Jump to content

என் மீது அபாண்டமான பழி சுமத்தப்படுகிறது ; கிழக்கு ஆளுநர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் மீது அபாண்டமான பழி சுமத்தப்படுகிறது ; கிழக்கு ஆளுநர்

கடந்த வாரம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து குண்டு வெடிப்பின் சூத்திரதாரி எனக் கருதப்படும் நபருடன் தன்னைத் தொடர்புபடுத்தி தன்மீது மிக மோசமாக, அபாண்டமாகப் பழிசுமத்தி தன்னுடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை அவதானித்து தான் விசனமடைவதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

hisbullah.jpg

இது தொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற  பாராளுமன்றத் தேர்தலில் நான் வேட்பாளராக இருந்தபோது சகல வேட்பாளர்களும் அழைக்கப்பட்ட கலந்துரையாடலில் நானும் பங்குபற்றியிருந்தேன்.

ஒரு வேட்பாளர் என்ற அடிப்படையில் நானும் கலந்து கொண்டேன்.  அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஏனைய சகல வேட்பாளர்களும் அதில் பங்குபற்றிக் கலந்துரையாடினார்கள். அவ்வாறன கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்துக் கொண்டு இன்று என் மீது பழிசுமத்துவதற்காக ஊடகங்கள் பிரசுரித்து எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முனைகின்றனர்.

மேலும் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியும் அவரின் இயக்கமும் என்னுடைய அரசியலில் எனக்கு ஒரு போதும் ஆதரவு வழங்கியதும் கிடையாது எனக்காகப் பணியாற்றியதும் கிடையாது என்பதை சொல்லி வைக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/54630

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சவூதி சேக்குகளாக வந்து போனவர்கள் யாரெண்டும் சொல்லுங்க

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

தன்மீது மிக மோசமாக, அபாண்டமாகப் பழிசுமத்தி தன்னுடைய நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை அவதானித்து தான் விசனமடைவதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கிசுபுல்லாக் மயானத்தை அபகரித்து மார்கசு கட்டினார் என்பதும், கோயில் இருந்த காணியை அபகரித்து பள்ளிவாசலுக்குக் கொடுத்தார் என்பதும் அவர் மீது சுமத்தப்படும் வெறும் குற்றச்சட்டுக்களோ, அல்லது யாரோ ஒரு பத்திரிகையாளர் எங்கேயோ எழுதிய செய்திகளோ அல்ல, மாறாக தானே மறுக்க முடியாத படிக்கு கிசுபுல்லாக்கே வீடியோ வாக்குமூலம் வழங்கிய ஆதாரமுள்ள விடயங்கள் ஆகும்.

காணிகளை அபகரிப்பது குறித்து முகம்மது நபி கூட கடுமையாக எச்சரிக்கை செய்து இருப்பதை முசுலிம்கள் அறியாமல் இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

குண்டு வெடிப்பின் சூத்திரதாரியும் அவரின் இயக்கமும் என்னுடைய அரசியலில் எனக்கு ஒரு போதும் ஆதரவு வழங்கியதும் கிடையாது எனக்காகப் பணியாற்றியதும் கிடையாது என்பதை சொல்லி வைக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். 

roflphotos-dot-com-photo-comments-201808

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.