Jump to content

கொட்டாஞ்சேனை கத்தோலிக்க ஆலயத்தில் வெடிப்புச் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, colomban said:

ஆழ்ந்த இரங்கல்கள் / கண்ணீரஞலிகள். 

அன்றன்று உழைத்து சாப்பிடும் வறுமையான மக்கள் இவர்கள். சிறு குழந்தைகள் / குடும்பங்கள் என்று, இன்று எத்தனை குதுகலமாக தேவாலயத்திற்கு சென்ரிருப்பார்கள்

இப்படியெல்லம் குரூரமாக சக மனிதனை கொல்ல மனம் வருமா?  

தேசியவெறி ,மதவெறி,புகழ்வெறி ,இனவெறி இதைவிட கேவலமான விடயத்தையும் செய்யும்...

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 10 ஆண்டுகளாக.. தமிழ் மக்களையும் விடுதலைப்புலிகளையும்.. அதிகப்பிரசங்கித்தனமாக.. போர் வெற்றி மமதையில்.. கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவை.. எங்கையோ பெரிய ஓட்டையை விட்டு வைச்சிட்டு இருந்திருக்கினம்.

பலன்... அப்பாவி உயிர்களின் பலியிடல்.. மற்றும் நாட்டின் பாதுகாப்புக்குறித்து உலகமே அஞ்சி நடுங்கும் நிலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலி மிரர் பத்திரிக்கை, இருப்த்ஜற்கொலைக் குண்டுதாரிகள் சனி இரவு சங்ரிலா நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து, காலையில் விடுதியின் உணவகத்தில் 25 கிலோ நிறையிள்ள பிளாத்திக் வெடிகுண்டை வெடிக்கவைத்தது சி சி டி வி கமெராவில் பதிவாகியுள்ளதாக கூறுகிறது. உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பிரஜைகளைக் கொண்டு இது நடந்திருக்கலாம் என்று மேலும் கூறுகிறது.

Link to comment
Share on other sites

6 minutes ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

இலங்கையில் கிறீஸ்தவர்களை முஸ்லிம்கள் இலக்குவைத்து இலகுவாக மாட்டிக்கொண்டு என்ன சாதிக்க முடியும்? இதில் எந்த நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை.

இது ஒரு பெரிய சதி. சீனாவின் கை தெரிகிறது. கோத்தாவும் சீனாவும் தான் இதில் இலாபம் அடையக்கூடியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெமட்டகொடவிலும் குண்டுவெடித்திருக்கிறது. சேத விபரம் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

தெகிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றிலும் குண்டுவெடிப்பு சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாகச் சிலர் முகநூலில் நிலைத்தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.

உண்மைத் தன்மை தெரியவில்லை. இன்னும் தொடருமோ என்ற பயம் உள்ளது. அநாவசியமாக வெளியே நடமாடாமல் வீடுகளுக்குள் இருப்பது அல்லது இருக்கும் இடம் பாதுகாப்பாயின் அவ்விடத்திலேயே இருப்பது பாதுகாப்பானது போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்குச் சட்டம் அமுலிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, உண்மையாகவா?

Link to comment
Share on other sites

இன, மத, பதவி வெறியால் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

இப்படியெல்லம் குரூரமாக சக மனிதனை கொல்ல மனம் வருமா?  

இலங்கையில் சிங்கள அரசாட்சி ஏற்பட்டபின் இதனைவிடவும் குரூரமாகத் தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள். கொன்றவர்களையும், கொலைகாரரின் பின்னால் இயங்கியவர்களையும் அரசுக்குத் தெரியும். தெரிந்தும் அவர்கள் தண்டிக்கப்பட்டார்களா,? இல்லையே.?? தண்டிக்கப்பட்டிருந்தால், இன்றைய இந்தக் கொலையாளிகளுக்குக் கொல்லத் துணிவு வந்திருக்குமா.? கொலையாளிகளுக்கு உயர் பதவியும், பின்னால் இயங்கியவர்களுக்கு அரசியல் செல்வாக்கும், மந்திரிப்பதவிகளும் கொடுத்துப் போற்றி வாழவைத்தால்.... அவர்களில் உறைந்துள்ள மிருகங்கள் பயமின்றி ஆரவாரத்துடன் வெளிவரத்தான் செய்யும். அப்படிப் பயமின்றிக் காரியங்கள் செய்பவர்களாகவே இன்றைய பல அரசியல்வாதிகளும் அவர்கள் படைகளும் உள்ளன.

'பேய்கள் அரசுசொய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள்' என்பது பொய்யல்ல. இன்றும் தின்றது, இப்டியே போனால்...இன்னும் தின்னத்தான் போகிறது.       

Link to comment
Share on other sites

உயிரிழந்த அப்பாவிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

இந்திய தூதரை பிடித்து விசாரித்தால் உண்மை தெரியும். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புனித நாளில் மரணித்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

கடந்த 10 ஆண்டுகளாக.. தமிழ் மக்களையும் விடுதலைப்புலிகளையும்.. அதிகப்பிரசங்கித்தனமாக.. போர் வெற்றி மமதையில்.. கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவை.. எங்கையோ பெரிய ஓட்டையை விட்டு வைச்சிட்டு இருந்திருக்கினம்.

பலன்... அப்பாவி உயிர்களின் பலியிடல்.. மற்றும் நாட்டின் பாதுகாப்புக்குறித்து உலகமே அஞ்சி நடுங்கும் நிலை. 

அது போதாதென்று... போர் வெற்றி களியாட்டம், கண் காட்சி  என்று....
குசியில்  திரிந்தவர்களுக்கு, இப்ப... ஒரு நாளில்  நடந்த, எட்டு  தாக்குதல்களும்...  
இன விரோதமோ, மத விரோதமோ... ஒரு நாளும் நிம்மதியான வாழ்க்கையை நாட்டிக்கு தரப்  போவதில்லை என்ற,  ஒரு பாடத்தை சொல்லி நிற்கிறது. 

இதய சுத்தியுடன்... செயல் படாத, அரசியல் வாதிகள் இருக்கும் நாட்டில்...
குண்டு வெடிப்புகள் ஒரு தொடர் கதையாகவே இருக்கும்.
ஆனால்.. பலியாவது என்னாவோ... அப்பாவி மக்களே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குண்டுவெடிப்பு - தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்; 7 பேர் கைது: அரசு தகவல் - LIVE

இலங்கை குண்டுவெடிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன, ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை சந்தித்தார்.

"இந்த குண்டு வெடிப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்கள். இது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்." என்றார்.

முன்பே தகவல்

அவர், "இந்த தாக்குதல் குறித்து முன்பே உளவு அமைப்புகளுக்கு தகவல்கள் வந்தன. ஆனால், சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதல்கள் நடந்தேறிவிட்டன. இது வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்ட தாக்குதல்கள். இனவாத பிரச்சனை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்தே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன." என்றார்.

தாக்குதல்கள் தொடரலாம் என பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. அதை நாம் புறந்தள்ள முடியாது. மேலும் தாக்குதல்கள் நடத்த வாய்ப்புள்ளது என்றார்.

இலங்கை குண்டுவெடிப்பு

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

விசேஷ ஊடக பிரிவு

இந்த தாக்குதல்களை தொடர்ந்து விசேஷ ஊடக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இருந்த இந்த அமைப்பானது 2009ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்

உளவுத் துறை இந்த தாக்குதல் குறித்து முன்பே வந்த தகவல்களில் ஒருவரின் பெயரை குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரின் பெயரும், ஷாங்ரி லா நட்சத்திர விடுதியில் இறந்தவரின் பெயரும் ஒன்றாக உள்ளது என்றும் அமைச்சர் ரூவான் விஜேவர்தன ஊடகவியலாளர்ஜ சந்திப்பில் கூறினார். இன்றைய குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று காவல் அதிகாரிகள் உள்பட 190 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்புவின் தெமடகொட பகுதியில் ஒரு வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, குண்டு வெடித்ததில் மூன்று காவல் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவுபடத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA

இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலை மற்றும் தெமடகொட மேலும் ஆகிய இடங்களில் மேலும் இரு குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரியல் பூங்கா மூடப்பட்டது.

இந்நிலையில் கொச்சிகடை பகுதிக்கு  இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வந்திருக்கிறார்.  ''நாட்டின் பாதுகாப்பு குறைபாடு  தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய தருணமிது'' என ரணில் தெரிவித்திருக்கிறார். 

https://www.bbc.com/tamil/sri-lanka-48001635

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நியூஸிலாந்தில் நடந்த தாக்குதலுக்கான பதிலடி என சில ஊடகங்கள் சொல்ல தொடங்குகின்றன.

இல்லாத புலிகளை சொல்லி, வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படைகளை வைத்திருந்து, தென்பகுதியில் கோட்டை விட்டு விட்டார்கள்.

இப்போது, வடக்கு, கிழக்கிலிருந்து அவசர, அவசரமாக படைகளை தென்பகுதிக்கு நகர்த்துகிறார்கள்.

முஸ்லீம் தீவிரவாதம் குறித்த தகவல்கள் போலீசாருக்கு வந்தும், மிக மெத்தனமாக இருந்து உள்ளனர்.

கோத்தபாய இந்த குருதி வெள்ளத்தில், குளித்து முத்து எடுக்க முனைவார். ஆனாலும் இது கொரில்லா யுத்தம் என்பதால், யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சதித்திட்டக்காரர்களின் நோக்கம் குறித்து அறிய அனைவரும் உதவ வேண்டும்: சபாநாயகர்

karu-jayasoorya-720x450.jpg

நாட்டில் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தியுள்ள சதித்திட்டக்காரர்களின் நோக்கம் குறித்து அறிய, அனைவரும் உதவ வேண்டுமென சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வெடிப்பு சம்பவங்கள் குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே கருஜயசூரிய இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளடன் 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தினால் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சோகத்தில் உள்ளனர். ஆனால் குறித்த சம்பவம் தொடர்பில் சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு பாரிய சம்பவத்தை நிகழ்த்திய சதித்திட்டக்காரர்களையும் அவர்களது நோக்கம் குறித்து அறிவதற்கான விசாரணைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அமைதியாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும்” என கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/சதித்திட்டக்காரர்களின்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெமட்டகொட, எட்டாவது குண்டு வெடிப்பில், வீதி சோதனையில் இருந்த போலீசார், சிலரை தடுத்து விசாரித்த போதே குண்டு வெடித்துள்ளது. இதன்போது இரு போலீஸ்க்காரர்கள் மரணித்துள்ளனர்.

வந்த குழுவின் உறுப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததாகவும், இறுதியில் இருவர் கைதானதாகவும் தெரியவருகிறது.

அனேகமாக, வட, கிழக்கில் இருந்து நகர்த்தப்படும், படைகளை கொண்டு, முஸ்லீம் பகுதி எங்கும் தீவிர செக்கிங் நடக்கும் போலவே தெரிய வருகிறது.

இலங்கை ஒரு முழு சுற்று வந்து, மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்குகின்றது.

1958ன் பின்னர் சிங்கள மொழி சட்டம், சிங்கள ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் என ஆரம்பித்தபோது, நசுக்கிய ராணுவம், 1972 ஜேவிபி கிளர்ச்சியின் காரணமாக ராணுவம் தென் பகுதி செல்ல, தமிழ் தீவிரவாதம் முளை விட்டது.

பின்னர், இந்திய ராணுவ காலத்தில், 1988 முதல் மீண்டும் எழுந்த ஜேவிபி கிளர்ச்சியின் காரணமாக ராணுவம் தென் பகுதி செல்ல, தமிழ் தீவிரவாதம் பேர் எழுச்சி கண்டது.

இம்முறை ராணுவம் தென்பகுதி செல்கிறது.

காலம் அடுத்ததாக என்ன வைத்திருக்கிறதோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

தெமட்டகொட, எட்டாவது குண்டு வெடிப்பில், வீதி சோதனையில் இருந்த போலீசார், சிலரை தடுத்து விசாரித்த போதே குண்டு வெடித்துள்ளது. இதன்போது இரு போலீஸ்க்காரர்கள் மரணித்துள்ளனர்.

வந்த குழுவின் உறுப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததாகவும், இறுதியில் இருவர் கைதானதாகவும் தெரியவருகிறது.

அனேகமாக, வட, கிழக்கில் இருந்து நகர்த்தப்படும், படைகளை கொண்டு, முஸ்லீம் பகுதி எங்கும் தீவிர செக்கிங் நடக்கும் போலவே தெரிய வருகிறது.

இலங்கை ஒரு முழு சுற்று வந்து, மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்குகின்றது.

1958ன் பின்னர் சிங்கள மொழி சட்டம், சிங்கள ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் என ஆரம்பித்தபோது, நசுக்கிய ராணுவம், 1972 ஜேவிபி கிளர்ச்சியின் காரணமாக ராணுவம் தென் பகுதி செல்ல, தமிழ் தீவிரவாதம் முளை விட்டது.

பின்னர், இந்திய ராணுவ காலத்தில், 1988 முதல் மீண்டும் எழுந்த ஜேவிபி கிளர்ச்சியின் காரணமாக ராணுவம் தென் பகுதி செல்ல, தமிழ் தீவிரவாதம் பேர் எழுச்சி கண்டது.

இம்முறை ராணுவம் தென்பகுதி செல்கிறது.

காலம் அடுத்ததாக என்ன வைத்திருக்கிறதோ தெரியவில்லை.

மாவையும்... இளைஞரணி மூலம் நைசாக,  காய்  நகர்த்துகின்றார். 
அடுத்த போர்... வடக்கு, கிழக்கில்  தான் ஆரபிக்கப் போகுது போலை கிடக்கு.
எதுக்கும்...
தளபதி மாவையாரை.... வடிவாக விசாரித்தால், உண்மை வெளியில் வரும்


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுவெடிப்பில் பலியாகிய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் இலங்கை முஸ்லீம் அகதிகள் எனும் பெயரில் மேற்கத்தேய நாடுகளில் அசேலம் அடித்தவர்களின் பின்புலங்களை திரும்பவும் இங்குள்ள பாதுகாப்பு தரப்புக்கள்  சரி பார்ப்பது நல்லது முக்கியமான தீவிரவாதிகள் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே உருவாகின்றார்கள் எனும் கருத்தை இன்றைய தாக்குதல்கள்  உடைத்து விட்டு சென்றுள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இது நியூஸிலாந்தில் நடந்த தாக்குதலுக்கான பதிலடி என சில ஊடகங்கள் சொல்ல தொடங்குகின்றன.

இல்லாத புலிகளை சொல்லி, வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படைகளை வைத்திருந்து, தென்பகுதியில் கோட்டை விட்டு விட்டார்கள்.

இப்போது, வடக்கு, கிழக்கிலிருந்து அவசர, அவசரமாக படைகளை தென்பகுதிக்கு நகர்த்துகிறார்கள்.

முஸ்லீம் தீவிரவாதம் குறித்த தகவல்கள் போலீசாருக்கு வந்தும், மிக மெத்தனமாக இருந்து உள்ளனர்.

கோத்தபாய இந்த குருதி வெள்ளத்தில், குளித்து முத்து எடுக்க முனைவார். ஆனாலும் இது கொரில்லா யுத்தம் என்பதால், யாராலும் ஒன்றுமே செய்ய முடியாது. 

நாதமுனி அதிகளவான ஆமியும்,பொலிசும் வடக்கில் இருந்த படியால் தான் யாழ்ப்பாணம் தப்பியது...மட்டக்கிளப்பில் கூட  வழமையான கத்தோலிக்க ஆலயங்களில் இக் குண்டுத் தாக்குதல் நடக்கவில்லை... காரணம் பாதுகாப்பு…{ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் நத்தார் வழிபாட்டின் போது ஆலயத்தில் வைத்து கொல்லப்பட்ட பிறகு இப்படியான நாட்களில் கொஞ்சம் கவனமாய் இருப்பார்கள்}...மெதடிஸ்த ஆலயத்தில் தான் நடந்தது 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.