Jump to content

பிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.
#CNN - அமெரிக்கா.

இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம்.

#BFM - பிரான்ஸ்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை.

#சிறீலங்கா அரசு.

சொல்வதற்கு ஒன்றுமில்லை..

https://www.facebook.com/parani.krishnarajani

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் சொல்லியவர்கள்தான் புலிகள் இயக்கத்தை இல்லாமல் ஆக்கி தமிழர்களை அநாதரவாக்கினார்கள். எனவே, அதிகம் குளிர்ச்சி அடையவேண்டாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இப்படி எல்லாம் சொல்லியவர்கள்தான் புலிகள் இயக்கத்தை இல்லாமல் ஆக்கி தமிழர்களை அநாதரவாக்கினார்கள். எனவே, அதிகம் குளிர்ச்சி அடையவேண்டாம்!

 

இது குளிச்சி  அடைவதற்கல்ல ஐயா

நாம   பட்டதை  அவர்களும் பட  தொடங்குகிறார்கள்  என்ற அற்ப  சந்தோசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

 

இது குளிச்சி  அடைவதற்கல்ல ஐயா

நாம   பட்டதை  அவர்களும் பட  தொடங்குகிறார்கள்  என்ற அற்ப  சந்தோசம்

இதில் சந்தோஷப்படுவது அற்பமாகத்தான் உள்ளது.

முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாவதால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடாது. இரு இனங்களையும் விழுங்கி ஏப்பம் விடத்தான் சிங்களம் தன்னைத் தயார்படுத்தியுள்ளது.

வாய்க்குள் முன்னர் போன தமிழர்கள் வயிற்றுக்குள் இருந்து அடுத்ததாக வாய்க்குள் வந்துவிழும் முஸ்லிம்களைப் பார்த்து சந்தோஷப்படுவது செரிமானம் வரைதான் நிலைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இதில் சந்தோஷப்படுவது அற்பமாகத்தான் உள்ளது.

முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாவதால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடாது. இரு இனங்களையும் விழுங்கி ஏப்பம் விடத்தான் சிங்களம் தன்னைத் தயார்படுத்தியுள்ளது.

வாய்க்குள் முன்னர் போன தமிழர்கள் வயிற்றுக்குள் இருந்து அடுத்ததாக வாய்க்குள் வந்துவிழும் முஸ்லிம்களைப் பார்த்து சந்தோஷப்படுவது செரிமானம் வரைதான் நிலைக்கும்

வாய்க்குள் தள்ளி  விட்டவனும்  அதே  வாய்க்குள்  வரும் போது வருமே

அதே  நிலை  தான்

தமிழருக்கு  நன்றாக  தெரியும் இது  சிங்களத்துக்கே செரிமானம்  என்று

ஆனால் சில  மதம் கொண்டவர்களுக்கு  புரியவில்லை

புரியவும் போவதில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாவதால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடாது.

அப்போ நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள் உரிமைகள் கிடைக்குமென்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்போ நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள் உரிமைகள் கிடைக்குமென்று

ஒற்றை வரியை பிரித்தெடுத்துக் கேட்டால் பதில் “தெரியவில்லை” என்பதுதான்.

எனது கருத்தில் சொல்ல வந்தது என்னவென்றால் முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாகும்போது மகிழ்ச்சியை காட்டுவது தமிழர்களுக்குள் புரையோடியிருக்கும் முஸ்லிம் இனவெறுப்பின் வெளித்தோற்றம்தான். அதற்கு ஒவ்வொருவருக்கும் பல காரணங்கள் இருக்கும். இலங்கை முஸ்லிம்களோடு பழகாமல், அவர்களுடன் நண்பர்களாகக்கூட இல்லாமல் இருக்கும் எனக்குள்ளும் ஏதோ ஒரு இனவெறுப்பு ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இந்தத் தாக்குதல்களை நடாத்தியவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய நெருக்கடியைத்தான் கொடுத்திருக்கின்றார்கள். அந்த நெருக்கடி தமிழர்களுக்கு நன்மைகளைப் பயக்காது. அதாவது சிங்களவர்கள் தமிழர்களை திடீரென்று நன்றாக நடத்தப்போவதில்லை. கிழக்கில் வசிக்கும் உங்களுக்கு எந்தவகையான மாற்றங்கள் தெரிகின்றது என்பதை சில வாரங்களில் சொன்னால் நாடு எந்தத் திசையில் போகின்றது என்பதை ஓரளவு அனுமானிக்கலாம்.

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.
#CNN - அமெரிக்கா.

ஆயுதங்கள் மெளனிக்கும் வரை இலங்கையின் எந்தப்பாகத்திலும் தாக்குதல் நடாத்தக்கூடிய திறன் புலிகளிடம் இருந்தது. அதுவும் பொதுமக்கள் மீதான தாக்குதலை தென்னிலங்கையில் நடத்துவது என்பது புலிகளை பொறுத்தவரை மிக இலகுவான விடயமாகவே இருந்தது. ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.
 

புலிகளிடம் இறுதிவரை விமானங்கள் இருந்தன. பெருந்தொகை மக்கள் கூடும் இடங்களின் மீது தென்னிலங்கையில் தாக்குதல் நடாத்துவது ஒன்றும் புலிகளுக்கு பெரிய விடயமே அல்ல.
ஆனாலும் அவர்கள் அதை செய்யவில்லை. தம் எதிரியின் இலக்கை மட்டுமே தேர்வு செய்து, மக்களின் இழப்பை தவிர்ப்பதற்காக அநேக சமயங்களில் பெரும்விலை செலுத்தியவர்கள் புலிகள். இறுதிவரை தம் கொள்கையில் வழுவாது , விடுதலைப்போரை வழிநடத்தி மெளனித்து, வித்தானவர்கள் புலிகள்.


அன்று பயங்கரவாதம் என்னும் வரையறைக்குள் புலிகளை புகுத்தி , பல தசாப்தங்களாக தமிழர்களின். விடுதலைக்காக போராடிய விடுதலை அமைப்பை சர்வதேச, இந்திய கூட்டுடன் இலங்கை அரசால் அழிக்க முடிந்தது.

இன்று, புலிகளை அழிக்க முண்டு கொடுத்த அதே சர்வதேசம் புலிகளை புரிந்துகொண்டிருக்கின்றது.

பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை நேற்று சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

புலிகள் கோலோச்சிய காலத்தில்கூட  தென்னிலங்கை இவ்வளவு அச்சத்துடன் இருந்தது கிடையாது.

தமிழர்களுக்கான உரிமைகளை மட்டுமே புலிகளும், தமிழர்களாகிய நாங்களும் கேட்டோம். அப்பாவிகளின் உயிரை அல்ல. அன்று விதைத்ததை இன்று இலங்கை அறுவடை செய்கின்றது. யார் பயங்கரவாதிகள் என்பதை உலகம் புரிந்துகொள்ளும்.!

ஒரு நண்பர் வாட்சப் மூலம் அனுப்பிக் கிடைத்த இடுகை. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சந்தர்ப்பவாத உளறல். இதே நாடுகள் எமது இனத்தை அழிக்க கூட்டுச் சேர்ந்து குண்டு போட்ட போது எத்தனை தேவாலயங்கள் அழிந்தன.. எந்தனை தமிழ் பேசும் கிறிஸ்தவ தமிழ் மக்கள் அழிந்தார்கள்.

அப்போதெல்லாம்.. அந்த அப்பாவி மக்களும்.. இவர்களுக்குப் பயங்கரவாதிகளாகவே தென்பட்டனர்.

நவாலி தேலாவயம் மீது குண்டு போட்டுவிட்டு பயங்கரவாதிகளின் பெரிய முகாம் தகர்க்கப்பட்டது என்று கதிர்காமரை வைத்துப் பொய் சொன்னவர்கள்.. சந்திரிக்கா அம்மையாரும்.. ரத்வத்தையும். 

சரி இப்பதான் உண்மையை உணர்ந்தீர்கள் என்றால்.. ஏன் விடுதலைப்புலிகள் மீது தடை. ஏன் முன்னாள் போராளிகளுக்கு சிறையும் சமூகத்தில் நெருக்குவாரங்களும்..???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்போ நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள் உரிமைகள் கிடைக்குமென்று

முன்பு சிறு வயதில் வாசித்தது ஒன்று ஞாபகம் வருகிறது .

பெரிய கப்பல் ஒன்று போய் கொண்டிருக்கு அதில் எதோ பழுது வந்து விட்டது இன்னும் அரை  மணி நேரத்தில் அது எதோ ஒரு நிலையாக இருக்கும் இரு பெரிய பகுதியுடன் மோதப் போகின்றது .

எனக்கு ஒரே குழப்பம். அரை மணித்தியாலத்தில் மொத்தப் போகின்றது என்றால்  ஏன் இவங்கள் பிரேக் போட்டு நிப்பாட்ட வேண்டியது தானே என்று .

எங்களுக்கும் அரை மணித்தியாலம் அல்லது சற்றுக்  கூடுதலான ஒரு நேரத்தில் கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்கக் இருக்கிறது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை .

இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டியதொன்று என்பதில் கொள்கையளவில் எல்லாரிடமுமே ஒரு புரிந்துணர்வு இருப்பதை  நாங்கள் உணர்ந்து கொள்ளலாம் .நிபந்தனைகள் எல்லாம் ஒருமித்து வரும் போது இது சாத்தியமாகின்றது.  இதற்கான உறுதியான அத்திவாரம் 83 இலிருந்து ௦9 வரை அந்த உத்தமர்கள் இட்டு விட்டு தான் போயிருக்கிறார்கள்.

இரட்டைக் கோபுரம்,  2019  ஈஸ்டர் என்பதெல்லாம் நிபந்தனைகளை ஒருமிக்க வைக்கும் கூட்டு செயல் பாடுகளின் பகுதிகளே . இன்றைய திகதியில் இலகுவாக தீர்த்து வைத்திருக்க வேண்டிய தமிழரின் பிரச்சனையை  தீர்க்காமல் விட்டு நாட்டைஇராணுவ மையப்படுத்தி வைத்திருப்பதுவும் ஈஸ்டர் 2019 க்கு ஒரு  காரணி என இவர்கள் உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டிருப்பதே இவர்களின் இந்த கூற்றுக்கு காரணம்.   

 நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் செயலிழக்கமால் நம்பிக்கையுடன் செய்ய வேண்டியவற்றை செய்வது தான்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

 

சரி இப்பதான் உண்மையை உணர்ந்தீர்கள் என்றால்.. ஏன் விடுதலைப்புலிகள் மீது தடை. ஏன் முன்னாள் போராளிகளுக்கு சிறையும் சமூகத்தில் நெருக்குவாரங்களும்..???! 

இதெல்லாம் ஓரிரு நாட்களில் செய்யக் கூடிய விடயங்கள் என்று உண்மையிலேயேயே நம்புகிறீர்களா.

தனது சொந்த நலன்களை பாதுகாத்தல் , பொது நியாயங்களை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு etc  என்று சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று முரண்படும் சந்தர்ப்பங்களை கையாள வேண்டிய நிலைமைகள் இருப்பதனை நாங்களும் புரிந்து கொள்ள  வேண்டும். 

சம்பந்தப்பட்டவர்கள் ( வர்கள், நாங்கள் , நீங்கள் ) எல்லோரும் முரண்பாடுகளை குறைக்கும் வகையில் செயல்படும் வேளையில் இதன் சாத்தியப்பாட்டிற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் .

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

கிழக்கில் வசிக்கும் உங்களுக்கு எந்தவகையான மாற்றங்கள் தெரிகின்றது என்பதை சில வாரங்களில் சொன்னால் நாடு எந்தத் திசையில் போகின்றது என்பதை ஓரளவு அனுமானிக்கலாம்.

பல ஆண்டுகளுக்கு அதாவது எனது அப்பாக்களுடன் வாழ்ந்த அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இனவாதம் இல்லை தமிழர்களுடன் சேர்ந்து வாழப்பழகியவர்கள் ஆனால் தற்போது அவர்களுக்கு தனிய தனிய என்பதை விட ஊர் ஊருக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளது கரையோர பிரதேசம் எங்களுக்கு வேண்டும் அல்லது ஒட்டு மொத்த கிழக்கு மாகாணம் எக்காரணம் கொண்டும் வட்க்கு கிழக்கும்  இணையக்கூடாது கிழக்கில்  இருக்கும் தமிழர்களிடம் தாங்கள் கையேந்தக்கூடாது  என்றும் நினைத்து வாழ்கிறார்கள் வாயால் ஒற்றுமையென்று சொல்லிவிட்டு மனதால் அது சரிப்பட்டு வராது என்று வாழ்கிறார்கள்

 

சின்ன உதாரணம் கல்முனை  தமிழ் பிரதேச செயல்கத்தை தரம் உயர்த்தகூடாதெனவும் அதற்கு ஆதரவு கேட்டு தமிழர்கள் பேரணி நடத்துவதற்கு தடையுத்தரவும் (நீதிமன்றத்தில்) வழக்கும் போட்டவர்கள் இவர்களை நம்புவர்கள் இன்று யாரும் இல்லை அவர்கள் அவர்களது பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.