Jump to content

தற்கொலைதாரிகளின் தந்தைக்கு மகிந்தவுடன் நெருக்கமான உறவு இருந்தது அம்பலம்!


Recommended Posts

கொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகருக்கு மகிந்தவுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

பிரபல வர்த்தகரான அல்காஜ் மொகமட் யூசுப் இப்ராஹிம் (வயது 65) என்பவரின் மகன்களான இம்சாத் அகமட் இப்ராஹிம் (வயது 33), இல்காம் அகமட் இப்ராஹிம் (வயது31) இருவரும் கிங்ஸ்பெரி மற்றும் சினமன்ட் கிரான்ட் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலை நடத்தியவர்களாவர். அத்துடன் இவரது இளைய புதல்வரான இஸ்மயில் அகமட் இப்ராஹிம் என்பவரை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து தெமட்டகொட வீடொன்றில் நடத்தப்பட்ட தேடுதலின்போது குறித்த வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் இவருடன் சேர்ந்து இவரது மற்றொரு மகனான லியாஸ் அகமட் இப்ராஹிம் (வயது 30) என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

தெமட்டகொடவிலுள்ள குறித்த வர்த்தகரின் ஆடம்பர மாளிகையை சோதனையிடசென்றபோது அங்கு இரண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. இதில் முதலாவது குண்டுவெடிப்பில் மூன்று பொலிஸார் கொல்லப்பட்டனர்.

அடுத்து ஆடம்பர மாளிகையின் மேல்மாடியில் பொலிஸார் தேடுதல் நடத்தசென்றவேளை சில நபர்கள் தானியங்கிமூலம் குண்டை வெடிக்கவைத்துள்ளனர். இதேவேளை பிறிதொரு பொலிஸ்குழு தேடுதலை மேற்கொண்டபோது மற்றொரு குண்டுவெடிப்பு கேட்டது. இதில் பாத்திமா ஜிப்றி (வயது 25) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.

இந்த இரண்டு குண்டுவெடிப்புக்களும் தானியங்கி மூலமே நடத்தப்பட்டுள்ளன. அத்துடன் இந்த வீட்டில் குண்டுவெடிப்பு நடந்தவேளை சந்தேகத்துக்கிடமாக நின்ற மூன்றுபேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட வர்த்தகரான அல்காஜ் யூசுப் மொகமட் இப்ராஹிம் கடந்த பொதுத்தேர்தலில் ஜே.வி.பியின் கட்சியில் போட்டியிட்டதாக விமல் வீரவன்ச நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இவருக்கு தொடர்பிருப்பதாக நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.

அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் குறித்த வர்த்தகர் கலந்துரையாடுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அது எட்டுவருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதென்றும் வர்த்தககுழு ஒன்றுடன் அமைச்சர் றிசாத் சந்தித்தவேளை அந்த புகைப்படம் எடுக்கப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/118489?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

குற்றவாளிகள் அரசியல் அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டார்களா?  உண்மையை ஆராய்ந்து வருகின்றேன் ; கபீர் ஹாசீம்

அண்மையில் வனாத்தவில்லு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ பின்னர் அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. 

kabeer.jpg

அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவரில் ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. 

ஆனால் இதன் உண்மைத்தன்மை குறித்து இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்பதுடன் தொடர்ச்சியாக இதுபற்றி ஆராய்ந்து வருகின்றேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மாவனெல்லை பகுதியில் அண்மையில் வன்முறை சம்பவமொன்று பதிவாகியிருந்தது. அதன் பாரதூரத்தன்மையை அறிந்துகொண்டு அந்த விடயம் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தேன். அத்தோடு அந்த விசாரணைகளுக்கு எம்முடைய முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தோம்.

அதேபோன்று வனாத்தவில்லு பிரதேசத்தில் வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திலும் அது குறித்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தோம். இந்நிலையில் வனாத்தவில்லு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ பின்னர் அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. 

அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவரில் ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் இதன் உண்மைத்தன்மை குறித்து இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்பதுடன் தொடர்ச்சியாக இதுபற்றி ஆராய்ந்து வருகின்றேன் என்று குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/54528

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.