Jump to content

மதுரை உணவகத்தின் மெனுவில் 'பழைய சோறு..!'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை உணவகத்தின் மெனுவில் 'பழைய சோறு..!'

news_3236_1.jpg    img_0947.jpg

 

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள "நெல்லு பேட்டை" என்ற உணவகத்தில் பழைய சோற்று கஞ்சி விற்பனை செய்து வருகின்றனர்.

இது அப்பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.வீட்டில் மிஞ்சிய சோற்றை குப்பையில் கொட்டும் நகர்புற கலச்சாரத்துக்கு மத்தியில் உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழைய சோறு ஜி.எஸ்.டியுடன் மதுரையில் உள்ள ஓட்டல் ஒன்றில் விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போது  உணவு பழக்கங்கள் மாறிவரும் இந்த நிலையில்  மீண்டும் ஆரோக்கியமான உணவை நோக்கி மக்கள் நகர தொடங்கி இருக்கின்றனர் என்பதற்கான அறிகுறிதான் மதுரை மாட்டுதாவணியில் பழைய சோறு விற்பனை செய்து வருகின்றனர்.பழைய சோற்றில் மோர் கலந்து பச்சைமிளகாயும், வெங்காயமும் சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு குளிர்ச்சியையும் உள்ளத்துக்கு சுறு சுறுப்பையும் கொடுத்தது.

கால ஓட்டத்துக்கு ஏற்ப உடல் உழைப்பு குறைந்த பணிகளில் ஈடுபடும் படித்தவர்கள் மற்றும் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு செல்லும் நகரவாசிகள் இட்லி, தோசை என்றும் வட நாட்டு உணவான புரோட்டா, சப்பாத்தி, பூரி, பானி பூரி என்றும் அன்னிய உணவுகளான பீட்சா, பர்கர், சாண்ட்விட்ஜ் என்றும் திசைமாறினர்.இதனால் பெரும்பாலான வீட்டில் மிச்சமாகும் சாப்பாடு பழைய சோறாகி குப்பைக்கும், ஆடு மாடுகளுக்கும் உணவாக வைக்கப்பட்டு வருகின்றது.

கஞ்சிகளையத்தில் பழைய சோறு, தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய், வெங்காயம், சீனியரக்காய் வத்தல், ஊறுகாய் என உச்சி வெயிலில் வரும் வாடிக்கையாளரை குளிர வைக்கும் பழைய சோறு காம்போவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் விலை ஜிஎஸ்டி உடன் சேர்த்து50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அதனை நம்மவர்கள் ஸ்பூனில் அள்ளி சாப்பிடுவதை காணும் போது, காலச் சக்கரம் வேகமாக சுழல்வதை கண்கூடாக காணமுடிகின்றது.

தங்கள் ஓட்டலில் பழைய சோறு விற்பனை செய்யபடுவதாக இணையத்தில் தகவல் பரவியவுடன் ஏராளமான படித்த இளைஞர்கள் பழைய சோற்றின் மகத்துவம் அறிந்து ஓட்டலுக்கு தேடி வந்து சாப்பிடுவதாகவும், இன்னும் பலர் ஸ்விக்கி, உபர் ஈட்ஸ், சுமோட்டோ போன்ற ஆன்லைன் உணவு பரிமாற்ற நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து பார்சலாக வாங்கிச்சென்று சாப்பிடுவதாக ஓட்டலின் மேலாளர் பெருமை கொள்கிறார். தொடர்ந்து தன் உணவகத்தை பாரம்பரிய உணவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் தமிழ்

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.