Jump to content

எழுந்து வா மகளே எழுந்து வா-அழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழுந்து வா மகளே எழுந்து வா

அழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல்

நீண்ட நேரமாக தூங்குகிறாயே எழுந்து வா
கொஞ்சம் நீ தாமதமாக எழுந்தாலும் அம்மாவும் அப்பாவும் துடிதுடித்து விடுவோமே இன்று மட்டுமேன் நீண்டதோர் நேரம் தூங்குகிறாய்.
நீ தடக்கி விழுந்தால் கூட இதயம் உடைந்து விடுவாளே அம்மா நீ எப்படி விழுந்தாய் உடனே எழுந்து வா மகளே எழுந்து வா,
உனக்கு பிடித்த பஞ்சு மிட்டாய் வாங்கி தாறேன் பால் மிட்டாய் வாங்கித் தாறேன் எழுந்து வா மகளே எழுந்து வா.
உனக்குப் பிடித்த பட்டர் சிக்கன் சாப்பிடலாம் பாம்பே ஸ்வீட் சாப்பிடலாம் எழுந்து வா மகளே எழுந்து வா.
நீ கேட்ட பாபி பொம்மை வாங்கித்தருகிறேன் குரங்கு பொம்மை வாங்கித்தருகிறேன் எழுந்து வா மகளே எழுந்து வா
பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் காலிமுகத்திடலில் பட்டம் விடுவோம் என்று கேட்டாயே இப்போதே எழுந்துவா நாங்கள் சென்று பட்டம் விடுவோம்.
தாமரை கோபுரத்தில் எப்போது ஏறுவேன் என்று கேட்டாயே இப்போதே எழுந்து வா நாங்கள் தாமரைக் கோபுரத்தை ஏறிடுவோம்.
சுற்றுலா போவோமா ஹோட்டலிலேயே தங்குவோமா என்று கேட்டாயே இப்போதே போகலாம் எழுந்து வா மகளே எழுந்து வா
அம்மாவை அதிகம் பிடிக்குமா அப்பாவை அதிகம் பிடிக்கும் என்று கேட்டால் அப்பாவை தான் பிடிக்கும் என்பாயே அப்பாவை விட உனக்கு யாரைப் பிடிக்கும் என்றால் இயேசப்பாவை பிடிக்கும் என்று கூறுவாயே எழுந்து வா மகளே எழுந்து வா. அப்பா கண்டிக்கும் போதெல்லாம் இயேசப்பாவிடம் முறையிடப் போகிறேன் என்று சொல்வாயே அப்பா உன்னை இனிமேல் கண்டிக்கவே மாட்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா.
காலையில் கூட இயேசப்பாவை பார்க்கப்போகிறேன் என்று தானே ஆவலுடன் ஓடி வந்தாய் என்ன நடந்தது எழும்பாமல் தூங்குகிறாய் எழுந்து வா மகளே எழுந்து வா.
அம்மாவையும் அப்பாவையும் உதைத்து உதைத்து தூங்குவாய் இன்று மட்டுமேன் அசையாமல் உதைக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய். எழுந்து வா மகளே எழுந்து வா.
வீட்டுக்குப் போவோம் எழுந்து வா அப்பா மேலே குதிரை விளையாடலாம் அழகான பொம்மை விளையாடலாம் அப்பிளிலே கேம் விளையாடலாம் ஆன்லைனில் பாட்டு கேட்கலாம் எழுந்து வா மகளே எழுந்து வா.
மகாராணியாகவல்லா நான் கற்பனை செய்தேன் மகுடம் சூட்டி பார்க்கவல்லா நான் கற்பனை செய்தேன்.
அப்பா என்ன கஷ்டங்கள் பட்டாலும் கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று கனவு கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா
உயர்ந்த நிலையை அடைவாய் என்றும் உத்தமியாய் வாழ்வாய் என்றும் நித்தநித்தம் கனவு கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா
பட்டங்கள் பல பெறுவாய் பாரினில் சேவை செய்வாய் என நித்தம் நான் கனவு கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா
கடைகளுக்குச் சென்றால் காணுபவை எல்லாம் உனக்கு பொருந்தும் என்று கற்பனை செய்து பார்த்தேன் அத்தனையும் உனக்கு வாங்க வேண்டும் என்று கொள்ளைகொள்ளும் ஆசையினை தேக்கி வைத்திருப்பேன். திருமணச் சடங்குகளில் அப்பாவின் கையைப் பிடித்து கம்பீரமாக நடந்து வரும் மணமகளை காணும்போதெல்லாம் நீ எப்பொழுது என் கையைப் பிடித்து வரப்போகிறாய் என்று கனவு கண்டு கொண்டே இருப்பேன் நீ மகள் அல்ல தாயானாய் நாளை என் பேரப் பிள்ளைகளுக்கு தாயாகவும் இருப்பாய் என்று எத்தனை கனவுகள் கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா.
பக்கத்துவீட்டு நண்பிகளும் பாடசாலை நண்பிகளும் எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்வேன். பால்கார மாமாவும் பணிஸ்கார மாமாவும் காலையில் எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்வேன் எழுந்து வா மகளே எழுந்து வா. உன் படுக்கை வெறுமை ஆகப்போகிறது உன் பள்ளிக்கூடப் புத்தகங்களில் அங்கங்கே கிடக்கின்றன நீ ஓடியாடி விளையாடிய இடம் எல்லாம் வெறுமையாகிவிடப்போகிறது எழுந்து வா மகளே எழுந்து வா
எங்கள் வீட்டுக்கு விளக்கேற்ற வந்த தேவதையே எழுந்து வா விரைவில் எழுந்து வா. வீடு வெறுமையாகப் போகிறது விளக்கு வைக்க யாரும் இல்லை எழுந்து வா மகளே எழுந்து வா.
நான் இத்தனை கூறியும் எழும்பாமல் இருக்கிறாயே உனக்குப் பிடித்த இயேசப்பா உடன் சென்று விட்டாயா அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் யாருடன் விளையாடிக் கொண்டு இருக்கிறாய் அப்பா அம்மாவை நினைத்து விடவில்லையா. நானும் வருகிறேன் விரைவில் உன்னுடன் நானும் வருகிறேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.