Jump to content

முன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்

April 19, 2019

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

LTTE-NEW.png?resize=800%2C480

முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே நேற்று (18) வியாழக்கிழமை விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

முகநூல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றை லைக் செய்தமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகமான நான்காம் மாடியில் முன்னிலையாகுமாறு முன்னாள் போராளிக்கு தெல்லிப்பளைப் பொலிஸாரால் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டவாறு அவர் நேற்று வியாழக்கிழமை நான்காம் மாடிக்குச் சென்றிருந்தார். அவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தினர்.

தங்களுடன் நெருக்கமானவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே விசாரணைக்கு அழைக்கப்பட்டீர்கள் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்ததாக முன்னாள் போராளி கூறியுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

 

http://globaltamilnews.net/2019/118662/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

தங்களுடன் நெருக்கமானவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே விசாரணைக்கு அழைக்கப்பட்டீர்கள் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்ததாக முன்னாள் போராளி கூறியுள்ளார்.

தமிழனின் குணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Investigation.jpg

முகநூலில் விடுதலைப் புலிகளின் ஒளிப்படத்துக்கு லைக்: முன்னாள் போராளியிடம் விசாரணை

முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றை லைக் செய்தமை குறித்து, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகமான நான்காம் மாடியில் முன்னிலையாகுமாறு முன்னாள் போராளிக்கு தெல்லிப்பளைப் பொலிஸாரால் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டவாறு அவர் நேற்று, நான்காம் மாடிக்குச் சென்றிருந்தார். அவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தினர்.

தங்களுடன் நெருக்கமானவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே விசாரணைக்கு அழைக்கப்பட்டீர்கள் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்ததாக முன்னாள் போராளி கூறியுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

http://athavannews.com/முகநூலில்-விடுதலைப்-புலி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் நிலமை அங்கு, போட்டு கொடுப்பவர்கள் நம்மவர்களே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இது தான் நிலமை அங்கு, போட்டு கொடுப்பவர்கள் நம்மவர்களே! 

இப்பபெல்லாம் நிறை பேரு இருக்கிறார்கள் சம்பளத்துக்கு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.