Jump to content

குண்டு வெடிப்பு: இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, என முதற் கட்ட தகவல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

st.sebastian-720x450.jpg

குண்டு வெடிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களின் முதற்கட்ட விசாரணைகளின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பிலுள்ள ; ஷங்ரி-லா ஹேட்டலில் நேற்று 2 பேர் 616 ஆவது இலக்க அறையில்
தங்கியுள்ளனர்.
 
அதேநேரம், குறித்த இரண்டு சந்தேக நபர்களுமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில்இந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். குறித் விடயம் அங்கிருந்த கண்காணிப்பு காணொளிப் பதிவிலிருந்து தெரிய வந்துள்ளது.
 
இந்த குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள சி-4 வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
 
எனினும் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தங்கியிருந்த அறையை உடைத்து பொலிஸ் அதிகாரிகள்; சோதனையிட்டு அங்கிருந்து சில வெடி பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
 
அந்தவகையில், தற்கொலைக் குண்டுதாரிகள் உள்நாட்டவர்களா வெளிநாட்டவர்களா என்பது உறுதி செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

arrest-1.jpg

குண்டுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வான் சாரதி வெள்ளவத்தையில் அதிரடியாக கைது

கொழும்பில் வெடிப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வான் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வானின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/குண்டுகளை-கொண்டு-செல்வதற/

Link to comment
Share on other sites

குண்டு வெடிப்புகள் சம்பந்தமாக கிடைத்த தகவ‌ல் ஒன்றை அடுத்து தெமட்டகொடைப் பிரதேசத்தில் இருந்த ஒரு மூன்று மாடிக் கட்டடத்தை சிறீ லங்காப் படையினர் சோதனையிட முற்பட்ட வேளை அங்கிருந்த குண்டு ஒன்று வெடித்துள்ளமையை அடுத்து சந்தேகத்தின் பேரில் அக்கட்டிடம் சுற்றி வளைக்கப்பட்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 சந்தேக நபர்கள் உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும், 3 பேர் சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு இந்தக் கட்டிடமே கட்டளை பீடமாகவும், மத்திய நிலையமாகவும் விளங்கியிருக்கலாம் எனப் பாதுகாப்புத் தரப்பு சந்தேகிக்கிறது.

தற்போது மேலும் பலர் இக்கட்டிடத்தினுள் பதுங்கியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் கட்டடத்துக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டு சிறீ லங்கா விமானப்படை, இராணுவம், பொலீஸார் இணைந்து விஷேட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி.
‍‍ரூபவாஹினி நேரடிச் செய்திகள்.

Link to comment
Share on other sites

ஒருவர் கேட்டிருக்கிறார் இப்படி "நியூசிலாந்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒட்டாவாவில் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. ஏன் சிறிலங்காவுக்கு இல்லை என""

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, nunavilan said:

ஒருவர் கேட்டிருக்கிறார் இப்படி "நியூசிலாந்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒட்டாவாவில் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது. ஏன் சிறிலங்காவுக்கு இல்லை என""

நுணாவிலான்..... கொல்லப் பட்டதில், பெரும்பாலானோர் தமிழர் என்பதால்...
அவர்களுக்கு... நியூசிலாந்து மாதிரி, ராஜ மரியாதை எல்லாம், ஸ்ரீலங்காவில்   கிடைக்காது என்று சொல்லுங்கள்.  

Link to comment
Share on other sites

32 minutes ago, தமிழ் சிறி said:

நுணாவிலான்..... கொல்லப் பட்டதில், பெரும்பாலானோர் தமிழர் என்பதால்...
அவர்களுக்கு... நியூசிலாந்து மாதிரி, ராஜ மரியாதை எல்லாம், ஸ்ரீலங்காவில்   கிடைக்காது என்று சொல்லுங்கள்.  

நியூசிலாந்தில் கொல்லப்பட்ட மக்கள் நியூசிலாந்தின் மக்கள். எங்கள் நாட்டில் கொல்லப்பட்ட மக்கள் சிறீலங்கரா, அல்லது இலங்கையரா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

St.sebastian-church-3-1-720x450.jpg

குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என்பவரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றினை பயன்படுத்தியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர், இன்று காலை ஆராதனை நடப்பதற்கு முன்னதாக பையொன்றை சுமந்துகொண்டு தேவாலயம் அருகில் நடமாடியுள்ளார். இதனை அவதானித்த ஆலயத்தின் குருமார் அவரை உள்ளே வருமாறு அழைத்துள்ளனர். அதனை மறுத்த அவர் வெளியே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனினும், வெளியே வர மறுத்த அவர் பின்னர் சென்று தேவாலயத்தை நோட்டம் விட்டதாக அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் வெளியே சென்ற அந்த நபர், அங்குள்ள கடையொன்றிலிருந்து தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல இடங்களில் தொடர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 207 பேர் உயிரிழந்த நிலையில் 450இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/குண்டுவெடிப்பு-சூத்திரத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

attack-kottava.jpg

தௌஹீத் ஜமாத் அமைப்பு பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

மொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு இலங்கையில் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது.

இந்த தாக்குதல் திட்டம் குறித்து முன்கூட்டியே புலனாய்வு பிரிவு அறிவுறுத்தி இருந்தது என்ற தகவலை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த அச்சுறுத்தல் குறித்த ஆவணங்கள் உண்மை என அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்தோடு தாக்குதல் நடத்தப்படலாமென புலனாய்வு அதிகாரிகளால் தனது தந்தையார் அறிந்து கொண்டதாகவும் அமைச்சர் ஹரீன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஹரீனின் இந்த தகவல்கள் கொழும்பு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை புறக்கணித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தௌஹீத்-ஜமாத்-அமைப்பு-பல-த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தீவிரவாதி...மைத்திரியின்..வால்  கிழக்கின் புல்லா...இவர்தான் காத்தான்குடியில் புல்லுப்போட்டு...புண்ணாக்கு வைத்து வளர்க்கிறர்....மற்ற  ஒருவரின்..சத்ததை (மன்னார் மன்னன்)  காணவில்லை...அவர் நிச்சயம் முல்லைத்தீவு...கிளிநொச்சி ,யாழ்ப்பாணத்தை குறிவைத்து வளர்த்து வருவார்....விரைவில் ..

Link to comment
Share on other sites

கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரமான மட்டக்களப்பு தேவாலய அனர்த்தம் தொடர்பில் இதுவரை இந்த ஆளுனர் புல்லா வாயே திறக்கவில்லை. காத்தான்குடியை ரவுண்டப் பண்ணினால் பல உண்மைகள் வெளியில் வரும்.

Link to comment
Share on other sites

25 minutes ago, நந்தி said:

கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரமான மட்டக்களப்பு தேவாலய அனர்த்தம் தொடர்பில் இதுவரை இந்த ஆளுனர் புல்லா வாயே திறக்கவில்லை. காத்தான்குடியை ரவுண்டப் பண்ணினால் பல உண்மைகள் வெளியில் வரும்.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Jude said:

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

இருக்கலாம் மேலைநாட்டு கிறிஸ்தவர்கள் 
பல மத்திய கிழக்கு நாடுகள் மீது போர்தொடுத்து 
லட்ஷ கணக்கில் மக்களை கொன்று வருகிறார்கள் 
அவ்வப்போது பல அப்பவாவிகளை கொன்று தமது 
மீடியாக்களின் உதவியுடன் பழிகளை வேறு நபர்கள் மீதும் போட்டு விடுவார்கள்.

பள்ளிவாசலில் இறந்தவர்கள் ஆத்திரத்தில் உண்மையை மறந்து இருக்கலாம் 
இப்போ ஆதாரங்கள் மூலம் உண்மையான கொலையாளிகளை கண்டுவிடார்கள் 
என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உண்மை இறைவனுக்கே வெளிச்சம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Jude said:

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

இன்னும் காத்தான்குடி படுகொலையோடு கட்டிக்கொண்டு கிடக்க வேண்டியான். எங்கள் மக்களை மாமாங்கத்தில் இருந்து.. திருக்கேதீஸ்வரம் வரை விரட்டினானுகள்.. கொன்று குவித்திட்டானுகள்... இப்ப தேவாலாயம் மீதான தாக்குதல் பழிவாங்கல் என்று காட்ட நினைக்கும் உங்களின் ஈனப்புத்தி.. எவருக்கும் வராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மிகவும் சக்தி வாய்ந்த நவீன தொழில்நுட்பத்திற்குரியது , உதாரணமாக இந்த வகை குண்டுகளை வெடிக்கப்பயன்படுத்தப்படும் ஊக்கி கூட ஒரு வெடிகுண்டிற்குரிய சேதத்தை விளைவிக்கக்கூடியது , பல சந்தர்ப்பங்களில் வெறும் ஊக்கி மட்டும் வெடித்து குண்டு வெடிக்காது விட்டிருக்கிறது , இக்குண்டை இணப்பதற்கு நன்றாக பயிர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் பல இடத்தைல் சமகாலத்தில் ஒரு தொடர் தாக்குதலை நடத்தக்கூடிய மிகப்பெரிய வலைப்பின்னல் இருத்தல் வேண்டும் இவ்வளவு ஆட்பலமும் நன்றாக ஒருங்கிணைப்புத்திறனுடன்  அமைப்பு ரீதியாக இந்த தாக்குதலை முஸ்லீம் குழுவால் செய்திருக்கமுடியுமா? அதுவும் இலங்கை புலனாய்வு அமைப்பு அறியாமல் அதுவும் தலைநகரிலேயே முஸ்லீம் குழுவால் செய்திருக்க சாத்தியமேயில்லை ,இதுவரை காலமும் இப்படியான மிகப்பேருந்தாக்குதல் இலங்கை வரலாற்றில் எந்த குழுவாலும் நிகழ்த்த முடியவில்லை , இலங்கை ஆளும் சக்திகள் எப்படி திருனெல்வேலி தாக்குதலுக்கு முன்னரேயே தமிழ் மக்களுக்கெதிராக 1983 இல் இறுதி தீர்வுநடவடிக்கை எனும் பெயரில் தமிழ் மக்களுக்கெதிராக இனப்படுகொலை திட்டமிடல்நடவடிக்கை மேற்கொனண்டார்களோ அது போல் இதுவும் அப்பாவி முஸ்லீம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் திட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Navaly Church Memorial.jpg

The Navaly Church bombing was the bombing of the Church of Saint Peter and Saint Paul in Navaly (or Navali) in the Jaffna peninsula by the Sri Lankan Air Force during the Sri Lankan Civil War. It is estimated that at least 125 civilians, who had taken refuge from the fighting inside the church, died as a result of this incident. The victims included men, women and children.[1][2]

https://en.wikipedia.org/wiki/Navaly_church_bombing

இப்படியான தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எப்போதும் இலங்கைத் தீவில் தண்டிக்கப்பட்டது கிடையாது.

நவாலி தேவாலயம்.. யாழ் பெரிய தேவாலயம்.. மடு தேவாலயம் எல்லாமே.. சிங்கள இனவெறிப்படைகளின் நேரடி இலக்காகவும் மக்களை பலியெடுக்கும் இடமாகும் இருந்துள்ளமை கடந்த கால வரலாறு. அந்த தாக்குதல் சூத்திரதாரிகள் யாரையும் இந்த உலகம் இன்று வரை தண்டிக்கவும் இல்லை.. தட்டிக்கேட்கவும் இல்லை.

அதுவே இந்த மனித அவலத்தின் தொடர்ச்சிகளுக்கு காரணமாகவும் உள்ளது.

இங்கு எல்லாமே அதிகம் இலக்கு வைக்கப்பட்டிருப்பது தமிழ் பேசும் கிறிஸ்தவ மக்களாகவர். அதாவது தமிழர்கள் ஆவர். 

இது பல பலமான சக்திகளின் கூட்டுச் சதியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வாகவே இருக்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரும் கால ஜனாதிபதி ஒருவர் அறிக்கை விட்டார் .....முஸ்லீம்கள் ஐக்கிய இலங்கைக்காக பாடுபட்டார்கள் என்று....

Link to comment
Share on other sites

3 hours ago, நந்தி said:

கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரமான மட்டக்களப்பு தேவாலய அனர்த்தம் தொடர்பில் இதுவரை இந்த ஆளுனர் புல்லா வாயே திறக்கவில்லை. காத்தான்குடியை ரவுண்டப் பண்ணினால் பல உண்மைகள் வெளியில் வரும்.

 

2 hours ago, Jude said:

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

 

2 hours ago, Maruthankerny said:

இருக்கலாம் மேலைநாட்டு கிறிஸ்தவர்கள் 
பல மத்திய கிழக்கு நாடுகள் மீது போர்தொடுத்து 
லட்ஷ கணக்கில் மக்களை கொன்று வருகிறார்கள் 
அவ்வப்போது பல அப்பவாவிகளை கொன்று தமது 
மீடியாக்களின் உதவியுடன் பழிகளை வேறு நபர்கள் மீதும் போட்டு விடுவார்கள்.

பள்ளிவாசலில் இறந்தவர்கள் ஆத்திரத்தில் உண்மையை மறந்து இருக்கலாம் 
இப்போ ஆதாரங்கள் மூலம் உண்மையான கொலையாளிகளை கண்டுவிடார்கள் 
என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உண்மை இறைவனுக்கே வெளிச்சம். 
 

நான் நினைத்ததை மிகச் சரியாக எழுதி விளக்கி இருக்கிறீர்கள். நன்றி.

1 hour ago, nedukkalapoovan said:

இன்னும் காத்தான்குடி படுகொலையோடு கட்டிக்கொண்டு கிடக்க வேண்டியான். எங்கள் மக்களை மாமாங்கத்தில் இருந்து.. திருக்கேதீஸ்வரம் வரை விரட்டினானுகள்.. கொன்று குவித்திட்டானுகள்... இப்ப தேவாலாயம் மீதான தாக்குதல் பழிவாங்கல் என்று காட்ட நினைக்கும் உங்களின் ஈனப்புத்தி.. எவருக்கும் வராது. 

மேலே நந்திக்கும் மரூதங்க்கேணிக்கும் அதே "ஈனப் புத்தி" இருந்து இருக்கிறது பாருங்கள். 😀

அது ஏன் இந்த காத்தான்குடி உங்களுக்கு அப்படி சுடுகிறது? உங்கள் மக்களை மாமாங்கத்தில் இருந்து.. திருக்கேதீஸ்வரம் வரை விரட்டியதுடன் பழிவாங்கலை அவர்கள் நிறுத்தி விட்டார்கள் என்று உங்கள் ஈனம் இல்லாத புத்திக்கு புரிகிறது. எங்கள் ஈனப் புத்திக்கு இந்த பழிவாங்கல் இன்னமும் தொடரும் என்று தெரிகிறது. உங்களுக்கும் இப்படி ஈனப் புத்தி தேவை என்றால் யாழ் களத்தில் நாங்கள் எழுதுவதை தொடர்ந்து படியுங்கள் - உங்களுக்கும் ஈனப் புத்தி இலவசமாக கிடைக்கும் 😜.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?

அப்போ உங்கள் பார்வையில்  கொச்சிக்கடை ,நீர்கொழும்பு  தேவாலயங்களில் கொல்லப்பட்ட சிங்கள கிறிஸ்தவர்களும் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையில் சம்பந்தபட்டவர்களாயிருக்குமா?

இன்னுமொருபதிவில் இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யவே மாட்டார்கள் என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக  பதிவிட்டிருக்கிறீர்கள் பின்பு எப்படி உங்களால் இப்படி ஒரு சந்தேக கேள்வி எழுப்பமுடிகிறது?

Link to comment
Share on other sites

20 minutes ago, valavan said:

அப்போ உங்கள் பார்வையில்  கொச்சிக்கடை ,நீர்கொழும்பு  தேவாலயங்களில் கொல்லப்பட்ட சிங்கள கிறிஸ்தவர்களும் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையில் சம்பந்தபட்டவர்களாயிருக்குமா?

இன்னுமொருபதிவில் இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யவே மாட்டார்கள் என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக  பதிவிட்டிருக்கிறீர்கள் பின்பு எப்படி உங்களால் இப்படி ஒரு சந்தேக கேள்வி எழுப்பமுடிகிறது?

என்னால் சந்தேகித்து கேள்வி எழுப்ப முடியாவிட்டால் எனது அறிவு மட்டுப்படுத்தப் பட்டு விடும். நான் எதையும் சந்தேகிக்கிறேன் - கேள்வி கேட்கிறேன். அறிவை வளர்த்து கொள்ள நான் கேள்வி கேட்கிறேன். நீங்களும் கேள்வி கேளுங்கள் - அறிவு வளரும்.

 எந்த தத்துவமும் (theory) எடுகோளும் (hypothesis) அதற்கு மாற்றான தத்துவத்தையும் (alternate theory) மாற்றான எடுகோளையும் (alternate hypothesis) கொண்டு இருக்கின்றன. அவை உண்மையானால் மாற்றான தத்துவத்தை நாம் ஏற்று கொள்கிறோம். இப்படி தான் உலக அறிவு வளர்ந்தது. இன்னமும் வளர்ந்து வருகிறது.

எனக்கு தெரிந்ததை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எங்கள் அறிவை இப்படி நாம் வளர்த்து கொள்கிறோம். நான் சொல்வதில் நீங்களும் சந்தேகித்து கேள்வி கேளுங்கள். மற்றவர்கள் கேட்டார்கள். நானும் எனது அறிவு உண்மையானதா என்று சந்தேகித்து கேள்வி கேட்கிறேன். உண்மையை தேடுவோம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Jude said:

என்னால் சந்தேகித்து கேள்வி எழுப்ப முடியாவிட்டால் எனது அறிவு மட்டுப்படுத்தப் பட்டு விடும். நான் எதையும் சந்தேகிக்கிறேன் - கேள்வி கேட்கிறேன். அறிவை வளர்த்து கொள்ள நான் கேள்வி கேட்கிறேன். நீங்களும் கேள்வி கேளுங்கள் - அறிவு வளரும்.

 எந்த தத்துவமும் (theory) எடுகோளும் (hypothesis) அதற்கு மாற்றான தத்துவத்தையும் (alternate theory) மாற்றான எடுகோளையும் (alternate hypothesis) கொண்டு இருக்கின்றன. அவை உண்மையானால் மாற்றான தத்துவத்தை நாம் ஏற்று கொள்கிறோம். இப்படி தான் உலக அறிவு வளர்ந்தது. இன்னமும் வளர்ந்து வருகிறது.

 

எதையும் சந்தேகிக்கும் நீங்கள் இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யவே மாட்டார்கள் என்பதை மட்டும் எப்படி ஆணித்தரமாக கூறினீர்கள்?

Link to comment
Share on other sites

6 minutes ago, valavan said:

எதையும் சந்தேகிக்கும் நீங்கள் இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யவே மாட்டார்கள் என்பதை மட்டும் எப்படி ஆணித்தரமாக கூறினீர்கள்?

காரணம் எழுதி இருந்தேனே? படித்தீர்களா? அந்த காரணங்கள் பற்றி நீங்கள் முன்னர் கேள்வி பட்டு இருக்கிறீர்களா? இவை உண்மையான தகவல்கள் அல்ல என்று அறிந்து இருந்தால் உங்களுக்கு தெரிந்த அறிவை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. இந்த "ஆணித்தரம்" பற்றி எனக்கு தெரியாது. அதுவும் சந்தேகத்துக்கு உரியதே.😀

ரஞ்சித் சொன்னார் தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் முன்னரும் தாக்குதல் நடத்தினார்கள் என்று. இணைப்பு ஒன்றும் தந்தார். ஆனால் அந்த இணைப்பில் தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி எதுவும் இல்லை. உங்களுக்கு தெரிந்த தகவல் இருந்தால் தாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Jude said:

காரணம் எழுதி இருந்தேனே? படித்தீர்களா? அந்த காரணங்கள் பற்றி நீங்கள் முன்னர் கேள்வி பட்டு இருக்கிறீர்களா? இவை உண்மையான தகவல்கள் அல்ல என்று அறிந்து இருந்தால் உங்களுக்கு தெரிந்த அறிவை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

ரஞ்சித் சொன்னார் தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் முன்னரும் தாக்குதல் நடத்தினார்கள் என்று. இணைப்பு ஒன்றும் தந்தார். ஆனால் அந்த இணைப்பில் தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி எதுவும் இல்லை. உங்களுக்கு தெரிந்த தகவல் இருந்தால் தாருங்கள். 

ரஞ்சித் தந்த இணைப்பில் தேவாலயங்கள்மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் செய்யவில்லை என்பதனால்தான் நீங்கள் ,இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யமாட்டார்கள் என்று பதிவிட்டீர்களா?

Link to comment
Share on other sites

2 minutes ago, valavan said:

ரஞ்சித் தந்த இணைப்பில் தேவாலயங்கள்மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் செய்யவில்லை என்பதனால்தான் நீங்கள் ,இஸ்லாமியர்கள் தேவாலயங்கள்மீது தாக்குதல் செய்யமாட்டார்கள் என்று பதிவிட்டீர்களா?

இல்லையே? நீங்கள் நான் எழுதியதை படிக்கவே இல்லையா? முற்றிலும் வேறான காரணம், படித்து பாருங்கள் - உங்களுக்கு முன்னர் தெரியாத ஒன்றை அறிந்து கொள்வீர்கள். இன்னமும் ஆழமாக அறிய விரும்பினால்  Abrahamic religions பற்றி படித்து பாருங்கள். ஈசா நபி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நீங்கள் அவரை அறிந்து கொள்ள வேண்டும். உலகில் மிகப் பெரும்தொகையானவர்களை - முஸ்லிம்களை மட்டுமல்ல, கிறீஸ்தவர்களையும் தான் - மயக்கிய புரட்சிக்காரன் அவர். அவரை பற்றியும் படித்து பாருங்கள்.

6 minutes ago, Jude said:

காரணம் எழுதி இருந்தேனே? படித்தீர்களா? அந்த காரணங்கள் பற்றி நீங்கள் முன்னர் கேள்வி பட்டு இருக்கிறீர்களா? இவை உண்மையான தகவல்கள் அல்ல என்று அறிந்து இருந்தால் உங்களுக்கு தெரிந்த அறிவை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. இந்த "ஆணித்தரம்" பற்றி எனக்கு தெரியாது. அதுவும் சந்தேகத்துக்கு உரியதே.😀

ரஞ்சித் சொன்னார் தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் முன்னரும் தாக்குதல் நடத்தினார்கள் என்று. இணைப்பு ஒன்றும் தந்தார். ஆனால் அந்த இணைப்பில் தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி எதுவும் இல்லை. உங்களுக்கு தெரிந்த தகவல் இருந்தால் தாருங்கள். 

 

Link to comment
Share on other sites

2 hours ago, vasee said:

குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மிகவும் சக்தி வாய்ந்த நவீன தொழில்நுட்பத்திற்குரியது , உதாரணமாக இந்த வகை குண்டுகளை வெடிக்கப்பயன்படுத்தப்படும் ஊக்கி கூட ஒரு வெடிகுண்டிற்குரிய சேதத்தை விளைவிக்கக்கூடியது , பல சந்தர்ப்பங்களில் வெறும் ஊக்கி மட்டும் வெடித்து குண்டு வெடிக்காது விட்டிருக்கிறது , இக்குண்டை இணப்பதற்கு நன்றாக பயிர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் பல இடத்தைல் சமகாலத்தில் ஒரு தொடர் தாக்குதலை நடத்தக்கூடிய மிகப்பெரிய வலைப்பின்னல் இருத்தல் வேண்டும் இவ்வளவு ஆட்பலமும் நன்றாக ஒருங்கிணைப்புத்திறனுடன்  அமைப்பு ரீதியாக இந்த தாக்குதலை முஸ்லீம் குழுவால் செய்திருக்கமுடியுமா? அதுவும் இலங்கை புலனாய்வு அமைப்பு அறியாமல் அதுவும் தலைநகரிலேயே முஸ்லீம் குழுவால் செய்திருக்க சாத்தியமேயில்லை ,இதுவரை காலமும் இப்படியான மிகப்பேருந்தாக்குதல் இலங்கை வரலாற்றில் எந்த குழுவாலும் நிகழ்த்த முடியவில்லை , இலங்கை ஆளும் சக்திகள் எப்படி திருனெல்வேலி தாக்குதலுக்கு முன்னரேயே தமிழ் மக்களுக்கெதிராக 1983 இல் இறுதி தீர்வுநடவடிக்கை எனும் பெயரில் தமிழ் மக்களுக்கெதிராக இனப்படுகொலை திட்டமிடல்நடவடிக்கை மேற்கொனண்டார்களோ அது போல் இதுவும் அப்பாவி முஸ்லீம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் திட்டம்

நியாயமான சந்தேகம். இவர்கள் கூலிப்படைகள். தற்கொலை தாக்குதல்கள் என்பதும் சிறி லங்காவின் தரம் குறைந்த ஆய்வாளர்களின் தவறான கணிப்பீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்
ஈசா நபியை தான் இஸ்லாம் ஏற்கிறதே ஒழிய. கிறீஸ்தவத்தை அல்ல. ஆபிரகாம் ஈசா முகமட் உட்பட்ட சில பத்து நபிகளை ஏற்கும் இஸ்லாம். ஆபிரகாமின் ஏக இறைவன் கொள்கையையே ஈசா வலியுறுத்தியதாயும் அதை தடம் மாற்றி காபிர்களும் முனாபிகக்குகளும் செய்த சதியே சுருவ வழிபாட்டு முறை கிறீஸ்தவம் என்கிறது இஸ்லாம்.

இஸ்லாமியர் தேவாலத்தின் மீது தாக்கியதுக்கான பதிவுகள் கீழே.

https://www.bbc.co.uk/news/world-middle-east-45827450 

https://www1.cbn.com/ibrahim-36

https://en.m.wikipedia.org/wiki/Peshawar_church_bombing

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.