Jump to content

`இலங்கை தாக்குதல்: முஸ்லிம்களை பிளவுபடுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிக்கு பலியாகிவிட்டார்கள்' - எம்.ஏ. நுஃஹ்மான் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`இலங்கை தாக்குதல்: முஸ்லிம்களை பிளவுபடுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிக்கு பலியாகிவிட்டார்கள்' - எம்.ஏ. நுஃஹ்மான் பேட்டி

யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக
அழுகின்ற பெண்JEWEL SAMAD

இலங்கையை உலுக்கியுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மிலேச்சத்தனமானவை என்று கூறிய, அந்த நாட்டின் மூத்த இலக்கியவாதியும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எம்.ஏ. நுஃமான்; "இவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை" என்றும் தெரிவித்தார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பேராசிரியர் நுஃமானிடம், பிபிசி தமிழின் இலங்கை செய்தியாளர் தொலைபேசி ஊடாகப் பெற்றுக் கொண்ட செவ்வியிலேயே, இந்த கருத்துக்களை பேராசிரியர் நுஃமான் தெரிவித்தார்.

மேற்படி தாக்குதல்களில் முஸ்லிம்கள் தொடர்புபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில்; "இஸ்லாத்தை தவறாகப் புரிந்து கொண்டவர்கள்தான், இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்க முடியும்" என்றும், பேராசிரியர் நுஃமான் கூறினார்.

கேள்வி: நாட்டில் நடந்துள்ள இந்தத் தாக்குதல்களை என்ன வகையான மனநிலையுடன் பார்க்கிறீர்கள்?

பதில்: மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இதுவொரு பைத்தியகாரத்தனமான செயல்பாடு. இப்படியொன்று நடக்குமென யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் முஸ்லிம் குழுவொன்றினால் இவ்வாறான தாக்குதல்கள் இங்கு நடக்குமென கற்பனை கூட செய்திருக்கவில்லை. இவ்வாறான தாக்குதல்களை நடத்தக்கூடிய குழுக்கள் முஸ்லிம்களுக்குள் இல்லை என்றுதான் இவ்வளவு காலமும் கூறி வந்தோம். ஆனால், எப்படியோ அது உருவாகியிருக்கிறது. ஆனால், அதுபற்றி எமக்குத் தெரியவில்லை.

முஸ்லிம்கள் மிகவும் பதட்டமாக உள்ளனர். நாங்கள் கவனமாக இந்தத் தருணத்தில் இருக்க வேண்டியுள்ளது. இனக் கலவரங்களோ, மதக் கலவரங்களோ இதனைத் தொடர்ந்து வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

தாக்குதல் நடைபெற்ற தேவாலயம்Anadolu Agency

கேள்வி: உள்ளுரைச் சேர்ந்தோர் மட்டும் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறான தாக்குதலை நடத்தும் ஆற்றல், உள்ளுரைச் சேர்ந்தோருக்கு எப்படி வந்தது என்கிற கேள்வி உள்ளது. பெரிய வலைப்பின்னலுடன்தான் இது நடந்துள்ளது போல் தெரிகிறது. மிகவும் நவீனமான முறையில் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அப்படியென்றால், வெளிநாட்டு சக்திகளின் உதவிகளின்றி இவர்கள் இதைச் செய்துள்ளார்களா என்பதிலும் ஆச்சரியமுள்ளது. ஆனாலும், உடனடியாக எதையும் நம்மால் கூற முடியாது.

கேள்வி: முஸ்லிம்களுக்கும் - கிறிஸ்தவர்களுக்கும் இடையில், எதுவிதமான கசப்புணர்வுகளும் இலங்கையில் இல்லாத நிலையில், அவர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: நியுசிலாந்து பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்குப் பழி தீர்ப்பதாக, இலங்கைத் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று, இங்கு வெளிவரும் சில செய்திகள் சொல்ல முயற்சிக்கின்றன.

ஆனால், நியுசிலாந்தில் நடந்த அந்த தாக்குதலின் பிறகு, உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு ஆதரவும் அனுதாபங்களும் கிடைத்து வந்தன. ஆனால், இலங்கையில் நடந்துள்ள இந்தத் தாக்குதல்கள், அந்த நிலவரத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டன.

பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சில கசப்புணர்வுகள் இருந்தன. அதேபோன்று தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலும் பிரச்சினைகள் இருந்துள்ளன. 

ஆனால், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், நான் அறிந்த வரையில் இலங்கையில் பிரச்சினைகள் இருந்ததில்லை.

இவை, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலாகும். எந்த வகையிலும், இதனை நியாயப்படுத்த முடியாது.

எம். ஏ. நுஃமான் எம்.ஏ. நுஃமான்

கேள்வி: இந்தத் தாக்குதலை மேற்கொண்டோர், இதனூடாக எதனையெல்லாம் அடைந்து கொள்ள முடியுமென நம்பியிருக்கக் கூடும்?

பதில்: இதனூடாக எதையாவது அடைந்து கொள்ள முடியுமென அவர்கள் நம்பியிருந்தால், அது பைத்தியகாரத்தனமாகவே இருக்கும். இந்தத் தாக்குதல்களின் ஊடாக அதனை மேற்கொண்டோர் எதையும் அடையவில்லை. 'திசை திருப்பல்' ஒன்றினை ஏற்படுத்தியதைத் தவிர, அவர்கள் இதனூடாக வேறு எதையும் பெற்றுக் கொள்ளவில்லை.

இங்குள்ள முஸ்லிம்களை இன்னும் இக்கட்டானதொரு நிலைமையினுள் தள்ளி விட்டதைத் தவிர, வேறு எதையும் இந்தத் தாக்குதல்கள் ஊடாக அவர்கள் செய்து விடவில்லை.

கேள்வி: இந்த சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ளுதல் வேண்டும்?

பதில்: இவ்வாறான சக்திகள் முஸ்லிம் சமூகத்துக்குள் இனியும் உருவாகாத வகையில், அறிவூட்டும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இஸ்லாம் அமைதியான மார்க்கம், அதில் வன்முறைகளுக்கு இடமில்லை. ஒருவரை கொலை செய்வது, முழு மனித சமூகத்தையும் கொலை செய்வதற்கு ஈடானது என, அல்குரான் சொல்கிறது., ஒருவரைப் பாதுகாப்பது முழு மனிதர்களையும் பாதுகாப்பதற்குச் சமமானானதாகும்.

எனவே, வன்முறைகளுக்கும், இவ்வாறு மனிதர்களைக் கொல்வதற்கும் இஸ்லாத்தில் எவ்வித இடமுமில்லை. இவை குறித்து, அறிவூட்ட வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற கருத்தியல்களால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேவாலயம்

குர்ஆனிலுள்ள வசனங்களுக்கு சிலர் பைத்தியகாரத்தனமான அர்த்தங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். குர்ஆன் வசனங்கள் வழங்கப்பட்ட சூழல் மற்றும் வரலாற்றுப் பின்னணி போன்றவற்றை வைத்துப் பார்க்காமல், அவற்றுக்கு விளக்கமளிக்கின்ற முட்டாள்தனத்தினை சிலர் செய்கின்றனர்.

இந்தத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகின்றவர்கள் இஸ்லாத்தைப் பற்றிப் பேசினாலும், அவர்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவர்கள் என்பதே எனது நிலைப்பாடாகும். இன்னும் சொன்னால், அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்புகளே கிடையாது. ஏனென்றால், இஸ்லாத்தை இவர்கள் போன்றோர் இஸ்லாத்தின் பெயராலேயே மிகவும் கேவலப்படுத்துகின்றனர்.

மேலும், இவ்வாறானவர்களுக்குப் பின்னணியில் எவ்விதமான சக்திகளெல்லாம் உள்ளன என்றும் தெரியவில்லை.

இஸ்லாத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்தி, இஸ்லாமியர்களையும் இஸ்லாமிய நாடுகளையும் சின்னாபின்னப்படுத்துவதற்கு, மிக நீண்ட காலமாகவே மேற்கு ஏகாதிபத்தியம் முயற்சித்து வருகின்றது. அதன் விளைவுகளாகவும் இவ்வாறான தாக்குதல்களைப் பார்க்க முடியும்.

நாடுகள் வாரியாக இறந்தோர் எண்ணிக்கை நாடுகள் வாரியாக இறந்தோர் எண்ணிக்கை

ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அமைப்புக்கள் புதிதாக வந்தவை. தலிபான் இயக்கம் அமெரிக்கா கொண்டு வந்து விட்டதுதான்.

மேற்கு ஏகாதிபத்தியத்துக்கு சில குறிக்கோள்கள் உள்ளன. அவற்றினை அடைந்து கொள்வதற்காக, அவர்கள் இஸ்லாத்துக்குள் 'வஹாபிசம்' போன்ற பலதையும் வளர்த்து, தூண்டி விடுகின்றார்கள். முஸ்லிம்களும் அறியாமை காரணமாக இதற்குப் பலியாகின்றனர். இந்தத் தாக்குதலை நடத்தியோரும் அவ்வாறு, அறிந்தோ அறியாமலோ பலியானவர்களாக இருக்கலாம்.

எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம்களை பயங்கரமானதொரு சூழ்நிலைக்குள் தள்ளி விட்டிருக்கிறது. இதுவரை காலமும் முஸ்லிம்களுக்கு எதிராக, நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்த செயற்பாடுகளையெல்லாம் ஓரளவாயினும் சமாளித்துக் கொண்டு வந்தோம். அவ்வாறானதொரு நிலையில்தான் இது நடந்திருக்கிறது.

கேள்வி: இலங்கை முஸ்லிம் சமூகத்திலுள்ள அடையாளம் மிகுந்த நபர்களுள் நீங்களும் ஒருவர் என்கிற வகையில், கிறிஸ்தவ மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: நடந்த தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறோம். எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் துக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். கிறிஸ்தவர்களுடனான உறவை மீளவும் கட்டியமைக்க வேண்டும். நடந்தவை அறியாமையுடைய சிலர் செய்த காரியமாகும். எனக்கு 75 வயதாகிறது. நான் அறிந்த வகையில், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்தவித பிரச்சினைகளும் இருந்ததில்லை. கிறிஸ்தவர்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் அதிர்ச்சியாக உள்ளது. 

சீயோன் தேவாலயத்தில் அன்று என்ன நடந்தது? - காயமடைந்தோர் பேசுகிறார்கள்

p0775l46.jpg
சீயோன் தேவாலயத்தில் அன்று என்ன நடந்தது? - சிகிச்சை பெறுவோர் விளக்குகிறார்கள்

https://www.bbc.com/tamil/sri-lanka-48040192

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.