Jump to content

மனிதரும் கடவுளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிதர் வீ. பரந்தாமன் ( முன்னாள் ஹாட்லிக் கல்லூரித் தமிழாசிரியர்) அவர்களால் எழுதப்பட்ட நூலில் இருந்து சில பகுதிகள்.. முழுவதையும் படிக்க..

http://www.noolaham.net/library/books/02/155/155.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனே கடவுளை ஏற்படுத்தினான்

மனிதன், கால்கள் இரண்டோடு கைகள் இரண்டையும் ஊன்றி விலங்குகளைப் போல் தவழ்ந்து பச்சை இறைச்சியை உண்டும். பிறந்த உடலோடு குகைகளிலும் மரங்களிலும் வாழ்ந்தும், மொழி எதுவும் தெரியாமல் தனித்து இருந்தும் வந்த காலம் ஒன்றுண்டு அந்தக் காலத்தில் அவனுக்குக் கடவுளைப் பற்றிய எண்ணம் இருந்திருக்குமா?

“அனைத்தையும் கடந்ததாய், எல்லாம் வல்லதாய், எல்லாம் நிறைந்ததாய், எங்கும் உறைவதாய், ஒரு கடவுள் இருக்கிறார். அவர், உயிர்களைப் படைத்தார். அவ்வுயிர்கள், தம் ஆணவக்கட்டினின்றும் நீங்கிக் கடவுள் அடியை அடைவதே அவற்றின் பேரின்பம்! அதற்காக ஆன்மாக்கள் கடவுட்குக் கோயில் எழுப்பவும் மலர் பால் பழம் கொண்டு வணங்கவும் வேண்டும்” என்ற கோட்பாட்டில் நூறாயிரத்தில் ஒரு பங்கையாவது நான், முற் குறிப்பிட்ட காலத்து மனிதன் எண்ணியிருப்பானா?

தனக்குப் பால் பழத்தை அறியாதவன்; தனக்கு ஆடை ஒன்றை ஏற்படுத்தாதவன்; தனக்கு ஒரு சிறு குடிசை யாவுதல் காணாதவன்; தனக்கென்று ஒருமொழி இல்லாதவன். மேற்கண்டவாறு எண்ணியிருப்பானா? ஒரு போதும் அவன், கடவுளையோ கோயிலையோ பூசையையோ ஆன்ம ஈடேற்றத்தைப் பற்றியோ எண்ணியிருக்க முடியாது! இது தான் உண்மை.

கடவுள் எண்ணம் இல்லாத ஒரு காலத்திலே மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதிலிருந்து, கடவுள் என்ற எண்ணம் மனிதன் தோன்றிய காலத்திலேயே தோன்றிய தன்று என்றும் இடைக் காலத்திலே அவன், சிறுகச் சிறுக வளர்ந்து கொண்டிருந்த காலத்திலே தான் அவ்வெண்ணம் தோன்றிய தென்றும் தெரிந்து கொள்ளலாம். இதிலிருந்து நாம், அறியக் கூடிய தொன்று உண்டு. அதாவது: கடவுளும் அதன் கோட்பாடுகளும் மனிதனால் ஆக்கப்பட்டனவே!

கடவுள், மனிதனால் ஆக்கப்பட்டது என்று கொள்ளாவிட்டால், நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வெவ்வேறு உருவமுடைய கடவுளும் வேறு வேறான சடங்குகளும் கொள்கைகளும் உண்டாமாறு இல்லை என்க.

அச்சமே கடவுள் கொள்கையின் அடிப்படை!

மனிதன் கடவுளை ஏன் ஏற்படுத்தினான்? காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதன், கொடிய விலங்குகளோடு போரிட்டுக் கொண்டிருந்த காலம். தொலைவிலே சிறு ஒலி, அசைவு ஏற்பட்டாலும் குகையிலும் மரங்களிலும் அஞ்சி நடுங்கிக் கொண்டு ஒளித்திருந்த காலம். இயற்கையின் பல கொடுமைகளையும் தாங்க வேண்டியிருந்த அறிவு வளராத காலம். அக்காலத்தில் மரஞ்செடி கொடி மலை எல்லாவற்றையும் வேரோடு புரட்டி எறியும் பெருங்காற்றை, காய்ந்த மரங்கள் ஒன்றோடொன்று உரோஞ்சுவதனால் ஏற்பட்டுப் பற்றிக் கொண்ட காட்டுத் தீயை, கலங்க வைக்கும் இடியோடும் கண்ணைப் பறிக்கும் மின்னலோடும் சேர்ந்து பெய்யும் விடா மழையை அவன் கண்டான். அவை, அவன் வாழ்க்கையைப் பெரிதும் தாக்கின. எனவே, அஞ்சினான். அவையெல்லாம் தங்களிலும் வலிமை மிக்க மனிதர்கள் (கடவுள்கள்) மறைந்து நின்று செய்யும் கடிய செயல்கள் என நம்பினான். கையெடுத்து வணங்கினான். இனாமாக ஏதும் தருவதாக வாக்களித்தான். அவற்றைப் போற்றினான், புகழ்ந்தான். இப்படியே இக் கொள்கை, அச்சம் காரணமாகவும் அறியாமை காரணமாகவும் வளரலாயிற்று.

பண்டு: இயற்கை வணக்கம் ஏற்பட்டதற்கும் கடவுள்கள் பயங்கர உருவங்களில் படைக்கப்பட்டமைக்கும் முகில்களை ஊர்தி என்றும் இடியைக் கடவுள், கோபங் கொண்டு போருக்கழைக்கும் குரல் என்றும் மின்னலை வாள் வீச்சென்றும் இப்படிப்பட்ட கற்பனைப் புராணங்கள் எழுந்தமைக்கும் காரணம்: அச்சமே என அறிவுடையோர் தெரிந்து கொள்வர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் திருத்தப்பட்டார்

மனிதனுக்கு அறிவு வளர வளர நல்ல எண்ணங்கள் வளர நாகரிக வளர்ச்சிக் கேற்ப கடவுள்களும் வளர்ந்து வந்துள்ளன. மனிதன், பிறருக்குத் தீங்கு செய்யாத நல்லவனாக இருக்க ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணினானோ, அப்படியே கடவுளைத் திருத்தினான். கடவுள்களின் பயங்கர உருவங்களை மாற்றினான். தங்கள் நாகரிகத்துக் கேற்றவாறு கடவுள்களுக்கும் உடை அணிவித்தான். நல்ல அன்பு அருள் முதலியவற்றைக் கடவுளின் முதன்மைக் குணம் எனக் கூறினான். இப்படிக் கடவுளைத் திருத்தும் முயற்சியில் மனிதரில் ஓரளவு அறிவு பெற்றோர் ஈடுபட்டனர். அறிவிற் குறைந்தவர்கள் தாங்கள் படைத்த கடவுளுக்குத் தாங்களே அஞ்சினார்கள். பழைய காலப்படியே எல்லாம் நடக்க வேண்டும், ஆடு மாடு கோழி முதலிய உயிர்ப்பலிகளைக் கொடுக்க வேண்டும். இல்லாது விட்டால் கடவுள், கொடிய அம்மை நோயை, கடும் புயலை, பெருவெள்ளத்தை விட்டுத் தண்டிப்பார் எனக் கூறித் தங்கள் கொள்கையினின்றும் வழுவாதிருந்தனர். இருந்து வருகிறார்கள். இதுதான் கடவுட் கொள்கை வளர்ந்த வரலாற்றின் சுருக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாத்திகம் அல்லது பகுத்தறிவு

காற்றையும் மழையையும் தீயையும் கண்டு அஞ்சி அவற்றைக் கையெடுத்து வணங்கிய காலம் போலவே என்றும் மனிதன், இருந்திருந்தால், அவற்றைப் பயன்படுத்தவும் எதிர்த்து முன்னேறவும் வியக்கத்தக்க மாறுதல்கள் அடையவும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கவும் முடிந்திருக்குமா?

அம்பு வில்லு முதல் அதிரவைக்கும் பீரங்கி வரை ஏர் முதல் எந்திரக் கலப்பை வரை - கட்டுமரம் முதல் பெருங் கப்பல்கள் வரை - மாட்டுவண்டி முதல் விரைந்து செல்லும் றொக்கெட்டு வரை, எவ்வளவு மாறுதல்கள்! இப்பேர்ப்பட்ட மாறுதல்களை அடையக் காரணந்தான் என்ன? மனிதன், தனது பகுத்தறிவை அச்சமின்றி ஆராய்ச்சித் துறையில் எல்லாவற்றிலும் பயன்படுத்தியதுதான், இப்பெரும் வளர்ச்சிக்குக் காரணமாயிற்று!

பொருள்களின் உண்மையான இயல்பையும் அவற்றின் இயக்கங்களையும் கண்டறிய முற்பட்டதன் விளைவே, இன்று உலகெங்கும் நீக்கமறப் பிணைந்து நிற்கும் அறிவியல் (விஞ்ஞானம்) ஆகும்.

அறிவியலுக்கு வழிகோலிய அன்றைய அறிஞர்கள்தாம், நாத்திகர்கள் என்றும் கடவுள் நிந்தனைக்காரர் என்றும் தூற்றப்பட்டார்கள். கல்லறையிலும் கடுஞ்சிறையிலும் அடைக்கப்பட்டார்கள். நாடு கடத்தப்பட்டார்கள். நஞ்சூட்டியும் சித்திரவதை செய்தும் கொல்லப்பட்டார்கள்.

மன்னர்கள் மதகுருமார் கைகளிலும் மதகுருமார், அறியாமையின் பிடியிலும் இருந்து அறிவுக் கருத்துக்களை வெளியிட்டவர்களை வதைத்தார்கள். கொன்றார்கள். அப்பப்பா! அறிஞர்கள் பட்ட தொல்லைகள் தாம் எத்தனை? ஆனால், பல இன்னல்களுக்கும் பழமொழிகளுக்கும் ஆளாகியும், தாம் கொண்ட கொள்கையினின்றும் பகுத்தறிவினின்றும் மாறினார்கள். இல்லை. அவர்கள் அழிக்கப்பட்டாலும் அவர்களின் அறிவின் முடிவான கருத்தை அழிக்க மதகுருமாரால் முடியவில்லை. உண்மை என்றும் அழியாது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டார்கள். பல ஆண்டுகள் கடந்த பின்! எனவே, மதகுருமார்கள் தங்கள் கடவுளையும் கொள்கையையும் காப்பாற்ற, தங்கள் கொள்கைகளிலே மாற்றஞ் செய்ய வேண்டியதாயிற்று. அதனால், தங்கள் கடவுளுகளுக்கும் செய்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் புதுப் புது விளக்கங்கள் அளிக்கலாயினர். பாவம்! முற்றாக ஒருநாள் அழிந்துவிடும் இம் மூடகொள்கையைக் கொண்டு இவர்கள் எத்தனை நாள்தான் பிழைக்கப் போகிறார்கள்?

அறிவின் முதிர்ச்சிதான், தூய தெளிந்த உண்மையான பகுத்தறிவின் கொள்கைதான் நாத்திகம். நாத்திகம், எதையும் ஏன்? எப்படி? என்று ஆராய்ந்து, மனம் ஏற்றுக்கொண்டதை ஏற்றுக்கொள் என்கிறது. “அறிவு, ஒரு எல்லைக்குள் அடங்குவதில்லை அது சுதந்திரமாக எங்கும் எதிலும் சென்று தனது ஆற்றலைப் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்” என்று நாத்திகம் கூறுகிறது.

கடவுளின் மேல் கோயிலின் மேல் அதன் கொள்கை மேல் மதகுருமாரின் மேல் ஆராய்ச்சிகூடாது. வேதப் புத்தகம் கூறுவதையும் மதகுருமார் சொல்வதையும் அப்படியே நம்பு என்று மதங்கள் போதிக்கின்றன. ஆராய்ச்சி கூடாதென்றால், மூளை இல்லாமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்? அல்லது உங்கள் கடவுள் ஆராயும் எண்ணத்தை யாவுதல் நாத்திகர்களின் மூளையிலிருந்து எடுத்திருக்க வேண்டும்!

நாம், ஆராய்ந்து பார்க்கக் கூடாத அளவு கொள்கையோடு ஒரு கடவுளும் வேதப் புத்தகமும் ஒளிந்து நின்று கொண்டு நம் மீது ஆதிக்கம், அடக்குமுறை செலுத்துவ தென்றால், அந்தக் கடவுளும் வேத நூலும் நமக்கு எதற்கு?

மதகுருமார் சிந்தக்கவும் முடிவு சொல்லவும் உரிமை உண்டு. நமக்கு மட்டும் சிந்திக்கவும் சிந்தித்ததின் விளைவால் மனதிலே பட்ட உண்மையான முடிவை வெளிப்படுத்தவும் உரிமை இல்லையா?

இவ்வாறு உரிமைப்போர் - அறிவுப்போர் தொடுத்து வருவது தான் நாத்திகம் அல்லது பகுத்தறிவு!

நாத்திகர்களின் கொள்கை

இயற்கை, மனிதனை ஆக்கிவிட்டது. இவ்வுலகில் பிறந்த நமக்கு இவ்வுலகின் தோற்றத்தைப் பற்றி எதுவும் தெரியாது. தெரிய வேண்டிய தேவையும் இல்லை! ஐந்து பருப்பொருட்களினால் (ஐம்பூதங்கள்) ஏற்பட்ட பொருள்களின் இயல்பையும் இயக்கங்களையும் உள்ளவாறு அறிந்து அவற்றைப் பயன்படுத்தி நாம், முன்னேறவும் இன்பம் அடையவும் தெரிந்து கொண்டால் போதும்!

கடவுள் என்ற எதுவும் இல்லை. அது மனிதனின் பொருளற்ற கற்பனை. அப்படி ஒன்று இருப்பதாக நிறுவச் சான்றுகளும் இல்லை.

மதம், குருமார்களின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்ட கொள்கை. மனிதன் இன்பமாய் வாழ்வதற்கு மதம் தேவையுமில்லை.

நாத்திகர்கள் இல்வாழ்க்கையிலும் இவ்வுலக இன்பங்களிலும் பெரிதும் நம்பிக்கை உடையவர்கள்.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது” - என்ற உயரிய நோக்கை உடையவர்கள். பொய், களவு, கள்ளுண்ணல், சூது, அறமில்லாக் காமம் முதலியவற்றை நீக்கி பிறருக்குத் தீங்கில்லாத வகையில் அன்பாகவும் பண்பாகவும் நடந்து உதவி செய்வதே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் கூறுபவர்கள்.

எனவே, நாத்திகத்தைக் கண்டு யாரும் அஞ்சத் தேவை இல்லை. அதன் விரிவைத் தெரிந்து கொண்டு ஆராய்ந்து சரியென்று கண்டால் ஏற்றுக் கொண்டு நடப்பதே அறிவுடைமையாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளா?

மத வாதி: உலகம் யாரால் ஆக்கப்பட்டது?

பகுத்தறிவு வாதி: உலகம் ஆக்கப்பட்டது என்பதை நீ, முதலில் நீரூபிப்பாயா? நண்பா! உலகம் ஆக்கப்பட்டது என்று நிறுவிய பின் அல்லவோ, ‘யாரால் ஆக்கப்பட்டது’ என்ற வினாவை நீ எழுப்பலாம்!

ம : அப்போ, உலகம் ஆக்கப்படவில்லை என்கிறாயா?

ப : ஆக்கப்பட்டதோ இல்லையோ அது எனக்குந் தெரியாது உனக்குந் தெரியாது யாருக்குமே தெரியாது. எனவே, தெரியாத பொருள் பற்றி நாம் பேசிப் பயனில்லை.

ம : ஏன், யாருக்குந் தெரியா தென்று அவ்வளவு அறிதியிட்டுக் கூறுகின்றாய்?

ப : காரணத்தோடுதான் கூறுகிறேன், இந்த உலகத்தின் மேலே பிறந்த நமக்கு, இந்த உலகத்தின் தோற்றம் எப்படியப்பா தெரிந்திருக்க முடியும்? உலகம் முந்தியது நாம் பிந்தியவர்கள்.

ம : அது சரிதான். ஆனால் நாம் ஒரு கட்டடத்தைப் பார்க்கிறோம். அதைக் கொண்டு அக்கட்டடம் ஒருவரால் ஆக்கப்பட்டது என்று அனுமானிக்கிறோம் அல்லவா? அது போல், இந்த உலகத்தையும் ஒருவர் ஆக்கியிருக்கிறார் என்று ஏன் அனுமானிக்கக்கூடாது?

ப: நல்ல கேள்விதான்! இங்கே பார். வேறு கட்டடங்களை மனிதர்கள் கட்டுவதை நாம், கண்ணால் முன்னமே பார்த்திருக்கிறோம் அதைக் கொண்டு தான் இக்கட்டிடத்தையும் ஒருவர் கட்டியிருக்க வேண்டும் என்று

அனுமானிக்கிறோம். ஆனால், வேறு எந்த உலகத்தை யார் செய்ததைக் கண்டு இவ்வுலகமும் ஒருவரால் செய்யப்பட்டது என்று அனுமானிப்பது? வேறு உலகம் ஒருவரால் செய்யப்படுவதை நாம் கண்ணால் பார்க்க வில்லையே!

ம : உன் அறிவுத் தெளிவைக் கண்டு மெச்சுகிறேன். இன்னுமொரு ஐயம், கடவுள் தான் இவ்வுலகத்தை உண்டாக்கினார் என்று சொல்கிறார்களே, அதைத் தெளியவைக்க வேண்டுகிறேன்.

ப : நல்லது சொல்கிறேன் கேள், இவ்வுலகத்தைக் கடவுள் உண்டாக்கினார் என்றால், கடவுளை உண்டாக்கியவர் யார்?

ம : கடவுளை ஒருவரும் உண்டாக்கவில்லை. அவர், தொடக்க மின்றி - அனாதியாக இருக்கிறார் என்கிறார்கள்.

ப: இவ்வுலகம் கண்ணுக்குத் தெரியாத ஒருவரால் - கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று அனுமானித்து பிறகு அக் கடவுளை ஒருவரும் உண்டாக்கவில்லை. என்று முடிவு கட்டுவதிலும் பார்க்க இவ்வுலகமே யாராலும் உண்டாக்கப்படவில்லை. இது தொடக்கமின்றி (அனாதியாக) இருக்கிறது என்று கூறுவது அறிவுடைமை யாகும் அல்லவா? இன்னுமொன்று, கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என நிரூபித்த பின்னல்லவோ கடவுள்தான் இவ்வுலகத்தை உண்டாக்கிறார் என்று கூற வேண்டும். கடவுள் இருக்கிறார்

என்று அவர்கள், முதலில் நிரூபிப்பார்களா?

ம : அப்போ, கடவுள் இல்லை என்பது தான் உங்கள் முடிந்த முடிவா?

ப : கடவுள் இருக்கிறார் என்றதற்கு ஆத்திகர்கள் இதுவரை சொன்ன எல்லாவற்றையும் பொய்யும் பிழையும் என நிரூபித்து விட்டோம். எங்கள் அறிவாலும் ஆராய்ந்து பார்த்தோம். அப்படி ஒரு கடவுள் இருக்கிறார் என்று சொல்ல எந்த வகையான நியாயமான சான்றும் கிடைக்கவில்லை. எனவே, மனதில் இல்லை என்று பட்டதை இல்லை என்கிறோம், இதில் தவறேனும் உண்டா?

ம : கடவுள் இல்லை என்பதை எப்படி நீங்கள் ஆராய்ந்தீர்கள்?

ப : இல்லாததை இல்லை என்று சொல்ல அப்படி ஒன்றும் அதிக ஆராய்ச்சி தேவை இல்லை நண்பா, என்றாலும் சொல்கிறேன் கேள்! நாம், ஒரு பொருளை இருக்கிறது என்று ஒப்புக் கொள்வதாய் இருந்தால், அந்தப் பொருள் எங்கள் ஐம்புலன்களில் ஒன்றிலாவது படவேண்டும் அதாவது அப்பொருள் எங்கள்

கண்ணில் தோன்ற வேண்டும், அல்லது காதில் ஒலிக்க வேண்டும், அல்லது மூக்கில் மணக்க வேண்டும், அல்லது நாவில் சுவைக்க வேண்டும். அல்லது உடம்பில் உறுத்த (பட) வேண்டும், இந்த ஐந்து வகையில் ஒன்றிலாவது புலனுணர்ச்சியைத் தராத ஒரு பொருள். இருப்பதாக நாம் நம்புகிறோமா? இல்லை! சிந்தித்துப்பார் எனவே தான் ஐம்புலனால் அறிய முடியாத கடவுள் என்றொன்று இல்லை என்கிறோம்.

ம : இந்த உலகத்தையும் பொருள்களையும் உயிர்களையும் பற்றி உங்கள் கருத்தைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுகிறேன்.

ப: ஐம்பெரும் பருப்பொருட்களின் (நிலம், நீர், தீ, காற்று, வான்) கூட்டினால் இவ்வுலகப் பொருட்களும் உயிர்களும் தோன்றுகின்றன. இயற்கையின் ஒரு ஒழுங்கின் படி செயல் படுகின்றன பின், ருப்பொருட்களின் பிரிவால் அழிகின்றன.

உடம்பின் இயக்கத்தில் இருந்து பிறக்கும் ஒரு ஆற்றலே உயிர். இவ்வுடம்பின் இயக்கம் நிற்க ஆற்றலும் நின்றுவிடும்.

மனிதன் பிறக்கிறான்! இறக்கிறான். இந்த இடைக் காலத்தில் அவன் இன்பமாய் வாழ வேண்டும். எனவே அவன் தன்னுடைய வாழ்க்கையைப் பிறருக்குத் தீங்கில்லாத படிக்குத் திட்டப்படுத்தி ஒழுங்காக அமைத்துக் கொண்டு தானும் இன்பத்தைப் பெற்று மற்றவரும் இன்பம் பெறுதற்கு வேண்டிய உதவியை அன்போடும் பண்போடும் செய்து வாழ வேண்டும்.

ம : நண்பா! நீ சொன்னவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். இன்று தொடக்கம் நானுமொரு நாத்திகனாய் மாறி விட்டேன். இனி கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாமல் உழைப்பதே என் வேலை. இன்னும் என் மனத்துள் ஐயங்கள் எழுந்தால் உன்னை நாடுகிறேன் போய் வருகிறேன் வணக்கம்.

ப : வணக்கம் நண்பா, சென்று வா! வென்று வா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.