Jump to content

தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் -- ரசுனியின் தாறுமாறு பேச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் எப்போது வந்தாலும் தயார்... தர்பார் ரஜினியின் தாறுமாறு பேச்சு..!

Rajini_1200x630xt.jpg

திரையுலகின் சூப்பர்ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக 2017ஆம் ஆண்டின் வெவ்வேறு தருணங்களில் அறிவித்தனர். இவர்களில் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய கமல், மக்களவைத் தேர்தலில் தனித்து களம் கண்டுள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தை துவங்கிய ரஜினி, வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அவர் பிஜேபியின் தேர்தல் அறிக்கையையும் வரவேற்றிருந்தார்.

இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடந்து முடிந்தது. வாக்குப் பதிவு நடந்த சமயத்திலேயே அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. இந்நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை செல்வதற்கு முன்பு  போயஸ் கார்டன் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த  ரஜினி, ரசிகர்களின் ஆர்வம் எனக்குப் புரிகிறது. அவர்களை ஏமாற்றிவிட மாட்டேன் என்று பதிலளித்தார்.

வாக்குப் பதிவு தொடர்பான கேள்விக்கு, 70 சதவிகித வாக்குப் பதிவு என்பது நல்ல விஷயம்தான். சென்னையில் மட்டும் 55 சதவிகிதம் பதிவாகியுள்ளது. தொடர் விடுமுறை விடப்பட்டதால் வாக்காளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால் இங்கு வாக்குப் பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது. வாக்குச் சாவடிகளை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பதிலளித்தார்.

மோடி மீண்டும் பிரதமராவாரா என்பது 23ஆம் தேதி தெரிந்துவிடும் என்று குறிப்பிட்ட ரஜினி, பொன்பரப்பி கலவரம் தொடர்பான கேள்விக்கு பதில் கூறுகையில், கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு இந்த முறை குறைவுதான். தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தெரிவித்தார்.

18 தொகுதி இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சி மாற்றத்தால் பொதுத் தேர்தல் வந்தால் அதில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் தயாராக உள்ளோம் என்று பதிலளித்தார்.

https://tamil.asianetnews.com/politics/superstar-rajinikanth-exclusive-interview-pq8svi

டிஸ்கி :

201611020052251279_No-memorial-yet-for-M

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்ரார் தியாகராஜ பாகவதர் நினைவிடம் ( திருச்சி ) ... 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

D4kF6HEUUAgtD9a.jpg

70வயதிலும் உழைத்து தான் சாப்பிடுவார். ஆனால் வாடகை பாக்கி தரமாட்டார்......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தேர்தல் எப்போது வந்தாலும் தயார்... தர்பார் ரஜினியின் தாறுமாறு பேச்சு..!

Image may contain: 7 people, text

Link to comment
Share on other sites

சரிங்கண்ணா ! சரிங்கண்ணோவ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tamil paithiyam said:

சரிங்கண்ணா ! சரிங்கண்ணோவ் 

Image may contain: 1 person, text

அன்னைக்கி காலையில ஆறு மணி இருக்கும்....
கோழி, கொக்கரக்கோனு... கூவிச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியிடப்பட்ட நேரம்:10:25 (21/04/2019)

 

கடைசி தொடர்பு:10:25 (21/04/2019)

'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை!'

15557373902.gif

 

’ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்’ என்று, __வது முறையாக சொல்லியிருக்கிறார் ரஜினி. எத்தனையாவது முறை என்று சரியாக எண்ண முடியவில்லை. கம்ப்யூட்டரே கன்ஃப்யூஸ் ஆகிறது. அதனால்தான், அங்கே __ போடப்பட்டிருக்கிறது. பொறுத்தருள்க!

ரஜினி

ஒரு காலம் இருந்தது. அப்போதெல்லாம் ரஜினி அரசியல் பேசினால், சிங்கத்தின் கர்ஜனைபோல பார்க்கப்படும். ஆனால், இப்போது ரஜினி அரசியல் பேசினால், சிறுவண்டின் ரீங்காரம் அளவுக்குக்கூட மதிக்கப்படுவதில்லை. ரஜினிக்கு இந்த நிலை வரக்காரணம் ரஜினியேதான். ’எப்போ வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’னு ரஜினி சொல்லி, ஆகிவிட்டது ஆண்டு இருபத்தி மூன்று. ஆனால், இன்னும் அதே வீட்டுவாசலில் அதே கோலத்தை போட்டுக்கொண்டிருக்கிறார். 

 

இந்த நிலையில், வட இந்திய ஊடகங்கள் வேறு, ரஜினி எது சொன்னாலும் ‘தலைவர்.. தலைவர்...’ என்று போட்டு சாவடிக்கிறார்கள். நேற்றைய பேட்டிக்குக்கூட, ‘தலைவர் டோல்ட்’ என்று தலைப்பிட்டு கடுப்பேத்துகிறார்கள். அவர்கள் எந்த அர்த்தத்தில் ‘தலைவர்’ எனப் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. பார்க்கும் நமக்குத்தான் ’கெதக்’கென்று இருக்கிறது. ரஜினியின் சினிமா சார்ந்த செய்திகளுக்கு ‘தலைவர்’ அடைமொழி போடுவதில் தவறில்லை. அவர் உண்மையிலேயே சினிமாவில் அனைவருக்கும் ‘தலைவர்’ தான். ஆனால், அவரின் அரசியல் சார்ந்த செய்திகளுக்கும் ‘தலைவர்’ அடைமொழியிடுவது தமிழ்ச்சமூகத்தை அவமதிக்கும் செயல். அப்படியென்ன அரசியல் களத்தில் ரஜினி செய்துவிட்டார் ‘தலைவர்’ என்று அழைக்க? இந்த அக்கப்போர்களை நிறுத்தினாலே, தமிழன் கொஞ்சம் நிம்மதியாக இருப்பான். 

ஆகட்டும். 2017-க்குப் பிறகான ரஜினியின் பேட்டிகளைப் பார்த்தாலே, ரஜினி அரசியலின் ஆபத்துகளையும் அபாயங்களையும் அறிந்துகொள்ளலாம்.  'காலா' ரிலீஸுக்கு முன்பு தரிசனம் தந்து,  ”தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு சமூக விரோதிகள்தான் காரணம்” என்று கண்டுபிடித்துச் சொன்னார். ’போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்’ என்றும் கடுப்பைக் காண்பித்தார். அதற்கு, ‘தமிழ்நாடு சுடுகாடாகாமல் இருப்பதற்காகத்தான் போராட்டம் நடக்கிறது’ என்று, திருமாவளவன் திருப்பி அடித்தார். அப்போது மட்டுமல்ல, ராகவேந்திரா மண்டபத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிட்டபோதே, ’போராடுவதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள்’ என்றுதான் கருத்துச் சொன்னார். இந்த மனநிலையால்தான், ’யார் நீங்க?’ என்ற கேள்வி எழுந்து, ‘நான் தான்ப்பா ரஜினிகாந்த்’ என்று பதில் சொல்லவேண்டிய நிலை, ரஜினிக்கு ஏற்பட்டது. ஆனாலும் அவரிடம் மாற்றமில்லை. 

ரஜினி

குறித்துவைத்துக்கொள்வோம். ரஜினி ஆரம்பிக்கும் (?) கட்சி எதற்காகவும், எப்போதும் எந்தப் போராட்டங்களையும் நடத்தப்போவதில்லை. தேர்தல், அதன்மூலம் பதவி என்பதை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு களமிறங்கப்போகிறவர், அவர். கமலிடம் கொள்கை கோட்பாடுகள் இல்லை என்றாலும், நிர்வாகரீதியிலான அரசியலை முடிந்தவரை முன்னெடுக்கிறார். ஆனால், ரஜினியிடம் அதைக்கூட நாம் எதிர்பார்க்க முடியாது. அவர் ஆரம்பிக்கும் கட்சி, இப்போது இருக்கும் கட்சிகளுக்கு எந்தவிதத்திலும் மாற்றாக இருக்கப் போவதில்லை, அவற்றின் நீட்சியாக மட்டுமே இருக்கப்போகிறது. இதை, ‘எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொடுப்பேன்’ என்று அறிவித்து, தெளிவாகவே அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

 

'தர்பார்' போஸ்டர் வெளியான தினத்தில் வெளியே வந்து, ‘நதிநீர் இணைப்பை தேர்தல் அறிக்கையில் சொன்னது சூப்பர். பா.ஜ.க-வுக்கு எனது பாராட்டுகள்’ என்றார்.  ‘நதிநீரை இணைத்தால் நாட்டில் வறுமை ஒழிந்துவிடும்’ என்றும் கருத்து சொன்னார். இருக்கட்டும். ஆனால், நதிகள் இணைப்புக்கு பா.ஜ.க இதுவரை செய்திருப்பது என்ன என்பதை, கொஞ்சம் விசாரித்துவிட்டு வந்து கருத்து சொல்லியிருக்கலாம். குறைந்தபட்சம், பா.ஜ.க ஆட்சியில் கங்கை படும் பாட்டை அறிந்துகொண்டேனும் சொல்லெடுத்திருக்கலாம். இந்தியாவின் ஜீவநதிகள் எத்தனை, அதன் தன்மைகள் என்ன, அதன் வழித்தடங்கள் எப்படிப்பட்டவை என எதையுமே அறியாமல், ‘நதிகள் இணைப்பு’ என்பதை உத்தம யோசனையாக முன்னிறுத்துவது, இன்னொரு பிழை. 

உண்மையில், காவிரிப் பிரச்சனையில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று தெரியாமல் இருந்த நேரத்தில், ‘நதிகள் இணைப்பு’ என்பதை பாதுகாப்பு கவசமாகப் பயன்படுத்த ஆரம்பித்தவர்தான் ரஜினி.  அதை அப்படியே மெயின்டெயின் செய்கிறார். அவ்வளவுதான்! தமிழ்நாட்டுக்கு தண்ணீரைத் திறந்துவிடாமல் கர்நாடகம் துரோகம் இழைக்கும் போதெல்லாம், ‘நதிகளை இணைத்தால் இதெல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்லி தப்பித்துவருகிறார். முதல்முறை தப்பிக்க சொல்வது வேறு. ஆனால், இத்தனை ஆண்டுகளாக இதையே சொல்லிக்கொண்டு இருப்பதெல்லாம்.  

ரஜினி

’2.0’ ரிலீஸுக்கு முன்பு, ஏர்போர்ட்டில் ரஜினி பேசியதையும் மறக்க முடியாது. "எந்த ஏழு பேர்?" என்று அப்போதுதான் கேட்டார். “ஏழு கோடி பேருக்கு தலைவனாக விரும்புபவர் , எந்த ஏழு பேர் என்று கேட்கிறார்” என்று ஊமைக்குத்தாக குத்தினார்கள் சமூக ஊடகவாசிகள். இதுகூட பரவாயில்லை. ரஜினி "எந்த ஏழு பேர்?" என்று கேட்டு சில மணி நேரம்கூட ஆகியிருக்கவில்லை. அக்கா தமிழிசை ஆஜராகிறார். "கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை. மீண்டும் கேள்விகளைக் கேட்டால் வேறு பதிலை அளிப்பார்" என்று சொல்கிறார். அவர் சொல்லியது மாதிரியே அடுத்த நாள் வேறு பதில் சொன்னார் ரஜினி. இப்படி ரஜினி எதில் சிக்கினாலும், உடனே காப்பாற்ற வருகிறார்கள் காவிக்கட்சியினர். ரஜினி பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று சொல்ல வரவில்லை. ஆனால், பா.ஜ.க ரஜினிக்கு ஆதரவாக இருக்கிறது.

அதே செய்தியாளர் சந்திப்பில், ’பா.ஜ.க ஆபத்தான கட்சியா?’ என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. “ஆபத்தான கட்சியென்று எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பா.ஜ.க ஆபத்தான கட்சி. மற்றபடி மக்கள்தான் சொல்ல வேண்டும்” என்று சொன்னார். மக்கள் எப்படிச் சொல்வார்கள்... தேர்தலில்தானே சொல்வார்கள்? தமிழ்நாட்டு மக்கள்தான் தேர்தலுக்குத் தேர்தல் சொல்கிறார்களே  ’ஆபத்தான கட்சி’ என்று. ஏற்கலாமே. நாட்டை ஐந்து ஆண்டுகள் ஆட்சிசெய்த ஒரு கட்சியைப் பற்றி ஒரு அபிப்ராயமும் இல்லாத ரஜினியின் அரசியலை எப்படி வியப்பதென்று தெரியவில்லை. ஆனால், ’புதிய இந்தியா பிறந்துவிட்டது’ என்று, மோடிக்கு பிராண்ட் அம்பாசிடராகச் செயல்பட மட்டும் மறக்கவில்லை. கமலாவது அதற்கு மன்னிப்பு கேட்டார். ரஜினிக்கு மன்னிப்பு கேட்பதற்கும் மனம் வரவில்லை.    இன்னும் இந்த அரசு பெற்றுப்போடும் புதிய இந்தியாக்கள் அனைத்துக்கும், ஆதரவு அளிப்பார் போலும் ரஜினி!

”பத்து பேர் சேர்ந்து ஒருவனை எதிர்க்கிறார்கள். எதிர்ப்பவன் பலசாலியா... எதிர்க்கப்படுபவன் பலசாலியா” என்றும் கேட்டுவைத்தார். மோடியை மனதில் வைத்து கேட்ட கேள்வி அது. 1991 - 1995 ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாகூட பலசாலிதான். தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் - பா.ம.க போன்ற கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்து, ஜெயலலிதாவை 1996-ல் வீழ்த்தின. அந்தக் கூட்டணிக்கு ‘வாய்ஸ்’ கொடுத்தவரும் இதே ரஜினிதான். ஆக, அரசியலில் பலசாலியா பலமற்றவரா என்று பார்ப்பதைவிட, நல்லது செய்தாரா தீமை செய்தாரா என்பதே முக்கியம்.  அந்த பலசாலி ஹீரோவா வில்லனா என்றும் பார்க்க வேண்டும். ஆனால் ரஜினியோ, ‘வெற்றி பெறுகிறார்கள்’ என்பதை மட்டுமே வைத்து எவரையும் ஆதரிக்கக்கூடியவராக இருக்கிறார். இது அபாயமான போக்கு. 

ரஜினி

அப்போது இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது, ‘எப்போது கட்சி ஆரம்பிப்பீர்கள் என்று. ’நான் இன்னும் முழுசாக அரசியலில் இறங்கவில்லை’ என்று பதில் சொன்னார். அதாவது, அதுவரை போட்டிருந்த கோடுகளை எல்லாம் அழித்துவிட்டு, மீண்டும் புதுக்கோடு கிழித்தார். 2017-ம் ஆண்டுதான், "அரசியலில் இறங்குவது உறுதி. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போகிறேன்" என்று சொல்லியிருந்தார். ‘ஆனந்த சுதந்திரம்’ அடைந்துவிட்டதைப் போல, துள்ளிக்குதித்தார்கள் அவரது ரசிகர்கள். ஆனால், அதற்குப் பிறகு எப்போது கேட்டாலும் ’இன்னும் முழுசாக இறங்கவில்லை’ என்றே பதில் சொல்லிவருகிறார். முதல்வர் நாற்காலியில் அமரும்போதுதான் ‘முழுதாக அரசியலில் இறங்கிவிட்டேன்’ என்பார் போல. ஆனால், அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. ’அடுத்த ஓட்டு ரஜினிக்கே’ என்று காத்திருக்கும் ரசிகர்களை நினைத்தால்தான், அந்தோ பரிதாபமாக இருக்கிறது. 

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், இப்போதிருக்கும் கட்சிகள் ‘கள அரசியல், கட்சி அரசியல்’ என இரண்டு தளத்திலும் பயணிக்கின்றன. தேர்தல்களில் போட்டியிடும் அதே வேளை, ஏதேனும் பிரச்னையென்றால் களத்தில் இறங்கிப் போராடவும் செய்கின்றன. ஆனால், ரஜினி புதிதாக ஒரு அரசியல் பாதையைப் போடுகிறார். அதாவது, எந்தப் போராட்டமும் வேண்டாம், அறிக்கைகள் வேண்டாம், கள ஆய்வுகள் வேண்டாம், நேரடியாகத் தேர்தல், அதில் வெற்றி, அப்படியே பதவி என்ற அரசியலை முன்னெடுக்க முனைகிறார். நடுவில் மக்கள் என்று சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்குப் பிரச்னைகள் இருக்கும், அதற்காகக் களம் இறங்க வேண்டும் என்பதையே மறக்கிறார். இது ஆபத்தானது! ‘அவரது அரசியலுக்கு அர்த்தமுள்ள  ஓர் அடைமொழி வைக்க வேண்டுமானால், ‘பதவி அரசியல்’ என்று வைக்கலாம். 

”அறிக்கைகள், ஆய்வுகள் போன்ற அன்றாட அரசியல் பேசுவது அவருக்குப் பிடிக்காது’ என்கிறார்கள், ரஜினி ரசிகர்கள். அப்படியென்றால் எந்த அரசியல் பேசுவது ரஜினிக்குப் பிடிக்கும்? ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒருதரம் போயஸ்கார்டன் வீட்டுவாசலுக்கு வந்து, ‘அரசியலுக்கு வருவேன். ஆமென்’ என்று சொல்லிச்செல்லும் அரசியல்தான் பிடிக்குமோ? அன்றாட அரசியலில்தானே அதிகாரத்தின் அட்டூழியங்களைக் கண்டிக்க முடியும்... அவல நிகழ்வுகளுக்கு எதிர்க்குரல் எழுப்ப முடியும்? இது எதற்குமே ரஜினியிடம் இருந்து எதிர்வினை வராது என்றால் எப்படி? அப்படியே வந்தாலும், எந்தத் தரப்பையும் பாதிக்காத மாதிரி ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு கதவைச் சாத்திவிட வேண்டியது. சமீபத்தில் கொடுத்த பேட்டியில், தேர்தல் நேர சாதிக்கலவரங்களைப் பற்றி கேட்கிறார்கள்.  அதற்கு, ‘முன்பு நடந்ததைவிட இது குறைவுதான்’ என்று கருத்து சொல்கிறார். இதுதான், சாதிமத பேதமற்ற ஆன்மிக அரசியலை கொள்கையாக அறிவித்தவரின் அதிகபட்ச எதிர்வினை. இதனாலேயே, ’இப்போதிருக்கும் கட்சிகளுக்கு எந்தவிதத்திலும் ரஜினி மாற்றாக இருக்கப்போவதில்லை’ என்பதை அடித்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. 

ரஜினி

’எந்தக் கட்சியையும் சாடாமல் அரசியல் செய்வதுதான் அரசியல் நாகரிகம்’ என்று, புது பொழிப்புரையும் கொடுத்துவருகிறார், ரஜினி. எப்படி முடியும்? அரசியல் கட்சி தொடங்கப்போகிறாரா அல்லது அரிசிக்கடை தொடங்கப்போகிறாரா என்று தெரியவில்லை. அந்த அரசியல் நாகரிகத்தில், ’எவரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது’ என்ற பாதுகாப்பு மனநிலையைத் தவிர, வேறெதுவும் இல்லை. இப்படி, பயத்தாலும் பதற்றத்தாலும் பாதுகாப்பின்மையாலும் சூழப்பட்டிருப்பவர் எதற்காக அரசியலுக்கு வர வேண்டும்? ஒரே காரணம்தான்... மேலே சொன்னது போல, பதவி என்பதற்காக மட்டுமே ரஜினி அரசியலுக்கு வருகிறார். அர்ஜுனனின் கண்ணுக்கு கிளியின் கண் மட்டுமே தெரிந்ததைப் போல, ரஜினியின் கண்களுக்கு முதல்வர் நாற்காலி மட்டுமே தெரிகிறது. இல்லை  அவரது செயல்கள் அப்படித்தான் புரிந்துகொள்ள வைக்கிறது. அதனால்தான், ’ஏட்டய்யா கூடதான் போவேன்’ என்பதைப்போல, ’சட்டமன்றத் தேர்தலில் மட்டும்தான் போட்டியிடுவேன்’ என்கிறார். 

ஆக, ரஜினி அரசியல் புரட்சிக்காகவோ, சமூக முன்னேற்றத்துக்காகவோ கட்சி ஆரம்பிக்க விரும்பவில்லை. ’ஒருமுறையேனும் அந்த முதல்வர் நாற்காலியில் நாம் அமர்ந்துவிட வேண்டும்’ என்ற ஒற்றை எண்ணத்தில் மட்டுமே அரசியலுக்கு வரத் துடிக்கிறார் என்பது போலத்தான் தெரிகிறது. ’வந்தா கரெக்டா வரணும்... கரெக்டா வந்தா கரெக்டா அடிக்கணும்... ’என்று, ஏதோ புதுத்தொழில் தொடங்கப்போகும் தொழிலதிபர் போலவே ரஜினி பேசுவது அதனால்தான். அவரது அரசியலின் மையம் ’பதவி’ மட்டுமே. அவரது இலக்கு, அந்தப் பதவி தரும் அந்தஸ்து மட்டுமே. வாஜ்பாய், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மோடி என்று ரஜினி வியக்கும் எல்லோருமே, பெரும்பதவிகளில் இருந்தவர்கள். இவர்கள் மட்டுமே ரஜினிக்கு எப்போதும் உவக்கிறார்கள். இதுவே, ரஜினியின் நோக்கத்தைத் தெளிவாக உணர்த்துகிறது.

ரஜினி  

 ஒரு பேட்டியில், 'நான் முட்டாள் அல்ல' என்று சொன்னார், ரஜினி. ’இதோ வருகிறேன் அதோ வருகிறேன்’ என்று 30 வருடங்களை முடித்த ரஜினி முட்டாளா என்ன? இல்லவே இல்லை. அவர் தெளிவாகவே இருக்கிறார்.  இந்தியாவில் இருக்கும் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்களில், ரஜினி அளவுக்கு ரசிகர்களை அலைக்கழித்த இன்னொருவர் இருக்க முடியாது. ’கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம்’ என்று ரஜினி பாட்டு பாடிக்கொண்டிருந்தபோது, ஆந்திரத்தின் பவன் கல்யாணுக்கு  10 வயசு. இப்போது, அவர் அரசியலில் இறங்கி, கட்சி ஆரம்பித்து, ஆறு ஆண்டுகள் களத்தில் பணியாற்றி, தேர்தலில் போட்டியிட்டு, முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இவரோ, ‘இப்போ வரேன்... அப்போ வரேன்..’ என்று போக்குக்காட்டியே பொழப்பு நடத்துகிறார்.

’பால் எப்போது பொங்கும்’ என்று ஆசை ஆசையாக காத்துக்கிடக்கிறார்கள், ரஜினி ரசிகர்கள். ’பாலாக இருந்தால் பொங்கும், பச்சைத்தண்ணீர் பொங்கவே பொங்காது’ என்பதை அவர்களுக்கு யார் எடுத்துச்சொல்வது?

https://www.vikatan.com/news/coverstory/155588-rajinikanth-tests-patience-of-his-fans-and-tamilnadu-people.html?artfrm=trending_vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®°à®à®¿à®©à®¿

இந்த ராஜனிகாந்தை, அரசியலுக்குள் இழுத்து...
நார் நாராய் கிழித்து....  துண்டை காணோம், துணியை காணோம் என்று...
அம்மணமாய்... ஓட  விடுவம்  என்றால், ஆள்... "லேசில்"  அம்பிட மாட்டேன்  என்று அடம் பிடிக்கிறார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

57726557_2311274988923456_4034503037308370944_n.jpg?_nc_cat=102&_nc_ht=scontent-dus1-1.xx&oh=9d05935163447769437ed95137eed2e1&oe=5D74E9D7

ரஜனி... கட்சி ஆரம்பிக்கும் வரை, கடன் கிடையாது. :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.