Jump to content

மனுக்கா தேனில் செயற்கை இரசாயனம் – மூன்று வருடங்களின் பின்னர் ஒப்புக்கொண்ட நிறுவனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

honey.jpg

மனுக்கா தேனில் செயற்கை இரசாயனம் – மூன்று வருடங்களின் பின்னர் ஒப்புக்கொண்ட நிறுவனம்!

தேனில் இரசாயனம் கலக்கப்பட்டமையினை நியூசிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளது.

Evergreen Life என்ற குறித்த நிறுவனத்தின் தேனில் அங்கீகரிக்கப்படாத இரசாயனங்கள் இருந்ததால், நியூசிலாந்து அரசாங்கம் அதை கடந்த 2016ஆம் ஆண்டு தடை செய்திருந்தது.

இந்தநிலையில் தடை விதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில், தேனில் இரசாயனம் கலக்கப்பட்டமையினை குறித்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

பானத்தில், மருந்தில், உணவில், அழகுப் பராமரிப்பில் என தேனுக்குப் பலவகைப் பயன்கள் உண்டு. நியூசிலாந்து, அவுஸ்ரேலியாவில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூவிலிருந்து சேகரிக்கப்படுவது மனுக்கா தேன்.

அந்தப் பூவகை சற்று குறைந்த எண்ணிக்கையில் மலரும் என்பதால், மனுக்கா தேன் மற்ற தேன் வகைகளுடன் ஒப்பிடுகையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மனுக்கா தேன் மற்ற வகைத் தேன்களைவிட நுண்ணுயிர் எதிர்ப்புசக்தி அதிகம் கொண்டது என நம்பப்படுகிறது.

இந்தநிலையில் சர்ச்சைக்குரிய நிறுவனம் தான் விற்கும் மனுக்கா தேனில் செயற்கை இரசாயனங்களைச் சேர்த்து, அதிலுள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்தமையினை ஒப்புக்கொண்டுள்ளது.

http://athavannews.com/மனுக்கா-தேனில்-செயற்கை-இ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

மனுக்கா தேனில் செயற்கை இரசாயனம் – மூன்று வருடங்களின் பின்னர் ஒப்புக்கொண்ட நிறுவனம்!

ஆகா இந்த தேனை குடிக்கத் தானே கிருபனின் தொப்பை போகுதாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்தில் இப்படியான விடயங்கள் நடப்பது குறைவு. அமெரிக்கா தான் இந்தமாதிரியான வேலையலுக்கு  முன்னணி. நானும் மனுக்க தேன் போத்தில் ஒன்று நியூசிலாந்து போனபோது வாங்கி வந்தேன் 

Link to comment
Share on other sites

சென்ற வருடமும் இப்படி ஒரு தகவல் வெளியானது. எல்லா brandsஐயும் நம்பேலாது. நானும் இப்படி ஒரு வாளி தேனைப் பாவித்துள்ளேன். பாவித்து முடிய வாளியின் அடியில் எஞ்சிய மெழுகுத்தன்மையான படலத்தைப் பார்த்தவுடன் தான் இது சுத்தமான தேனா என்ற சந்தேகம் எழுந்தது.

இப்போதெல்லாம் organic certified தேன் வகைகளைத் தான் வாங்குவேன். கொஞ்சம் விலை அதிகம். நல்ல தேன் போலத்தான் தெரிகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.