Jump to content

கிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விருந்தினர்கள் வருவதால் ஒருவாரத்துக்கு எழுத முடியாதுள்ளது. மன்னியுங்கள் உறவுகளே🥴

வந்தவர்கள்  இன்னுமா போகல நாங்க வெயிட்டிங் வாசிக்க 🤠

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வந்தவர்கள்  இன்னுமா போகல நாங்க வெயிட்டிங் வாசிக்க 🤠

இவ கடையில சாப்பாடுகள் வாங்கிக் குடுத்தால் அவர்கள் எப்படி போவார்கள். சமைத்து கொடுத்திருந்தால் இப்ப அவர்களும் போய் தொடரும் தொடர்ந்திருக்கும்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

இவ கடையில சாப்பாடுகள் வாங்கிக் குடுத்தால் அவர்கள் எப்படி போவார்கள். சமைத்து கொடுத்திருந்தால் இப்ப அவர்களும் போய் தொடரும் தொடர்ந்திருக்கும்.....!   😁

அப்போ சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டால் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என ஓடுவார்கள் போல சொல்கிறீர்களே  அப்படியா அண்ண 🏃‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்போ சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டால் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என ஓடுவார்கள் போல சொல்கிறீர்களே  அப்படியா அண்ண 🏃‍♂️

அப்போ சமைத்த சாப்பாட்டை (ஒரு வாரத்துக்கு முன்) சாப்பிட்டால் ஓடுவினம்தானே . ஆனால் சகோதரி சுமே நன்றாக சமைப்பார்.பார்க்க வடிவாய் இருக்கும்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2019 at 5:35 PM, தனிக்காட்டு ராஜா said:

வந்தவர்கள்  இன்னுமா போகல நாங்க வெயிட்டிங் வாசிக்க 🤠

இரண்டுவார விடுமுறையில் வந்தவர்களை கலைக்கிறதோ நான்???

On 5/3/2019 at 5:41 PM, suvy said:

இவ கடையில சாப்பாடுகள் வாங்கிக் குடுத்தால் அவர்கள் எப்படி போவார்கள். சமைத்து கொடுத்திருந்தால் இப்ப அவர்களும் போய் தொடரும் தொடர்ந்திருக்கும்.....!   😁

ம்க்கும் நாங்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்களாக்கும். உடன உடன சமச்சுக் குடுத்துத்தான் பழக்கம்.

On 5/3/2019 at 5:47 PM, தனிக்காட்டு ராஜா said:

அப்போ சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டால் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என ஓடுவார்கள் போல சொல்கிறீர்களே  அப்படியா அண்ண 🏃‍♂️

😡 நல்லா வாயில வருது.

On 5/3/2019 at 5:52 PM, suvy said:

அப்போ சமைத்த சாப்பாட்டை (ஒரு வாரத்துக்கு முன்) சாப்பிட்டால் ஓடுவினம்தானே . ஆனால் சகோதரி சுமே நன்றாக சமைப்பார்.பார்க்க வடிவாய் இருக்கும்.....!   👍

சாப்பிட்டாலும் சுவையாய்த்தான் இருக்கும் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போனில் இருந்து படம் பதிவேற்ற முடியவில்லை. கணனி வேலை செய்யுதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலை ஆறு மணிபோல் தங்குவிடுதிக்கு வந்து மேலே செல்வதற்காகக் காத்திருக்க வரவேற்பிலிருக்கும் பெண் எங்களை அழைக்கிறாள். என்ன என்று போய்க் கேட்டால் கிரேக்கத்தில் இருக்கும் தீவுகளில் மூன்று தீவுகளுக்கு உங்களைக் கப்பலில் அழைத்துப் போவார்கள். கோட்டலில் இருந்து பேருந்தில் ஒருமணி நேரப் பயணம். இங்கிருந்தே உங்களை அழைத்துப்போய்  மீண்டும் கொண்டுவந்து விடுவார்கள். உங்களுக்கு விருப்பமா என்றாள். எவ்வளவு காசு என்று என் கணவர் கேட்க, ஒருவருக்கு 125 யூரோஸ். காலை உணவை நாமே இங்கு பொதிசெய்து தருவோம். நீங்கள் காலை 5 மணிக்குத் தயாராக இருக்கவேண்டும் என்றவுடன் சரி நாங்கள் வருகிறோம் என்றுவிட்டு வெளியே வாங்கிவந்த இரவு உணவையும் உண்டுவிட்டு வெள்ளணவே தூங்கச் செல்கிறோம்.

அதிகாலை எழுந்து குளித்து வெளிக்கிட்டு வரவேற்ப்பில் சென்று காத்திருக்க பிளாஸ்டிக் பெட்டியில் பொதி செய்யப்பட்ட  உணவு தண்ணீர்ப் போத்தல், யூஸ் போத்தல் என்பவற்றைக் கொண்டுவந்து தருகிறாள் ஒருபெண். அட நல்லாத்தான் ஒழுங்கு செய்கிறார்கள் என்று மனிசன் கூற எனக்கு வேறு யோசனை ஓடுகிறது.

சிறு வயதிலிருந்தே எனக்கு பஸ்ஸில் பிரயாணம்செய்வது என்பது ஒவ்வாமை. வேம்படிக்குப் படிக்கப் போன காலத்திலிருந்தே போகும்போது பஸ்ஸில் நின்றே போவதும் வரும்போது எப்படியோ உயரமான இருக்கையை முதலில் ஏறிப் பிடிப்பதுமாக வாழ்க்கையை ஓட்ட முடிந்தது. உயரமான சீட் அல்லது பஸ்ஸின் முன்பக்கத்து இருக்கைகள் என்றால் சரி. அல்லது தலை சுற்ற ஆரம்பித்து விடும். வாந்தி வருவதுபோன்று அந்த நாளே விரயமாகிவிடும்.

 உல்லாச பஸ்களில் நின்று பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். முன் சீட் எல்லாம் ஆட்கள் இருந்தால் என் பயணம் எப்படி இருக்கப் போகிறது என்பதே என் பயமாகி எதற்கும் இரண்டு பைகளை வரவேற்புப் பெண்ணிடம் கேட்டு வாங்கி என் கைப்பையில் வைத்துக் கொண்டேன். உந்தப் பிரச்சனைக்கு மருந்து வாங் கினாய்  தானே. அதை போடன் இப்ப என்கிறார் மனிசன். அதை லண்டனிலேயே மறந்து விட்டு வந்ததை கூறி அந்தாளிட்டை திட்டும் வாங்கிக் கொண்டிருக்க கதவைத் திறந்துகொண்டு வந்த ஒருவர் எமக்கு வணக்கம் கூறிவிட்டு எங்கள் பெயர்களைக் கூற நாம் எழுந்தோம்.
எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்று எண்ணி என் பிரச்சனையைக் கூறி முன்னிருக்கை வேண்டும். தர முடியுமா என்றேன். இங்கிருந்துதான் பஸ் கிளம்புகிறது. றைவரின் சீற்றையும் அதற்குப் பக்கத்தில் உள்ள தனது சீற்றையும்  விட்டுவிட்டு நீ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று அவர் நகைச்சுவையாகக் கூற எனக்கு ஏற்பட்ட மன நின்மதி சொல்லிட முடியாது.

பஸ்ஸில் ஏறி அமர்ந்து பிரயாணம் ஆரம்பிக்க என் மனதில் எப்ப கப்பலைப் பார்ப்போம் என்ற பெரிய அவா உண்டாயிற்று. 1982 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து அம்மாவுடன் இந்தியாவுக்குச் சுற்றுலாவுக்குச் சென்றபோதுதான் முதல் கப்பல் பயணம். கடல் அப்போதும் ஆனந்தமாக இருந்ததுதான் ஆனாலும் கடலில் விழுந்தாலும் என்ற பயத்தில் அம்மா சுதந்திரமாகக் கடலைப்பார்க்க விடவில்லை. அதன்பின் யேர்மனியில் இருந்து லண்டன் வந்தபோது பல தடவைகள் பிரயாணக் கப்பலில் இரவில் வந்ததாலும் குளிர், காற்று போன்றவற்றால் கடலை இரசிக்க முடியவில்லை. நீண்ட நாட்களாக ஒரு கடற் பயணம் செல்வதை பற்றிய ஆசை இருந்தது.அது தானாகவே கூடி வந்ததில் நானும் கணவனுமாக எந்தக் கவலைகளுமற்று விடுமுறையில் என்பது அதீத மகிழ்வையும் நிறைவையும் தர ஆவலாகக் காத்திருக்கவாரம்பித்தேன்.

வேறு வேறு தங்கு விடுதிகளில் நிறுத்தி மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு ஒரு மணிநேரத்தில் கடற்கரையை அடைந்தோம். அங்கே எம்மைக் கூட்டிக்கொண்டு போனவர்கள் எம்மிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிறையானச் சீட்டையும் தர விரைந்து சென்று கப்பலைப் பார்த்தால் கப்பல் சிறிதாகவே இருந்தது. நானோ டைட்டானிக் கப்பலை மனதில் நினைத்துக்கொண்டே சென்றிருந்தேன். மூன்று அடுக்குகள் கொண்டதாக இருந்தது அது. கீழ் தளத்தில் கனஅடித் தடுப்புக்களூடாகத்தான் கடலைப் பார்க்க முடியும். நான் அதை விரும்பவில்லை. மேல் தளத்துக்குச் சென்று வசதியாக இடம் பிடித்த்துக் கொண்டேன். அதன்பின் பலரும் வர எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டது. இன்று எதோ எனக்கு அதிட்டம் தான் என மனம் நின்மதியானது.

60348708_10212002727857110_2966568679107

60361853_10212002727977113_5843732335433

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2019 at 12:41 PM, suvy said:

இவ கடையில சாப்பாடுகள் வாங்கிக் குடுத்தால் அவர்கள் எப்படி போவார்கள். சமைத்து கொடுத்திருந்தால் இப்ப அவர்களும் போய் தொடரும் தொடர்ந்திருக்கும்.....!   😁

யப்பா சாமிகளே, எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்கள்..?  :):grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் சிறிதாக இருந்தாலும் கடற்பயணம் மனதில் பேருவகையை ஏற்படுத்தியது. மத்தியதரைக் கடலில் கலக்கும் சிறிய கடற்பகுதிக்கு மிருடன் கடல் என்று பெயர். ஆனால் அவர்கள் கப்பல் மத்தியதரைக் கடலில் செல்வதாகவே எமக்குக் கூறினர். இந்தச் சிறிய கடலே இத்தனை பெரிதாக இருக்கிறது. பெருங்கடல்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கவேண்டும் என்ற ஆசையும் கூடவேபயமும் எழுந்தது.  

முதலில் எம்மை கைட்றா என்னும் அழகிய தீவில் இறக்கிவிட்டனர். நாமாகவே சென்று இடங்களைப் பார்த்துவிட்டு இரண்டு மணி நேரத்தில் திரும்ப கப்பலுக்கு வந்துவிட வேண்டும்.பக்கத்தில் எல்லோரும் போகிறார்கள் என்று நாமும் போனால் ஒரு பழைய தேவாலயம். சரி அதையும் பார்த்துவிடுவோம் என்று பார்த்துவிட்டு பலரும் போய்க்கொண்டிருந்த ஒரு வீதியைத் தெரிவு செய்தோம். ஆரம்பத்தில் அவை சிறிய வீதிகளாக முழுவதும் வெண்கற்களால் நிலம், வீதி வீடுகள் எல்லாமே வெள்ளையாகத் தெரிந்தன. கழுதை போன்ற ஒன்றைக்கொண்டுவந்து குதிரையில் போகப் போகிறீர்களா என்று ஒருவன் கேட்கிறான். உயரம் குறைவாக இருக்க ஏறிப் பார்ப்போமா என எண்ணி மனிசனிடம் கேட்க பாவம் கழுதை என்று மனிசன் காலை வாருகிறார்.
சிலர் அதில் ஏறிச் செல்வதை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்குகிறேன். தொடர் வீடுகள். வீதியிலே வாசல்கள் இருக்கின்றன.கொஞ்சம் ஏற்றமாக இருக்கிறது. கடும் வெய்யில் என்றாலும் கடற்காற்றில் நன்றாக இருக்கிறது.தொடர்ந்து நடக்க நடக்க மழைக் குன்றுகள் தான் தெரிகின்றன.தொட்டம் தொட்டமாக வீடுகள். பாதை உயர உயரச் செல்கின்றது. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் நடக்க ஒரு உணவு விடுதி வருகிறது . நேரம் பத்தரை என்பதனாலும் கப்பலில் கொண்டுவந்த காலை உணவைக் கப்பலில் உண்டதாலும் பசி இல்லை. ஆனாலும் நடந்து களைத்ததனால் கோப்பி அருந்திவிட்டுச் செல்வோம் என்று அங்கே அமர்ந்து கோப்பியும் அவர்களின் கேக்கும் உண்டுவிட்டு எழுந்து மீண்டும் நடக்கிறோம். வெட்டை வெளிகளையும், மரம் செடி, கொடிகளையும் பார்த்துக்கொண்டிருக்க நேரம் போய்விட்டது. மீண்டும் திரும்ப வருகிறோம்.

இன்னும் ஒரு பத்து நிமிட நடையில் கப்பலை அடைந்துவிடலாம். இருந்தாற்போல் பெரிய குழல் ஊதுவதுபோல் எமது கப்பலில் இருந்து சத்தம் வருகிறது. கப்பல் புறப்பட ஆயத்தமாகி அதன் பாதையை பூ ட்டிடத்தொடங்கிவிட்டனர்.  நெஞ்சு பாதை பதைக்க stop என்று கத்தியபடி ஓடி வருகிறோம் நாம் இருவரும். எடுத்த கப்பலை நிறுத்தி மீண்டும் எமக்குப் பாதையைத் திறந்து விடுகின்றனர். மனதில் பெரிய நின்மதியும் கூடவே வெட்கமும் எழுகின்றது. மன்னியுங்கள் என்று அதில் நின்றவரிடம் கூறிவிட்டு உள்ளே சென்று அமர்கின்றோம்.

பன்னிரண்டரை  முதல் ஒரு ஒன்றரை மணி வரை கப்பலிலேயே  மதிய உணவு என்று எமது வழிகாட்டி கூறியிருந்தார். பபே என்பதனால் எதற்கும் முதலே உண்பது நல்லது என்று எண்ணி மேலே செல்லாது காத்திருக்கிறோம். நேரம் நெருங்க கதவைத் திறந்துகொண்டு சென்றால் சனம் நெருக்கி அடித்தபடி நிற்கின்றனர். ஒருவாறு இடம்பிடித்து அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தோம். இந்திய உணவுகளும் மீன் வகைகளும் மரக்கறிகளும் செய்துவைத்திருந்தனர். சுவையாகவே இருக்க இரசித்து உண்டுகொண்டிருக்க என்ன குடிக்கிறீர்கள் என்று ஒருவர் வந்து கேட்டார். கணவர் கோலா சொல்ல நான் எனக்கு கலந்த பணம் வேண்டும் என்று ஒரேன்ஜ் வித் ginger என்று ஓடர் செய்தேன். சிறிது நேரத்தில் வந்த பணியாள் தோடம் பழம் இல்லை என்று கூறி எலுமிச்சையில் இஞ்சி போட்டு வேறு ஒரு சிரப் விட்டுத் தருகிறேன் நன்றாக இருக்கும் என்றான். சரி கொண்டுவா என்றுவிட்டு பார்த்துக்கொண்டு இருந்தால் அழகாக அலங்கரித்துக் கொண்டு வருகிறான்.

வாயில் வைத்துக் குடிக்க ஒரு கசப்புத் தெரிகிறது. குளிர்பானங்களுக்குத் தனியாக நாம் பணம் செலுத்தவேண்டும் என்று கூறி பில்லையும் தர வாங்கிப் பார்த்தால் கோலா 5 யூரோஸ் எனது பணம் 7யூரோஸ் என்று இருக்கு. அனியாயக் காசு என்று மனிசன் புறுபுறுக்க அந்தாளின் திட்டுக்குப் பயந்து எதுவும்சொல்லாமல் மிச்சம் வைப்போமோ என்று நினைத்த யூஸைக் குடித்து முடிக்கிறேன். 

29790259_10209765405485449_1015265625221

29790393_10209765404805432_1205210553887

29793580_10209765405565451_2351009027032

29792790_10209765404765431_6237949430570

29792542_10209765406125465_2781365926912

29793697_10209765406165466_7326854387500

29694791_10209765406685479_7624470044583

29694723_10209765406725480_7358104994748

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கழுதை போன்ற ஒன்றைக்கொண்டுவந்து குதிரையில் போகப் போகிறீர்களா என்று ஒருவன் கேட்கிறான். உயரம் குறைவாக இருக்க ஏறிப் பார்ப்போமா என எண்ணி மனிசனிடம் கேட்க பாவம் கழுதை என்று மனிசன் காலை வாருகிறார்.

ஒரு உயிரைக் காப்பாற்றியதற்காக அத்தாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசன் திரிஷாவின் ரசிகர் போல, விலங்குகளின் மேல் வாஞ்சையுடன் இருக்கின்றார். மனிசியின் கால் வலியை விட கழுத்தை முதுகு வலியில் துன்புறக் கூடாது என்று நினைப்பது எவ்வளவு பெருந்தன்மை.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு உயிரைக் காப்பாற்றியதற்காக அத்தாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

 

2 hours ago, suvy said:

மனிசன் திரிஷாவின் ரசிகர் போல, விலங்குகளின் மேல் வாஞ்சையுடன் இருக்கின்றார். மனிசியின் கால் வலியை விட கழுத்தை முதுகு வலியில் துன்புறக் கூடாது என்று நினைப்பது எவ்வளவு பெருந்தன்மை.......!  😁

இரவிரவா கால்பிடிச்சு விட்டதை எழுத மறந்திட்டன் அண்ணாமாரே.🤪🤣🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                 Image associée

      வடிவா தெரியுமா அவர்தான் என்று ......நீங்கள் அசதியில் தூங்கி இருக்க அவர் கழுதையை கை காட்டி விட்டுட்டு போய் இருப்பார்.....!  😄

Link to comment
Share on other sites

அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் அக்கா சுவார்சியமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இரவிரவா கால்பிடிச்சு விட்டதை எழுத மறந்திட்டன் அண்ணாமாரே.🤪🤣🤭

ஆகா நம்பீட்டம் நம்பீட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

                                                 Image associée

      வடிவா தெரியுமா அவர்தான் என்று ......நீங்கள் அசதியில் தூங்கி இருக்க அவர் கழுதையை கை காட்டி விட்டுட்டு போய் இருப்பார்.....!  😄

வடிவாத் தெரியும் ஏனெண்டா கோட்டலுக்குள்ள ஆறாம் மாடிக்கு கழுதை ஏறுமளவு அகலமான lift இல்லை😛

13 hours ago, புலோலியூரான் ரவீ..ன் said:

அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் அக்கா சுவார்சியமாக இருக்கிறது.

நன்றி வரவுக்கு புலோலியூரான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா நம்பீட்டம் நம்பீட்டம்.

நம்பாட்டிப் போங்கோ😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் எடுத்து பயணக்கதையை  பகிர்ந்தமைக்கு  நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

நேரம் எடுத்து பயணக்கதையை  பகிர்ந்தமைக்கு  நன்றி 

நன்றி அக்கா வரவுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக்கள் தந்து என்னை உற்சாகப்படுத்திய உறவுகள் தமிழினி, ஏராளன், மீரா,புங்கையூரன், ஈழப்பிரியன் அண்ணா , சுவி அண்ணா ஆகியோருக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மணி நேரம் சென்றபின் கப்பல் மீண்டும் போறோஸ் என்னும் ஒரு தீவை அடைகிறது. ஆனால் எந்தவித கவர்ச்சியும் அற்று இருக்கிறது தீவு. எக்கச்சக்கமான சிறிய உல்லாசப் படகுகள் மரக்கறிகள் அடுக்கியதுபோல் கரைகளில் கட்டப்பட்டிருக்கின்றன. ஒன்றிரண்டு படகுகள் மட்டும் கடலில் செல்கின்றன.

ஒரு அரை மணி நேரம் நீங்கள் சுற்றிப் பார்க்கலாம் என்கிறார் எமது வழிகாட்டுபவர். தலை தெறிக்க ஓடிவந்த அனுபவம் அரைமணியில் சுற்றிப்பார்க்கும் ஆசையை நிராகரிக்க நானும் கணவரும் கடக்கரையின் ஓரமாக படகுகளைக் கணக்கெடுத்தபடி நடக்கின்றோம். மதியம் இரண்டரை ஆகிவிட்டதால் பயங்கர மதிய வெய்யில் சுடுகிறது. பத்து நிமிடத்தின் பின்னர் திரும்பி நடக்கிறோம். போகும் வழியில் நிரைக்கு ஆட்கள் இல்லாத உணவகங்கள் மட்டும் தான். எமது கப்பலில் வந்த பலரும் அங்கேயே சுத்திக்கொண்டிருக்கின்றனர். முதல் பார்த்த தீவைப் போலவே கிட்டத்தட்ட இத்தீவும் இருந்ததால் தீவைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற ஆசை பலருக்கும் எழவில்லையாக்கும்  என எண்ணியபடியே வருகிறேன்.

அடுத்ததாக எஜீனா என்னும் இன்னொரு தீவுக்குப் போகப் போகின்றோம். தீவைச் சுற்றிப்பார்க்க விருப்பமானவர்கள் வாருங்கள். பஸ்ஸில் அழைத்துப் போவோம். தனியாகவும் நீங்கள் செல்லலாம். ஒருவருக்கு 20 யூரோஸ். ஒரு மணிநேரம் நேரம் சுற்றிப் பார்க்க.பின்னர் கடலுணவு பஃபே என்கிறார். வழிகாட்டுபவர். பஃபே என்றவுடன் ஒரு இருப்பது பேர்வரை நாங்களும் வருகிறோம் என்று கூறுகின்றனர். மீண்டும் எமது கப்பல் புறப்படுகிறது.

இம்முறை நான் கப்பலின் உள்ளேயோ மேலேயோ போய் இருக்காமல் முதலாவது தளத்தில் நின்றபடியே கடலைப் பார்த்துக்கொண்டு எப்போது கரை வரும் என்று பார்த்துக்கொண்டு நிற்கிறேன். மீண்டும் எனக்கு பஸ்ஸில் முன்பக்கம் இடம் பிடித்துத் தீவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் எழுகிறது. கணவர் தான் போய் இருக்கப் போகிறேன் என்கிறார். தீவை அடைய இன்னும் அரை மணி நேரம் இருக்குது தானே என்ற எண்ணத்தில் வாருங்கள் கோப்பி குடிப்போம் என்று கணவரை இழுத்துக்கொண்டு செல்கிறேன். அங்கு இரண்டு மூன்றுபேர் கோப்பிக்கு பணத்தைச் செலுத்திவிட்டு காத்துக்கொண்டிருக்கின்றனர். நானும் பணத்தைச் செலுத்திவிட்டு நிற்கிறேன்.கணவர் கதிரையில் அமர்ந்துவிட்டார்.

பத்து நிமிடமாகிவிட்டது  இன்னும் எனக்கு கோப்பி வரவில்லை. ஒருவன் ஆடிப்பாடிக் கோப்பி போட்டுக்கொண்டும் இளம் பெண்களைக் கண்டால் பல்லைக் காட்டிக் கதைத்துக்கொண்டும் வேலையில் கவனமின்றி இருக்கிறான். எனக்குப் பின் வந்த பெண் ஒருவருக்கு எனக்குத் தராது கோப்பியைக் குடுக்க நான் கோபத்துடன் எனக்கு என்னும் தராமல் அவளுக்கு கொடுக்கிறாய் என்கிறேன். அவன் சிரித்துக்கொண்டு கூல் கூல் என்று சொல்லியபடி அவர்கள் மொழியில் அவளுடன் கதைத்துக் கொண்டு நிற்க, என் பணத்தைத் திரும்பக் கொடு எனக்குக் கோப்பி வேண்டாம் என்கிறேன். அவன் வேண்டுமென்றே தன் மொழியில் கதைக்கிறான். என் நல்ல காலம் அந்தநேரம் பார்த்து எமது வழிகாட்டி படிகளில் இறங்கி வருகிறார். நான் அவரிடம் சென்று முறையிடுகிறேன். அவர் சென்று அவனிடம் எதோ கூற என் பக்கம் திரும்பி சொறி என்றுவிட்டு கோப்பி தயாரிக்கிறான். நான் எனக்கு கோப்பி வேண்டாம் பணத்தை தா என்கிறேன் மீண்டும். நீ போய் இரு நான் கொண்டுவாறன்  என்றபடி வழிகாட்டி என்னைச் சமாதானப்படுத்த, நான் கணவருக்குப் பக்கத்தில் சென்று அமர்கிறேன். உனக்குப் போற இடம் எல்லாம் பிரச்சனை தான் என்று மனிசன் நக்கலாச் சிரிக்குது.
வழிகாட்டுபவர் எமக்கு கோப்பிகளைக் கொண்டுவந்து வைத்தபடி கெதியாக் குடியுங்கள் இன்னும் பத்து நிமிடம் தான் இருக்கு என்று கூற கோப்பியைக் குடிதத்துவிட்டு மீண்டும் வாசலுக்கு அண்மையில் கணவரையும் இழுத்துக்கொண்டு போய் நிற்கிறேன்.

வழிகாட்டியும் கீழேயே நின்றது மனதுக்கு நின்மதியாக இருக்கு. கப்பல் நின்றவுடன் வழிகாட்டிக்குப் பின்னாலேயே நானும் கணவரும் சென்று பஸ் எங்கே நிற்கிறது என்று கேட்க அவர் அதோ தூரத்தில் நிற்கும் வெள்ளை பஸ் தான் என்கிறார். நல்ல காலம் வேறு நிற பஸ்கள் பல நின்றதால் வெள்ளையை அடையாளம் கண்டு நானும் கணவரும் விரைந்து சென்று வாசலில் நிற்கிறோம். வழிகாட்டி மிச்சப்பேரைக் கூட்டிக்கொண்டு வந்தபின் கதவு திறக்க நானும் கணவரும் முன் இருக்கையைப் பிடித்து அமர்கிறோம்.

மலைக் குன்றுகள் நிறைந்த ஒரு சிறிய தீவு. கடல் நீர் பளிங்கு போல் தெளிவாக இருக்கிறது. பார்த்தவுடன் தண்ணீரில் இறங்கவேண்டும் போல் ஆசை எழ, இக்கடலில் குளிக்க முடியாதா என்று கேட்கிறேன். நேரம் போதாது என்கிறார் வழிகாட்டி. ஏற்ற இறக்கமான பாதையில் பஸ் செல்கின்றது. ஆங்காங்கே சிறிய வீடுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.  மற்றப்படி ஒன்று இரண்டு பேரைத்தான் வீதியில் காண முடிகின்றது. நேரே எம்மை ஒரு தேவாலயத்துக்கு கூட்டிச் செல்கின்றார். உயர்ந்த ஒரு கோபுரத்தோடு நிற்கிறது தேவாலயம். வேறு வழியின்றி அதை பார்த்துவிட்டு வெளியே வர மூன்று நான்குபேர் பிஸ்ராசியோ ( pistachio nuts)ஐ வைத்து விற்றுக்கொண்டிருக்கின்றனர். அதில் வயதுபோன கணவன் மனைவி வைத்திருந்த இடத்தில் சென்று அவர்கள் உண்டு பார்க்கவென்று வைத்திருந்த  பிஸ்ராசியோக்கள் சிலதை உண்டு பார்க்கிறோம். மிகவும் ருசியாகவும் மலிவாகவும் இருக்க ஒரு கிலோவை வாங்கிக்கொண்டு வருகிறோம். அங்கு நிறைய விளைவதாக வழிகாட்டி கூறி மரத்தையும் எமக்கு காட்டுகிறார். மஞ்சள் நிறப் பூக்களுடனும் சிறிய இலைகளுடனும் பிஸ்ராசியோ மரங்கள் நிற்கின்றன.

அதன் பின்னர் மீண்டு பஸ்ஸில் ஏறி இயற்கை அழகை இரசித்தபடி கப்பல் நிற்கும் இடத்துக்கு வருகிறோம். கடலுணவு  பஃபே உண்ணலாம் வாருங்கள் என எல்லோரையும் வழிகாட்டி அழைக்க விதவிதமான கற்பனையோடு நானும் செல்கிறேன். நல்ல வாசனைகள் மூக்கைத் துளைக்கின்றன. எம்மை உணவகத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறார் என்று நாம் நினைக்க உணவகத்துக்கு பக்கத்தில் மூன்று நான்கு வாங்குகள் போட்டிருக்க அதில் எம்மை அமரச் சொல்லிவிட்டு உள்ளே செய்கிறார் வழிகாட்டி. ஒரு சிறிய மேசை அங்கே இருக்கிறது.

ஒரு பெண் சில யூஸ் பெட்டிகளையும் பிளாஸ்டிக் கப்புகளையும் கொண்டுவந்து வைக்கிறாள். எல்லோரும் பசியுடன் இருந்ததால் உடனே யூஸ்களைக் குடிக்கவாரம்பிக்க நாமும் சேர்ந்துகொள்கிறோம். சிறிது நேரத்தில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குப் பொரியலையும் இருவிதமான சோஸ்களையும் அத்தோடு சிறிய பேப்பர் தட்டுக்களையும் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போகிறாள். மற்றவர்கள் எழுந்து அவற்றை எடுத்து உண்ண நான் போகாமல் கடலுணவுகள் வரட்டும் என்று காத்திருக்கிறேன். நானும் கொஞ்சம் எடுக்கப்போறன் என்றபடி எழுந்து சென்ற மனிசன் பாத்திரத்தை உருட்டிப்பிரட்டி மிச்சமிருந்த மூன்று துண்டுகளைப் பொறுக்கிக் கொண்டு வருகிறார். இந்த ஒன்றையாவது தின் என்று ஒரு துண்டை எனக்குத் தந்துவிட்டு இரண்டைத் தான் உண்ண இந்த ஒண்டாய் உண்டு நான் ஏன் வாயைப் பழுதாக்குவான் நீங்களே சாப்பிடுங்கோ என்று குடுத்திட்டு வழிகாட்டியைத் தேடுகிறன். அவனை அந்தப் பக்கமே காணேல்லை.

மீண்டும் அந்தப் பெண் வர முதலே போய் எடுப்பம் அப்பா.பிறகு கிடைக்காது என்றபடி நான் எழுந்து சென்று பார்த்தால் ஒரு குடும்பம் சாப்பிடக் கூடிய சிறிய இறால் பொரியல், கணவாய்ப் பொரியல் மீன் பொரியல் மூன்றையும் கொண்டுவந்து வைத்திருக்கிறாள். எரிச்சலை அடக்கிக்கொண்டு நான்கைந்து பொரியல்களை   எடுத்துக்கொண்டுவந்து  வாயில் வைத்தால் உறைப்புப் புளிப்பற்று எண்ணெய் இழுத்து .... ஒன்றைச் சாப்பிடவே வெடுக்கு மணத்துடன்  ...... இறாலை எடுத்தால் அது சோர்ந்துபோய் விழுது. எனக்கு வேண்டாம் என்று மனிசனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் போய் யூஸை வாரத்துக்கு குடித்து வயிறை நிரப்பிக்கொண்டு எதுவும் கூறாது வந்திருக்க, நால்லா ஏமாத்திப்போட்டாங்கள். பழசை சூடாக்கித் தந்திருக்கிறாங்கள் கள்ளப்பயல்கள் என்று கோவப்படாத மனிசன் கோவத்துடன் ஏசுறார். ஆனாலும் பசியில் தட்டில் ஒரு துரும்பு கூட இருக்கவிடாமல் எல்லாரும் கோப்பைகளைக் காலி செய்யினம்.

ஒரு பத்து நிமிடத்தில் அந்த வழிகாட்டி உள்ளேயிருந்து வந்து "விரைவாக வாருங்கள் எல்லாரும் கப்பலுக்குப் போகவேண்டும் உடனே" என்கிறான். எல்லாரும் அவன் மேல் இருந்த கோபத்தை மறந்து  கப்பலுக்கு விரைகின்றனர். கப்பல் புறப்பட்டு மீண்டும் அரை மணி நேரத்தில் கரையை அடைய நான் இறங்கி கோட் டலுக்குப் போவதற்கான பஸ்சில் ஓடிப்போய் முதலாவதாக ஏறுகிறேன்.

இரவு ஏழு மணிக்கு பஸ் தங்குமிடத்தை அடைய உள்ளே செல்லாது பக்கத்தில் இருந்த ஒரு உணவகத்துக்குச் சென்று இரு உணவுகளை வாங்கி உண்டுவிட்டு வர மனம் அதன் ருசியில் நின்மதியாகிறது.

30221790_10209779283752397_4564979967070

30411550_10209779284432414_7758804548449

30264700_10209779284632419_6276758536013

30221936_10209779285552442_7368836180990

30415543_10209779285832449_9866947339694

30261242_10209779286272460_3504508372244

30411860_10209779324833424_5503255705055

30226562_10209779325473440_6023339518336

30656811_10209799290892563_5680797167602

பிஸ்ராசியோ மரம்

 

30629347_10209799291852587_6571885968217

30624561_10209799291932589_2050980281229

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு நின்ற பூமரங்கள் சில

30657155_10209807154089138_4673165370008

30657362_10209807155049162_2550499541988

30630022_10209807155449172_4083272700192

30656998_10209807155649177_5629337957543

30629772_10209807159249267_7103375114397

30629726_10209807159449272_1728091468913

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

60728610_10212032954532758_2740257940224

60538350_10212032957332828_2081948889513

60503592_10212032953892742_8406476189232

60399979_10212032957852841_4383529255355

60457715_10212032960772914_7440307808345

60666393_10212032960692912_3212318422792

60421760_10212032963732988_7070931756077

60901454_10212032963892992_8608257583909

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:
 

 அக்கறை நம்பர் வன்:- கமரா கவனமடி...🤣
அக்கறை நம்பர் ரூ:- தட்டிப்போடாதை...:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.