Jump to content

விசாரணையின் பின்னர் தமிழ் ஊடகவியலாளர் பொலிஸாரால் கைது இலங்கைக் கடற்படை அதிகாரியின் பொ


Recommended Posts

வடக்கு- கிழக்கில் தமிழ் ஊடகத்துறையின் சுதந்திரம்- முல்லைத்தீவில்

விசாரணையின் பின்னர் தமிழ் ஊடகவியலாளர் பொலிஸாரால் கைது

இலங்கைக் கடற்படை அதிகாரியின் பொய்யான முறைப்பாடென ஊடகவியலாளர்கள் குற்றச்சாட்டு
 
 
main photo
 
வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் இன்று சனிக்கிழமை இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் உள்ள இலங்கை அரசின் கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு மேற்கொண்ட பொய்யான முறைப்பாட்டில் தவசீல்ன் கைது செய்யப்பட்டுள்ளதாக சக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வடக்கு கிழக்கில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கடந்த 07.04.2019 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்திருந்தனர். அப்போது செல்வபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் படம் எடுத்தார் 
 
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் அவர் அச்சுறுத்தினார். இவருடைய செயற்பாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர் தவசீலன் குறித்த அந்த நபரிடம் கேள்வி கேட்டார்.

ஆனால் எதையும் கூறாமல் அந்த நபர் தப்பியோடிவிட்டார். ஆனாலும் பொது மக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்ட அந்த நபரை விசாரித்தபோது, தான் இலங்கைக் கடற்படை அதிகாரியெனக் கூறியுள்ளார்.

இதன் காரணத்தினாலேயே தவசீலன் இலங்கைப் பொலிஸாரால் சென்ற 18 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். நேற்று வெள்ளிக்கிழமையும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமையும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேர விசாரணையின் பின்னர் தவசீலன் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வடக்கு- கிழக்கில் ஈழத் தமிழரின் பிரச்சினையை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்க்ள் திட்டமிடப்பட்டு அச்சுறுத்தப்படும் நடவடிக்கைகள் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக ஊடக அமைப்புகள் பல தடவை கண்ட அறிக்கைகளை வெளியிட்டதுடன் இலங்கை அரசாங்கத்தின் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடமும் முறைப்பாடும் செய்திருந்தனர்.

இ்வ்வாறானதொரு நிலையில் தவசீலன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆர்ப்பாட்டத்தில் படம் எடுத்த அந்த நபர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்த தவசீலன் பொலிஸாருக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பொலிஸார் அங்கு வருகை தரவில்லை.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் சிலருடன் வட்டுவாகல் பிரதேசத்தில் உள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு குறித்த நபரை அழைத்து சென்று அவர் கடற்படை அதிகாரியா என தவசீலன் கேட்டுள்ளார்.

குறித்த நபர் இலங்கைக் கடற்படை அதிகாரியென முகாமில் இருந்த உயர் அதிகாரிகள் சிலர் உறுதிப்படுத்தினர். அதனையடுத்து குறித்த நபரை அந்தக் கடற்படை முகாமில் கையளித்துவிட்டு தவசீலனும் கூடச் சென்ற மக்களும் திம்பிவிட்டனர்.

இந்த ஆத்திரத்தினால், ஊடகவியலாளர் தவசீலன் மீது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி, முல்வைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமில் பணிபுரியும் குறித்த அந்தக் கடற்படை அதிகாரி முல்லைத்தீவில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே தவசீலன் மீது விசாரணை நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ் ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பாக இலங்கைப் பொலிஸார் எதுவுமே கூறவில்லை.

இதேவேளை, கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் இன்று மாலை நிறுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாணை நடைபெறவுள்ளது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=901&fbclid=IwAR2jiz2YPtJuUoJVdZdlRsprEkDzgwZwqoj1e7PPON_11lAwRCew0ZBq63M

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_6986.jpg?resize=800%2C533
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் முல்லைத்தீவு காவல்துறையினரால்; கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.19 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.

இதன்போது செல்வபுரம் பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு ஊடகவியலாளர்களையும் இனம் தெரியா நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்தார்.
இதனையடுத்து அவரை ஆர்ப்பாட்ட காரர்கள் அடையாளப்படுத்த முற்பட்டவேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என்று வினவியபோது அவர் தான் யார் என சொல்ல மறுத்து குறித்த இடத்தினை விட்டு தப்பிஓடிய போது ஆர்ப்பாட்ட காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா எனஅடையாளப்படுத்தியபோது கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்ததனையடுத்து குறித்த இடத்திற்கு வருகைதந்த காவல்துறையரிடம் ; ஒப்படைத்துவிட்டு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் உண்மைக்க புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் 18.04.19 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான ச.தவசீலனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் இன்று காலை காவல் நிலையத்துக்கு சென்ற நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைதுசெய்துள்ளனர்

இதனையடுத்து ; குறித்த ஊடகவியலாளரை முல்லைத்தீவு நீதிமன்றில் காவல்துறையினர் ; முற்படுத்தியதை அடுத்து பிணையில். விடுவிக்க உத்தரவிட்ட மன்று எதிர்வரும் 30ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தது.

அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையோர் எனும் குற்றச்சாட்டில் மேலும் நான்கு ஊடகவியலாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

IMG_6983.jpg?resize=554%2C800IMG_6984.jpg?resize=800%2C533IMG_6985.jpg?resize=800%2C533

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.