Jump to content

தவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்..

April 24, 2019

 

“இஸ்லாமியர்களான நாங்கள் இந்த அரசுக்கும் கடந்த அரசுக்கும் இந்த தவ்பிக் ஜமாத் குறித்து விபரங்களை கொடுத்துள்ளோம்”  – புலனாய்வுத் துறை தமது தேவைக்காக இவர்களை பயன்படுத்தியது – அசாத் சாலி- #asathsali #gotabayarajapaksa #thowheedjamath

அசாத் சாலி: “இஸ்லாமியர்களான நாங்கள் இந்த அரசுக்கும் கடந்த அரசுக்கும் இந்த தவ்பிக் ஜமாத் குறித்து விபரங்களை கொடுத்துள்ளோம். புலனாய்வு துறையில் இருந்தார்கள் சாலே மற்றும் அவரது சீடர் மொகமட். இவர்கள் இருவரையும் இப்போது கூட இங்கு அழைத்து கேளுங்கள். நாங்கள் தவ்பிக் ஜமாத் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தவில்லையா என்று? (தவ்பிக் ஜமாத் புகைப் படங்களைக் காட்டுகிறார்) இவை குறித்து 31/2 – 4 வருடங்களாக விபரங்களை கொடுத்து வருகிறோம். அனைத்து அரசுகளுக்கும் கடிதங்களை கொடுத்தோம். இவர்களை இல்லாமல் செய்யச் சொன்னோம். இவர்கள் பொல்லுகள் மற்றும் வாள்களோடு வருகிறார்கள். காத்தான்குடியில்”  #Srilanka #EasterSundayAttackLK

asath-sali.png?resize=674%2C497

சத்துர இடைமறிக்கிறார் : புலனாய்வு துறையினருக்கா கொடுத்தீர்கள்?

அசாத் சாலி : “புலனாய்வு துறையினருக்கு கொடுத்தோம். பாதுகாப்பு செயலர்கள் மூவருக்கு கொடுத்துள்ளோம்.”

சத்துர : இந்த அரசில் 4 பாதுகாப்பு செயலர்கள் இருந்தார்கள். இந்த அரசில் இருந்த பாதுகாப்பு செயலர்களுக்கா? கடந்த அரசில் இருந்தவர்களுக்குமா?

அசாத் சாலி : “கடந்த அரசில் இருந்தவருக்கும்தான் கொடுத்தோம்”

சத்துர : பாதுகாப்பு செயலளாளராக இருந்த கோத்தாபய ராசபக்ச அவர்களுக்கும் கொடுத்தீர்களா?

அசாத் சாலி : அவர்தான் தவ்பிக் ஜமாத் அமைப்பை பாதுகாத்தவர். இதை பொறுப்போடு சொல்கிறேன். அவர் பாதுகாத்தார் என்பதை சாலேயை அழைத்து வந்து கேட்டால் சொல்வார். அந்த அரசாங்கம்தான் இவர்களை பாவித்தது. பழைய வீடியோக்கள் இருந்தால் எடுத்து பாருங்கள்? 

மாளிகாவத்தை தவ்பிக் ஜமாத்திலிருந்து ஒரு ஊர்வலம் போய்க் கொண்டிருக்கும் போது பஞ்சிகாவத்தையில் பொலிசார்  தடுத்து நிறுத்தினார்கள் என்பது நினைவிருக்கலாம். உடனே மேலிடத்திலிருந்து கட்டளை வருகிறது அவர்களை தொடர்ந்து போக விடுமாறு. இவர்கள் எங்கே போனார்கள் ? கோட்டை புகையிர நிலையம் வரை சென்றார்கள். 

பெண்களை இணைத்துக் கொண்டு ஆண்கள் – பெண்கள் சேர்ந்து பெண்கள் எதிர்ப்பு ஊர்வலம் என இஸ்லாமியர்கள் எங்கே போயுள்ளார்கள் என்று காட்டுங்கள்?  அப்படி பெண்கள் போனதில்லை. ஆண்கள் போயுள்ளார்கள். பெண்கள் போனதில்லை.இந்த தவ்பிக் ஜமாத் அமைப்பினர் புலனாய்வு துறையினரது தேவைக்காக சென்றார்கள்.

 

http://globaltamilnews.net/2019/119279/

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

சத்துர : பாதுகாப்பு செயலளாளராக இருந்த கோத்தாபய ராசபக்ச அவர்களுக்கும் கொடுத்தீர்களா?

அசாத் சாலி : அவர்தான் தவ்பிக் ஜமாத் அமைப்பை பாதுகாத்தவர். இதை பொறுப்போடு சொல்கிறேன். அவர் பாதுகாத்தார் என்பதை சாலேயை அழைத்து வந்து கேட்டால் சொல்வார். அந்த அரசாங்கம்தான் இவர்களை பாவித்தது. பழைய வீடியோக்கள் இருந்தால் எடுத்து பாருங்கள்? 

மிலேச்ச பயங்கரவாதிகள் யார் என்பது கொஞ்சம் வெளிப்பட்டுள்ளது!

வெளிப்பட்டுள்ளது ஆழப்புதைந்துள்ள பாரிய பனிப்பாறையின் ஒரு சிறுமுனை தான்.

1983 இல் இருந்து இந்த இரண்டு மதவெறிப் பயங்கரவாதக் கும்பல்களும் இணைந்து தமிழின அழிப்பை மேற்கொண்டனர்.

அதே நேரத்தில் சிங்கள-பௌத்த இனமதவெறிப் பயங்கரவாதி கோத்தபாயவால், முஸ்லீம் இனமதவெறிப் பயங்கரவாதக் கும்பல்களை வீழ்த்த இராவண பலய, பொதுபல சேன, மகாசேன் பலகாய, வியத்மக ... போன்ற  6 சிங்கள-பௌத்த இனமதவெறி அமைப்புகள் உருவாக்கபட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை அழிக்க உலக நாடுகளை எல்லாம் துணைக்கிழுத்தவர்கள் இப்போ.. வெளிநாடுகள் வேண்டாம் எனும் போதே... விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால்..

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரழிவின் பின் கொழும்பு.. மட்டு.. யாழ் ஆயர்கள் வழங்கிய செவ்விகள்.. பாதிக்கப்பட்ட மக்கள் மீது கொஞ்சமும் கருசணையற்றிருந்ததை காணலாம். இவர்களுக்கும்.. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரழிவின் பின் பால்சோறு வழங்கி கொண்டாடி மகிழ்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும்.. வெடிகொழுத்திக் கொண்டாடிய சிங்களவர்களுக்கும்.. சிங்கக் கொடிதூக்கிப் பிடித்த டக்கிளஸ்.. சம்பந்தன் உட்பட்ட காக்கவன்னியர்களுக்கும் உள்ள வித்தியாசம் தான் என்ன..??!

ஆனால்... இழக்கப்பட்டவை எல்லாமே அப்பாவி மனித உயிர்கள்.. என்பது தான் அடிப்படை சோகமும் உண்மையும். அதில் கூட பாகுபாடு காட்டியவர்கள் தான்.. உந்த ஆயர்களும் அரசியல்வாதிகளும். அவர்களிடம் இருந்து மனிதாபிமானத்துக்கான குரலை நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது. 

இன்று கூட முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு அஞ்சலி செய்யப் போகத் தயங்குபவர்களின் பட்டியல் நீண்டது..?!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. 

hqdefault.jpg

பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ... 🤔

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.