Jump to content

ஒரே மாதிரியாக வாக்களிப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம்! - பிரணாய் ராய் பேட்டி


Recommended Posts

ஒரே மாதிரியாக வாக்களிப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம்! - பிரணாய் ராய் பேட்டி

 
ngbjpg
 

இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்களில் ஒருவரான பிரணாய் ராய் பொருளாதார வல்லுநர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுகளைக் கணிப்பவர் என்று பன்முக ஆளுமை கொண்டவர். ‘என்டிடிவி’யின் நிறுவனர்களில் ஒருவர். தோரப் ஆர்.சோபரிவாலாவுடன் இணைந்து பிரணாய் ராய் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘தி வெர்டிக்ட்: டிகோடிங் இண்டியா’ஸ் எலெக்‌ஷன்ஸ்’ புத்தகம் 1952 தொடங்கி 2019 தேர்தல் வரையிலான வரலாற்றைப் பற்றிய விரிவான பகுப்பாய்வாக இருக்கிறது. புத்தகத்தின் மிக சுவாரஸ்யமான பகுதி, தேர்தல் முடிவுகளை எப்படியெல்லாம் கணிக்கிறார்கள் என்பதுதான். மூத்த பத்திரிகையாளரான என்.ராம், சீனிவாசன் ரமணி இருவரும் இணைந்து பிரணாய் ராயுடன் நீண்ட நேர்காணல் ஒன்றை நடத்தினர். பேட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை இங்கே தருகிறோம்.

 

தேர்தல் கருத்துக் கணிப்புகளில் ஒரு கட்சி எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று துல்லியமாகக் கூற முடியாவிட்டாலும், எந்தக் கட்சி அல்லது தலைவர் வெற்றி பெறுவார் என்று கணித்துவிட முடியும் என்று உங்களுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறீர்கள்; 2004 பொதுத் தேர்தல் விதிவிலக்காகிவிட்டது. கணிப்பு எங்கே, எப்படித் தவறியது?

2004-ல் ஏன் தவறாகக் கணித்தோம் என்று எந்த கருத்துக் கணிப்பு அமைப்பாலும் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. எச்சரிக்கையாகப் பதில் சொல்வோம் என்று வாக்காளர்கள் கருதியதுதான் முக்கியக் காரணம் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பாளர்கள் பின்னர் தெரிந்துகொண்டனர். நெருக்கடிநிலை அமலுக்குப் பிறகு வாக்காளர்களிடம் கருத்து கேட்டால், ‘இந்திராவுக்கு வாக்களிக்கப்போவதில்லை’ என்று யார்தான் பகிரங்கமாகக் கூறுவார்கள்? பெரும்பாலானவர்கள் ‘இந்திராவுக்குத்தான் வாக்கு!’ என்றிருப்பார்கள். நூறு வாக்காளர்களில் ஐந்து பேர் அப்படி அச்சப்பட்டால்கூடக் கணிப்பு தவறாகிவிடும். மக்களிடையே அச்ச உணர்வு 2%, 5% அல்லது 7% என்று இருந்தால் கணிப்பும் அதற்கேற்பத் தவறாகவே இருக்கும். இதுவே ஒவ்வொரு தேர்தலிலும் கணிப்பாளர்களுக்கு உள்ள பெரிய பிரச்சினை.

உங்களுடைய புத்தகத்தில் மிகவும் சுவாரசியமான அம்சம், பெருவாரியான தொகுதிகளில் ஒரு கட்சி அடையும் வெற்றி என்பது; இதை மாநில, தேசிய அளவில் உங்களால் விளக்க முடியுமா?

மக்களவைக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் சேர்ந்து நடக்கும் தேசியத் தேர்தல் இப்போது கிடையாது; சுதந்திரம் அடைந்த புதிதில் 1950-களில் தொடங்கியபோது அரசியல்வாதிகளையும் தலைவர்களையும் மக்கள் முழுதாக நம்பினார்கள். மக்களவைப் பொதுத் தேர்தல் என்பது மாநிலத் தேர்தல்களின் கூட்டாட்சிக்கான தேர்தலாகவே இருந்தது. இப்போது மக்களவைப் பொதுத் தேர்தலிலேயே ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொருவிதமாக வாக்களிக்கின்றன. முடிவு என்பது பெருவாரியான வெற்றிகளின் சேர்க்கையாக இருக்கலாம். மாநிலங்களின் பெருவாரியான வெற்றி, ஒரு மாநிலத்தை இன்னொரு மாநிலம் சரிநிலைப்படுத்துவதாகக்கூட அமையலாம். தமிழ்நாட்டில் பெருவாரியான மக்கள் ஒரு கட்சிக்கும், மகாராஷ்டிரத்தில் பெருவாரியான மக்கள் இன்னொரு கட்சிக்கும் வாக்களிக்கலாம். மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 77% மாநில அளவில் பெருவாரியான முடிவாகவே இருப்பதை நாங்கள் ஆய்வில் கண்டோம்.

அப்படியென்றால், ஒன்றுபோல மக்கள் வாக்களிப்பதற்குத் தமிழ்நாடு நல்ல உதாரணம் என்று சொல்லலாமா?

ஆமாம். தமிழ்நாட்டில் இது 94%, பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் இதுவே உச்சம் - அதாவது, ஒரு கட்சிக்கோ கூட்டணிக்கோ ஆதரவாக வாக்களிப்பது. தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளர் என்ற முறையால் சிறிய அளவில் வாக்கு சதவீதம் ஒரு கட்சிக்கு ஆதரவாகத் திரும்பினாலும் தொகுதிகளும் அக்கட்சி அல்லது கூட்டணி பக்கம் சாய்கிறது. அதிலும், எதிர்க்கட்சிகள் ஓரணியில் நிற்காமல் பிரிந்து நின்றால் பெருவாரியான வெற்றி சாத்தியமாகிவிடுகிறது.

பாஜக மக்களுக்குப் பிடித்தமான தேசியத்தையும் காங்கிரஸ் வேறு அம்சத்தையும் கொண்டுள்ளன என்று ஊடகங்களில் குறிப்பிடுகிறார்கள், இது சரியா? இந்த மாதிரியான உணர்வுகள் தேசிய அளவில் நிலவுகின்றனவா அல்லது வெறும் கட்டுக்கதையா?

இது ஓரளவுக்குக் கட்டுக்கதையே. ஆந்திர பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி பற்றியோ பெரும்பான்மையினவாதம், தேசியம் குறித்தோ நாம் எதையும் கேள்விப்படவில்லை. உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஓரளவுக்கு இந்த மனோபாவம் நிலவுகிறது. வாக்காளர்கள் அவர்களுடைய வாழ்க்கை நிலையை ஒட்டித்தான் வாக்களிக்கிறார்கள். நாங்கள் ஒரு கிராமத்துக்குச் சென்றோம். அரசு பாலம் கட்டித்தராததால், அரசுக்கு எதிராக வாக்களிக்கப்போகிறோம் என்றார்கள். ஒருவர் புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசினார். ஆனால், அது அவருடைய வாழ்வாதாரப் பிரச்சினைக்கு அடுத்ததுதான் என்று கூறிவிட்டார்.

நீங்களும் அசோக் லஹரியும் ‘எதிர்க்கட்சி ஒற்றுமைக் குறியீட்டெண்’ என்ற ஒன்றை வடிவமைத்தீர்கள்; இது எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? டேவிட் பட்லரின் ‘சீரான ஊசல்கள்’ பற்றியும் பேசுகிறீர்கள்; இது எந்த அளவுக்கு உங்களை ஊக்கப்படுத்தியது? அது அனைத்திந்திய அளவுக்குப் பொருந்துகிறதா? எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் இந்தியாவில் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணி அல்லவா?

பட்லரின் ஆய்வுகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். பட்லரின் சீரான ஊசல் முறை, இரு கட்சி ஆட்சி முறை உள்ள நாடுகளில்தான் அதிகம் செயல்படுகிறது. இங்கே ஏராளமான கட்சிகள் இருப்பதால் அது செயல்படுவதில்லை. எனவே, வாக்கு வித்தியாசத்தை மாற்றுவது எது என்பதை நாம் கணக்கிட வேண்டும். வெற்றியின் விளிம்பு என்பது எவ்வளவு வாக்குகள் மாறின, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையில் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதைப் பொருத்தது. இரு கட்சி ஆட்சி முறை என்றால், எதிர்க்கட்சி ஒற்றுமை என்பது நூறுக்கு நூறாக இருக்கும். பிளவு அதிகமாக இருந்தால் அது 70, 60, 50 ஆகிவிடும். அதில் எவ்வளவு ஊசல் ஏற்படுகிறதோ அதற்கேற்ப வெற்றி பெறும் வாக்குகள் எண்ணிக்கையும் இருக்கும்.

மக்கள் இதுதான் மோடி அலையா என்று கேட்கின்றனர்; 2014 தேர்தல் மோடி அலை பற்றியதா?

இது பொருத்தமில்லாத வர்ணனை; 31% வாக்குகளை மட்டுமே பெற்று அவர் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால் அதிகத் தொகுதிகளைப் பெற முடிந்தது. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகள் எந்த அளவுக்குச் சிதறியிருக்கிறது என்றே நாம் கேட்க வேண்டும். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. இந்த மாநிலம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? அலைகள், ஊசல்களைவிட இவைதான் முக்கியமானவை. இங்கே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் 100 அல்ல; 50, 60, 70.

அப்படியென்றால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் மாநில வாரியாக, தேசிய அளவில் என்ன?

இது மிகவும் முக்கியமான கேள்வி. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் எவ்வளவு என்பதைக் கருத்துக் கணிப்புகள் மூலம்தான் அறிய முடியும். உதாரணத்துக்கு, தலித்துகளுடன் சேர்ந்து யாதவ்கள் வாக்களிக்கவுள்ளனர். இது வெறும் எண்ணிக்கைக் கூட்டு மட்டுமல்ல, அதற்கு மேலும் ஊக்குவிப்பானாக இருக்கக்கூடியது. ‘இது வெற்றிக் கூட்டணி’ என்ற உற்சாகம் இதற்கு மேலும் வாக்குகளை அள்ளித்தரும். இரு கட்சிகளும் சேர்ந்து தலா 20% வாக்குகளைப் பெறும் என்றால், ஊக்குவிப்பின் மூலமாகக் கூடுதலாக 5% வாக்குகள் கிடைக்கும். சராசரி ஊக்குவிப்பு அல்லது வேகம் 8% என்று கணக்கிடுகிறோம்.

தோழமைக் கட்சிக்கு வாக்குகளை மாற்றுவது தொடர்பான தரவுகள் உள்ளனவா? பிற கட்சிகளிடம் பெறுவதைவிடப் பிற கட்சிகளுக்கு சில கட்சிகள் தரும் வாக்குகள் குறைவு என்கிறார்களே?

இது பத்திரிகையாளர்கள் காலம் காலமாக எழுதிவரும் தகவல், உண்மையல்ல. வாக்குகளை மாற்றித் தருவது 100% என்பதுடன் ஊக்குவிப்பாக மேலும் சில சதவீதங்களும் சேரும் என்பதே நாங்கள் கண்டது. தலித்துகள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்தாலும் யாதவர்கள் மாயாவதிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பார்கள். இது உண்மையே அல்ல. யாதவர்கள் முழுதாக மாயாவதிக்கு வாக்களித்ததை நாங்கள் கண்டுபிடித்தோம். அதேபோல, முஸ்லிம்கள் தங்களுக்குள் பேசிவைத்துக்கொண்டு வாக்களிப்பார்கள் என்பார்கள். முஸ்லிம்களின் வாக்குகளும் பிளவுபடுவதைப் பார்த்திருக்கிறோம். உத்தர பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணிக்கு 80%, காங்கிரஸுக்கு 20% என்று முஸ்லிம்களின் வாக்குகள் பிரிகின்றன. எந்த மதமும் சாதியும் ஒரே கட்சிக்கு 100% வாக்களிப்பதில்லை. பிராமணர்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு வாக்களிப்பதில்லை. அதிபட்சம் 65% கிடைக்கலாம். யாதவர்கள் 100% சமாஜ்வாதிக்கு வாக்களிப்பதில்லை. அது 80% ஆக இருக்கிறது. எண்ணிக்கை வழியில் எதையாவது எழுதும்போது பத்திரிகையாளர்கள் அதீதமாகக் கற்பனை செய்துவிடுகிறார்கள்.

அப்படியென்றால் 2014-ஐவிட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் 2019 தேர்தலில் அதிகமாக இருக்கிறது, அப்படித்தானே?

ஆமாம், அது மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தப்போகிறது; குறிப்பாக, உத்தர பிரதேசத்தில். மீண்டும் அலை ஏற்படுமா என்று கேட்பதைவிட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் எவ்வளவு என்று கேட்பதே சரி. 2014-ல் விழுந்த அதே அளவு வாக்குகள் எல்லாக் கட்சிகளுக்கும் கிடைத்தாலும் சமாஜ் வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியால், பாஜக வென்ற இடங்கள் 73-லிருந்து சரிபாதியாகக் குறையும். காங்கிரஸ் மட்டும் இந்தக் கூட்டணியில் சேர்ந்திருந்தால் பாஜகவுக்குக் கிடைக்கும் தொகுதிகள் 20 ஆகத்தான் இருந்திருக்கும். 6% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள காங்கிரஸ் தனியாகப் போட்டியிட்டு பாஜகவுக்குக் கூடுதலாக 14 இடங்களைத் தரப்போகிறது. வெறும் 3% முதல் 4% வரையில் வாக்குகள் அதிகமானாலோ சரிந்தாலோ வெற்றியும் இழப்பும் தொகுதிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் என்பதை பாஜக தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறது. இதனால்தான், பல கட்சிகளுடன் பேசி, சமரசங்களுடன் கூட்டணியை வலுப்படுத்தியிருக்கிறது. கூடுதலாக, 4% முதல் 5% வாக்குகளையும் அதன் மூலம் 10% கூடுதல் தொகுதிகளையும் பெற அது முயற்சி மேற்கொண்டது. காங்கிரஸ் தவறாகக் கணித்துவிட்டது. சில தொகுதிகளை விட்டுக்கொடுத்து பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதியுடன் கூட்டணி கண்டிருந்தால், மேலும் அதிக தொகுதிகளில் அது வென்றிருக்க முடியும்.

மற்ற மாநிலங்களைப் பார்ப்போம். மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சியின் ஒற்றுமை என்ன செய்யும்?

மகாராஷ்டிரத்தில் மிகவும் தீவிரமான போட்டியாக இருக்கும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீட்டெண் இங்கு 80%. கேரளத்தை எடுத்துக்கொண்டால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முழுமையானது. கூட்டணியின் அருமை தெரிந்தவர்கள் அவர்கள். காலத்தால் முந்தியவர்கள். கேரளத்தில் கருத்துக் கேட்பு வாக்கெடுப்பு நடத்துவதைப் போல உற்சாகம் தருவது எதுவும் கிடையாது. கேட்டோம், எழுதினோம், வந்தோம் என்று வந்துவிட முடியாது. நிறைய நேரம் பிடிக்கும். கேள்விகள் சரியானவைதானா என்று கருத்துக் கணிப்புக்கு முன்னால் நடத்தும் முன்னோட்டத்துக்கே நாங்கள் கேரளத்தைத்தான் தேர்ந்தெடுப்போம். அங்குதான் நாங்கள் கேட்டவுடனேயே, ‘உங்களுடையே கேள்வியே தவறு’ என்ற சொல்ல ஆரம்பித்து, எங்கே எப்படி தவறு என்று விளக்குவார்கள். ‘சரியான கேள்வியைக் கேளுங்கள் மக்களே!’ என்று 20 நிமிஷம் வகுப்பு எடுப்பார்கள். ஒவ்வொருவரிடமும் கேட்டு முடிக்க ஒன்றரை மணி நேரம்கூட ஆகிவிடும். பிற மாநிலங்களில் நாங்கள் அங்கிருந்து போனால் போதும் என்று கடகடவென ஏதாவதொரு பதிலைச் சொல்லி விரட்டுவார்கள். கேரளத்தில் விவாதிப்பார்கள். கேரளத்தில் அபாரமான அரசியல் புரிதல் உள்ளது. கருத்துக் கணிப்பு நடத்துவோருக்கு கேரளத்தில் பூர்வாங்க முன்னோட்டம் நடத்துவது நல்லதொரு அனுபவமாக இருக்கும்.

2014-ல் 2.5 கோடி பெண் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டன. அதுவே பிறகு 2.1 கோடியாகக் குறைந்துள்ளது என்று நீங்கள் புத்தகத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் மனதை வேதனைப்படுத்துவதாகவும், பிறகு ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளன. மக்களவைத் தேர்தலில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களிப்பார்கள் என்று ஊகித்திருக்கிறீர்கள்?

ஆமாம், அதிகம் என்றால் வாக்களிக்க வரும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்; சதவீதக் கணக்கில் பார்த்தால் மேலும் அதிகமிருக்கும். இதை ஊகிப்பது கடினமில்லை, ஏனென்றால் இப்போதெல்லாம் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிகம் வாக்களிக்கின்றனர். எல்லா மாநிலங்களிலும், அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் பெண்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். தென்னிந்தியாவில் கருத்துக் கணிப்புக்காக நாங்கள் செல்லும்போது பெண்கள் வீட்டுக்குள்ளிருந்து எங்களைப் பார்த்ததும் வெளியே வருவார்கள், என்ன கேள்விகளோ கேளுங்கள் என்பார்கள். உத்தர பிரதேசம் என்றால் வாசல்படியில் நிற்பார்கள், தேர்தல் தொடர்பாகக் கருத்து கேட்க வந்திருக்கிறோம் என்றால் வீட்டுக்குள் வேகமாகப் போய்விடுவார்கள். பழக்கமில்லாதவர்களுடன் பேச அவர்களுக்கு விருப்பம் இல்லை. இப்போது உத்தர பிரதேசத்திலும் இந்தப் போக்கு மாறிவருகிறது. தென்னிந்தியாவில் மனைவியைக் கேட்கும்போது கணவரும் உடன் இருப்பார். ‘நீங்கள் தன்னிச்சையாக வாக்களிக்கிறீர்களா, கணவர் சொல்வதைக் கேட்டு வாக்களிப்பீர்களா?’ என்று கேட்போம். ‘அவர் சொல்வதையும் கேட்போம், ஆனால் எங்கள் முடிவுப்படி வாக்களிப்போம்!’ என்பார்கள். ‘மனைவியிடம் கேட்பீர்களா?’ என்று சில வேளைகளில் கணவர்களையும் கேட்போம். அவர்கள் அப்படிச் செய்வதில்லை. ஆண்களும் பெண்களும் தனித்தனியாகத்தான் முடிவெடுக்கின்றனர்.

பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வருவதால் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறதா?

துரதிருஷ்டவசமாக இதுவரை இல்லை. எந்த அரசியல் கட்சியும் வேட்பாளர்களில் 50%-ஐ பெண்களாகத் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால், பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பதால் கட்சிகளின் கொள்கைகள் மகளிர் சார்ந்து உருவாகத் தொடங்கியுள்ளன. ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு ‘உஜ்வலா’ திட்டத்தில் கேஸ் இணைப்பை இலவசமாகக் கொடுக்கும் பாஜக அரசின் முடிவு புத்திசாலித்தனமான, பயனுள்ள கொள்கை. நல்ல பலனைத் தந்துள்ளது இது. எல்லாக் கட்சிகளும் பெண்களுக்கு நெருக்கமான விஷயங்களைப் பேசத் தொடங்கியுள்ளன. இது உற்சாகத்தைத் தருகிறது.

நகர்ப்புறப் பெண்களைவிட கிராமப்புற பெண்கள் வாக்களிப்பதில் சிறப்பாகச் செயல்படுகின்றனரா?

5% வாக்குகள் அதிகம் பதிவானால்கூடப் பெரும் மாறுதல்களை உருவாக்கிவிடும். கிராமப்புற மகளிர் தேர்தலில் வாக்களிப்பது இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கிறது. ஆண்கள் வாக்குசதவீதத்தைவிடப் பெண்களின் வாக்களிப்பு சதவீதம் 20% குறைவாகவே ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிராமப்புற பெண்களும் நகர்ப்புற பெண்களைவிட - ஏன் ஆண்களையும்விட அதிக எண்ணி்க்கையில் வாக்களிக்கின்றனர். ஆனால், பெண் வாக்காளர்களின் பெயர்கள் விடுபடுவதும் அதிகம் நடக்கிறது. இதுபற்றி நிறைய பேர் எழுதிவிட்டார்கள். ஆனால், அவர்கள் யார், ஏன் விடுபட்டார்கள் என்பதுபற்றி அதிகம் ஆராயப்படவில்லை. மிகவும் ஏழைகள்தான் விடுபட்டுகின்றனர். தலித்துகள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்கள் வாக்காளர் பட்டியலில் பதிவாகாதவர்களில் அதிகம். இது வெறும் 2.1 கோடி பெண் வாக்காளர்களின் பெயர் விடுபடுதல் மட்டும் இல்லை, விடுபடுதலிலும் ஒரு சார்புத்தன்மை மறைந்திருக்கிறது. அது ஏன் என்பதும் பேசப்பட வேண்டும்.

பாஜகவுக்குப் பெண்களைவிட ஆண்களிடத்தில்தான் அதிக செல்வாக்கு. மாறாக, காங்கிரஸ் பெண்களிடத்திலும் அதிக செல்வாக்குடன் இருக்கிறது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், பெண்கள் ஆதரவை அதிகம் பெற்ற கட்சி அதிமுக. ஆண்கள் மட்டுமே வாக்களிக்கலாம் என்றிருந்தால், திமுகவை அதிமுகவால் தோற்கடித்திருக்க முடியாது என்று பார்த்தோம். தேசிய அளவில் இது சரியா?

உண்மைதான் பாஜகவுக்குப் பெண்களைவிட ஆண்களிடையே ஆதரவு அதிகம். அது ஆணாதிக்கம் நிரம்பிய கட்சி. ஆனால், அவர்கள் இன்று இந்த நிலையை மாற்றிவருகிறார்கள் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் புத்தகத்தின் முக்கியமான அம்சம் இந்திய வாக்காளரை ஆக்கபூர்வமாக மதிப்பிட்டிருக்கிறீர்கள்; ‘சுயேச்சையாக சிந்திக்கிறார்கள், திட்டங்களால் தங்களுக்கு என்ன பலன் என்று மதிப்பிடுகிறார்கள். தங்களுடைய வாழ்க்கை நிலையை எண்ணிப் பார்க்கிறார்கள். இது மிகவும் முக்கியமான அம்சம். சரியாக ஆட்சி செய்யாதவர்களை ஆட்சியிலிருந்து அகற்றுகிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். அடுத்தது இந்தியத் தேர்தல் ஆணையம். உலகின் அதிசயங்களில் ஒன்றுதான் இந்தியத் தேர்தல் ஆணையம். இல்லையா?

ஆம், சரிதான். எவ்வளவோ குறைகள் இருந்தாலும் மிகச் சிறப்பான நிறுவனம்தான் இந்தியத் தேர்தல் ஆணையம்.

அடுத்ததாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை எடுத்துக்கொள்வோம். நீங்கள் இதை விரிவாக ஆராய்ந்திருக்கிறீர்கள் அல்லவா?

1977 முதல் இந்த இயந்திரங்களைத் தொடர்ந்து பார்த்துவருகிறோம், சோதித்திருக்கிறோம், அதன் செயல்பாட்டை ஆராய்ந்திருக்கிறோம். அவை புற உலகுடன் இணைக்கப்படாததால் அதில் தில்லுமுல்லுகள் செய்ய முடியாது என்பதுதான் அடிப்படையான விஷயம். அதில் புளுடூத் கிடையாது. அதில் வைஃபை, இணையதள இணைப்புகளும் கிடையாது. வாக்களிப்பதைப் பதிவுசெய்யும் வாக்குச் சீட்டைப் போல அது பதிவு இயந்திரம் மட்டுமே. வெறும் சந்தேகத்தின்பேரில்தான் அதன் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள்.

தேர்தலில் பண பலத்தைப் பற்றிப் பார்ப்போம்; இதை எப்படித் தடுப்பது? அடுத்த புத்தகம் இதைப் பற்றி இருக்குமா?

இதைப் பற்றி ஆராய்ந்து அடுத்ததாக எழுத உத்தேசம். அமெரிக்காவில் நிறைய ஆராய்ச்சிகள் செய்துவிட்டார்கள். செனட்டர்களையும் கவர்னர்களையும் தேர்ந்தெடுக்க நிறைய பணம் தேவைப்படுகிறது என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. அமெரிக்காவில் ஏற்கெனவே பதவியில் இருப்பவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் விகிதம் 90%. பதவியில் இருப்பதால் மறுதேர்வுக்கு வாய்ப்பு அதிகம். இதில் பணத்துக்கும் நிச்சயம் முக்கியப் பங்கு இருக்கிறது. அமெரிக்க வாக்காளர்களைவிட இந்திய வாக்காளர்கள் புத்திசாலிகள். போட்டியிடும் முக்கியக் கட்சிகள் இரண்டிலும் பணம் வாங்கிக்கொண்டு, தாங்கள் ஏற்கெனவே தீர்மானித்தவருக்கே வாக்களிக்கிறார்கள்.

நீங்களும் உங்களுடைய குழுவும் இணைந்து, உங்களுடைய இதழியல் அனுபவம்-திறன் ஆகியவற்றுடன் கல்வித் துறை அணுகுமுறையையும் கலந்து, தேர்தல் தொடர்பாக எழுதியிருக்கிறீர்கள். பொருளாதார அறிஞர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுக் கணிப்பில் நிபுணர், பத்திரிகையாளர்... இப்படியான பன்முகப் பணிகள் ஒரு இதழியலாளராக உங்களுக்கு எப்படிப் பயன்படுகின்றன?

இந்த அனுபவங்களையெல்லாம் சேர்த்தே செய்ய முற்படுகிறோம். இவற்றில் பண்பு சார்ந்தும் எண்ணிக்கை சார்ந்தும் ஆற்ற வேண்டிய பணிகளை நாம் இணைத்துவிடக் கூடாது. உதாரணமாக, நான் கருத்துக் கணிப்பு வேலைகளைச் செய்யும்போது அது எண்ணிக்கைகள் அடிப்படையிலான வேலை; பத்திரிகையாளராக இருக்கும்போதோ பண்பு சார்ந்த பணிகளையே மேற்கொள்கிறேன். பல பத்திரிகையாளர்கள் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தங்களுடைய கட்டுரையில் கூற முற்படுகின்றனர். அது அவர்களுடைய வேலையல்ல. தேர்தலில் ஒரு தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு வருகிறவரையே வெற்றி வேட்பாளராக அறிவிக்கும் முறையை நாம் பின்பற்றுகிறோம். வாக்குகளில் 3% மாறினால்கூட 100 தொகுதிகள் கைமாறிவிடும். ஒரு பத்திரிகையாளரால் இந்த 3% மாற்றத்தை எளிதில் கணித்துவிட முடியாது. பத்திரிகையாளரின் வேலை என்னவென்றால் பிரச்சினைகளை, சம்பவங்களைப் பற்றிப் பேசுவது. கருத்துக் கணிப்பின் மூலம் இவற்றையெல்லாம் வெறும் எண்களாக மாற்றிவிட முடியாது. உத்தர பிரதேச விவசாயிகள் எப்படி அல்லல்படுகிறார்கள் என்று பார்க்கிறோம், ஐந்தாண்டுகளுக்கு முன்னால் எப்படி வேறு விதமாக இருந்தது என்பதும் தெரியும். இதை எண்களாக மாற்றிச் சொல்ல முடியாது. பத்திரிகையாளரின் வேலை ஒரு தேர்தலைப் பற்றிய சித்திரத்தை எழுதுவதுதான், தேர்தல் முடிவைக் கூறும் முயற்சியை அவர் தவிர்க்க வேண்டும்!

https://tamil.thehindu.com/opinion/columns/article26884837.ece?utm_source=HP&utm_medium=hp-editorial&fbclid=IwAR3_7tsetGGJ99ho_sAayN7Tq4ex0_jsUK2Stqs_A2Ayu-3YT87I9q2s78o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.