Jump to content

கிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழகழகான படங்கள் அசத்துகின்றீர்கள்  சகோதரி.....!

சாப்பாடு இல்லாமல் நீங்கள் சோர்ந்து வருவதை பார்த்து சிலை வடித்து விட்டார்கள்  போல் இருக்கிறது.....அது நீங்கள்தானே.....!   🌶️

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 அக்கறை நம்பர் வன்:- கமரா கவனமடி...🤣
அக்கறை நம்பர் ரூ:- தட்டிப்போடாதை...:cool:

யும் கேட்கேல்லை எண்டதுக்காக உப்பிடிப் பழிபோடுறதே😄

5 minutes ago, suvy said:

அழகழகான படங்கள் அசத்துகின்றீர்கள்  சகோதரி.....!

சாப்பாடு இல்லாமல் நீங்கள் சோர்ந்து வருவதை பார்த்து சிலை வடித்து விட்டார்கள்  போல் இருக்கிறது.....அது நீங்கள்தானே.....!   🌶️

கண்டுபிடித்து விட்டீர்களே😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று இரவு உணவை உண்டுவிட்டு வாங்கிக்கொண்டு வந்த பிஸ்தாசியோவை எடுத்து உடைத்து வாயில் வைத்தால் அவை காற்றுப் போய் இளகி உண்பதற்கே அருவருப்பாய் இருக்க, எமக்கு உண்பதற்கு நல்லதைத் தந்துவிட்டு பழையவற்றை விற்று எம்மை ஏமாற்றிவிட்டது தெரிய  பழுதானத்தை ஏன் மினைக்கெட்டுக் காவிக்கொண்டு போவான் என்றபடி தூக்கிக் குப்பையில் எறிகிறேன்.

அடுத்தநாள் எழுந்து காலை உணவை உண்டுவிட்டு நடந்து சென்று தொடருந்தில் டிக்கற் எடுத்து ஒரு மாக்கற்றுக்குப் போனோம். இங்கெல்லாம் கூடுவதுபோல் பெரிதாகச் சனங்கள் இல்லை. கறுவா,ஏலம்,கராம்பு போன்ற வாசனைத் திரவியங்களும் வேறு பல காய்ந்த மூலிகை வகைகளும் பூசணி விதைகள், பருப்பு வகைகள், பிஸ்தாசியோ என்பன அனைத்துக்கடைகளிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மலிவாக இருந்தாலும் எல்லாம் திறந்தே இருந்தபடியாலும் முதல் நாள் வாங்கி ஏமாந்த அனுபவத்தாலும் எனக்கு வாங்கவே மனம் வரவில்லை. தக்காளிகள் தான் அதிகமாக விற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஓரிடத்தில் நிறைய மரங்கள் செடி கொடிகளைக் கண்டவுடன் நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அங்கு செல்ல போற இடத்திலயும் உதை விடமாட்டியோ  ஒரு கண்டுகளும் வாங்காதே. கொண்டு போக விடமாட்டாங்கள்.  என்று திட்டியபடி மனிசன்.  கனக்க மாதுளை மரங்கள் ஒவ்வொரு அளவிலும் பார்க்க ஆசையாக இருக்க ஒன்றைத் தூக்க, உன்னட்டை ஏற்கனவே ஒரு மரம் இருக்குதானே என்று பறிச்சு வச்சிட்டுது மனிசன்.
பிஸ்தாசியோ மரம் இருக்கா என்று தேடினால் ஒன்றுகூட இல்லை. நிறைய வேறுவேறு விதைகளும் அவர்கள் வைத்திருக்க  வறுக்காத பிஸ்தாசியோ விதைகள் இருக்கா என்று கடைக்காரனிடம் கேட்க, விதை இருக்கா என்று தேடிவிட்டு மரம் இருக்கு வா என்று ஒரு மீற்றர் உயரமுள்ள மரத்தைக் காட்டுகிறான். முதல் நாள் அந்தத் தீவில் காட்டிய மரம் போல் இல்லாமல் இலைகள் வேறாக இருக்க அவன் என்னை ஏமாற்றுகிறான் என்று புரிய இது வேண்டாம் என்கிறேன். பொறு கடையில் விதைகள் இருக்கின்றன தேடி எடுத்துத் தருகிறேன் என்று அவன் சொல்ல நானும் ஆவலாய்க் காத்திருக்க கையில் வேர்க்கடலையைக் கொண்டுவந்து  இந்தா பிஸ்தாசியோ விதை என்கிறான். எனக்கு கோவம் வர ஏன் இப்பிடி ஏமாற்றுகிறாய். இது எமது நாட்டில் இருக்கிறது என்றுவிட்டு மற்றப் பக்கம் போகிறேன்.

வித விதமாய் ஒரு ஏழு எட்டு விதமான ஒலிவ் பழங்கள். பார்க்க அழகாகவும் சுத்தமாகவும் வைக்கப்பட்டிருக்க சாப்பிட்டுப் பார்க்கும்படி கடைக்காரன் ஒவ்வொன்றையும் எடுத்துத் தருகிறான். எல்லாமே நன்றாக இருக்க ஒவ்வொன்றிலும் ஒரு கிலோ தா என்று சொல்ல, உவ்வளத்தையும் கொண்டுபோய் சாப்பிட்டு முடிக்க மாட்டாய். கொஞ்சமாய் வாங்கு என்று இந்தாள் தடை போட வேறு வழியின்றி ஒவ்வொன்றிலும் அரைக் கிலோ வாங்குகிறேன். வேறு எதுவும் வாங்காமல் நடந்துகொண்டே போக ஓரிடத்தில் இறைச்சி, மீன் என்பவற்றின் படம் போட்டிருக்க சரி வந்தனாங்கள் இதையும் பார்த்திட்டுப் போவம் என்கிறார் மனிசன். நான் அதுக்குள்ள வரமாட்டன் என்று  நான் முரண்டு பிடிக்க நீ உதில நில். நான் போய் பார்த்திட்டு வாறன் எண்டு சொன்ன மனிசன் ஒரு இரண்டு நிமிடத்திலேயே திரும்பி வர மீன் நாத்தம் தாங்க முடியேல்லையோ என்று நான் நக்கலாய்ச் சிரிக்கிறேன்.

இப்பிடிச் சுத்தமான மீன் சந்தையை நான் ஒரு இடமும் பார்க்கில்லை. கட்டாயம் நீயும் பார்க்கவேணும். வந்து பார் எண்டு என்னை இழுத்துக்கொண்டு போகுது அந்தாள். நான் என்ன நாத்தம் நாறப் போகுதோ ஏன் இந்தாளுக்கு உந்த விபரீத ஆசை என்று திட்டியபடி போன என்னால் என் கண்களையம் மூக்கையும் நம்ப முடியவில்லை. வகை வகையாய் மீன்கள் அடுக்கி விடப்பட்டிருக்க ஒரு சிறிய தண்ணீர்ப் பைப்பும் ஒவ்வொரு கடைக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்க மீன் சந்தை என்பதற்கான எந்த மணங்களும்  இன்றி இருக்கிறது அது. அப்பப்ப மீன்களுக்கு தண்ணீரை விடுகிறார்கள். மணக்காமல் இருக்க என்ன செய்கிறார்கள் என்று இன்றுவரை விளங்கவில்லை.

29793727_10209771455596698_5358207285011

29793786_10209771455876705_1350966879031

30261116_10209771456236714_6430886323648

29793106_10209771456196713_4724388932391

29792609_10209771456916731_3743538566580

29792113_10209771457476745_4773684483956

29793667_10209771457396743_3400809517913

30124847_10209771457916756_3261324759849

29793281_10209771458436769_3375380472547

29792810_10209771458716776_8831825646872

30123764_10209771459156787_8787701034068

30264410_10209771459876805_7096879564772

30124542_10209771460156812_5112568046539

29792355_10209771460676825_5874620232693

30123844_10209771461676850_2767591180815

29791947_10209771461876855_2137249428128

30261203_10209771462676875_6119131329285

29793497_10209771463236889_7493890308501

30127732_10209771464076910_7771219709764

29792896_10209771464396918_5982579587207


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பக்கம் போனால் இறைச்சிக் கடைகள். அவையும் கூட எந்த மணமும் இன்றி அழகாக அடுக்கி வைக்கப்பட்டும் தொங்கவிடப்பட்டும் இருக்கின்றன. ஒரு கடை இந்தியர்களுடையது. எம்மைக் கண்டதும் மகிழ்வுடன் சிரித்துக் கதைத்தார்கள். எப்படிச் சந்தையில் மணம் இல்லாமல் இருக்கிறது. மருந்துகள் ஏதாவது போடுகிறீர்களா என்று கேட்டதற்கு, இது ஏதென்ஸின் பெரிய சந்தை. எல்லாம் புதிதாக ஒவ்வொரு நாட்களும் வரும் அன்றே விற்று முடிந்துவிடும் என்கிறார் ஒருவர். 

 

 

 

29792586_10209770944103911_5388882620044

29793311_10209770944183913_1689712590344

30127049_10209770944663925_8509345526464

30226808_10209770944743927_7126766721767

30261596_10209770945223939_9570251943780

29793314_10209770945943957_5740599257145

29793369_10209770946023959_9174250740703

30571158_10209793107377979_4235960900688

 

30516069_10209793120938318_7179728603444

 

 

மாமிச பட்ஷணிகள் அல்லாதோர் தயவு செய்து இப்படங்களை மன்னிக்கவும்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அன்று இரவு உணவை உண்டுவிட்டு வாங்கிக்கொண்டு வந்த பிஸ்தாசியோவை எடுத்து உடைத்து வாயில் வைத்தால் அவை காற்றுப் போய் இளகி உண்பதற்கே அருவருப்பாய் இருக்க, எமக்கு உண்பதற்கு நல்லதைத் தந்துவிட்டு பழையவற்றை விற்று எம்மை ஏமாற்றிவிட்டது தெரிய  பழுதானத்தை ஏன் மினைக்கெட்டுக் காவிக்கொண்டு போவான் என்றபடி தூக்கிக் குப்பையில் எறிகிறேன்.

அடுத்தநாள் எழுந்து காலை உணவை உண்டுவிட்டு நடந்து சென்று தொடருந்தில் டிக்கற் எடுத்து ஒரு மாக்கற்றுக்குப் போனோம். இங்கெல்லாம் கூடுவதுபோல் பெரிதாகச் சனங்கள் இல்லை. கறுவா,ஏலம்,கராம்பு போன்ற வாசனைத் திரவியங்களும் வேறு பல காய்ந்த மூலிகை வகைகளும் பூசணி விதைகள், பருப்பு வகைகள், பிஸ்தாசியோ என்பன அனைத்துக்கடைகளிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மலிவாக இருந்தாலும் எல்லாம் திறந்தே இருந்தபடியாலும் முதல் நாள் வாங்கி ஏமாந்த அனுபவத்தாலும் எனக்கு வாங்கவே மனம் வரவில்லை. தக்காளிகள் தான் அதிகமாக விற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஓரிடத்தில் நிறைய மரங்கள் செடி கொடிகளைக் கண்டவுடன் நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அங்கு செல்ல போற இடத்திலயும் உதை விடமாட்டியோ  ஒரு கண்டுகளும் வாங்காதே. கொண்டு போக விடமாட்டாங்கள்.  என்று திட்டியபடி மனிசன்.  கனக்க மாதுளை மரங்கள் ஒவ்வொரு அளவிலும் பார்க்க ஆசையாக இருக்க ஒன்றைத் தூக்க, உன்னட்டை ஏற்கனவே ஒரு மரம் இருக்குதானே என்று பறிச்சு வச்சிட்டுது மனிசன்.
பிஸ்தாசியோ மரம் இருக்கா என்று தேடினால் ஒன்றுகூட இல்லை. நிறைய வேறுவேறு விதைகளும் அவர்கள் வைத்திருக்க  வறுக்காத பிஸ்தாசியோ விதைகள் இருக்கா என்று கடைக்காரனிடம் கேட்க, விதை இருக்கா என்று தேடிவிட்டு மரம் இருக்கு வா என்று ஒரு மீற்றர் உயரமுள்ள மரத்தைக் காட்டுகிறான். முதல் நாள் அந்தத் தீவில் காட்டிய மரம் போல் இல்லாமல் இலைகள் வேறாக இருக்க அவன் என்னை ஏமாற்றுகிறான் என்று புரிய இது வேண்டாம் என்கிறேன். பொறு கடையில் விதைகள் இருக்கின்றன தேடி எடுத்துத் தருகிறேன் என்று அவன் சொல்ல நானும் ஆவலாய்க் காத்திருக்க கையில் வேர்க்கடலையைக் கொண்டுவந்து  இந்தா பிஸ்தாசியோ விதை என்கிறான். எனக்கு கோவம் வர ஏன் இப்பிடி ஏமாற்றுகிறாய். இது எமது நாட்டில் இருக்கிறது என்றுவிட்டு மற்றப் பக்கம் போகிறேன்.

வித விதமாய் ஒரு ஏழு எட்டு விதமான ஒலிவ் பழங்கள். பார்க்க அழகாகவும் சுத்தமாகவும் வைக்கப்பட்டிருக்க சாப்பிட்டுப் பார்க்கும்படி கடைக்காரன் ஒவ்வொன்றையும் எடுத்துத் தருகிறான். எல்லாமே நன்றாக இருக்க ஒவ்வொன்றிலும் ஒரு கிலோ தா என்று சொல்ல, உவ்வளத்தையும் கொண்டுபோய் சாப்பிட்டு முடிக்க மாட்டாய். கொஞ்சமாய் வாங்கு என்று இந்தாள் தடை போட வேறு வழியின்றி ஒவ்வொன்றிலும் அரைக் கிலோ வாங்குகிறேன். வேறு எதுவும் வாங்காமல் நடந்துகொண்டே போக ஓரிடத்தில் இறைச்சி, மீன் என்பவற்றின் படம் போட்டிருக்க சரி வந்தனாங்கள் இதையும் பார்த்திட்டுப் போவம் என்கிறார் மனிசன். நான் அதுக்குள்ள வரமாட்டன் என்று  நான் முரண்டு பிடிக்க நீ உதில நில். நான் போய் பார்த்திட்டு வாறன் எண்டு சொன்ன மனிசன் ஒரு இரண்டு நிமிடத்திலேயே திரும்பி வர மீன் நாத்தம் தாங்க முடியேல்லையோ என்று நான் நக்கலாய்ச் சிரிக்கிறேன்.

இப்பிடிச் சுத்தமான மீன் சந்தையை நான் ஒரு இடமும் பார்க்கில்லை. கட்டாயம் நீயும் பார்க்கவேணும். வந்து பார் எண்டு என்னை இழுத்துக்கொண்டு போகுது அந்தாள். நான் என்ன நாத்தம் நாறப் போகுதோ ஏன் இந்தாளுக்கு உந்த விபரீத ஆசை என்று திட்டியபடி போன என்னால் என் கண்களையம் மூக்கையும் நம்ப முடியவில்லை. வகை வகையாய் மீன்கள் அடுக்கி விடப்பட்டிருக்க ஒரு சிறிய தண்ணீர்ப் பைப்பும் ஒவ்வொரு கடைக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்க மீன் சந்தை என்பதற்கான எந்த மணங்களும்  இன்றி இருக்கிறது அது. அப்பப்ப மீன்களுக்கு தண்ணீரை விடுகிறார்கள். மணக்காமல் இருக்க என்ன செய்கிறார்கள் என்று இன்றுவரை விளங்கவில்லை.

29793727_10209771455596698_5358207285011

29793786_10209771455876705_1350966879031

30261116_10209771456236714_6430886323648

29793106_10209771456196713_4724388932391

29792609_10209771456916731_3743538566580

29792113_10209771457476745_4773684483956

29793667_10209771457396743_3400809517913

30124847_10209771457916756_3261324759849

29793281_10209771458436769_3375380472547

29792810_10209771458716776_8831825646872

30123764_10209771459156787_8787701034068

30264410_10209771459876805_7096879564772

30124542_10209771460156812_5112568046539

29792355_10209771460676825_5874620232693

30123844_10209771461676850_2767591180815

29791947_10209771461876855_2137249428128

30261203_10209771462676875_6119131329285

29793497_10209771463236889_7493890308501

30127732_10209771464076910_7771219709764

29792896_10209771464396918_5982579587207


 

 

இவ்வளவு கடலுணவுகளைகயும் சமைத்து என்னை யாரும் விருந்துக்கு கூப்பிட்டால் எப்படி இருக்கும் 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

இவ்வளவு கடலுணவுகளைகயும் சமைத்து என்னை யாரும் விருந்துக்கு கூப்பிட்டால் எப்படி இருக்கும் 😋

வயிற்றைப் பிரட்டி சத்தி வராமல் வந்தால் பெரிய காரியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30261596_10209770945223939_9570251943780

 

உதென்ன கோதாரி? நாக்கிளி புழு போலை கிடக்கு........உவாக்........பாக்கவே வயித்தை பிரட்டுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதுகின்றீர்கள், சுமே!

உங்கள் அனுபவங்கள் தொடரட்டும்!

ஐரோப்பிய மீன் விலைகளைப் பார்க்கத் தலை சுத்துது....!😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, ரதி said:

இவ்வளவு கடலுணவுகளைகயும் சமைத்து என்னை யாரும் விருந்துக்கு கூப்பிட்டால் எப்படி இருக்கும் 😋

இவ்வளவும் சமைக்கிறது பெரிய வேலை இல்லை. ஆனா இவ்வளவும் சாப்பிட ஏலுமா உங்களால??? 😀

58 minutes ago, குமாரசாமி said:

30261596_10209770945223939_9570251943780

 

உதென்ன கோதாரி? நாக்கிளி புழு போலை கிடக்கு........உவாக்........பாக்கவே வயித்தை பிரட்டுது...

எனக்கும் தான் உந்தக் கோதாரி என்ன எண்டு விளங்கேல்லை. குடலைத்தான் இப்பிடி வச்சிருக்கிறாங்களோ????

26 minutes ago, புங்கையூரன் said:

நன்றாக எழுதுகின்றீர்கள், சுமே!

உங்கள் அனுபவங்கள் தொடரட்டும்!

ஐரோப்பிய மீன் விலைகளைப் பார்க்கத் தலை சுத்துது....!😫

லண்டன் மீன் விலை சொன்னால் மயங்கி விழுந்திடுவியள். இப்ப 9 பவுண்ட்சுக்குக் குறைய பிறெஸ் மீன்கள் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இவ்வளவும் சமைக்கிறது பெரிய வேலை இல்லை. ஆனா இவ்வளவும் சாப்பிட ஏலுமா உங்களால??? 😀

எனக்கும் தான் உந்தக் கோதாரி என்ன எண்டு விளங்கேல்லை. குடலைத்தான் இப்பிடி வச்சிருக்கிறாங்களோ????

லண்டன் மீன் விலை சொன்னால் மயங்கி விழுந்திடுவியள். இப்ப 9 பவுண்ட்சுக்குக் குறைய பிறெஸ் மீன்கள் இல்லை. 

பில்லிங்ஸ்கேற் சந்தையில......இரண்டு பவுணுக்கு ஒட்டி மீன் (டொக்ரர் பிஷ்) வாங்கின ஆக்கள் நாங்கள்...!

தலை சுத்தும் போல தான் ...கிடக்குது...!😘

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் ஒரு சுத்திக் காட்டிற பஸ் எடுத்து போனால் சும்மா ஒரு வீதியுலா போறான். ஒரு பக்கம் முழுக்க ஒரு பத்துக் கிலோமீற்றர் கடற்கரைதான். ஆனால் பெரிதாக ஆட்களைக் காணவில்லை. ஒரு மணிநேரம் சென்றபின் பஸ் ஓரிடத்தில் திரும்பி மீண்டும் ஓடி ஒரு வளைவில் நின்றது. நீங்கள் அரை மணி நேரம் கீழே இறங்கிப் பார்க்கலாம் என்கிறார் ஓட்டுநர். என்னத்தைப் பார்ப்பது எதையும் காணவில்லையே என எண்ணியபடி இறங்கி மற்றப் பக்கம் போனால் அழகான ஒரு காட்சி மனத்தைச் சொக்க வைத்தது.

 

 

61383368_10212097095816250_1871181465476

61651298_10212097096096257_1624804785414

61759574_10212097097016280_6948806156311

61933850_10212097097376289_1359809039873

61651667_10212097099936353_1825458459118

61665096_10212097098656321_1803335662397

61741682_10212097100016355_8265955399157

61984096_10212097100576369_2643422267538

62020861_10212097101296387_5830922556818

61334272_10212097101576394_2561825555431

61607290_10212097101816400_5084561599889

61558738_10212097102176409_3175209716376

61973900_10212097102376414_5904639502881

61581948_10212097102616420_5238186554228

61633724_10212097102976429_7881936179879

61588950_10212097103216435_8295779729370

61924341_10212097096376264_4032814771563

கடலில் இருந்து வரும் நீரேரி குளம் போல் ஓரிடத்தில் நிற்க சிலர் நீந்திக்கொண்டிருந்தனர். அட முதலே தெரிந்திருந்தால் நாமும் நீச்சல் உடை கொண்டு வந்திருக்கலாமே என்னும் எண்ணம் எழ ஆவென்று அரை மணிநேரம் நின்று பார்க்க மட்டும் தான் முடிந்தது. சிலர் சுற்றிப் போய் கிட்ட நின்ற பார்த்துவிட்டு வந்தார்கள். சாரதி மீண்டும் எல்லோரையும் வரும்படி அழைக்க திரும்பவும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம். அந்த இரண்டு மணி நேரப் பயணத்துக்கு ஒருவருக்கு 5 யூரோக்கள் மட்டும்தான். மீண்டும் நகரில் வந்ததும் பசி எடுக்க ஒரு சிறிய கடையில் இருந்த உணவு எம்மை இழுக்க அங்குபோய் அமர்ந்தோம்.

61548170_10212097103456441_8124139899780

61371953_10212097103856451_7598449809854

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மீண்டும் நகரில் வந்ததும் பசி எடுக்க ஒரு சிறிய கடையில் இருந்த உணவு எம்மை இழுக்க அங்குபோய் அமர்ந்தோம்.

எப்ப பார்த்தாலும் சாப்பாட்டில் ரொம்ப கவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட முதலே தெரிந்திருந்தால் நாமும் நீச்சல் உடை கொண்டு வந்திருக்கலாமே என்னும் எண்ணம் எழ

பொய் சொல்லப்படாது. உங்களுக்கு நீந்த தெரியுமா?

என்ன இருந்தாலும் இந்த ஏரியா எனக்கு பிடிச்சிருக்கு......காத்தோட்டமாய் இருந்து தண்ணியடிக்க மணி இடம்...🕶️

61741682_10212097100016355_8265955399157

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பொய் சொல்லப்படாது. உங்களுக்கு நீந்த தெரியுமா?

என்ன இருந்தாலும் இந்த ஏரியா எனக்கு பிடிச்சிருக்கு......காத்தோட்டமாய் இருந்து தண்ணியடிக்க மணி இடம்...🕶️

61741682_10212097100016355_8265955399157

நீச்சல் உடை அணிவதற்கு  நீந்தத் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லையே......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நீச்சல் உடை அணிவதற்கு  நீந்தத் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லையே......!   👍

ஆ.......அப்ப கரையிலை நிண்டு தையக்க பித்தக்க.......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன் பயணக்கதை பகிர்வுக்கு நனறி ...தொடருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்த உறவுகள் மீரா, ஜெகதா துரை, ஈழப்பிரியன் அண்ணா, ரதி, சுவி அண்ணா, ஏராளன் , புங்கை ஆகிய உறவுகளுக்கு மிக்க நன்றி.

On 5/31/2019 at 2:48 PM, ஈழப்பிரியன் said:

எப்ப பார்த்தாலும் சாப்பாட்டில் ரொம்ப கவனம்.

அதுதானே ரொம்பவும் முக்கியம் 😀

On 5/31/2019 at 11:22 PM, குமாரசாமி said:

பொய் சொல்லப்படாது. உங்களுக்கு நீந்த தெரியுமா?

என்ன இருந்தாலும் இந்த ஏரியா எனக்கு பிடிச்சிருக்கு......காத்தோட்டமாய் இருந்து தண்ணியடிக்க மணி இடம்...🕶️

 

ஏன் உங்களுக்குத் பொய் சொல்ல வேணும். நம்பாட்டி நீங்கள் லண்டன் வரும்போது நீச்சல் குளத்திலே நீந்திக் காட்டிறன். 😎

On 6/1/2019 at 7:05 AM, suvy said:

நீச்சல் உடை அணிவதற்கு  நீந்தத் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லையே......!   👍

உங்கள் வீட்டில் நீச்சல் உடையை வீட்டில் அணிவார்களோ ??????:innocent:😃

On 6/1/2019 at 9:04 AM, குமாரசாமி said:

ஆ.......அப்ப கரையிலை நிண்டு தையக்க பித்தக்க.......🤣

dream_blast_icon.jpg?mFeeCqScpestyDg1fpt

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிலாமதி said:

படங்களுடன் பயணக்கதை பகிர்வுக்கு நனறி ...தொடருங்கள் 

நன்றி அக்கா வரவுக்கு

 

பச்சை தந்த நீர்வேலியானுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் காலை எழுந்து காலை உணவை உண்டுவிட்டு மீண்டும் வந்து கட்டிலில் இருந்து ஊர் கதை உலகக் கதை எல்லாம் கதைத்துவிட்டு பத்துமணிபோல் கிளம்பி மீண்டும் பார்த்த இடங்களில் தவறவிட்ட  சிலவற்றைப் பார்த்துவிட்டு மேலே இருந்து பார்த்துவிட்டுத் தவறவிட்ட அரங்கத்தைப் பார்த்தே தீரவேண்டும் என்று போனால் வரிசை நீண்டுகொண்டே போகுது. நின்றாள் ஒரு மணிநேரமாவது வரிசையில் நிற்க வேண்டும். அன்று பார்த்து பள்ளி விடுமுறைபோல அதிகளவில் பிள்ளைகுட்டிகளோடு வந்திருந்தனர். சரி அத்தனை நேரம் நிற்கமுடியாது என்று கீழே வந்து sintagma square இங்கு வந்து அங்கிருந்து ராமில் ஒருவருக்கு 2.50 யூரோ கொடுத்து பயனச் சீட் டை எடுத்து அமர்ந்தோம்.

ஒரு மணிநேரம் ராம் கடற்கரை ஓரமாகவே ஓட அதிலிருந்தபடியே இடங்களை பார்த்துக்கொண்டு வந்து ஓரிட த்தில் இறங்கினோம். கடற்கரைகளில் பெரிதாக ஆடைகளையே காணவில்லை.  தனியாக இருவரும் வந்ததனால் தெரியாத கடலில் குளிப்பது ஆபத்து என்று எண்ணி நான் கடலில் இறங்கவே மறுத்துவிட்டேன். மனிசன் சொல்லக் சொல்லக் கேட்காமல் இறங்கிவிட்டுது. தூரப் போகாதேங்கோ எண்டாலும் கேட்கவில்லை. அந்தாள் வெளியில வரும் வரைக்கும் எனக்கு நெஞ்சுக்குள்ள தண்ணி இல்லை. ஒரு வாறு கத்திக் கத்திக் கூப்பிட்டு வெளியே வந்து தலை துடைத்து விட்டு மணலில் கற்களை அடுக்கி யாருடையது உயரமாக இருக்கு என்று சிறு பிள்ளைகள் போல் விளையாடிவிட்டு வெய்யில் தாங்க முடியாததாக மீண்டும் வந்து ராமில் ஏறினோம். தனியாகக் கடற்கரைக்குச் செல்வது காதலர்களுக்கு வேணுமானால் நன்றாக இருக்குமே தவிர கணவனும் மனைவியும் யாருமற்ற ஒரு கடற்கரையை அதிகநேரம் இரசிக்க முடியாது என்பது அன்றுதான் புரிந்தது. (தணியடிக்கிற கோஷ்டியளின் கதை வேறை).

மீண்டும் ஏறிய இடத்தில் இறங்கி நடுவில் ஆட்கள் இருப்பதற்குப் போடப்பட்டிருந்த வாங்குகள் போன்ற இருக்கையில் இருந்து போவோர் வருவோரை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருக்க மனிசன் போய் ஐஸ்கிரீம்கள் வாங்கிக்கொண்டு வந்தார். கடற்கரையிலும் பார்க்க இந்த இடம் நன்றாகவே இருக்க நேரம் போனதே தெரியவில்லை. மேலே மலைக்குன்றில் அக்றோபொலிஸ் கோவில் மிக அழகாக இருந்தது. இன்று இரவு இந்த இடத்துக்கு வந்து கோவிலில் அழகைப் பார்த்தால் என்ன என்றேன் நான். மின் விளக்கின் ஒளியில்  இரவில் அழகாக இருக்கும் என்று ஒன்லைனில் பார்த்த நினைவு எழ அருகில் கும்பலாக நின்ற நான்கைந்து போலீஸ் காரரிடம் சென்று இரவில் இந்த இடத்துக்கு அதிகமான மக்கள் வருவார்களா என்று கேட்டேன். நீங்கள் தனியாகவா அல்லது குழுவாக வந்துள்ளீர்களா என்று கேட்டார்  ஒருவர். நானும் கணவனுமென்று சொன்னதும் குழுவாக வருபவர்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் இரவில் கள்வர்கள் அதிகம். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து பஸ்ஸில் அல்லது ட்ரெயினில் தானே இங்குவரவேண்டும்.அது பாதுகாப்பானது இல்லை என்கிறார்கள்.
நாம் எமது ஹோட்டலை புக் செய்தபோது அந்தக் கோவிலின் வியூ நன்றாகத் தெரியும் என்கிறார்கள். வந்தபின் தான் தெரிந்தது எதுவுமே தெரியவில்லை என்று. இனி அதுக்காகச் சண்டை போட முடியுமா என மனதில் எண்ணிக்கொண்டு எழுந்தோம். அடுத்தநாட் காலை ஐந்து மணிக்கு விமான நிலையம் செல்ல எழவேண்டும். அதனால் விரைவில் தூங்கவும் வேண்டும் என்று கூறியபடி ஹோட்டலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு உணவகத் தில் உணவை உண்டுவிட்டு வர எதோ நீண்ட நாள் வசித்த இடத்தை விட்டுப் போவதுபோன்ற ஒரு துயரம் எழுந்தது.

என்னைக் கேட்டால் இன்னும் பலமுறை கூடச் செல்லச் சலிக்காத ஒரு இடம் கிரீஸ். ஆனால் இருவர் மட்டும் போகாது சிலராவது சேர்ந்து போனால் இன்னும் பல இடங்களைக் கடற்கரையை துணிவாக மகிழ்வாக அனுபவித்துவிட்டு வரக் கூடிய அற்புதமான சுற்றுலாத்தளம்.

 

 

62148202_10212131966367992_4801339172784

62102379_10212131966728001_9012278599029

62182950_10212131967008008_1384385091848

61768902_10212131967448019_8041017546570

62241061_10212131967768027_8384869570271

62125737_10212131968048034_6099414332725

61797546_10212131970208088_3194961180049

61890790_10212131970568097_8729221815928

61828734_10212131970488095_3091097102621

61917372_10212131971128111_2528060008608

61851972_10212131964087935_2327628178555

62075055_10212131962807903_8988234654846

 

 

61845028_10212131962887905_3925457073248

61741686_10212132040929856_6850675027000

61928116_10212132041729876_3918594595977

62242479_10212132041489870_3432914724868

62081502_10212132042609898_4303213057682

61923755_10212132042329891_9050005488678

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழே நான் போடும் படங்கள் இணையத்தில் உள்ளவை. இப்படங்கள் இன்னும் அழகானவை என்பதனால் உங்கள் பார்வைக்குப் போட்டுள்ளேன்.

athens-greece-monastiraki-square-with-pe

DSC_0166-5c756ffc46e0fb0001a5ef14.jpg

Athens-Monastiraki-Square-Night.jpg

a6.jpg

 

Parthenon-Athens-Greece.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்...... கடைசிவரைக்கும்..... அத்தார் ஏன் கட்டிலுக்கு சண்டை பிடித்தார் என்று தெரியவில்லை.......

ரீசேட்டிற்குள் tablet ஐ ஏன் ஒழித்து வைத்திருக்கிறார்......🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தனியாக இருவரும் வந்ததனால் தெரியாத கடலில் குளிப்பது ஆபத்து என்று எண்ணி நான் கடலில் இறங்கவே மறுத்துவிட்டேன்.

எனக்கு நீந்தத் தெரியாது என்று சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

ரீசேட்டிற்குள் tablet ஐ ஏன் ஒழித்து வைத்திருக்கிறார்

சுட்டுவிடுவார்கள் அல்லது சுட்டதை பிடித்துவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு நீந்தத் தெரியாது என்று சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்?

அவ நீச்சல் உடையை விட்டு விட்டு வந்துட்டாவாம்..... நானன்டால் இரண்டு கைக்குட்டை  வாங்கி கட்டிக்கொண்டு இறங்கியிருப்பேன்....!   🐟

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.