Jump to content

10 நிமிடங்களுக்கு முன்னரும் கொடுக்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை


Recommended Posts

10 நிமிடங்களுக்கு முன்னரும் கொடுக்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை

rajitha-senarathna-300x200.jpgசிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்று சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

கொழும்பில் நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.

“தாக்குதல் நடத்தப்படுவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகக் கூட, உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஏப்ரல் 4ஆம் நாள் தொடக்கம், இந்த புலனாய்வு எச்சரிக்கைகள் காலத்துக்குக் காலம் சிறிலங்கா அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

48 மணி நேரத்துக்கு முன்னதாகவும், தாக்குதல்கள் நடப்பதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவும் கூட எச்சரிக்கை செய்யப்பட்டது.

ஏப்ரல் 4ஆம் நாள் தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்புள்ளதாக, முதல் முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, கிறிஸ்தவ, கத்தோலிக்க தேவாலயங்கள், விடுதிகள் இலக்கு வைக்கப்படலாம் என்றும் அந்த புலனாய்வுத் தகவல்கள் எச்சரித்திருந்தன.

பெயர்களை குறிப்பிட்டு எச்சரிக்கை

அதற்குப் பின்னர் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ்,  பாதுகாப்புச் செயலரின் சார்பில், ஏப்ரல் 9ஆமு் நாள், இதுபற்றி காவல்துறை மா அதிபருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் உறுப்பினர்களான சிலரது பெயரையும் குறிப்பிட்டு, தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

தௌஹீத் ஜமாத்  தலைவர்களான ஷரான் ஹஷ்மி, ஜல்ஹால் ஹிடால், சஜிட் மௌலவி, ஷல்ஹான், ஆகியோர் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதற்காக சிறிலங்கா வந்துள்ளனர் என்றும் அவர் தகவல் தெரிவித்திருந்தார்.

இருட்டில் இருந்த ரணில்

அதன் பின்னர் பிரதி காவல்துறை மா அதிபர் பிரியலால் தசநாயக்க, ஏப்ரல் 11ஆம் நாள், அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவு,  நீதித்துறை பாதுகாப்பு பிரிவு, முன்னாள் அதிபர்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, இராஜதந்திரிகள் பாதுகாப்பு பிரிவுகளுக்கு இதுபற்றி அறிவித்திருந்தார்.

எனினும், பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கோ, அதிபர் பாதுகாப்புப் பிரிவுக்கோ அவர் அறிவிக்கவில்லை. பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கூட தெரியப்படுத்தப்படவில்லை. பிரதமர் எதுவும் அறியாதவராக இருந்தார்.

வெளிநாட்டுத் தொடர்புகள்

இந்த அடிப்படைவாத அமைப்புக்கு வெளிநாட்டு தொடர்புகள் இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன.

அனைத்துலக தொடர்புகள் குறித்தும், எவ்வாறு தற்கொலைக் குண்டுதாரிகளை உருவாக்கினார்கள் என்றும், எவ்வாறு வெடிபொருட்களை பெற்றார்கள் என்றும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

அழைப்பு இல்லை

கடந்த டிசெம்பர் மாதத்துக்குப் பின்னர் நடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ, பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவோ அழைக்கப்படவில்லை.

சிறிலங்கா அதிபர் வெளிநாடு சென்றபோது பதில் பாதுகாப்பு அமைச்சராக யாரையும் நியமிக்கவில்லை. அதனால் பேரழிவு ஏற்பட்டபோது பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்க யாரும் இருக்கவில்லை.

ரணிலின் உத்தரவை ஏற்க மறுத்த பாதுகாப்புச்சபை

குண்டுவெடிப்பு நடந்த பின்னர் பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார். ஆனால் அதன் உறுப்பினர்கள் யாரும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பிரதமர் பாதுகாப்பு அமைச்சுக்கு விரைந்து சென்று ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். ஆனால் 20 நிமிடங்கள் கழித்தும் எவரும் வரவில்லை.  அதனால் பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சரின் அறையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

பிரதமரின் அழைப்பை பாதுகாப்புச் சபை ஏற்காத சம்பவம் நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக- இடம்பெற்றிருக்கிறது.

நாட்டின் அதிபரால் நியமிக்கப்பட்டவர் பிரதமர், அரசியலமைப்பின் படி மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். பாதுகாப்புச் சபை அவரது அழைப்பை ஏற்க மறுத்திருக்கிறது.

பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற பிரதமர், 20 நிமிடங்கள் அறையில் காத்திருந்த பின்னரே அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னரே தேவையான உத்தரவுகளை வழங்கினார்.

பிரதமர் பிற்பகலில் மற்றொரு பாதுகாப்புக் குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த போதும்,  யாரும் அக்கறை காட்டவில்லை. அவர்கள் அந்தக் கூட்டத்துக்கு வராததற்கு உயர்மட்ட உத்தரவே காரணம்.

மன்னிப்புக் கோருகிறது அரசாங்கம்

அரசாங்கம் இந்தச் சம்பவங்களுக்கான பொறுப்பை தட்டிக் கழிக்கவில்லை. இதற்காக மன்னிப்புக் கோருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டும், அதில் அக்கறை செலுத்தாத காவல்துறை மா அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

அவ்வாறு செய்யாவிடின், சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில்,  அவர் மீது நடவடிக்கை எடுத்து, புதிய காவல்துறை மா அதிபரை நியமிக்குமாறு  சிறிலங்கா அதிபரிடம் அமைச்சரவை கோரிக்கை விடுக்கும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2019/04/23/news/37597

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் உட் கட்சி  பூசலில்... அப்பாவிகளான 300 பேர் இறந்தும், 500 பேர் காயப்பட்டு உயிருக்கு போரடிக் கொண்டிருக்கும் கொடுமையை.. என்னவென்று சொல்வது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Could the Sri Lanka bombings have been stopped?

Some elements of government knew about warnings

 

 

 

Link to comment
Share on other sites

18 hours ago, nunavilan said:

பிரதமரின் அழைப்பை பாதுகாப்புச் சபை ஏற்காத சம்பவம் நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக- இடம்பெற்றிருக்கிறது.

18 hours ago, nunavilan said:

பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற பிரதமர், 20 நிமிடங்கள் அறையில் காத்திருந்த பின்னரே அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னரே தேவையான உத்தரவுகளை வழங்கினார்.

சிங்கள-பௌத்த இனமதவெறியர்களினால் உருவாக்கப்பட்ட  நிறைவேற்று அதிகாரத்தின் பலாபலன்களில் இதுவும் ஒன்று!

மைத்திரி தனது கடந்தவருட சட்டவிரோத செயல்களை மறைக்க போதைப்பொருள் ஒழிப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்து நடித்துவர, இப்போது இன்னொரு சட்டவிரோத செயல் மூலம் சிக்கலில் மாட்டியுள்ளதை தான் விதி என்பார்களோ?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.