Jump to content

ஓ .. உதுக்குத்தானோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இந்தியாவுக்கு போனால் அதிகமாக கோவிலுக்கு போவது வழமை நான் ஒரு கோவிலுக்கு போவம் என்று நினைத்தால் என்ட பெட்டர்காவ் நாலு கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லுவார்.அது மட்டுமல்லாது இந்த மனித சாமிமார் அவர்களின் ஆச்சிரமம் அது இது என்று போவதும் வழக்கம்.

 

முதல் தடவையாக புட்டபத்திக்கு போனேன் .காரில் போகும் பொழுதே சாரதி இது சாய் பல்கலைகழகம் ,இது சாய் சங்கீதபாடசாலை,சாய் மருத்துவமனை,சாய் விமான நிலையம் என ஒரு பெரிய நகரத்திற்க்கு தேவையான சகல கட்டமைப்புக்களும்  இருப்பதை காட்டிக்கொண்டே வந்தார் .ஒரு தனிநபரால் எப்படி இது சாத்தியம் என்று மனதில் கேள்வி எழுந்தது ,நான் அந்த கேள்வியை

கேட்டிருந்தால் நிச்சமாக‌ சாரதியின் பதில் அவர் கடவுள் அவரால் இதுவும் செய்யமுடியும் இதற்கு மேலும் செய்ய முடியும் என்ற பதில் தான் வந்திருக்கும்.

அதைவிட பின்னுகிருந்த மனிசிட்ட "உங்களுக்கு எங்க போனாலும் குறுக்குபுத்தியும் லொள்ளும்,என்று திட்டு வாங்க வேணும்"

பயணம் போன இடத்தில ஏன் வம்பு என்று போட்டு சாரதி சொல்லுவதற்கெல்லாம் ஆச்சரியமாக கேட்பது போல‌ நடித்துகொண்டு பயணித்தேன்.

 

வெளிநாட்டவர்க‌ள் பதிவு செய்து தங்குவதற்கு என ஒர் க‌ட்டிடம் உண்டு அங்கு போய் பதிவு செய்தேன் ,படம் பிடித்தார்கள் மற்றும் விரல் அடையாளங்களையும் பெற்று கொண்ட பின்பு  பயணப்பொதிகளை எக்ஸ் ரெ பண்ணும் பெல்டில் போடும் படி கேட்டார்கள் அதை செய்து போட்டு,  குளித்து வேஸ்டியை கட்டிக்கொண்டு  தரிசனம் பூஜை போன்றவை நட‌க்கும் மண்டபத்திற்க்கு போனேன்..

எனக்கு புது இடம் என்றபடியால் மண்டபத்திற்கு முன்னால் நின்று  மனைவியுடன் உரையாடிகொண்டிருக்கும் பொழுது, வெள்ளை காற்சட்டையும் செர்ட்டும் அணிந்த ஒருவர் "சாய்ராம்"என்று சொன்னபடி அருகே வந்து ‍ஹிந்தியில் என்னவோ சொன்னார் நாங்கள் முழித்துகொண்டு நிற்கவே ஆண்களும் பெண்களும் இதில் நின்று  கதைக்க வேண்டாம் பெண்கள் இந்த பக்கம் போகவும் ஆண்கள் மற்ற பக்கம் போகவும் என்றார்.

கூம்பிட்டு முடிந்தவுடன் மொபைலில் கொல்பண்ணுங்கோ என்று மனைவி பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு, நான் ஆண்களுக்குரிய லைனில் போய் நின்றேன் .மொபைல் போன் உள்ளே கொண்டு செல்ல தடை என அறிவிப்பு பலகையில்  இருந்த அறிவிப்பை அப்ப தான் பார்த்தேன்.

மொபைல் மற்றும் கை பைகள் உள்ளே கொண்டு செல்ல முடியாது ,காரியாலயத்தில் கொண்டு போய் பாரப்படுத்துங்கள் என்று ஒரு சாய்ராம் காவலாளி சொல்ல மீண்டும் பொருட்கள் பாரப்படுத்தும் லைனில் போய் நின்றேன் ,எனது முறை வரவே கையிலிருந்த மொபைல் மற்றும் கைப்பையை கொடுத்து டொக்கனெடுத்து மீண்டும் வந்து ம‌ண்டபத்திற்க்கு போகும் வழியில் நின்றேன் ,எனது முறை வந்தது மெட்டல் டிடெக்கடர் ஊடாக உள்ளே வா என்றார் நானும் போனேன் இரு இளைஞர்கள் கீழே சப்பாணிகட்டிகொண்டு இரு பக்கமும் இருந்தார்கள் .எனது கால்களை வேஸ்டிக்கு மேலால் தடவி உள்ளே மறைத்து சொந்த ஆயுதத்தை தவிர வேறு ஆயுதங்கள் இருக்கா என சோதனை போட்டார்கள் ,சாய்ராம் என்ற சொல்லை மீண்டும் சொன்னார்கள், இதை தாண்டியவுடன் இன்னோரு காவலாளி சாய்ராம் என்று சொன்னபடி சேர்ட்டுக்கு மேலால் மேல் உடம்பை தடவிபார்த்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார்.

 உந்த செக்யுரிட்டு செக் எனக்கு பிடிக்கவில்லை என்ன செய்யிறது என்று போய் உள்ளே இருந்தேன்.     நான் போன மாதம் டிசம்பர் என்றபடியால் கிறிஸ்மஸ் பெருநாளுக்காக மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது...மண்டபத்தினுள் புத்தர்,சிவன்,ஜேசு உருவங்களும் இஸ்லாத்தை அடையாளப்படுத்த பிறையும் வைக்கப்பட்டிருந்தது....இவர்கள் எல்லா மத சின்னங்களையும் வைத்து வணங்குகிறார்கள் இவரை மற்ற மதத்தவர்கள்  வைத்து கும்பிடுவார்களா என்ற குறுக்கால போன புத்தி எனக்கு வந்திட்டு...

 

வழிபாடு முடித்துவிட்டு வெளியே வந்து டோக்கனை கொடுத்து மொபைலையும் கைபையையும் வாங்கி கொண்டு விடுப்பு பார்த்து கொண்டிருந்தேன்...

மனைவியும் பிள்ளைகளும் வந்தார்கள்..

 

இஞ்சாரும் நாளைக்கு நான் வரமாட்டன் நீர் வேணும் என்றால் வாரும்,எனக்கு உந்த செக் பண்ணி சாமி கும்பிடுற விளையாட்டுகள் சரி வராது...சிட்னி முருகனிட்ட போனால் எவ்வளவு டிசன்டா கும்பிட்டு போட்டு வரலாம்...

 

இந்த இந்தியாவில தான் பழணி யாண்டியை தரிசிக்க போற‌து என்றாலும் செக்கியுரிட்டி செக்....

what a shame

 

 

 

 

வேலையால் வந்தவள் இஞ்சாருங்கோ சிறிலங்கா நியுஸ் பார்த்தனீங்களோ ,செர்ஜ்யில் குண்டு போட்டிட்டாங்களாம் இப்ப விளங்குதோ ஏன் இந்தியாவில கோவில்களிலும் தேவாலயங்களிலும்  செக்குயுரிட்டி செக்   அதிகம் எண்டு

 

ஓஓ உதுக்குத்தானோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, putthan said:

 

 

வேலையால் வந்தவள் இஞ்சாருங்கோ சிறிலங்கா நியுஸ் பார்த்தனீங்களோ ,செர்ஜ்யில் குண்டு போட்டிட்டாங்களாம் இப்ப விளங்குதோ ஏன் இந்தியாவில கோவில்களிலும் தேவாலயங்களிலும்  செக்குயுரிட்டி செக்   அதிகம் எண்டு

 

ஓஓ உதுக்குத்தானோ....

ஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த  போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எனது கால்களை வேஸ்டிக்கு மேலால் தடவி உள்ளே மறைத்து சொந்த ஆயுதத்தை தவிர வேறு ஆயுதங்கள் இருக்கா என சோதனை போட்டார்கள் ,சாய்ராம் என்ற சொல்லை மீண்டும் சொன்னார்கள், இதை தாண்டியவுடன் இன்னோரு காவலாளி சாய்ராம் என்று சொன்னபடி சேர்ட்டுக்கு மேலால் மேல் உடம்பை தடவிபார்த்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார்.

நல்லூரிலும் ஒரு சோதனைச் சாவடி அமைக்க போறமெல்லோ.

புத்து ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கதை வரும் போல.
இனி அடுத்த வெடி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பாத்தால் மனிசரை விட சாமியளுக்குத்தான் பாதுகாப்பு கனக்க வேணும் போலை கிடக்கு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

"சாய்ராம்"

அப்ப............................. ஒவ்வொரு வியாழக்கிழமையும் பஜனை பக்தியெண்டு  ஜமாய்க்கிறீஙகள்........பாவம் சிட்னி முருகன்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

எனது முறை வந்தது மெட்டல் டிடெக்கடர் ஊடாக உள்ளே வா என்றார் நானும் போனேன் இரு இளைஞர்கள் கீழே சப்பாணிகட்டிகொண்டு இரு பக்கமும் இருந்தார்கள். எனது கால்களை வேஸ்டிக்கு மேலால் தடவி உள்ளே மறைத்து சொந்த ஆயுதத்தை தவிர வேறு ஆயுதங்கள் இருக்கா என சோதனை போட்டார்கள் ,சாய்ராம் என்ற சொல்லை மீண்டும் சொன்னார்கள், இதை தாண்டியவுடன் இன்னோரு காவலாளி சாய்ராம் என்று சொன்னபடி சேர்ட்டுக்கு மேலால் மேல் உடம்பை தடவிபார்த்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார்.

 உந்த செக்யுரிட்டு செக் எனக்கு பிடிக்கவில்லை என்ன செய்யிறது என்று போய் உள்ளே இருந்தேன்.    

 

roflphotos-dot-com-photo-comments-20190302110410.jpg

ஆயுத செக்கிங்... சூப்பர் புத்தன். 💥
அந்த நேரம், வேட்டி  அவிண்டுடும்... என்று பயப்படவில்லையா? 
மேலே உள்ள பந்தியை கற்பனை பண்ணி பார்த்தேன். சிரிப்பு வந்திட்டுது. :grin:

Link to comment
Share on other sites

21 hours ago, putthan said:

இந்த இந்தியாவில தான் பழணி யாண்டியை தரிசிக்க போற‌து என்றாலும் செக்கியுரிட்டி செக்....

what a shame

வேலையால் வந்தவள் இஞ்சாருங்கோ சிறிலங்கா நியுஸ் பார்த்தனீங்களோ ,செர்ஜ்யில் குண்டு போட்டிட்டாங்களாம் இப்ப விளங்குதோ ஏன் இந்தியாவில கோவில்களிலும் தேவாலயங்களிலும்  செக்குயுரிட்டி செக்   அதிகம் எண்டு

புத்தன், 'ரைமிங்' சரியில்லைப் போல... உங்களுக்கு எண்டு பார்த்து இப்படி அவ்வப்போது நடக்குது! 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/25/2019 at 10:29 PM, ஈழப்பிரியன் said:

நல்லூரிலும் ஒரு சோதனைச் சாவடி அமைக்க போறமெல்லோ.

புத்து ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கதை வரும் போல.
இனி அடுத்த வெடி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கணும்.

நாங்கள் இரண்டு மூன்று வருசத்திற்க்கு அங்கால  போகமாட்டமல்ல,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

நாங்கள் இரண்டு மூன்று வருசத்திற்க்கு அங்கால  போகமாட்டமல்ல,

கல்லோ
சிட்னி முருகன் வாசலிலும் சோதனைச் சாவடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

கல்லோ
சிட்னி முருகன் வாசலிலும் சோதனைச் சாவடி.

சிட்னி முருகன் விட மாட்டான்....அவனே ஒர் போர்வீரன் ...அவனை தாண்டித்தான் ....மேலும் நாங்கள் ஜனநாய‌கவாதிகள் க்ண்டியளோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1998 இல் குடும்பத்தினருடன் இந்தியாவுக்குச் சுற்றுலாத் சென்றவேளை வழியில் புட்டபர்த்திக்கும் போகவேண்டி வந்தது. வெளிநாட்டவர்கள் என்று எமக்கு ஒரு அறைகள் தந்தவர்கள்  எமது வான் றைவருக்கு தரமாட்டேன் என்றனர். ஒரு நிமிடம் பிள்ளைகளுடன் கதைத்தால் கூட கதைக்க வேண்டாம் என்று கூற நாங்கள் என்ன ஊமையா என்றேன் சொன்ன பெண்ணிடம்.

காலை ஐந்து மணிக்கு என நினைக்கிறேன் சாயிபாபா வருகிறார் என்றனர். நீ உண்மையான சாமி எண்டால் என்னைக் கூப்பிடு பார்ப்போம் என்று மனதுள் அவருக்குச் சவால்விட்டுக் காத்திருந்தால் அந்தாள் கூப்பிட்டால்  தானே.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/25/2019 at 10:16 PM, suvy said:

ஒருமுறை பத்த வைத்தால் பின் அது அணைத்த  போதும் அணையாது, சாம்பல் பூத்து உள்ளே ஒளிந்திருக்கும். சமயம் பார்த்து பத்தி எரியும்...... நல்ல சமயத்துக்கு ஏற்ற நினைவு மீட்டல் புத்ஸ்.....!   👍

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ....சரியா சொன்னீங்கள் சமயம் பார்த்து ஆப்பு வைப்பினம்.L

On 4/26/2019 at 9:20 AM, குமாரசாமி said:

போற போக்கை பாத்தால் மனிசரை விட சாமியளுக்குத்தான் பாதுகாப்பு கனக்க வேணும் போலை கிடக்கு......

சாமிக்கு மட்டுமல்ல இப்ப சாமியின்ட எஜன்ட் மாருக்கும் பாதுகாப்பு கொடுக்கினம்...

On 4/26/2019 at 1:15 PM, தமிழ் சிறி said:

 

roflphotos-dot-com-photo-comments-20190302110410.jpg

ஆயுத செக்கிங்... சூப்பர் புத்தன். 💥
அந்த நேரம், வேட்டி  அவிண்டுடும்... என்று பயப்படவில்லையா? 
மேலே உள்ள பந்தியை கற்பனை பண்ணி பார்த்தேன். சிரிப்பு வந்திட்டுது. :grin:

ராமராஜ்  கொட்டன் வேஸ்டிகடையில் ஒட்டுற பெல்ட் வாங்கி கட்டியபடியால் பயப்பிடாமல் இருந்திட்டேன் ...😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/26/2019 at 6:58 PM, மல்லிகை வாசம் said:

புத்தன், 'ரைமிங்' சரியில்லைப் போல... உங்களுக்கு எண்டு பார்த்து இப்படி அவ்வப்போது நடக்குது! 😃

நான் நினைக்கிறன் ரைமிங் கிரகம் எட்டாம் வீட்டில் இருந்து பக்கத்து வீட்டை பார்க்கின்றது அது தான்.....அடுத்த வருசம் முன்வீட்டை பார்க்கும் எண்டு சாத்திரியார் சொல்லுறார்...அப்ப நல்லது நடக்குமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/28/2019 at 9:17 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

1998 இல் குடும்பத்தினருடன் இந்தியாவுக்குச் சுற்றுலாத் சென்றவேளை வழியில் புட்டபர்த்திக்கும் போகவேண்டி வந்தது. வெளிநாட்டவர்கள் என்று எமக்கு ஒரு அறைகள் தந்தவர்கள்  எமது வான் றைவருக்கு தரமாட்டேன் என்றனர். ஒரு நிமிடம் பிள்ளைகளுடன் கதைத்தால் கூட கதைக்க வேண்டாம் என்று கூற நாங்கள் என்ன ஊமையா என்றேன் சொன்ன பெண்ணிடம்.

காலை ஐந்து மணிக்கு என நினைக்கிறேன் சாயிபாபா வருகிறார் என்றனர். நீ உண்மையான சாமி எண்டால் என்னைக் கூப்பிடு பார்ப்போம் என்று மனதுள் அவருக்குச் சவால்விட்டுக் காத்திருந்தால் அந்தாள் கூப்பிட்டால்  தானே.😀

மாமிமாருடன் சவாலுக்கு போகலாம் ஆனால் சாமிமாருடன் சாவாலுக்கு போகக்கூடாது...சாபம் போட்டுவிடிவினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

இனி  பழையபடி முருகனின்  உடையில் நாமே செல்வது தான்

முருகன்  நமக்குத்தரும்   பாடம்

நன்றி சகோ

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

ம்ம்ம்

இனி  பழையபடி முருகனின்  உடையில் நாமே செல்வது தான்

முருகன்  நமக்குத்தரும்   பாடம்

நன்றி சகோ

தொடருங்கள்

முருகா என்று சொல்லி கொண்டு வீட்டில இருக்கிறதுதான் நல்லம் போல கிடக்கு 

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

நான் நினைக்கிறன் ரைமிங் கிரகம் எட்டாம் வீட்டில் இருந்து பக்கத்து வீட்டை பார்க்கின்றது அது தான்.....அடுத்த வருசம் முன்வீட்டை பார்க்கும் எண்டு சாத்திரியார் சொல்லுறார்...அப்ப நல்லது நடக்குமாம்

ம்... நம்மட சாத்திரியாரும் நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது என்று பிறந்தது தொடக்கம் சொல்லிக்கொண்டே இருக்ககிறார்.

நானும் யாருக்கு எண்டு கேட்க மறந்திட்டன். அனேகமாக அவருக்குத் தான் என்று நினைக்கிறேன்! 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மல்லிகை வாசம் said:

ம்... நம்மட சாத்திரியாரும் நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது என்று பிறந்தது தொடக்கம் சொல்லிக்கொண்டே இருக்ககிறார்.

நானும் யாருக்கு எண்டு கேட்க மறந்திட்டன். அனேகமாக அவருக்குத் தான் என்று நினைக்கிறேன்! 😃

வருசப் பிறப்புக்கு கோயிலுக்கு(தமிழ்,சிங்களம்,தெலுங்கு ,ஹிந்தி)போயிருந்தேன் ஐயர் பூஜை முடிந்தவுடன்  ராசிபலன் வாசிக்கிறேன்    என்று ,இந்த ராசிக்கு 5  வரவு 5 செலவு,அந்த ராசிக்கு 6 வரவு 4 செலவு..Balance sheet   வாசித்தார் ...  .ஒவ்வோரு வருசமும் வாசிக்கிறார் நாங்கள் வேலைக்கு போறம் சம்பளம் தாராங்கள்...கிழமை முடிய அதுவும் முடியும் மீண்டும் அதே பல்லவி ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.