Jump to content

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக, இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது – மாவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Mavai-Senathirajah.jpg

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக, இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது – மாவை

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக இளைஞர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எங்களது விடுதலைப்போரில் இளைஞர்களும் பங்கேற்க கூடியவர்களாக ஜனநாயக நடைமுறைகளில் இந்த இளைஞர்களை பங்குபற்றக்கூடியவர்களாக இளைஞர் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) தமிழரசுக் கட்சியின் இளைஞரணிக்கான நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இன்றுவரை, இலங்கை அரசியலில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அரசியல் அமைப்பு நெருக்கடிகள், அவற்றுக்கப்பால் தமிழர்களுடைய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பது மற்றும் தமிழர்களுடைய பிரதேசங்களிலே அதிலும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படாமல் உள்ளார்கள்.

இந்த அடிப்படையைக் கொண்டு 30/1 என்ற மனித உரிமை பேரவை தீர்மானம் 2015 ஆம் ஆண்டும் அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டும் தற்போது 2019 ஆம் ஆண்டு 30/1 என்ற தீர்மானமும் 34/1 என்ற தீர்மானமும் 40/1 என்ற தீர்மானமும் மனித உரிமை பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

அவற்றை இலங்கை அரசு தாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கின்றது. தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கிவிட்டு, ஜனாதிபதியும் அரசாங்கமும் கூட தமக்கு அதில் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளமையால் நிறைவேற்ற மாட்டோம் என ஒரு புறத்திலும் எங்களால் முடிந்ததை நிறைவேற்றுவோம் என்றும் கூறி வருகின்றார்கள்.

ஆகவே எங்களுடைய மாநாட்டில் இனப்பிரச்சினைத் தீர்வு எட்டப்படாத நிலையிலும் மனித உரிமைப் பேரவையில் எட்டப்பட்ட தீர்மானங்களையும் இந்த அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்த வேண்டியிருக்கும்.

இனப் பிரச்சினைக்கும் மனித உரிமை பேரவைக்கும் இந்த அரசு செவிசாய்த்து இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்கான அவகாசம் ஒன்று விதிக்கப்படும். இதனடிப்படையில் வேண்டிய தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றுவோம்.

இந்நிலையில் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தவேண்டுமானால் அத்தகைய தீர்மானங்களையும் நாங்கள் எடுக்கவேண்டும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/எமது-விடுதலைப்-போரில்-பங/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக, இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது – மாவை

விடுதலைப் போர் என்றால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்  எங்கே.....???😡

Link to comment
Share on other sites

21 minutes ago, ஈழப்பிரியன் said:

விடுதலைப் போர் என்றால் என்ன?

காலம் தாழ்த்தி கேட்டிருந்நாலும், தேவையான கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவையர் தனது மகனுக்கான அரசியல் இருப்புக்கு அத்திவாரம் போடுகிறார் இவர் சோறு திங்கிறாரா அல்லாது அதுக்குப்பதிலாக  ப்... யைத் திங்கிறாரா? இவர்களுக்கு வெதம் மானம் ரோசம் சூடு சுறணை மனச்சாட்சி எதுவுமே இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக்கட்சி கொடி

இலங்கை தமிழரசுக் கட்சியின்  இளைஞரணி நிர்வாகத்தெரிவு மற்றும் மாநாடு இன்று வவுனியாவில் இடம்பெற்ற போது தமிழரசுக் கட்சியின் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டமையினால் சிறு குழப்பம் ஏற்பட்டது.

DSC04291.JPG

இளைஞரணி நிர்வாகத்தெரிவு இடம்பெறுவதற்கு முன்னர் கட்சியின் கொடி ஏற்றுவதற்காக அனைவரும் நிகழ்வு இடம்பெற்ற வவுனியா நகரசபையின் மண்டபத்திற்கு முன்பாக கூடியிருந்த நிலையில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த கட்சியின் கொடி தலைகீழாக காணப்பட்டமையை கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் கொடி இறக்கப்பட்டது. 

DSC04293.JPG

இதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அவ்விடத்திற்கு வந்து கொடியை சீர் செய்து கொடுத்திருந்த நிலையில் மீண்டும் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

http://www.virakesari.lk/article/54297

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக, இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது – மாவை

நீங்களேல்லாம் திருந்தவே மாட்டீர்களா?

அல்லது உங்களை திருத்த ஆட்களே இல்லையா?


டேய் மானங்கெட்டவர்களே! 😡

அந்த அழிவுச்சூடு இன்னும் ஆறவேயில்லை. அதற்குள் எப்படி உங்களால் இப்படி பேச முடிகின்றது????

எம்மிடம் வார்த்தைகள் இல்லை.....

சினிமாவிலிருந்தாவது தருகின்றோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிவிலி தான்,  தொடங்கின இடத்திலேயேயே வந்து நிக்கிறம்.

மாவையரும் முந்தி இளைஞர் அணி பொறுப்பாளர் என்ற மாதிரி இருந்தவர் என்று ஒரு ஞாபகம்.  அவருடன் இன்னுமொரு இளைஞர் அணியைச் சேர்ந்தவரின்பழம் பழுத்துக் கொண்டிருக்கு வௌவால் எல்லாம் தேடி வரும்” என்ற பிரபலமான சுலோகங்களும்,  விரலை வெட்டி இரத்தத் திலகம் இட்டு அரங்கத்திலே மயங்கி விழுந்த இளவல்களுமாக நினைவில் எல்லாமே அப்படியே இருக்கு.

 மீண்டும் வண்டில் சவாரி விடலாம் என்ற நப்பாசையடன் யாராவது இருந்தால் அது சரி வராது என எண்ணம் போகின்றது. அது போக வாரிசு அரசியல் என்பது இலங்கைத் தமிழரிடையேயே அவ்வளவு வரவேற்பிற்குரிய விடயமாக என்றுமே இருந்ததில்லை என சம்பந்தப்பட்டவர்கள் உணர்வது நல்லது.

கச்சியேகம்பப் பெருமாளே ………….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவையார்....  அடுத்த தேர்தலுக்கு.... தமிழரசு கட்சிக்கு, 
தெருவெல்லாம்,   நோட்டீஸ் ஓட்ட  ஆள் சேர்க்கிறார். :grin:

முயல் பிடிக்கிற...  *** மூஞ்சையிலை  பாக்க உங்களுக்கு தெரியாதா? 😝

Link to comment
Share on other sites

On 4/20/2019 at 8:25 PM, தமிழ் சிறி said:

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக, இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது – மாவை

தமிழரசுக் கட்சியின் தற்போதைய விடுதலைப் பிழைப்பான ஒட்டுண்ணிப் பிழைப்புகளுக்கு இளைஞர்களையும் பழக்குகிறார்கள்!
இதில் பிச்சைக்கார மனோநிலை கொண்ட சில பட்டதாரிகள் இணையலாம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.