Jump to content

சோசல்காரி கண்டுட்டாளாப்பா!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கந்தவனம்!

ஆள் ஊரிலை பெரிய காய்.

ஆள்  கரிக்கறுப்பு எண்டாலும்   கட்டுமஸ்தான உடம்பைக்கண்டு மயங்காத கன்னியர் இல்லை எண்டே சொல்லலாம்.

 சிங்கன்  பாலர் வகுப்புக்கு வாத்தியார் எண்டாலும் தான் பெரிய பேராசிரியர் மாதிரித்தான் ஊருக்குள் திரிவார்.சனசமூக நிலைய கூட்டம் அல்லது பல நோக்கு கூட்டுறவு சங்க தேர்தல் வந்தால் ஆளை பிடிக்கேலாது.தன்ரை கையில தான் இந்த பிரயளமே உருளுவது போல் அவரும் ஊர் முழுக்க  உருண்டு பிரண்டு திரிவார்.....அதிலும் அவர் குளக்கரையில் நின்று தேகாப்பியாசம் செய்யும் அழகே தனியழகு....அதற்கென்றே ஒரு சில கன்னியர் கூட்டம் அவர் வரும் நேரம் பார்த்து நீராட வருவர்.

அவரும் ஒரு நாள்......

மிச்சம் மீதி வேலிக்காலை வரும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மிச்சம் மீதி வேலிக்காலை வரும்......

ஊரில வேலிக்குள்ளால நாய் தான் வரும்.கதையில எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

ஊரில வேலிக்குள்ளால நாய் தான் வரும்.கதையில எப்படி?

நாங்கள் வேலிக்கு மேலாலையும் பாய்ஞ்சு போயிருக்கிறம்....

வேலிக்கு கீழாலையும் தவண்டு போயிருக்கிறம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

கந்தவனம்!

ஆள் ஊரிலை பெரிய காய்.

ஆள்  கரிக்கறுப்பு எண்டாலும்   கட்டுமஸ்தான உடம்பைக்கண்டு மயங்காத கன்னியர் இல்லை எண்டே சொல்லலாம்.

 சிங்கன்  பாலர் வகுப்புக்கு வாத்தியார் எண்டாலும் தான் பெரிய பேராசிரியர் மாதிரித்தான் ஊருக்குள் திரிவார்.சனசமூக நிலைய கூட்டம் அல்லது பல நோக்கு கூட்டுறவு சங்க தேர்தல் வந்தால் ஆளை பிடிக்கேலாது.தன்ரை கையில தான் இந்த பிரயளமே உருளுவது போல் அவரும் ஊர் முழுக்க  உருண்டு பிரண்டு திரிவார்.....அதிலும் அவர் குளக்கரையில் நின்று தேகாப்பியாசம் செய்யும் அழகே தனியழகு....அதற்கென்றே ஒரு சில கன்னியர் கூட்டம் அவர் வரும் நேரம் பார்த்து நீராட வருவர்.

அவரும் ஒரு நாள்......

மிச்சம் மீதி வேலிக்காலை வரும்......

குமாரசாமி அண்ணை....  சோசல் காரி, கண்டால்... சோத்துக்கு  வழி இல்லாமல் போயிடுமே...
பிறகு... என்ன, நடந்தது அண்ணை, கெதியாய் சொல்லுங்கோ....   :grin:

Link to comment
Share on other sites

சோசல்காரி கண்டால் களவாக உழைத்த காசு முடிய சோசல் காசுக்கு வரச்சொல்லி இருப்பா.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சோசல்காரி" என்றால் என்னவென்று பொருள் விளக்கம் சொன்னால், நாங்களும் ரசிப்போம்.

('ரோசாப்பூ ரவிக்கைக்காரி' என்றுமட்டும் சொல்லிப் போடாதையுங்கோ..!) :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

சோசல்காரி" என்றால் என்னவென்று பொருள் விளக்கம் சொன்னால், நாங்களும் ரசிப்போம்.

அகதிகளுக்கு கொடுக்கல் வாங்கலை கவனிக்கும் அதிகாரி.

களவாக வேலை செய்யும் போது இவர்களிடம் மாட்டுப்பட்டால் கதை கந்தல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

அகதிகளுக்கு கொடுக்கல் வாங்கலை கவனிக்கும் அதிகாரி.

களவாக வேலை செய்யும் போது இவர்களிடம் மாட்டுப்பட்டால் கதை கந்தல்.

அகதிகளுக்கு மட்டுமல்ல, வேலை இல்லாதவர்களுக்கு கொடுப்பனவுகள் கொடுப்பவரும் கூட.

வேலை இல்லை என்று சொல்லி, வாங்கிக்கொண்டே, வேறு நண்பரின் பெயரில் களவாக வேலை செய்பவர்கள் மாட்டினாலும் கதை கந்தல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டவள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை போல.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/21/2019 at 7:38 PM, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை....  சோசல் காரி, கண்டால்... சோத்துக்கு  வழி இல்லாமல் போயிடுமே...
பிறகு... என்ன, நடந்தது அண்ணை, கெதியாய் சொல்லுங்கோ....   :grin:

சிறித்தம்பி!

மிஸ்டர் கண்டவனம் சோத்துக்காக அலையமாட்டார்.

அவர் ஊரிலையே அன்னதானம் குடுத்தவர்.

ஆனால் இங்கே ஒன்லி  பிறவுண் பிரட். 😃 ( அதுக்கு மிஞ்சி ஏலாதப்பா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/21/2019 at 9:00 PM, nunavilan said:

சோசல்காரி கண்டால் களவாக உழைத்த காசு முடிய சோசல் காசுக்கு வரச்சொல்லி இருப்பா.😄

விட்டால்......கந்தவனத்தார்ரை முழு டீட்ரையிலையும் சொல்லுவியள் போலை கிடக்கு...😃tw_lol:😃tw_lol:😃

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மிச்ச விவரம் சொல்லேல கு.சா அண்ணை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

மிச்ச விவரம் சொல்லேல கு.சா அண்ணை!

சொல்லுவன் சொல்லுவன்.....tw_blush:

Link to comment
Share on other sites

சோசல்காரிக்கு சிறீலங்கா டூர் போக ஒரு ஆசை. கந்தவனத்தாருக்கு டொச் கொஞ்சம் பிரச்சனை. சாமியார் கதைப்பார், கதைச்சு மடக்கிவிட்டார் என்றும் ஒரு செய்தி, சிறித்தம்பி டொச் சரளமாகக் கதைப்பவர். அவர் கதையைக்கேட்டு வேலிபாயக்கூடியவர் என்ற சந்தேகம் சாமியாருக்கு உண்டு. அதுதான் 'வரும் ஆனால் வராது' என்பதுபோல், 'சொல்லுவன் சொல்லுவன்' என்று சொல்லாமல் கடத்துகிறார். 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

சோசல்காரிக்கு சிறீலங்கா டூர் போக ஒரு ஆசை. கந்தவனத்தாருக்கு டொச் கொஞ்சம் பிரச்சனை. சாமியார் கதைப்பார், கதைச்சு மடக்கிவிட்டார் என்றும் ஒரு செய்தி, சிறித்தம்பி டொச் சரளமாகக் கதைப்பவர். அவர் கதையைக்கேட்டு வேலிபாயக்கூடியவர் என்ற சந்தேகம் சாமியாருக்கு உண்டு. அதுதான் 'வரும் ஆனால் வராது' என்பதுபோல், 'சொல்லுவன் சொல்லுவன்' என்று சொல்லாமல் கடத்துகிறார். 🤣🤣

கந்தவனத்தாருக்கு டொச் கொஞ்சம் பிரச்சனையில்லை.அவருக்கு பிரச்சனையே அதுதான். ஆனால் சிலோனுக்கு போனால்  டொச் மட்டும் தான் வருமாம்.......ஏனெண்டால் அவர் ஜேர்மனுக்கு வந்து கனகாலமாம்....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோசல்காரி என்னத்த கண்டவ என்று ஒரே குழப்பமா இருக்கே!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை கண்டவவோ. இங்கை காணவேண்டிய இடத்திலை அதைக்காணல எண்டதுதானே பிரச்சினையே. பிறகு அவனாடா நீ எண்டு கேட்டுட்டு போயிட்டா.

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதைசொல்லியாகத்தான் தெரிகிறீர்கள். ஆரம்பித்த உடனே 'தொடரும்' போட்டு விட்டீர்களே ! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.