Jump to content

கிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சாமானியன் said:

அது சரி மனுஷன் மாருக்கு ஐம்பது வயது வர,  ஏனப்பா எல்லாப் பொம்பிளையளும் பொல்லுப் பிடிக்கிற வயது எண்டு சொல்லி கடுப்பேத்துகினம் !

உங்களுக்கு இவையின்ரை விளையாட்டுக்கள் விளங்காது போல.

சும்மா இருங்கப்பா கையை எடுங்கோப்பா என்பார்கள் ஆனாலும் கை தடை செய்யாது.இழித்த வாயங்கள் விடமாட்டாங்கள் என்ற நம்பிக்கையில் வாய் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கும்.

10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விளக்கமாச்  சொல்லுங்கோ விளங்கவில்லை

கிரேக்கர்களின் எந்தவொரு சாப்பாடும் ஒதுக்கிவிட முடியாதவை.

நான் கிரேக்க கப்பலில் வேலை செய்து எத்தனையோ நாடுகளுக்குப் போய் வந்தாலும் கிரேக்கத்துக்கு போனது கிடையாது.

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளை வழங்கி எனக்கு ஊக்கம் தந்த சாமானியன், மோகன், ஜெகதா துரை, கண்மணி அக்கா ,நீர்வேலியான், ஏராளன், ராஜவன்னியன் அண்ணா, ஈழப்பிரியன் , ருல்பன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.

6 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு இவையின்ரை விளையாட்டுக்கள் விளங்காது போல.

சும்மா இருங்கப்பா கையை எடுங்கோப்பா என்பார்கள் ஆனாலும் கை தடை செய்யாது.இழித்த வாயங்கள் விடமாட்டாங்கள் என்ற நம்பிக்கையில் வாய் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கும்.

கிரேக்கர்களின் எந்தவொரு சாப்பாடும் ஒதுக்கிவிட முடியாதவை.

நான் கிரேக்க கப்பலில் வேலை செய்து எத்தனையோ நாடுகளுக்குப் போய் வந்தாலும் கிரேக்கத்துக்கு போனது கிடையாது.

ஏதென்ஸில் கிரேக்க உணவுகள் என்று அவர்கள் வைத்திருப்பது கிட்டத்தட்ட துருக்கிநாட்டு உணவுகள் போன்றவைதான். மற்றும் ஐரோப்பிய உணவுகளும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா அங்குபோய் பல அறிஞர்கள் தத்துவ ஆசிரியர்கள் என்று பலர் 
திரிந்த இடங்களில் நடக்க நேர்ந்திருக்கும் பலவற்றை அறிய நேர்ந்திருக்கும் 

இவை உங்கள் வாழ்க்கையில் சிலவற்றை மாற்றவேண்டும் 
அல்லது இனி இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது புதிய 
சிந்தனைகளை தூண்டும் மாதிரி உங்களுக்கு புதிய எண்ணம் சிந்தனை 
ஏதாவது தோண்றிச்சா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Maruthankerny said:

அக்கா அங்குபோய் பல அறிஞர்கள் தத்துவ ஆசிரியர்கள் என்று பலர் 
திரிந்த இடங்களில் நடக்க நேர்ந்திருக்கும் பலவற்றை அறிய நேர்ந்திருக்கும் 

இவை உங்கள் வாழ்க்கையில் சிலவற்றை மாற்றவேண்டும் 
அல்லது இனி இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏதாவது புதிய 
சிந்தனைகளை தூண்டும் மாதிரி உங்களுக்கு புதிய எண்ணம் சிந்தனை 
ஏதாவது தோண்றிச்சா? 

உங்களைப்போல் புத்திசாலிகளுக்குத்தான் புதிய சிந்தனைகள் தோன்றும்.  நான் ஒரு சாதாரண மனிசி. எனக்கு எதுவுமே தோன்றவில்லை. போக என் மனம் புதிதாக எதையும் ஏற்றுக்கொள்ளவோ மாற்றவோ முயலாது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மேலே சுற்றிவிட்டு கீழே வந்தால் பயங்கரத் தாகம்.ஒரே ஒரு சிறிய கடை தான் அங்கு. சரியான விலை. ஆனாலும் வேறு வழியில்லை என்பதனால் அங்கே வாங்கிக் குடித்துவிட்டு ஏதாவது உண்ணலாமா என்று பார்த்தால் பெரிதாக எதுவும் இருக்கவும் இல்லை. சரி ஒரு உணவகத்தைத் தேடிப் பிடிக்கும்வரை உண்ணலாம் என ஒரு பிஸ்கற்றை வாங்கி வந்து உண்டுகொண்டே கீழே நடந்துவர நாம் செல்ல வேண்டிய பஸ் போய்க்கொண்டு இருக்கிறது.

அங்கே நின்ற மஞ்சள் உடையணிந்த பெண்ணை கேட்க ஒரு பத்து நிமிடத்தில் அடுத்த பஸ் வரும் என்றாள். காலோ சரியான நோவெடுக்க இருப்பதற்கான இருக்கைகள் பக்கத்தில் எங்கும் காணவில்லை. சற்றுத் தூரத்தில் சீமெந்து இருக்கைகள் தெரிய அங்கே போய் இருப்பமோ என்று நான் கேட்கிறேன். சரியென்று போய் இருந்து கையில் வைத்திருந்த மிச்ச யூஸையும் குடித்து மிகுதி பிஸ்கற்றையும் சாப்பிட கொஞ்சம் களைப்பு அடங்குகிறது.

மத்தியானம் எங்கேயப்பா சாப்பிடுவம் என்று கேட்க, இப்ப தானே பிஸ்கற் சாப்பிட்டு முடிச்சனி. அதுக்குள்ள சாப்பாட்டுக் கதை.  கொஞ்சம் வயித்தைக் காயப்போடன். இன்னும் ஒரு இடத்தைப் பார்த்திட்டுச் சாப்பிடுவம். பட்டினி கிடந்தது பழக்கவேணும் எண்டு மனிசன் ஆரம்பிக்க, ஐயோ கடவுளே உது ஒவ்வொருநாளும் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு. கொலிடே வந்த இடத்திலயாவது நின்மதியா சாப்பிட விடுங்கப்பா என்றவுடன் மனிசன் வேறெதுவும் சொல்லாமல் போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். கொஞ்சம் தள்ளி நிறைய மரங்கள் தெரிகின்றன. நான் மரங்களைப் பார்த்துவிட்டு வாறன். பஸ் வந்தால் கூப்பிடுங்கோ என்றுவிட்டு நான் சிறிது தள்ளிப் போய் பார்க்கிறேன். நிறைய மரங்களும் நடைபாதையும் கீழ்நோக்கிப் போகுது. உதில் நடந்து போய்ப் பார்த்தால் என்ன என்று எண்ணிக்கொண்டிருக்க, எங்கட பஸ் வந்திட்டுது ஓடிவா என்றபடி மனிசன் ஓடுறார். போய் எனக்கும் இடம் பிடியுங்கோ என்றபடி நான் பின்னால் நடக்கிறன்.

ஓடிப்போன மனிசனைப் பார்த்தா பஸ்ஸில ஏறாமல் கெதியா வரச்சொல்லி எனக்கு கை காட்டிக்கொண்டு இருக்கிறார். ஏன் இந்த எளிய மனிசன் ஏறாமல் நிக்கிது. இருக்க இடம் கிடைக்காமல் இருக்கப்போகுது என்றபடி நான் போய் சேர்ந்தால், நீ டிக்கற்றை வைத்துக்கொண்டு என்னை பஸ்ஸில ஏறு எண்டால் விடுவாங்களே என்றபடி மனுசனும் நானும் பஸ்ஸில் ஏறினால் எல்லா சீற்ரும் நிறைஞ்சு போய் கிடக்கு. வேறு வழியில்லாமல் கம்பியைப் பிடிச்சுக்கொண்டு நிக்கிறன். ஒரு பத்து நிமிடம் பஸ் ஓடியபின் Syntagma square என்னும் இடம் வந்ததும் சனக்கூட்டம் அதிகமாக இறங்க, இங்கே இறங்கி என்ன என்று பார்ப்போமா என்றேன். சரி என்று கூற இருவரும் இறங்கி நடந்தால் அங்கும் திருவிழா போன்று கூட்டம். பல பெரிய விற்பனை நிலையங்கள், உணவகங்கள் என்பனவும் அங்கேயிருந்தன. இங்கேயே சாப்பிட்டுவிட்டு மிகுதியைப் பார்ப்போம் என்று கூற இன்னும் கொஞ்சம் நடந்து பார்ப்போம். ஏதாவது புதிதாக இருக்கிறதா என்று கூறியபடி மனிசன் செல்ல நானும் செல்லவேண்டியதாகிவிட்டது. தூரத்தில் ஒரு அழகிய கட்டடம் தெரிகிறது. ஏதென்ஸின் பழைய பாராளுமன்றம் என்று மப்பில் போட்டிருக்கு. லண்டனில் Buckingham palace க்கு முன்னால் நிற்கும் இருவர்போல் இங்கும் இருவர் காவலர் போல் நிற்கின்றனர். அதில் நின்று படத்தை எடுத்துவிட்டு தொடர்ந்து எதிர்ப்புறம் உள்ள வீதியில் நடக்கிறோம்.

58864872_10211912023909568_7389638850793

ஒரு சைனீஸ் உணவகத்தைக் கண்டதும் இங்கு மத்திய உணவை உண்போமா என்று கேட்டுவிட்டு நானே வேண்டாம் என்றேன். ஏனெனில் ஒரு ஐம்பதுபேர் இருக்கக்கூடிய பெரிய உணவகத்தில் ஒருவரைக்கூடக் காணவில்லை. அதனால் அதைக் கடந்து வேறு சில உணவகங்களை பார்த்துக்கொண்டு சென்றால் உணவுகள் எப்படி இருக்குமோ என்ற யோசனைவேறு. அடுத்த வீதிக்குச் சென்றால் பல சிறிய உணவகங்கள் வீதியோரமாக் இருக்க இளம் பெண்கள் நின்று போவோர் வருவோரை தமது உணவகத்துக்கு வரும்படிஅழைத்துக்கொண்டு நிற்க இரண்டு மூன்றுபேரைத் தவிர்த்துவிட்டு நான்காவதாக அழைத்த பெண்ணின் சிரிப்பு எனக்குப் பிடித்துவிட அங்கு உண்ணலாம் என்றேன்.

சரி என்று போனால் அங்கு ஒரு மேசையில் நான்கு கதிரைகளும் இன்னொரு சிறிய மேசையில் இரண்டு கதிரைகளும் இருக்க, அந்தப் பெண் எம்மைச் சிறிய மேசையில் அமரும்படி கூற நானும் கணவரும் எதிர் எதிராய் அமர்கிறோம். சூரியவெளிச்சம் என் முகத்தில் அடிக்கிறது. வெய்யிலாக இருக்கிறது அங்கு போய் இருக்கலாமா என்று அப்பெண்ணைக் கேட்க அது நான்குபேர் இருப்பது என்று கூறிவிட்டு நிற்கிறாள்.

நான் அந்தப்பக்கம் வாறன். நீ இங்கே வா என்கிறார் கணவர்.உங்களுக்கு மட்டும் வெய்யில் அடிக்காதோ என்றுவிட்டு எனக்கு இதிலிருப்பதில் விருப்பம் இல்லை. நாம் வேறு கடைக்குப் போகிறோம் என்றுவிட்டு இன்னும் நான்கு கடைகள் தள்ளி ஓர் கடையுள் செல்கிறோம். அங்கும் எமக்குக் காட்டிய மேசைக்கு அருகில் சிகரெட் பிடித்தபடி இருவர் இருக்கின்றனர். எனக்கு அதில் இருக்க முடியாது வேறு இடம் காட்டு என்கிறேன்.  அவள் வேறு இடத்தைக் காட்ட அதில் அமர்கிறேன். ஆனாலும் எனக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை.

அவள் மெனு காட்டைக் கொண்டுவந்து தர அதில் இறைச்சி வகைகளே அதிகம் இருக்கின்றன. குடிப்பதற்கு கோலா ஓடர் செய்துவிட்டு பார்த்தால் நெருப்பில் வாட்டிய பன்றி, ஆடு,கோழி மூன்றும் கலந்த உணவு ஒன்று, சலாட், அவித்த உருளைக்கிழங்கு இத்தனையும் 25 யூரோஸ் இருவருக்கு என்று இருக்க அதை ஓடர் செய்துவிட்டுக் காத்திருக்கிறோம்.

சலாட் முதலில்வருகிறது. பரவாயில்லை. வித்தியாசமான சுவை எதுவுமின்றி லண்டனில் உண்பதுபோலவே இருந்தாலும் பசிக்கு நன்றாகத்தான் இருக்கிறது. அவள் கொண்டுவந்த இறைச்சியைப் பார்த்ததும் பசி கூட எனக்கு இல்லாமற் போச்சு.புதிசாச் சுடச்சுட கொண்டுவரப்போறாள் என்று பார்த்தா பழசைச் சூடாக்கிக் கொண்டுவந்ததுபோல் சூடும் இல்லை. சுவையும் இல்லை. வேறை வழியில்லாமல் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கூட வைக்காமல் வந்திட்டம். 

59121069_10211911948827691_5080899865391

58430425_10211911942267527_5584068091710

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்த மீராவுக்கு ஏராளனுக்கும். இராசவன்னியன் அண்ணாவுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா, 

நீங்கள் சுற்றிப்பார்த்த இடங்களைப் பற்றிய விபரங்களைக் காட்டிலும் கணவன் மனைவியிடையே தினமும் நடக்கும் இச்சிறு சிறு அனத்தல்களை வெளிப்படையாக விபரித்து எழுதுகிறீர்களே, அதுவே இக்கட்டுரையை வாசிக்க சுவாரசியமும், ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.

ஏனெனில், 'நம்ம வீட்டில்தான் இப்படி நடக்குதா..?' என்ற நினைப்பிலிருந்தால், 'ஆகா.. எங்கேயுமே இப்படித்தான்..!'  என நினைக்கையில் மிக்க மகிழ்ச்சி..!  5.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

சுமே அக்கா, 

நீங்கள் சுற்றிப்பார்த்த இடங்களைப் பற்றிய விபரங்களைக் காட்டிலும் கணவன் மனைவியிடையே தினமும் நடக்கும் இச்சிறு சிறு அனத்தல்களை வெளிப்படையாக விபரித்து எழுதுகிறீர்களே, அதுவே இக்கட்டுரையை வாசிக்க சுவாரசியமும், ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.

ஏனெனில், 'நம்ம வீட்டில்தான் இப்படி நடக்குதா..?' என்ற நினைப்பிலிருந்தால், 'ஆகா.. எங்கேயுமே இப்படித்தான்..!'  என நினைக்கையில் மிக்க மகிழ்ச்சி..!  5.gif

என்னடா இது சுமே அக்கா ஆயிட்டனா???? ஒருவேளை பயணக் கட்டுரை இப்படியெல்லாம் எழுதக் கூடாதாக்கும்.🤔 ................இவர் உண்மையிலேயே பாராட்டுறாரா ...... :innocent:  இல்லை ........ புரியுதில்லையே.🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னடா இது சுமே அக்கா ஆயிட்டனா???? ஒருவேளை பயணக் கட்டுரை இப்படியெல்லாம் எழுதக் கூடாதாக்கும்.🤔 ................இவர் உண்மையிலேயே பாராட்டுறாரா ...... :innocent:  இல்லை ........ புரியுதில்லையே.🤓

ஓமக்கா,  எனக்கும் டவுட்டாய் இருக்கு.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அன்று முதல் நாள் என்றதனால் எல்லாவற்றையும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஆனாலும் இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன என்ற எண்ணத்தில் கால்போன போக்கில் நடப்போம் என்று நானும் கணவரும் கதைத்துக்கொண்டு நடந்து போக இன்னுமொரு இடிபாடுகளுடன் கூடிய கட்டடம் தெரிந்தது. மலையில் கட்டிய கோவிலுக்கு காவல் தெய்வத்துக்காக கீழேயும் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதுவும் பல தூண்கள் இடிந்து வீழ்ந்து பல புதையுண்டும், இன்னும் சில தூண்கள் திருடப்பட்டும் விட்டன என்றனர்.  

58625847_10211918116981891_6361948748473

58463030_10211918128902189_7297018911847

57387431_10211918131782261_8548660085134

59410576_10211918135462353_6572315585206

 

தற்போழுது எதென்ஸின் முக்கிய வருமானம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினாலேயே கிடக்கின்றது என்றும் அதை வைத்தே பல புனரமைப்புப் பணிகளை அரசாங்கம் மேற்கொள்கிறது என்றும் ஒருவருடன் உரையாடியபோது கூறினார். சுற்றுலாப் பயணிகளுக்காக பொருட்கள் விற்கும் கடைகளுக்குச் சென்றால் அதிக விலையே கூறுகின்றனர்.

மாலை ஐந்து மணிவரை கிரேக்க வீதிகளில் திரிந்தத்தில் கால்கள் எல்லாம் பயங்கர வலியெடுத்தது. அத்தோடு சாடையாக இருளவும் ஆரம்பிக்க மீண்டும் எமது தங்குமிடத்துக்குச் செல்வதற்கு பஸ் எடுத்தால் இருட்டுக்குள் நாம் எங்கே இறங்கவேண்டும் என்பதில் குழப்பம் உண்டானது. சாரதியிடம் சென்று வரைபடத்தில் நாம் தங்கியிருந்த இடத்தைக் காட்ட அவர் எம்மை சரியான இடத்தில் இறக்கிவிட்டார். வீதியால் நடந்து எமது கோட்டலுக்குச் செல்லும் வழியில் பார்த்தால் வீதிகளின் கரைகளில் காலையில் திறக்காத கடைகள் திறந்திருக்க ஆண்கள் பலர் மது அருந்திக்கொண்டும் தேநீர் அருந்திக்கொண்டும் இருக்கின்றனர். எனக்கு பயமாக இருக்கு என்று நான் சொல்ல நீ ஏன் அங்கே பார்க்கிறாய். பேசாமல் நடந்துவா என்கிறார் மனிசன்.

ஒருவாறு ஆறுமணிக்கு கிட்ட கோட்டலை அடைந்து அறைக்குச் சென்று குளித்துவிட்டு ஒரு மணித்தியாலம் களைப்புத் தீரப் படுத்துவிட்டு இரவு உணவுக்குச் செல்லுவோம் என்றுவிட்டு கட்டிலில் படுத்ததுதான். காலை கண்விழித்தபோது ஆறுமணி. நான் சென்று பல் தீட்டி முகம் கழுவிவிட்டு வந்து மனுசனை எழுப்ப மனிசன் என்ன விடிஞ்சிட்டுதோ  என்று ஆச்சரியமாகக் கேட்கிறார். எனக்கு இரவு உண்ணாததும் சேர்ந்து பயங்கரப் பசி. ஏழுமணிவரை எதுவும் குடிக்காமல் இருக்க முடியாது என எண்ணி தொலைபேசியில் கீழே இருக்கும் வரவேற்பாளருக்கு போன் செய்து நாம் தேநீர் குடிப்பதற்கு எதுவும் இங்கில்லை என்கிறேன். அறைகளில் நாம் எதுவும் வைப்பதில்லை. நீங்கள் ஏழுமணிவரை பொறுக்கவேண்டும் என்கிறான்..அவன். சாதாரணமாக எல்லா கோட்டல்களிலும் தேநீர் ஊற்றுவதற்குத் தேவையான எல்லாம் வைத்திருப்பார்கள். இங்கு இல்லை.
ஏழுமணியானதும் உணவகத்துக்குச் சென்று காலை உணவை முடித்துக்கொண்டு மீண்டும் பஸ் எடுக்கிறோம்.

இன்று ஒரு இருப்பது நிமிடத்தில மியூசியம் ஒண்டு தெரிய அதை அடுத்ததாகப் பார்ப்போம் என்று இருவரும் இறங்கியாச்சு. தொன்மையான பொருட்களை எல்லாம் அங்கே சேமித்து வைத்திருக்கின்றனர். தோண்டி அகழ்வாய்வு செய்து அவற்றை அப்படியே வைத்தபடி மேலே கண்ணாடியால் தளம் போட்டுக் கட்டியிருப்பது பார்க்க வித்தியாசமாக இருக்கு. உள்ளே சென்று பார்ப்பதற்கு ஒருவருக்கு 5 யூரோஸ்.

மட்பாண்டங்கள் வேறு பல பொருட்கள் எல்லாம் எமது போன்றே இருக்கிறன. மூன்று மாடிகள் முழுவதும் பிரம்மாண்டமாக கண்ணாடிகளால் நவீனமாக வடிவமைக்கப்பட்டு தொண்மப் பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன.

மூன்றாம் மாடியில் எதென்ஸ்  நகரம் எப்படி அமைக்கப்பட்டது, எப்படி அழிக்கப்பட்டது என பெரிய திரையில் விவரணப் படம் ஒன்றைக் காட்டுகிறார்கள். அதையும் பார்த்துவிட்டு வெளியே வருகிறோம். எங்கு பார்த்தாலும் சனங்கள்.
 

58652568_10211918482231022_8280093679876

58717989_10211918481671008_8884621532358

58763408_10211918483671058_4763984832894

59211503_10211918484311074_8336297557487

58462415_10211918484711084_5338645250871

59394975_10211918485791111_6487276985092

 

 

 

58659860_10211918486311124_6887327710968

59157513_10211918487031142_5001730290842

58654762_10211918487431152_5956062192833

58870196_10211918489871213_2744225261644

59286058_10211918490431227_2459066238081

58443535_10211918490831237_5753419614264

59211469_10211918491151245_7762291456303

58779072_10211918493471303_9194986469146

 

58779062_10211918480870988_7165705737086

58769409_10211918459390451_2456341682627

58682394_10211918460990491_7376416587814

 

58663982_10211918462190521_8719608579608

58606460_10211918464310574_8345088943225

58441992_10211918465430602_7050870840010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னடா இது சுமே அக்கா ஆயிட்டனா???? ஒருவேளை பயணக் கட்டுரை இப்படியெல்லாம் எழுதக் கூடாதாக்கும்.🤔 ................இவர் உண்மையிலேயே பாராட்டுறாரா ...... :innocent:  இல்லை ........ புரியுதில்லையே.🤓

வாழ்க்கை பாடங்களை பகிர்வதால் "அக்கா"  என்று விளிப்பதில் தவறில்லைதானே..? 😋

பாராட்டித்தான் பச்சை இட்டுள்ளேன் அம்மணி..!

6 hours ago, suvy said:

ஓமக்கா,...    😁

நீங்களுமா..? போச்சுடா..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்து ஊக்கம்தந்த உறவுகள் மீரா, ஈழப்பிரியன், ராசவன்னியன் அண்ணா ஆகியோருக்கு நன்றி

3 hours ago, ராசவன்னியன் said:

வாழ்க்கை பாடங்களை பகிர்வதால் "அக்கா"  என்று விளிப்பதில் தவறில்லைதானே..? 😋

பாராட்டித்தான் பச்சை இட்டுள்ளேன் அம்மணி..!

 

 

10 hours ago, suvy said:

ஓமக்கா,  எனக்கும் டவுட்டாய் இருக்கு.......!   😁

நீங்கள் இருவரும் வேண்டுமானால் அம்மா என்று அழையுங்கள். அக்கா என்று சொல்லப்படாது.🤐😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியக்கா ....இனி மறந்தும் அக்கா என்று கூப்பிட மாட்டோம் .அக்காவை இனி அம்மா என்றுதான் கூப்பிட முயற்சிக்கிறோம்........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, suvy said:

சரியக்கா ....இனி மறந்தும் அக்கா என்று கூப்பிட மாட்டோம் .அக்காவை இனி அம்மா என்றுதான் கூப்பிட முயற்சிக்கிறோம்........!   😁

அடுத்ததா தீவிரவாத்த் தாக்குதல் உங்கட ஏரியாதான்😎

பச்சைக்கு நன்று சுவி அண்ணா அண்ணா அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பசி பொறுக்க மாட்டீங்கள் போல அக்கா.😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் பசி பொறுக்க மாட்டீங்கள் போல அக்கா.😀😀

பெற்றோல் போட்டா தானே வண்டி ஓடும்.
சிலபேருக்கு புது சாப்பாடு பிரச்சனையாகி கொட்டலில் படுத்த படுக்கையாகி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'அம்மா'க்கா, என்ன  தொடரை தொபுக்கடீர்னு நிறுத்திப் போட்டியள்..? 😋

கெதியா எழுதுங்கோ..! எங்களுக்கும் பசிக்கும்ல..!! :)

images?q=tbn:ANd9GcTioYs67IaSg17V6AFziNm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் பசி பொறுக்க மாட்டீங்கள் போல அக்கா.😀😀

ஏன் பொறுக்கவேணும்?????😆😄

19 hours ago, ஈழப்பிரியன் said:

பெற்றோல் போட்டா தானே வண்டி ஓடும்.
சிலபேருக்கு புது சாப்பாடு பிரச்சனையாகி கொட்டலில் படுத்த படுக்கையாகி விடுவார்கள்.

எங்களுக்கு எல்லாச் சாப்பிடும் ஓகேதான். ஆனா பட்டினி மட்டும் நோ..,,,,,,😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

'அம்மா'க்கா, என்ன  தொடரை தொபுக்கடீர்னு நிறுத்திப் போட்டியள்..? 😋

கெதியா எழுதுங்கோ..! எங்களுக்கும் பசிக்கும்ல..!! :)

images?q=tbn:ANd9GcTioYs67IaSg17V6AFziNm

🙄🤥

எத்தனை வேலை வில்லங்கங்கள் வீட்டில. அதெல்லாம் முடிச்சு நேரம் இருந்தாத்தானே எழுதலாம் மகனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் நாள் காலையில் கணவர் எழும்பு எழும்பு என்று கரைச்சல் படுத்தியும் இன்று ஒன்பது மணிக்கு முன்னர் எழும்பவே மாட்டேன் என்று அடம்பிடித்தபடி படுத்துக்கிடக்க, மனிசனோ மந்திரம் சொல்வதுபோல தொடர்ந்து எழும்பு என்று கூறிக்கொண்டே என்னைத் தூங்க விடாது தொல்லை செய்தபடியே இருக்க, வேறு வழியில்லாது ஒன்பதுக்கு எழும்பிக் குளித்து முடித்து காலை உணவுக்குப் போனால் பல உணவுகள் முடிந்த நிலையில் பாணும் சீஸ், சொசேஜ் போன்ற சிலவும் ஒலிவ், வாழைப்பழம் போன்றவையுமே எஞ்சியிருந்தன.

உன்னாலதான். வெள்ள வந்திருந்தால் நல்ல உணவுகள் உண்டிருக்கலாம் என்று மனிசன் புறுபுறுக்க நீங்கள் தனியா சாப்பிட வந்திருக்கலாமே. நானோ வேண்டாம் எண்டனான்? என்று அவரின் வாயை அடைத்துவிட்டு. இருப்பதை வேறு வழியின்றி உண்ண ஆரம்பித்தோம்.

நாம் பார்த்துக்கொண்டு இருக்கவே பலர் ரிசுப் பேப்பரில் பாண், சலாமி,சீஸ் எல்லாம் வைத்து சுற்றிக்கொண்டு தம்முடன் எடுத்துச் செல்ல ஒரு பணியாள் அவர்களிடம் நீங்கள் எடுத்துக்கொண்டு போக்க கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனாலும் அவர்கள் எவரும் அவரை அலட்சியம்  செய்தபடி போய்க்கொண்டிருந்தனர்.

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முதன்முதலில் கிரேக்கத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்பது நீங்கள் அறிந்ததுதான். அன்றைய நாள் அங்கு செல்வதென முடிவெடுத்து பதினோரு மணிபோல் கிளம்பினோம். அன்று பார்த்து 25 o செல்சியஸ். வெய்யில் சுட்டெரிக்காவிட்டாலும் வெப்பம் கொஞ்சம் அதிகமாகவே இருக்க மனிசன் என்மீது சிவபுராணம் பாடத் தொடங்கினார்.

ஐம்பதாயிரம் இருக்கைகளுடன் கி .மு 300 ஆண்டளவில் கட்டப்பட்டதாக (Panathenaic Stadium)மிகவும் பிரமாண்டமானதாக இல்லாவிட்டாலும் இருக்கைகள் அத்தனையும் வெண் சலவைக் கற்களால் ஆக்கப்பட்டிருந்தமை பார்ப்பதற்கு வியப்பை அளித்தாலும் வெய்யிலின் கொடுமையில் அதிக நேரம் அதை நின்று இரசிக்க முடியவில்லை.  அதன் ஒரு ஓரத்திலேயே குகை போன்று நிலத்தைக் குடைந்து சிறிது தூரத்தில் ஒரு சுரங்கக்  கட்டடத்தையும் அமைத்து அதில் ஒலிம்பிக் பற்றிய பல அரிய புகைப்படங்கள், பொருட்கள் போன்றவற்றைப் பாதுகாத்துப் பார்வைக்காக வைத்துள்ளனர்.

எனோ தெரியவில்லை இந்த ஸ்டேடியத்தைப் பார்ப்பதற்கு ஒன்றிரண்டு பேர்தான் வந்திருந்தனர்.

 

57441801_10211879703261572_9216167873460

57579953_10211879704381600_2307264772237

 

57426244_10211879703981590_2072660666254

57459288_10211879704901613_2745825051063

57216660_10211879705341624_6726591772551

58721791_10211927747062637_2153441562208

59301661_10211927749262692_7260520571824

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுமோ...இன்றைக்கு தான் வாசிக்க மனமும்,நேரமும் வந்தது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டேடியத்தைப் பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த கடையில் யூஸ் வாங்கி  பக்கத்தில் இருந்த குந்தில் இருந்து குடித்துவிட்டு மீண்டும் அருகில் இருந்த சில இடிபாடுகளை பார்த்துக்கொண்டு வர நேரம் நான்கு மணியாகிவிட்டது.

59543529_10211927812104263_4903140733902

 

59704832_10211927813704303_5317188165490

 

59087183_10211927814184315_1077210753120

58873514_10211927814544324_3874551845250

59087048_10211927815264342_1224887371028

58707894_10211927815504348_7044398745202

59565466_10211927815904358_9049844556253

59121046_10211927816304368_5603648680109

58906001_10211927816584375_2528362851047

59419267_10211927812664277_7667931033399

59004747_10211927813384295_3366263562648

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே,
நன்றாக உள்ளது. முடிந்தால் இத்துடன், அங்குள்ள இப்போதைய அரசியல் பொருளாதார நிலை , மக்கள் என்ன பேசுகிறார்கள், வாழ்க்கைத்தரம் எப்படி உள்ளது  என்பது பற்றியும்  எழுதுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/30/2019 at 9:49 PM, நீர்வேலியான் said:

சுமே,
நன்றாக உள்ளது. முடிந்தால் இத்துடன், அங்குள்ள இப்போதைய அரசியல் பொருளாதார நிலை , மக்கள் என்ன பேசுகிறார்கள், வாழ்க்கைத்தரம் எப்படி உள்ளது  என்பது பற்றியும்  எழுதுங்கள் 

ம் எழுதிட்டால் போச்சு

On 4/30/2019 at 8:30 PM, ரதி said:

தொடருங்கள் சுமோ...இன்றைக்கு தான் வாசிக்க மனமும்,நேரமும் வந்தது 
 

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருந்தினர்கள் வருவதால் ஒருவாரத்துக்கு எழுத முடியாதுள்ளது. மன்னியுங்கள் உறவுகளே🥴

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.