Jump to content

“மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அரச செலவில் நல்லடக்கம்”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அரச செலவில் நல்லடக்கம்”

 

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அரச செலவில் நல்லடக்கம் செய்வதற்கு அனர்த்தம் முகாமைத்துவ மத்திய நிலையம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

IMG20190421144907.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 3.00 மணியளவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சம்பவமானது கவலையளிக்கின்றது. இவ்வாறு இறந்தவர்களின் உடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் இணைங்கியுள்ளதுடன்  ஒருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 60,000 ரூபாவும், இரண்டாம் கட்டமாக 40,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

இவ் அனர்த்தங்களால் 14 குழந்தைகளும், 7 பெண்களும், 5 ஆண்களுடன் 26 பேரின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. 

பொலநறுவையில் இருந்து விஷேட வைத்தியகுழு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்து சிசிச்சை அளிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு நகரையும், தேவாலயங்களையும், பாதுகாப்பதற்கும் மற்றும் தனியார் கல்விநிலையங்கள், பஸ்தரிப்பு நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் ஒன்றும் கூடும் நிலையங்களில் விஷேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள், இளைஞர், யுவதிகள் மதத்தலைவர்கள் அனாவசியமாக பொது வைபவங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும், மாவட்டத்தில் நடைபெறும் வைபவங்கள், கலைநிகழ்வுகள், தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

இவ்வனர்த்தத்தில் சிக்குண்ட ஒருவரை கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளார். வைத்தியசாலைகளில் சிசிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு போதியளவு மருந்துப்பொருட்கள் வைத்தியசாலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றது. இவ்வாறானவர்களுக்கு இரத்தம் பாய்ச்சுவதற்கு காத்தான்குடி, வாழைச்சேனை வைத்தியசாலைகளில் போதியளவு இரத்தம் சேமிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயமாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அமைச்சர்களான எம்.எஸ்.எம்அமீரலி, அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மாதிபர் கபில ஜெயசேகர, கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி, மற்றும் மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் ஆகியோர்கள் மாவட்ட செயலகத்தில் விஷேட தீர்மானத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/54357

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.