Jump to content

பயங்கரவாதத்தை ஒழிக்க எந்தவொரு உதவியையும் வழங்க தயார் - ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலில் மோடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தை ஒழிக்க எந்தவொரு உதவியையும் வழங்க தயார் - ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலில் மோடி

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார்.

modi.jpg

இலங்கை முகம்கொடுத்துள்ள இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் தனிப்பட்ட முறையிலும், இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் ஜனாதிபதியிடம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ள இந்திய பிரதமர், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கமும் மக்களும் இலங்கையின் சகோதர மக்களுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்திருப்பதாக குறிப்பிட்ட இந்திய பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்தும் பலமாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/54429

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு இன்னி வரைக்கும் ஒரு வார்த்தை பேசவில்லை இங்கு வந்திட்டார் உத்தமன் .

தேவாலயங்களில் இறந்தவர்கள் அநேகர் தமிழர் எங்கள் வலி எமக்கு மட்டுமே புரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாகக் கூறுகிறேன் இத்தாக்குதல் சம்பவத்துக்கு முக்கிய காரணம் இவனும் இவனது கூட்டமும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கொஞ்சம் தலை நிமிர்ந்தால் முதல் கண்ணுக்கை குத்தறது இவங்களுக்குத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா ஆரம்பித்து போட்டார்கள் அல்லு சில்லுகள் ..🙂

57608820_1428308160659421_63679450339197

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவன் எங்கை எப்பிடி செத்தா என்ன, இதை வைச்சு வாக்கு கேட்க கிளம்பி விட்டார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் அதிகமானவர்கள் தமிழர்களே கொல்லப்பட்டனர். இந்தியாவின் பிரதமர் மோடி தனது ஓட்டுப்பொறுக்கி அரசியலில் தமிழர் இழப்பை தனக்குச்சாதகமாக்கிக்கொண்டார். இவர் எவ்வளவு குரூரமானவர் என்பதை எல்லோரும் அறியுங்கள். 

இப்படி இவர்கள் பேசியதற்குக்காரணம் இச்சதியின் பின்னணியில் இந்திய உளவுப்பிரிவு இருப்பதேயாகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.