Jump to content

முகத்திலே என்ன அப்படி எழுதி ஒட்டி வைச்சுக் கிடக்கா..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவனின் பெல்ட் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் மற்றுமொரு நட்சத்திர விடுதியில் நடந்திருக்கக் கூடிய அனர்த்தம் தப்பி விட்டது என ஓர் செய்தி (23/04/2019) . பெல்ட் என்பது பழைய ஞாபகம் ஒன்றை கிளறி விட்டது.

முகத்திலே  இலகுவாகப் பேய்க்காட்டுப்படக் கூடிய ஆள் என்று எழுதி வைத்திருக்கோ என்னமோ தெரியவில்லை  , எங்க சாமான் வாங்கப் போனாலும் எதாவது ஒண்டு நடக்கும்.  அது பழைய காலத்தில பெற்ராவில (புறக்கோட்டை)   நூற்றுச் சொச்ச ரூபாவிற்கு இடுப்புப் பட்டி வாங்கிய நாட்கள் என்றாலென்ன,  இப்ப 5.20 வெள்ளி பெறுமதியான யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் என்றாலென்ன, 1,399  வெள்ளி பெறுமதியான Lap Top  எண்டாலென்ன எதையாவது அமத்தி அடிச்சு தலையில கட்டப் பார்க்கினம் . ஒண்டுக்கு  இரண்டு ரீடிங் கிளாஸ் எடுத்துக் கொண்டு போய் (  சின்ன எழுத்து வாசிக்க ஒண்டு , பெரிய எழுத்து வாசிக்க ஒண்டு)  எண்ணெய் விட்டுக் கொண்டு போன கண்ணால துருவித்  துருவிப் பார்த்தாலும் சில வேளை ஏதாவது தப்பி விடும் , வீட்டுக்கு வந்து பார்க்கும் போது.

 

Episode 1: பெற்றாவில் வாங்கிய பெல்ட்  : 

 உழைக்கத் தொடங்காத காலம்.  அப்பா ஒவ்வொரு மாதமும் அனுப்பும் மணி ஓடரை  வைத்து ஹால் சாப்பாட்டுக்காசு, சில்லரைச் செலவுகள் எல்லாம் பார்த்து , இடை இடையே நண்பர்களுடன் Leons இற்கு  போய் அருமையாக ரெண்டு பியர் அடிச்சு  (  இரண்டுக்கே நல்லா  ஏறி விடும் அப்பவெல்லாம்) , பிறகு கொழும்புக்கும் போவதற்கு காசினைத் தேற்றி எடுப்பதென்பது குதிரை கொம்பு தான்.  எப்படியோ சில பல குதிரைக்கொம்புகள் இடைக்கிடை வந்து சேரும்.  அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் கொழும்பு போன நேரம் , வந்த அலுவல் முடித்து விட்டு திரும்புவதற்கு பஸ்ஸைப் பிடிக்க Pettah (புறக்கோட்டை ) நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன்.  வழியில ஒருத்தன் வித விதமான இடுப்புப் பட்டிகளை பரப்பி வைத்து விலை எதோ நூற்றுச்சொச்சம் என்று கூவி அழைத்துக் கொண்டிருந்தான்.  சற்றுக் குனிந்து இடுப்பைப் பார்த்தேன்.  ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய ஓட்டைகளும் குறுக்கே ஒரு பெரிய மடிப்பு வெடிப்புமாக எனது பெல்ட் பென்ஷன் தரச் சொல்லி அழுது கொண்டிருந்தது.  பர்ஸினுள் மேலதிகமாக ஒரு 125 ரூபாய் மட்டில் இருந்தது ஞாபகம் வர , சற்றே வேகம் குறைத்து அவனிடம் சென்றேன்.

  மில கீயத (என்ன விலை)?” என்று எனக்குப் பிடித்திருந்த ஒரு பெல்டைக் காட்டிக் கேட்டேன். எனது சிங்களம் பற்றி எனக்கு எப்பவுமே பெருமை உண்டு 4,5  வயதில்  கத்தோலிக்க சிஸ்டரிடம் படிக்கப் போன காலத்திலேயே , அவர் ஒரு சிங்கள மாஸ்டரை ஒழுங்கு படுத்தி சிங்களம் பயின்று வந்திருந்தது இப்ப ஒரு  45 வருடம் போன பின்பும் நல்லா நினைவில் நிக்கிற ஒண்டெண்டால் , அப்ப  இருபது வயதில தெள்ளுத் தெறித்தது மாதிரித் தானே இருந்திருக்கும்.

ஏக்க சீய தஹாயாய் மஹத்தயா”  என்றான் அவன்.

 மஹத்தயா என்று அவன்  விழித்தது மனதுக்கு அப்படி ஒரு திருப்தி. இப்ப நினைச்சுப் பார்த்தால் அன்றாடம் சந்திக்கும் சாதாரண மனிதர்களில் ஒருவராக இருக்கக்கூடிய அவன்  தரவளிகளெல்லாம்  Customer Psychology  இல் PhD தர அறிவு கொண்டிருந்து வியாபாரம் செய்திருந்தார்கள் என வியப்பாகக் இருக்கிறது , Fittest Survives.  

இன்றைய திகதியில் எனது துணைவியாரும் என்னுடன் அங்கு நின்றிருந்தால்,  ஐம்பது ரூபாய்க்குத் தருகின்றாயா எனக் கேட்டிருப்பார். எப்போதுமே வராத அந்தத் துணிச்சல் எங்கேயோ பதுங்கி நிற்க , விலை கொஞ்சம் அதிகம் தான் என மனது சொல்ல , ஒரு மாதிரி துணிச்சலை வரவழைத்து கொண்டு கேட்டேன்,   ஏக்க சீயட்ட தெண்ட புளுவாங்த ( நூறு ரூபாய்க்கு தர முடியுமா)”  என்று.

ஒரு மாதிரி என்னை மேலும் கீழும் அளந்து பார்த்தவன் , “சரி”  என்று சொன்னான்.  எனக்குள்ளே ஒரே புழுகம்- ‘ யாரடா சொன்னது உனக்குத் துணிச்சலும் பேரம் பேசும் திறமையும் இல்லை எண்டு’  எனக்கு நானே  தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகு தான் விவகாரமே ஆரம்பமாகியது.

நூறு ரூபாயை எடுத்து நீட்டினேன். சந்தோசமாக வாங்கி வைத்து கொண்டான். பின்பு Belt எடுத்து எனது இடுப்பில் சுற்றி  அளவு பார்த்தவன் கேட்டான்   ஹோலுத் தஹலா தெனவாத மாத்தையா ருப்பியல் பஹய் விதராய் ( ஓட்டை போட்டுத்  தரவா ஐந்து ரூபாய் மட்டுமே)”   என்றான்.

நானும்  சரி என்றேன்.  இடுப்பில் வைத்து மீண்டும் அளவு எடுத்து ஓட்டை போட்டான்.  பிறகு கேட்டான் பக்கத்தில கொஞ்ச கொஞ்ச இடைவெளி விட்டு மேலும் ஓட்டைகள் போடவா என்று.  நானும் ஒரு பெரிய மனிதத் தோரணையில் ஓமென்று தலையாட்டினேன்.

படக் படக் என்று நாலைந்து ஓட்டைகள் போட்டான்.  பெல்டைத் திரும்பத் தந்தான்.  போட்டுப் பார்க்கச் சொன்னான்.  பழைய பெல்டை அதிலேயே கழற்றி எறிந்து விட்டு புதியதை மாட்டிக் கொண்டேன். குனிந்து பார்க்க நல்ல எடுப்பாகத் தான் இருந்தது. பர்ஸ் இலிருந்து ஐந்து ரூபாயத் தாளை எடுத்து நீட்டினேன். போகத் திரும்பினேன்.

பொட்டக் இண்ட மஹத்தயா?”  என குரல் விட்டான். திரும்பிப் பார்த்தேன். “தவ ரூபியால் விஸ்ஸக் தென்ட மஹத்தயா( இன்னமும் இருபது ரூபாய் தாருங்கள்)?”  என்கிறான்.

எனக்குப் பெரிய அதிர்ச்சி. 105  ரூபாய் போக மிச்சமாக இருக்கக் கூடிய 20 ரூபாயில்  புறக்கோட்டை நானா கடை கொத்துரொட்டியை ஒரு கை பார்த்து விட்டு பஸ் ஏறலாம் (அப்ப ஒரு கொத்து ரொட்டி 10 ரூபா அப்படி இருந்திருக்கும்) என இருந்த எனக்கு , இவன் காசு முழுவதையும் அமத்தப் பார்த்தால் எப்படி இருக்கும்.

என்ன 5 ரூபாய் எண்டு தானே சொன்னனீ ? என்றேன் நான்.

 ஓம் மஹத்தயா ஒரு ஓட்டை போட 5 ரூபாய் , 5 ஓட்டைக்கும் 25 ரூபாய் ஆகின்றது.  காசைத் தாருங்கள்”  என்று தொனியை சற்றே உயர்த்தி சொன்னான்.

யாரோ எங்கோ எள்ளி நகைத்தார்கள்.  எனது  கொத்து ரொட்டி கனவை இறுக்கமாக மூட்டை கட்டி வைத்து விட்டு,  பர்ஸை வழித்துத் துடைத்து அவனிடம் கொடுத்து விட்டு , ஏன் எனக்குத் தான் இதெல்லாம் நடக்குது என்று வாழ்க்கையே  வெறுத்துப் போய் திரும்புவதற்கு மீண்டும் பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

 

Episode 2 : வரும்….

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேம் பிளட்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

சேம் பிளட்......

இப்பவரைக்கும் கொழும்ம்புக்கு செல்பவர்களுக்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது இந்த சம்பவம்.

ஆனால் இப்ப சிங்களவர்களை பெற்றாவில் கடை வைத்திருக்கும் தமிழர்கள்தான் வாங்க வாங்க என்று கூப்பிட்டு விட்டு வியாபாரம் முடிந்த பின் சிங்களத்தில் அதட்டி பேசுவதால் கன பேர் மீதிக்காசை  விட்டுட்டு  வந்தவர்கள் இப்பவும் இருக்கிறார்கள்.

சாமானியனின்  சேம் சம்பவம் நடந்திருக்கு ஓட்டை ஸ்கூட் டிரைவரால் போட்டுக்கொண்டது நான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவாரசியமாக விபரித்திருக்கிறீர்கள். பல ஆண்கள் இப்பிடி ஏமாந்து போவதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏமாந்த கதையை சொல்லுவம் என்று வந்தால் இவ வேற....., அதனால் நான் அந்த ஏமாளிகள் லிஸ்டில் சேர விரும்பவில்லை.....!  😣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல சுவாரசியமாக விபரித்திருக்கிறீர்கள். பல ஆண்கள் இப்பிடி ஏமாந்து போவதுதான்.

இந்த பெயாரன் லவ்லியை நம்பி இப்பவரைக்கும் ஏமாறும் பெண்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது அதென்ன ஆண்கள் மட்டும் ஏமாந்து போவது 

 

4 minutes ago, suvy said:

நானும் ஏமாந்த கதையை சொல்லுவம் என்று வந்தால் இவ வேற....., அதனால் நான் அந்த ஏமாளிகள் லிஸ்டில் சேர விரும்பவில்லை.....!  😣

சரி நாங்க மறைச்சு வச்சுகிறமே ( அந்த அழிறப்பரை எடுங்கள் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த பெயாரன் லவ்லியை நம்பி இப்பவரைக்கும் ஏமாறும் பெண்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது அதென்ன ஆண்கள் மட்டும் ஏமாந்து போவது 

 

சரி நாங்க மறைச்சு வச்சுகிறமே ( அந்த அழிறப்பரை எடுங்கள் )

உங்களுக்கு தெரியும் தானே நாங்கள் உதுகளைப் பூசுறதும் இல்லை ஏமாறுறதும் இல்லை😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு தெரியும் தானே நாங்கள் உதுகளைப் பூசுறதும் இல்லை ஏமாறுறதும் இல்லை😛

 வீட்டின் மூலையில் சோற்றுக் கற்றாழை நல்ல வளர்ந்து இருக்கு । அதை வெட்டி முகத்தில் பூசி வந்தால் வேறு ஒன்றும் தேவையில்லை என்று சொல்லினம், முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் - வரு முன் காக்கும் நோக்கில்   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சாமானியன் said:

 வீட்டின் மூலையில் சோற்றுக் கற்றாழை நல்ல வளர்ந்து இருக்கு । அதை வெட்டி முகத்தில் பூசி வந்தால் வேறு ஒன்றும் தேவையில்லை என்று சொல்லினம், முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் - வரு முன் காக்கும் நோக்கில்   

 

பெண்கள் தான் முக அழகைப்பற்றிக் கவலைப்படுறது. நீங்களும்????.......எங்கேயோ இடிக்குதே சாமானியன்.????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்பிடி ஏமாற்றப்பட்டுள்ளேன். நாங்கள் எகிறினால் அவர்கள் கட்டாயம் பணம் தரவேண்டும் என்று மிரட்டும் தொனியில் கேட்பார்கள், உதவிக்கு அவர்களின் group பக்கத்திலேயே இருக்கும். ஒன்றும் செய்ய முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு தெரியும் தானே நாங்கள் உதுகளைப் பூசுறதும் இல்லை ஏமாறுறதும் இல்லை😛

ம்ம் நாமெல்லாம் கறுப்புதானே அக்கா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெண்கள் தான் முக அழகைப்பற்றிக் கவலைப்படுறது. நீங்களும்????.......எங்கேயோ இடிக்குதே சாமானியன்.????

நல்ல   நாள் பெரு நாளிலேயே கணக்கில எடுக்கினமில்லை.  முகத்தில வேறு பளபளப்பு குறைஞ்சு போச்சுதெண்டால்   எல்லாம் முடிஞ்சு போச்சுது எண்டு ஒரேயடியாகக் தள்ளி வைச்சு விடுவினம். 
நாங்கள் எவ்வளவைத் தான் யோசிச்சு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு 😏

 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் நாமெல்லாம் கறுப்புதானே அக்கா

 

இங்க ஒரு பகுதி என்னடாவென்றால் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு"  என்று தூள் கிளப்பிக் கொண்டிருக்கு. 

Come  on  ராஜா,  நிறத்தை விட presentation  இல தான்  விஷயம் இருக்கு , இது நான் சொல்லவில்லை அனுபவம் சொல்லுது …….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சாமானியன் said:

ஓம் மஹத்தயா ஒரு ஓட்டை போட 5 ரூபாய் , 5 ஓட்டைக்கும் 25 ரூபாய் கின்றது.  காசைத் தாருங்கள்”  என்று தொனியை சற்றே உயர்த்தி சொன்னான்.

சிங்களம் கதைக்கத் தான் பிரச்சனை.
நேரடியாக தமிழிலேயே கதைத்தால் எல்லாம் சரியாகத் தான் போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சாமானியன் said:

இங்க ஒரு பகுதி என்னடாவென்றால் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு"  என்று தூள் கிளப்பிக் கொண்டிருக்கு. 

Come  on  ராஜா,  நிறத்தை விட presentation  இல தான்  விஷயம் இருக்கு , இது நான் சொல்லவில்லை அனுபவம் சொல்லுது …….

 

ஆஹா ஊர்ல எல்லாம் வெள்ளையாக கிறீம் போடுக்கொண்டு இருக்கிறது அதுவும் விலைகூடிய நைட் கிறீமாம் என்னத்த சொல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆஹா ஊர்ல எல்லாம் வெள்ளையாக கிறீம் போடுக்கொண்டு இருக்கிறது அதுவும் விலைகூடிய நைட் கிறீமாம் என்னத்த சொல்ல 

இப்பவே நொந்து போனார் போலை கிடக்கு.....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆஹா ஊர்ல எல்லாம் வெள்ளையாக கிறீம் போடுக்கொண்டு இருக்கிறது அதுவும் விலைகூடிய நைட் கிறீமாம் என்னத்த சொல்ல 

தெரிஞ்ச ஆட்களென்றால் அவையிட்ட சொல்லுங்கோ காசைக்  கரியாக்க வேண்டாம் என்று.  சோற்றுக்கற்றாழை ( Aloe Vera) எங்கேயும் வளரும்,  அதுவும் எல்லுப்பன்  பச்சை மஞ்சளும் கலந்து முகம்,  கை,  கால்களில் பூசி ஒரு 15 -30 நிமிடத்தின் பின் அகற்றி விடலாம்-  இவை பாவிக்கக் கூடிய எந்த Cream யும் விட நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும்.   சைனீஸ் , தாய் பெண்கள் இதைத் தான் காலா காலமாக செய்து வருகிறார்கள்.

 

அதை விட புற்றுநோயைக் குணப்படுத்த சோற்றுக்கற்றாழையை பாவிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.  சைனீஸ் பெட்டையளிட்ட கேட்டுப் பாக்க வேணும் அவையின்ர பக்கம் இந்த புற்றுநோய் விவகாரம் எல்லாம் எந்த அளவில் இருக்கு எண்டு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.