் மெயில் id ஒன்றினை பெற ஆகக் குறைந்த வயது 13.

சிறுவர்கள் எல்லோரும் பெரியவர்கள் போல ஆண்டினை மாத்தி அக்கௌன்ட் திறக்கிறார்கள்.

அந்த மெயில் ஐடியை கொடுத்தாலே இந்த தளங்களில் அக்கௌன்ட் திறக்க முடியும். 13 வயதுக்கு மேலானவர்களுக்கு மெயில் id இல்லாததால், அவர்கள் வயது வந்தவர்கள் தான் என்று கருதுகிறார்களாம்.

எப்படி இருக்கு?

அது போகட்டும்.... பாலியல் தளத்துக்கு குறையாத வகையில், 10 வயது பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி என்று சொல்லிக் கொடுக்கிறார்களே. அது?

இப்போது , gay  உறவு குறித்து சொல்லி கொடுக்க புதிய திட்டம் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

முதலில் பர்மிங்காம் பகுதியில் இஸ்லாமியர்கள் எதிர்த்தார்கள். 

அரசு கண்டு கொள்ளாமல் இருக்க முயன்றது.

இப்போது பார்த்தால், முறையில்லாத ஒரு விசயத்தை, எவ்வாறு சொல்லிக் கொடுக்க முடியும். இது மத நம்பிக்கைகளுக்கு அப்பாலானது என பல் இன போராட்டமாக மாறி வருகிறது. 

அரசு இதனை உன்னிப்பாக கவனிக்கிறதாம் இப்போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 4/19/2019 at 1:31 PM, suvy said:

இது கண்காணிப்பதற்காகவல்ல  இன்னும் ஊக்கத்துடன் அவர்களை பார்க்க வைப்பதற்கு....!  😄

இலங்கையில் தேடினால் உடனே கிடைக்கிறது இதனால் சந்திக்கு சந்தி போணும் கையுமாத்தான் இருக்கிறானுகள் இதனால் தான் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் என நான் நினைக்கிறன்

அந்த நாளில டீவி ஓர் இடத்த கசட் போடும் ரொக்காடார் ஓர் இடத்தில கசட்டுக்கு  போய் கையேந்தி ஓர் இடத்தில நாள் பார்த்து வச்சி எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பம் இப்ப கையில கிடைக்கிறது அண்றைட் போணில்😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.