Jump to content

சவுதி அரேபியாவில் 37 பயங்கரவாதிகளுக்கு, தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Saudi-Arabia.jpg

சவுதி அரேபியாவில் 37 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சவுதி அரேபியாவில் பயங்கரவாத வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அந்தவகையில் குறித்த 37 பேருக்கும் தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவுதி அரேபியா நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயங்கரவாத சித்தாந்தத்தை பரப்பியும், பயங்கரவாதிகளாக செயற்பட்டும் வந்த உள்நாட்டினர் 37 பேருக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று தலைகளை வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

http://athavannews.com/சவுதி-அரேபியாவில்-37-பயங்க/

Link to comment
Share on other sites

On 4/24/2019 at 5:46 AM, தமிழ் சிறி said:

Saudi-Arabia.jpg

சவுதி அரேபியாவில் 37 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

37 பேர்களிலும் இவர் தண்டனைபெறும் முதலாவது ஆளாக இருக்கவேண்டும். அதனால்தான் நிலத்தில் ஒரு துளி இரத்தத்தையும் காணவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

37 பேர்களிலும் இவர் தண்டனைபெறும் முதலாவது ஆளாக இருக்கவேண்டும். அதனால்தான் நிலத்தில் ஒரு துளி இரத்தத்தையும் காணவில்லை. 

இல்லை. பக்கத்தில், தயாராக பிணியாளர் வண்டி, பிணவண்டி, இடத்தினை உடனே சுத்தமாக்குவோர் தயாராக இருப்பர்.

Link to comment
Share on other sites

இப்படிப்பட்ட தண்டனைகள் காட்டுமிராண்டி தனமானவை. முகம்பது நபி என்ற காட்டுமிராண்டி எப்போதோ கூறிய ஷரியா சட்டத்தை அமுல்படுத்தும் முஸ்லீம் மதவாதிகளும் பயங்கரவாத‍த்தை தான் விதைக்கின்றனர். இதை நிறைவேற்றுபவர்களுக்கும் அந்த கொல்லப்படும் குற்றவாளிக்கும் வித்தியாசம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

37 பேர்களிலும் இவர் தண்டனைபெறும் முதலாவது ஆளாக இருக்கவேண்டும். அதனால்தான் நிலத்தில் ஒரு துளி இரத்தத்தையும் காணவில்லை. 

 

5 hours ago, Nathamuni said:

இல்லை. பக்கத்தில், தயாராக பிணியாளர் வண்டி, பிணவண்டி, இடத்தினை உடனே சுத்தமாக்குவோர் தயாராக இருப்பர்.

பாஞ்ச்  அண்ணை, நிலத்தை பணியாளர் கழுவி இருந்தால்,
அந்த இடம்.. ஈரமாக இருந்திருக்க வேண்டுமே.. என்று கேட்பீர்கள்.
சவூதி அரேபியா.... வெக்கைக்கு, நிலம் உடனே காய்ந்து விடும் என்பதால், 
நிலத்தில்.. ஈரம் இருக்காது, அண்ணை.  😄

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

 

பாஞ்ச்  அண்ணை, நிலத்தை பணியாளர் கழுவி இருந்தால்,
அந்த இடம்.. ஈரமாக இருந்திருக்க வேண்டுமே.. என்று கேட்பீர்கள்.
சவூதி அரேபியா.... வெக்கைக்கு, நிலம் உடனே காய்ந்து விடும் என்பதால், 
நிலத்தில்.. ஈரம் இருக்காது, அண்ணை.  😄

அரேபியர்கள் பலரின் நெஞ்சில் ஈரம் இல்லாது இருப்பதற்கும் இதுதான் காரணமோ.... ?? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி அரேபியா அமெரிக்காவின் கைபொம்மை அங்கேதான் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் தொடங்குகிறது. மதங்களின் இருண்ட மறுபக்கம் மூளைச்சலவை. எல்லா மதங்களும் அதைச் செய்கின்றன. இஸ்லாமியர்களுக்கு அதை கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே கொடுத்துவிடுகிறார்கள். தேவைக்கு அதிகம் என்றால் எவ்வளவு என்று நீங்கள் கேட்கலாம். அதாவது அல்லா தான் உலகின் ஒரே கடவுள் மற்றைய மதங்கள் அனைத்தும் போலி என்று சொல்லுமளவுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனடி கடும் தண்டனைகள் கொடுப்பதில் நிச்சயம் தவறில்லை, இல்லையெனில் ஆசிய நாடுகளில் நிலவுவதுபோல  அநீதிகளே தலை விரித்தாடும்..!

தண்டைனைகளை நிறைவேற்றுவதில் மாற்றம் கொண்டுவரலாம்.

Link to comment
Share on other sites

6 hours ago, ராசவன்னியன் said:

உடனடி கடும் தண்டனைகள் கொடுப்பதில் நிச்சயம் தவறில்லை, இல்லையெனில் ஆசிய நாடுகளில் நிலவுவதுபோல  அநீதிகளே தலை விரித்தாடும்..!

தண்டைனைகளை நிறைவேற்றுவதில் மாற்றம் கொண்டுவரலாம்.

இவ்வாறான தண்டனைகள் கொடுக்கும் நாடுகளில் திரும்ப திரும்ப இப்படியான குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இவ்வாறான காட்டுமிராண்டி தண்டனைகள் கொடுக்காத மேற்குலக நாடுகளில் அநீதி தலைவிரித்து ஆடுவதில்லையே. ஏன்? 

Link to comment
Share on other sites

On 4/26/2019 at 10:42 AM, tulpen said:

இப்படிப்பட்ட தண்டனைகள் காட்டுமிராண்டி தனமானவை. முகம்பது நபி என்ற காட்டுமிராண்டி எப்போதோ கூறிய ஷரியா சட்டத்தை அமுல்படுத்தும் முஸ்லீம் மதவாதிகளும் பயங்கரவாத‍த்தை தான் விதைக்கின்றனர். இதை நிறைவேற்றுபவர்களுக்கும் அந்த கொல்லப்படும் குற்றவாளிக்கும் வித்தியாசம் இல்லை. 

சவூதி அரசால் கொல்லப்படும் யேமனிய மக்கள் தொகை பல ஊடகங்களால் மறைக்கப்படுகிறது. அப்படியான இனப்படுகொலை செய்யும் சவூதிக்கு தண்டனை கொடுப்பது யார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/26/2019 at 3:42 PM, tulpen said:

இப்படிப்பட்ட தண்டனைகள் காட்டுமிராண்டி தனமானவை. முகம்பது நபி என்ற காட்டுமிராண்டி எப்போதோ கூறிய ஷரியா சட்டத்தை அமுல்படுத்தும் முஸ்லீம் மதவாதிகளும் பயங்கரவாத‍த்தை தான் விதைக்கின்றனர். இதை நிறைவேற்றுபவர்களுக்கும் அந்த கொல்லப்படும் குற்றவாளிக்கும் வித்தியாசம் இல்லை. 

 

1 hour ago, tulpen said:

இவ்வாறான தண்டனைகள் கொடுக்கும் நாடுகளில் திரும்ப திரும்ப இப்படியான குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இவ்வாறான காட்டுமிராண்டி தண்டனைகள் கொடுக்காத மேற்குலக நாடுகளில் அநீதி தலைவிரித்து ஆடுவதில்லையே. ஏன்? 

தலைகளை கொய்வதும், அதனை வீதியில் ஒரு கம்பத்தில் செருகி வைப்பதும், ஆட்களை மிக உயரத்தில் இருந்து தள்ளி விழுத்தி கொலை செய்வதுமாக பயங்கரங்கள் செய்து காட்டியே நாடுகளை, முக்கியமாக வட இந்தியாவை முஸ்லிம்கள் பிடித்து ஆண்டார்கள்.

பிரித்தானியர்களின் துப்பாக்கிக்கு நிகராக அவர்களது வாள் இல்லாமல் போனதால், அடக்கப் பட்டனர்.

முகமது  ஒரு போர்த்தளபதி . ஆன்மீகவாதி அல்லர். இருப்பினும் அவர் ஒரு மத தலைவராக கருதப்படுகின்றார்.

ஒரு யூத போர்த்தளபதி கொல்ல படுகின்றார். அவரது கடமைகளை எடுத்துக் கொண்டு வந்த அடுத்த தளபதி, அவரது மருமகனும் மறுநாள் போர்க்களத்தில் மரணமடைகிறார்.

அவரது மனைவி பிடித்து செல்லப்படுகின்றார். தந்தையை, கணவனை இழந்த அந்த பெண், துக்கம் அனுசரிக்க வகை செய்ய வேண்டும் என்று கூறி அன்பாக கொண்டு செல்லப் படுகின்றார்.

ஆனாலும், அன்றிரவே அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்றார்.

ஆனாலும்.... அவர்.....

(முகநூலில் வாசித்தது)

இஸ்லாமிய மதம் பெண்களை மதித்ததே இல்லை.

கொழும்பில் ஒரு தேர்தல் கூட்டம். கடந்து சென்றபோது ஒருவர் பேசுகிறார். தமிழில் தான்..

விபத்தில் மரணித்து விட்ட அவர்களது பெரிய  ஒரு தலைவரின் மனைவிக்கு எதிராக...

பெண் எதற்க்காக படைக்கப் பட்டாளோ, அதற்கு மட்டுமே உபயோகப் படுத்த வேண்டும் என்று.... இன்னார்.... சொல்லி உள்ளார். ஆகவே அந்த பெண்மணிக்கு ஆதரவு தராதீர்கள் என்கிறார் அவர்.

உண்மையில், அப்போது நடந்த தொடர் போர்கள் காரணமாக போருக்கு பிள்ளைகள், குறிப்பாக ஆண் பிள்ளைகள் தேவைப்பட்டதால், குடும்ப கட்டுப்பாடில்லாத, பலதார மணங்கள் ஒத்துக்கொள்ளப் பட்டது.   

இந்த நவீன காலத்திலும், ஆதிகால, கருத்தடை முறைகள் பாவிக்க தடை என்பதனை கடைபிடிக்கிறார்கள். வகை தொகை இன்றி பெற்றுக் கொள்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

E_1476333361.jpeg

உயிரின் அடுத்த நிலை என்ன ..? பிரபஞ்சம் குறித்தான பார்வை என்ன ..? மானிட அறிவிற்கு கொஞ்சம் சிந்திப்பம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

இவ்வாறான தண்டனைகள் கொடுக்கும் நாடுகளில் திரும்ப திரும்ப இப்படியான குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இவ்வாறான காட்டுமிராண்டி தண்டனைகள் கொடுக்காத மேற்குலக நாடுகளில் அநீதி தலைவிரித்து ஆடுவதில்லையே. ஏன்? 

மேற்குலகில்  அநீதிகள் நடப்பதில்லையா!?!?!?!?!?!?

இது எப்ப தொடக்கம்?

Link to comment
Share on other sites

53 minutes ago, குமாரசாமி said:

மேற்குலகில்  அநீதிகள் நடப்பதில்லையா!?!?!?!?!?!?

இது எப்ப தொடக்கம்?

 சரிதான். நீங்கள்  சொல்வது உண்மை தான் அரபு நாடுகளை விட, ஆசிய நாடுகளை விட,ஶ்ரீலங்காவை விட மேற்கு நாடுகளில் மிக மோசமாக அநீதி தலை விரித்து ஆடுகின்றது. அந்த அநீதிக்குள் வாழ்வதற்கு நீங்கள், நாங்கள்  இங்கு வந்துள்ளோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, tulpen said:

 சரிதான். நீங்கள்  சொல்வது உண்மை தான் அரபு நாடுகளை விட, ஆசிய நாடுகளை விட,ஶ்ரீலங்காவை விட மேற்கு நாடுகளில் மிக மோசமாக அநீதி தலை விரித்து ஆடுகின்றது. அந்த அநீதிக்குள் வாழ்வதற்கு நீங்கள், நாங்கள்  இங்கு வந்துள்ளோம். 

அந்த விட என்னும் சொல்லை விட்டு விலகி வாருங்கள் சரளமாக உரையாடலாம்.

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

அந்த விட என்னும் சொல்லை விட்டு விலகி வாருங்கள் சரளமாக உரையாடலாம்.

எதைப்பற்றி நீங்கள் உரையாட போகின்றீர்கள். நான் ராசவன்னியனுடன் விவாதித்தது  அரபு நாடுகளில் நடைமுறையில் உள்ள காட்டு மிராண்டி ஷரியா சட்டத்தைப்பற்றியதே.உங்களுக்கு அந்த உரையாடல்  விளங்கவில்லை என்றால் மறுபடியும. வாசிக்கலாம்.அதற்காக அரைகுறை விளக்கத்துடன் பிதற்றக்  கூடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, tulpen said:

இவ்வாறான தண்டனைகள் கொடுக்கும் நாடுகளில் திரும்ப திரும்ப இப்படியான குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இவ்வாறான காட்டுமிராண்டி தண்டனைகள் கொடுக்காத மேற்குலக நாடுகளில் அநீதி தலைவிரித்து ஆடுவதில்லையே. ஏன்? 

அங்கெல்லாம் ஊழல்கள்,லஞ்சம், நீதிமனறங்களில் தீர்ப்பிற்கான தாமதம், சட்டத்தின் ஓட்டைகள், கறை படிந்த அரசியல்வாதிகள் போன்றவை மிகக் குறைவு. ஓரளவு வளமும், செல்வமும், மக்களிடம் படிப்பறிவும், டீசன்ஸியும் உண்டு.

ஆசிய நாடுகளின் நிலை அப்படியா இருக்கிறது..?

சில நாட்கள் ஆப்கானிகளிடமும், 'பச்சை'களிடமும் பழகிப் பாருங்கள், புரியும். :innocent:

Link to comment
Share on other sites

7 minutes ago, ராசவன்னியன் said:

அங்கெல்லாம் ஊழல்கள்,லஞ்சம், நீதிமனறங்களில் தீர்ப்பிற்கான தாமதம், சட்டத்தின் ஓட்டைகள், கறை படிந்த அரசியல்வாதிகள் போன்றவை மிகக் குறைவு. ஓரளவு வளமும், செல்வமும், மக்களிடம் படிப்பறிவும், டீசன்ஸியும் உண்டு.

ஆசிய நாடுகளின் நிலை அப்படியா இருக்கிறது..?

சில நாட்கள் ஆப்கானிகளிடமும், 'பச்சை'களிடமும் பழகிப் பாருங்கள், புரியும். :innocent:

உண்மை ராசவன்னியன். அதை தான் குறிப்பிட்டேன். இப்படியான தண்டனைகளை விட மக்களை கல்வி சமூக அறிவுடைய மக்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இப்படியான குற்றங்களை குறைக்கலாம். மேற்கு நாடுகளில் மக்களின் கல்வி சமூக அறிவே சமூக குற்றங்களை குறைத்துள்ளது என்பது எனது பார்வை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

எதைப்பற்றி நீங்கள் உரையாட போகின்றீர்கள். நான் ராசவன்னியனுடன் விவாதித்தது  அரபு நாடுகளில் நடைமுறையில் உள்ள காட்டு மிராண்டி ஷரியா சட்டத்தைப்பற்றியதே.உங்களுக்கு அந்த உரையாடல்  விளங்கவில்லை என்றால் மறுபடியும. வாசிக்கலாம்.அதற்காக அரைகுறை விளக்கத்துடன் பிதற்றக்  கூடாது 

நான்  உங்கள் உரையாடல்கள்    முழுவதையும் ஒழுங்காக வாசிக்காமல் அவசரப்பட்டு கருத்தெழுதிவிட்டேன்.    பாவமன்னிப்பு தங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.tw_smiley:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.