Jump to content

ஒரே பார்வையில் குண்டு வெடிப்புகள் – 27 வெளிநாட்டவர் பலி – சங்கரில்லா விடுதியில் தாக்குதல்தாரிகள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பார்வையில் குண்டு வெடிப்புகள் – 27 வெளிநாட்டவர் பலி – சங்கரில்லா விடுதியில் தாக்குதல்தாரிகள்..

April 21, 2019

 

கொழும்பு சங்கரில்ல நட்சத்திர விடுதியில்  தாக்குதல்தாரிகள் தங்கியிருந்தனர்…

Bomb-Blast-all.jpg?resize=663%2C484

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன்  450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு, சியோன் தேவாலயம், கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல், கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல், கொழும்பு, சினமன் கிராண்ட் கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன், கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்காவில் இரு வெடிப்பு மற்றும் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பவத்தில்  29 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பில் இடம்பெற்ற சம்பவத்தில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற சம்பவத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய 13 பேர் இவ்வனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதேவேளை, தெமட்டகொடைப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 3 காவற்துறையினர் உயிரிழந்துள்ளனர்.  இச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரை கைதுசெய்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

11 நாடுகளைச் சேர்ந்த 27 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர்…

இலங்கையின் குண்டுவெடிப்பகளில் 11 நாடுகளைச் சேர்ந்த 27 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக போலந்து, டென்மார்க், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, மொறோக்கோ, மற்றும் பங்ளாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை  தகவல்கள்  தெரிவித்துள்ளன.

எந்த அமைப்புகளும் உரிமை கோரவில்லை…

இலங்கையில்  இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதலுக்கு எந்தவித பயங்கரவாத அமைப்போ அல்லது எந்த அமைப்போ உரிமைகோரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு சங்கரில்ல நட்சத்திர விடுதியில்  தாக்குதல்தாரிகள் தங்கியிருந்தனர்…

கொழும்பு சங்கரில்ல விடுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சி-4 ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்ட 25 கிலோகிராம் நிறையுள்ள குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடுதியில்  இரு நபர்கள் நேற்றையதினம் (20.04. 2019) அறை இலக்கம் 616 இல் தங்கியிருந்துள்ளதாகவும் குறித்த இரு நபர்களே இவ்வாறு தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது. தற்கொலை தாக்குதல் தாரிகளின் செயற்பாடுகள் விடுதியின் உணவகப்பகுதி மற்றும் விறாந்தைப் பகுதிகளிலுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளது. எனினும்  வெளிநாட்டவரா அல்லது உள்ளூரைச் சேர்ந்தவர்களா விடுதியின் தற்கொலைத்தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளனர் என இது வரை தெரியவரவில்லை.

சமூக வலைத்தளங்கள் முடக்கம்..

இலங்கையின்  பாதுகாப்புக் கருதி சமூகவலைத்தளங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் சமூகவலைத் தளங்களின் செயற்பாடுகுள் முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. குறிப்பாக முகப்புத்தகம், இன்ஸ்ரகிராம், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் மற்றும் வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாடளாவிய ரீதியில்காவற்துறை  ஊரடங்கு இன்னு மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறிப்பாக கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான உயிர்ப்பு ஞாயிறு தினமான இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் உயிர்ப்பு ஞாயிறு வழிபாகளில் ஈடுபட்டிருந்த தருணம் குறித்த குண்டுத்தாக்குதல்கள் ஆலயங்களில் நடத்தப்பட்டது மிகவும் கொடூரமானதும் மிலேச்சத்தனமானதுமான செயல் என பல உலகநாடுகளும் அரசியல் தலைவர்களும்  கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை பரிசுத்த பாப்ரசரும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பாடசாலைகள் நாளை 2 ஆம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ள நிலையில், நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறைநாளாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

இதேவேளை அனைத்து காவற்துறை  உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் தற்காலிகமாக இரத்துச்செய்யப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள பல தேவாலயங்களுக்கு ஆயுதமேந்திய காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனை இலங்கையின் அரசியல்வாதிகள் கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்னர். வடமாகாண சபைக்குட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை (22) விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணித்துள்ளார்.

நாட்டின் நிலைமை கருதி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அத்துடன் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கவிருந்த பல்கலைகழக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட சகல துறைகளினதும் தலைமை அதிகாரிகளின் பங்குபற்றலில் விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.

இதன்போது, காவற்துறையினர், முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலா விடுதிகள், வைத்தியசாலைகள், தூதரகங்கள், கத்தோலிக்க மதகுருமார்கள், கத்தோலிக்க வணக்கஸ்தலங்கள் மற்றும் முக்கியத்துவமிக்க அரச நிறுவனங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தாக்குதலை நடத்தியவர் இவரா? வெளியானது புகைப்படம்..

Attacker.jpg?resize=700%2C400நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை நடத்தியவர் என சந்தேகத்தில் ஒருவரது புகைப்படம் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த நபரே தனது பையில்கொண்டு வந்த குண்டை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிக்க செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

 

http://globaltamilnews.net/2019/118872/

Link to comment
Share on other sites

சரியாக 136 வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு குருத்து ஞாயிறன்று தான் இலங்கையின் முதலாவது மதக் கலவரம் இதே கொட்டாஞ்சேனைப் பகுதியில் நிகழ்ந்தது என ஊடகவியலாளர் சரவணன் சொல்லியிருக்கின்றார் இன்று. மிகவும் திட்டமிடப்பட்ட நிகழ்வு  இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

சரியாக 136 வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு குருத்து ஞாயிறன்று தான் இலங்கையின் முதலாவது மதக் கலவரம் இதே கொட்டாஞ்சேனைப் பகுதியில் நிகழ்ந்தது என ஊடகவியலாளர் சரவணன் சொல்லியிருக்கின்றார் இன்று. மிகவும் திட்டமிடப்பட்ட நிகழ்வு  இது

55444967_2449291008437535_7154739062081847296_n.jpg?_nc_cat=106&_nc_ht=scontent-frt3-2.xx&oh=336c88cc7f790a83f8024adfed80e4ca&oe=5D4BC998

1915ஆம் ஆண்டு...... தமிழன் சேர் பொன்னம்பலம் இராமநாதனை சிங்களத் தலைவர்கள், 
குதிரை வண்டியில் இழுக்கும் காட்சி. 

இப்ப.... சேர் பொன் ராமநாதனும், சேர் பொன்  அருணாசலமும் இல்லை.
இதற்கு... தீர்வு காண, சம்பந்தன் ஐயாவைதான் கூப்பிட வேணும்.

சம்பந்தருக்கு... இன்று,  குண்டு வெடித்த விஷயம் தெரியுமோ, எண்டும்  தெரியவில்லை.
ஏனென்றால்... 27 உலகத் தலைவர்கள், கண்டனம் தெரிவித்து,  அறிக்கை விட்டு விட்டார்கள்.

சம்பந்தன் அய்யாவினதும், அவரின் கூட்டாளிகளினதும்   அறிக்கையை... இன்னும் காணவில்லை. 
யாரை... கண்டித்து, அறிக்கை விடுவது என்று, தமிழரசு கட்சி  குழம்பிப் போயுள்ளது போலிருக்கு.

அப்படி.. அவர்கள் அறிக்கை, விட்டிருந்தாலும்... இது, இப்ப முக்கியமில்லை இல்லை என்று,
செய்தி ஊடகங்கள்... பிரசுரிக்கவில்லைப் போல் தெரிகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை மட்டுமே சொல்லகூடியதாக உள்ளது  

Link to comment
Share on other sites

31 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தன் அய்யாவினதும், அவரின் கூட்டாளிகளினதும்   அறிக்கையை... இன்னும் காணவில்லை. 

நாளையான் வீரகேசரி வாசிக்க முன்னரே அவரும் அறிக்கை விட்டுவிட்டார்!
குற்றவாளிகளை சட்டத்தின் முன்னர் நிறுத்தவேண்டும் என்று கடும்தொனியில் அறிக்கை விட்டுள்ளார்!

இல்லையென்றால் கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் சொல்லியிருக்கார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, போல் said:

நாளையான் வீரகேசரி வாசிக்க முன்னரே அவரும் அறிக்கை விட்டுவிட்டார்!
குற்றவாளிகளை சட்டத்தின் முன்னர் நிறுத்தவேண்டும் என்று கடும்தொனியில் அறிக்கை விட்டுள்ளார்!

இல்லையென்றால் கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் சொல்லியிருக்கார்!

Ãhnliches Foto

போல்.... நாளையான்... வீரகேசரியின், படமும் இப்ப வந்திட்டுது.
இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும்...  வலியுறுத்தி இருப்பதாகவும்,
இல்லையேல்... போர் வெடிக்கும் என்று, ஆவேசமாக சொல்லிவிட்டு, சிரித்து விட்டு... வந்து விட்டார் சம்பந்தர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சியோன் தேவாலயத்தில் சண்டே ஸ்கூல் முடிந்து காலை ஆராதனை தொடங்கு முன்னர் ஒரு பருத்த முஸ்லீம் மனிதர் ஆலயத்திற்கு வந்து வாசலில் நின்றதாகவும்  அந்த சேர்ச்சை சேர்ந்த பெண் ஒருவர் அவரிடம்  போய் ஏன் வாசலில் நிக்கிறிர்கள் என்று கேட்ட போது அம்மாவுக்கு சுகமில்லை அதான் வந்தேன் என்று சொன்னவராம்...உள்ளுக்கு வரச் சொன்ன போதுஉள்ளே  போகவில்லையாம்...அப் பெண்  சேர்ச்சை சேர்ந்த இரு ஆண்களிடம் சொன்ன போது அவர்கள் இருவரும் சேர்ந்து  தூக்கிக் கொண்டு போகும் போது வாசலில் தான் வெடித்ததாம்..தூக்கிக் கொண்டு போனவர்கோடு சேர்த்து வெடித்தது...வாசலில் வாகனங்கள் நின்றதால் வெடித்து சிதறியிருக்கும் ....இதே ஆராதனை தொடங்கின பிறகு உள்ளுக்குள்ள வெடித்திருந்தால் இழப்பு இன்னும் அதிகமாய் இருந்திருக்கும் 😭

Link to comment
Share on other sites

36 minutes ago, ரதி said:

சியோன் தேவாலயத்தில் சண்டே ஸ்கூல் முடிந்து காலை ஆராதனை தொடங்கு முன்னர் ஒரு பருத்த முஸ்லீம் மனிதர் ஆலயத்திற்கு வந்து வாசலில் நின்றதாகவும்  அந்த சேர்ச்சை சேர்ந்த பெண் ஒருவர் அவரிடம்  போய் ஏன் வாசலில் நிக்கிறிர்கள் என்று கேட்ட போது அம்மாவுக்கு சுகமில்லை அதான் வந்தேன் என்று சொன்னவராம்...உள்ளுக்கு வரச் சொன்ன போதுஉள்ளே  போகவில்லையாம்...அப் பெண்  சேர்ச்சை சேர்ந்த இரு ஆண்களிடம் சொன்ன போது அவர்கள் இருவரும் சேர்ந்து  தூக்கிக் கொண்டு போகும் போது வாசலில் தான் வெடித்ததாம்..தூக்கிக் கொண்டு போனவர்கோடு சேர்த்து வெடித்தது...வாசலில் வாகனங்கள் நின்றதால் வெடித்து சிதறியிருக்கும் ....இதே ஆராதனை தொடங்கின பிறகு உள்ளுக்குள்ள வெடித்திருந்தால் இழப்பு இன்னும் அதிகமாய் இருந்திருக்கும் 😭

Father இது தொடபாக கதைக்கும் வீடியோ ஒன்று இருக்கின்றது. YouTube இல் தரவேற்றம் செய்து தான் இங்கு இணைக்க முடியும் என்பதால் இணைக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

57686537_326836954911430_536459119125594

பாரதம் வரப்போகுது போல தெரியுது....😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

Father இது தொடபாக கதைக்கும் வீடியோ ஒன்று இருக்கின்றது. YouTube இல் தரவேற்றம் செய்து தான் இங்கு இணைக்க முடியும் என்பதால் இணைக்கவில்லை

குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என்பவரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றினை பயன்படுத்தியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர், இன்று காலை ஆராதனை நடப்பதற்கு முன்னதாக பையொன்றை சுமந்துகொண்டு தேவாலயம் அருகில் நடமாடியுள்ளார். இதனை அவதானித்த ஆலயத்தின் குருமார் அவரை உள்ளே வருமாறு அழைத்துள்ளனர். அதனை மறுத்த அவர் வெளியே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் சென்று தேவாலயத்தை நோட்டம் விட்டதாக அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் அங்குள்ள கடையொன்றிலிருந்து தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல இடங்களில் தொடர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 207 பேர் உயிரிழந்த நிலையில் 450இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/குண்டுவெடிப்பு-சூத்திரத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

சியோன் தேவாலயத்தில் சண்டே ஸ்கூல் முடிந்து காலை ஆராதனை தொடங்கு முன்னர் ஒரு பருத்த முஸ்லீம் மனிதர் ஆலயத்திற்கு வந்து வாசலில் நின்றதாகவும்  அந்த சேர்ச்சை சேர்ந்த பெண் ஒருவர் அவரிடம்  போய் ஏன் வாசலில் நிக்கிறிர்கள் என்று கேட்ட போது அம்மாவுக்கு சுகமில்லை அதான் வந்தேன் என்று சொன்னவராம்...உள்ளுக்கு வரச் சொன்ன போதுஉள்ளே  போகவில்லையாம்...அப் பெண்  சேர்ச்சை சேர்ந்த இரு ஆண்களிடம் சொன்ன போது அவர்கள் இருவரும் சேர்ந்து  தூக்கிக் கொண்டு போகும் போது வாசலில் தான் வெடித்ததாம்..தூக்கிக் கொண்டு போனவர்கோடு சேர்த்து வெடித்தது...வாசலில் வாகனங்கள் நின்றதால் வெடித்து சிதறியிருக்கும் ....இதே ஆராதனை தொடங்கின பிறகு உள்ளுக்குள்ள வெடித்திருந்தால் இழப்பு இன்னும் அதிகமாய் இருந்திருக்கும் 😭

ம்ம் உண்மைதான் 

Link to comment
Share on other sites

கிழக்கு ஆளுனர் முஸ்லீம் இனவாதி ஹிஸ்புல்லாவின் காத்தான்குடியிலிருந்தே  ... தற்கொலை குண்டுதாரிகள். 

http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_192.html

காத்தான் குடியை மையப்படுத்தி கிழக்கு மாகாணத்தில், காலாகாலமாக செயற்பட்டுவரும் முஸ்லீம் அடிப்படைவாதிகளின்  நடவடிக்கைகள்,  கிழக்கு ஆளுனர் முஸ்லீம் இனவாதி ஹிஸ்புல்லாவிற்கு தெரியாமல்/அறியாமல் நடந்தேறியிருக்கின்றனவா?

https://www.google.com/maps/place/Kattankudy,+Sri+Lanka/@7.6856575,81.7143887,14z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3ae5331e2f99b853:0x82d52f9481a1211d!8m2!3d7.6853695!4d81.7260123

Link to comment
Share on other sites

17 minutes ago, Nellaiyan said:

கிழக்கு ஆளுனர் முஸ்லீம் இனவாதி ஹிஸ்புல்லாவின் காத்தான்குடியிலிருந்தே  ... தற்கொலை குண்டுதாரிகள். 

http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_192.html

காத்தான் குடியை மையப்படுத்தி கிழக்கு மாகாணத்தில், காலாகாலமாக செயற்பட்டுவரும் முஸ்லீம் அடிப்படைவாதிகளின்  நடவடிக்கைகள்,  கிழக்கு ஆளுனர் முஸ்லீம் இனவாதி ஹிஸ்புல்லாவிற்கு தெரியாமல்/அறியாமல் நடந்தேறியிருக்கின்றனவா?

https://www.google.com/maps/place/Kattankudy,+Sri+Lanka/@7.6856575,81.7143887,14z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3ae5331e2f99b853:0x82d52f9481a1211d!8m2!3d7.6853695!4d81.7260123

சாத்தியமில்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.