Jump to content

கொழும்பு குண்டுவெடிப்பு – இதுவரை 13 பேர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு குண்டுவெடிப்பு – இதுவரை 13 பேர் கைது

colombo-blast-2-720x450.jpg

கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக தெமட்டகொட பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் இருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் இதுவரை 215 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர்.

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பல குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று வந்த நிலையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் போன்றவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னரும் கட்டநாயக்க விமான நிலையத்தில் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் பல பகுதிகளில் குண்டுகள் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் முக்கிய பகுதிகள் மற்றும் வீடுகளிலும் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் உரிமைகோரவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு சிவில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக இத்தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

colombo-blast-1.jpg

colombo-blast-3.jpg

 

http://athavannews.com/கொழும்பு-குண்டுவெடிப்ப-2/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் ..முட்டாக்கு வேணும்..வேணுமின்னு சண்டை பிடித்தவை...ஆண்டவா திரிகோணமலை சண்முகாவை காப்பாத்து..

புல்லாவும், மன்னார் மன்னனும் ..இப்ப போவினம் ...பிணை  எடுக்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புல்லாவுக்கு இராணுவ மரியாதை, சில இளைஞர்களால் அண்மையில் கொடுக்கப்பட்ட ஒர் புகைப்படம் பார்த்தேன்  அதை யாராவது இங்கு இணைத்தால் நல்லம் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

புல்லாவுக்கு இராணுவ மரியாதை, சில இளைஞர்களால் அண்மையில் கொடுக்கப்பட்ட ஒர் புகைப்படம் பார்த்தேன்  அதை யாராவது இங்கு இணைத்தால் நல்லம் .....

அவைதான் ..இவை ... அப்பவே சந்தேகப்பட....இங்கு சிலர் எகிறிப்பாய்ந்தவை...கடெட் குரூப் ..அது  இதுவென்று...புல்ல இதுவரை சத்தமே போடேலை....நேராவே காத்தான்குடிபோனால்...இன்னும் 30டன் மருந்தும்..10 டன் போதைமருந்தும் பிடிக்கலாம்...அணிலுக்கு பயம் எங்கை தன்ரை ஆட்சி போயிடுமோன்னு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

புல்லாவுக்கு இராணுவ மரியாதை, சில இளைஞர்களால் அண்மையில் கொடுக்கப்பட்ட ஒர் புகைப்படம் பார்த்தேன்  அதை யாராவது இங்கு இணைத்தால் நல்லம் .....

ஹிஸà¯à®ªà¯à®²à¯à®²à®¾à®µà¯à®à¯à®à¯ à®à®°à®¾à®£à¯à®µ மரியாத௠à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஹிஸà¯à®ªà¯à®²à¯à®²à®¾à®µà¯à®à¯à®à¯ à®à®°à®¾à®£à¯à®µ மரியாத௠à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய படங்கள்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

அவைதான் ..இவை ... அப்பவே சந்தேகப்பட....இங்கு சிலர் எகிறிப்பாய்ந்தவை...கடெட் குரூப் ..அது  இதுவென்று...புல்ல இதுவரை சத்தமே போடேலை....நேராவே காத்தான்குடிபோனால்...இன்னும் 30டன் மருந்தும்..10 டன் போதைமருந்தும் பிடிக்கலாம்...அணிலுக்கு பயம் எங்கை தன்ரை ஆட்சி போயிடுமோன்னு..

வேறென்ன வச்சி நல்லா மென்று விழுங்குறினம் ...வெளியே விட்டால் அவ்வளவு தலைகுனிவு 
பெயர் முகவரிகளோடு தகவல்கள் கிடைத்தும் கோட்டை விட்டிருக்கினம் ...இழப்பு அதிகமாக இருந்தாலும் 
இலங்கை முஸ்லீம் தீவிரவாதத்தின் கூர்மையை சுவைத்திருப்பது நல்லதொரு ஆரம்பம் ..இலங்கை முசுலிம்கள் சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

44 minutes ago, அக்னியஷ்த்ரா said:

வேறென்ன வச்சி நல்லா மென்று விழுங்குறினம் ...வெளியே விட்டால் அவ்வளவு தலைகுனிவு 
பெயர் முகவரிகளோடு தகவல்கள் கிடைத்தும் கோட்டை விட்டிருக்கினம் ...இழப்பு அதிகமாக இருந்தாலும் 
இலங்கை முஸ்லீம் தீவிரவாதத்தின் கூர்மையை சுவைத்திருப்பது நல்லதொரு ஆரம்பம் ..இலங்கை முசுலிம்கள் சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கிறார்கள் 

இறந்த வெளிநாட்டவர்களுக்காவது உண்மையை சொல்லியே ஆக வேண்டும். பார்க்கலாம் என்ன தான் இந்த அரசு சொல்லப்போகிறது என.

தேரர்மாருக்கு வேலை வந்திருக்கு என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

5 hours ago, nunavilan said:

இறந்த வெளிநாட்டவர்களுக்காவது உண்மையை சொல்லியே ஆக வேண்டும். பார்க்கலாம் என்ன தான் இந்த அரசு சொல்லப்போகிறது என.

அன்பளிப்புகள், மது, மாது போன்ற இன்னோரன்ன சலுகைகளை பெற்றுக்கொண்டு சில இராஜதந்திரிகள், ஐநா அதிகாரிகள் தமிழினப் படுகொலைகளுக்கு துணை போனது வரலாறு. எனவே எதுவும் நடக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஹிஸà¯à®ªà¯à®²à¯à®²à®¾à®µà¯à®à¯à®à¯ à®à®°à®¾à®£à¯à®µ மரியாத௠à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஹிஸà¯à®ªà¯à®²à¯à®²à®¾à®µà¯à®à¯à®à¯ à®à®°à®¾à®£à¯à®µ மரியாத௠à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய படங்கள்-

நன்றி கு.சா

Link to comment
Share on other sites

இன்று யாழில் நடந்த பதற்றம்; பேருந்து நிலையத்தை சுற்றிவளைத்த அதிரடிப்படை! ஒருவர் அதிரடிக் கைது!!

கொழும்பில் குண்டு வெடிப்புக்கள், தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்றவேளை யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்குள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றய தினம் கொழும்பில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புக்கள், தற்கொலை குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றவேளை யாழ்.மாவட்டத்திலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விசேட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இந்நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள, யாழ்.மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை இன்றைய தினம் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்குள் விசேட அதிரடிப்படையினர் புகுந்து மக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்கவும்,

பேருந்துகளில் அதிகளவான பயணிகள் ஏற்றுவதை தடுப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், பொதிகள் கொண்டு செல்பவா்கள் தொடர்பில் சோதனைகளும் இடம்பெற்று வருகிறன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/118282?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

அவைதான் ..இவை ... அப்பவே சந்தேகப்பட....இங்கு சிலர் எகிறிப்பாய்ந்தவை...கடெட் குரூப் ..அது  இதுவென்று...புல்ல இதுவரை சத்தமே போடேலை....நேராவே காத்தான்குடிபோனால்...இன்னும் 30டன் மருந்தும்..10 டன் போதைமருந்தும் பிடிக்கலாம்...அணிலுக்கு பயம் எங்கை தன்ரை ஆட்சி போயிடுமோன்னு..

உது நிஜ துப்பாக்கி தானே .cadetமாரிடம் எப்படி கொடுக்க முடியும்😲 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.