Jump to content

அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது

by in செய்திகள்

Nine-suspects-300x169.jpg

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது,

சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில், அதனைச் சுற்றிவளைத்து அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில், 9 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும், 3 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அவிசாவளையில் உள்ள இலத்திரனியல் கடையொன்றில் பணியாற்றுவதாக விசாரணையின் போது தெரிவித்தனர். எனினும், அவர்கள் கூறியது பொய் என்று காவல்துறையின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

9 பேருக்கு விளக்கமறியல்

நேற்றுமுன்தினம் நடந்த குண்டுவெடிப்புகளை அடுத்து கைது செய்யப்பட்ட 24 சந்தேக நபர்களில், 9 பேர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் சாலிய அபேரத்ன முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் மே 6ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Nine-suspects.jpg

வெல்லம்பிட்டிய காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போது, ஷங்ரி- லா விடுதியில் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரிக்குச் சொந்தமான தொழிற்சாலை தமது பகுதிக்குள்ளேயே இருப்பதாகவும், தெமட்டகொடவில் தற்கொலைக் குண்டுதாரி வெடித்த இடமும் தமது பிரிவுக்குள்ளேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் குண்டுதாரியின் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள். அவர்களுக்கு தற்கொலைக் குண்டுதாரிகளுடன் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தப்படுகிறது.

குண்டுதாரியின் மனைவி, சகோதரியும் பலி

ஷங்ரி-லா விடுதியில் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் மனைவியும், சகோதரியுமே, தெமட்டகொட வீட்டில் உயிரிழந்த இரண்டு பெண்களாவர் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

நேற்று நீதிமன்றில் நிறுத்தப்பட்ட 9 சந்தேக நபர்களில் 7 பேர் முஸ்லிம்கள், ஒருவர் சிங்களவர், மற்றவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.net/2019/04/23/news/37611

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவிசாவளையில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் வெளிநாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

ஒன்பது பாகிஸ்தான் நாட்டவர்களும், மூன்று இந்தியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், குறித்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் அவிசாவளை பகுதியில் உள்ள இலத்திரணியல் கடையொன்றில் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளனர். எனினும், அவர்கள் கூறியது பொய் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை என்பது கொழும்புக்கு மிகவும் அருகில் நகரமாகும். அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கினற நகரமாகும்.

இந்நிலையில், குறித்த நகரத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்த பொது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், குறித்த தொழிற்சாலை தொடர்பில் சற்று முன்னர் பாதுகாப்பு தரப்பினர்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என பலரும் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பு உள்ளிட்ட நாட்டில் பல இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 321க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/community/01/212925?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுமாறும் படையினர் அப்ப ஏன் வடக்கில் அதிகபடியா ராணுவம் குவிக்கபடுது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தடுமாறும் படையினர் அப்ப ஏன் வடக்கில் அதிகபடியா ராணுவம் குவிக்கபடுது ?

நாட்டை பிரிக்க இடம் கொடோம் ஆனால் முழுநாட்டையும் தாரை வார்க்க தயார் என சிங்கள அரசு சொல்லுகின்றது

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவிசாவளையில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் வெளிநாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

ஒன்பது பாகிஸ்தான் நாட்டவர்களும், மூன்று இந்தியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், குறித்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது..

ISI பாகிஸ்தான் அரசின் சர்வதேச சதி பிரிவு. போர் காலத்தில் கோத்தாவுக்கு இராணுவ உதவி வழங்கும் போர்வையில் ஊடுருவ ஆரம்பித்தது.

இந்தியாவின் தென் பகுதியில் நிலை எடுத்து அமெரிக்க இந்திய நலங்களுக்கு ஊறு செய்வதே இவர்களின் நோக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Jude said:

ISI பாகிஸ்தான் அரசின் சர்வதேச சதி பிரிவு. போர் காலத்தில் கோத்தாவுக்கு இராணுவ உதவி வழங்கும் போர்வையில் ஊடுருவ ஆரம்பித்தது.

இந்தியாவின் தென் பகுதியில் நிலை எடுத்து அமெரிக்க இந்திய நலங்களுக்கு ஊறு செய்வதே இவர்களின் நோக்கம். 

உருப்படுமா சிறிலங்கா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன்.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.