Jump to content

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படும் – கோட்டா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படும் – கோட்டா

 In இலங்கை      April 26, 2019 6:30 pm GMT      0 Comments      1073     by : Litharsan 

Gotapaya.jpg

இந்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் உளவுத் துறையை மீளக் கட்டமைத்து பரவியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத்தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

http://athavannews.com/ஜனாதிபதித்-தேர்தலில்-போட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி.

நாட்டின் சீர்குலைந்து போன புலனாய்வு கட்டமைப்பினை மீண்டும் நிறுவி, பாதுகாப்பினை பலப்படுத்தி, இஸ்லாமிய பயங்கரவாதத்தினை பூண்டோடு ஒழித்து நாட்டினைக் காடி எழுப்புவேன் என்று சொல்கிறார் கோத்தா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கன்ட நாட்டை கட்டி எழுப்ப முடியாது கண்டிய‌ளோ ...அத்திவாரத்தை ஒழுங்காக போட்டிருந்தால் நாட்டை 60 வருடங்களுக்கு முதலே கட்டி எழுப்பியிருக்கலாம்...

பில்டிங் ஸ்ரோங்க் பேஸ்மன்ட் வீக்.... அதுதான் நடந்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படும் – கோட்டா

 In இலங்கை      April 26, 2019 6:30 pm GMT      0 Comments      1073     by : Litharsan 

Gotapaya.jpg

இந்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் உளவுத் துறையை மீளக் கட்டமைத்து பரவியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத்தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

http://athavannews.com/ஜனாதிபதித்-தேர்தலில்-போட/

எதிர் பார்த்தது தான்...  இந்த சைத்தான் ஒவ்வொரு அடியையும் நிதானமாய் தான் எடுத்து வைக்கிறார் போல.
சிங்கன் வென்றாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை.   

Link to comment
Share on other sites

36 minutes ago, கிருபன் said:

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படும் – கோட்டா

ஒரு சிங்கள-பௌத்த பயங்கரவாதியை ஜனாதிபதியாக வெல்ல வைக்குமளவுக்கு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை இருக்குமாயின் அவர்களையும் ஒழித்துக்கட்டும் சூழ்நிலை உருவாகும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Sasi_varnam said:

எதிர் பார்த்தது தான்...  இந்த சைத்தான் ஒவ்வொரு அடியையும் நிதானமாய் தான் எடுத்து வைக்கிறார் போல.
சிங்கன் வென்றாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை.   

சிங்கன் வெற்றியடைவார் பிறகு ...நாலுஐந்து வருடத்திற்க்குள் மீண்டும் குண்டு வெடிக்கும் ....பயங்கரவாதத்தை வைத்தே அர்சியல் நடத்துவார்கள்

3 minutes ago, போல் said:

ஒரு சிங்கள-பௌத்த பயங்கரவாதியை ஜனாதிபதியாக வெல்ல வைக்குமளவுக்கு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை இருக்குமாயின் அவர்களையும் ஒழித்துக்கட்டும் சூழ்நிலை உருவாகும்! 

யார் அந்த பயங்கர வாதிகளை ஒழித்துக்கட்டுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன்/ஐரோப்பியன்  காலில் விழுந்தாவது இந்த சிங்கத்தை நாட்டுக்குள் விடாமல் கூட்டுக்குள் வைத்திருப்பது தான் உசிதம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

அமெரிக்கன்/ஐரோப்பியன்  காலில் விழுந்தாவது இந்த சிங்கத்தை நாட்டுக்குள் விடாமல் கூட்டுக்குள் வைத்திருப்பது தான் உசிதம் 

சிங்கன் யோசிப்பான் எப்படி முஸ்லீம் வியாபாரிகளிடமிருந்து பணம் பிடுங்லாம் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Sasi_varnam said:

அமெரிக்கன்/ஐரோப்பியன்  காலில் விழுந்தாவது இந்த சிங்கத்தை நாட்டுக்குள் விடாமல் கூட்டுக்குள் வைத்திருப்பது தான் உசிதம் 

உலக அரசியல் களம் மாறிவிட்டது 
எங்களின் மக்குகளுக்கு ஒன்றும் புரிகிறமாதிரி இல்லை 

இவரை  கொண்டுவருவதே அமெரிக்க- இஸ்ரேல் கூட்டணிதான் 
மகிந்த இறுதியாக இந்தியா போனபோது யாரை யாரை சந்தித்தார் 
என்று கொஞ்சம் பார்த்தாலாவது கொஞ்சம் புரியும்.
இந்திய தேர்தலில் மோடி வென்றால் உலகில் வடதுசாரி ஆட்சி மேலோங்கும் 
ஈரான் மீதான போர் நிற்சயம் நடக்கும் சீனாவை பொருளாதார ரீதியாக 
அமெரிக்கா நேரடியாகவே எதிர்க்க தயாராகும். 

ரஷியாவும் புட்டினும்தான் இந்த சூழலை மாற்ற கூடிய ஒரே சக்தி இப்போது.
புட்டினின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதில்தான் மேல் கூறியவை தங்கி இருக்கிறது 
சீனா வேண்டும் என்றே வட கொரிய அதிபரை புட்டினை சந்திக்க வைத்துள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

உலக அரசியல் களம் மாறிவிட்டது 
எங்களின் மக்குகளுக்கு ஒன்றும் புரிகிறமாதிரி இல்லை 

இவரை  கொண்டுவருவதே அமெரிக்க- இஸ்ரேல் கூட்டணிதான் 
மகிந்த இறுதியாக இந்தியா போனபோது யாரை யாரை சந்தித்தார் 
என்று கொஞ்சம் பார்த்தாலாவது கொஞ்சம் புரியும்.
இந்திய தேர்தலில் மோடி வென்றால் உலகில் வடதுசாரி ஆட்சி மேலோங்கும் 
ஈரான் மீதான போர் நிற்சயம் நடக்கும் சீனாவை பொருளாதார ரீதியாக 
அமெரிக்கா நேரடியாகவே எதிர்க்க தயாராகும். 

ரஷியாவும் புட்டினும்தான் இந்த சூழலை மாற்ற கூடிய ஒரே சக்தி இப்போது.
புட்டினின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதில்தான் மேல் கூறியவை தங்கி இருக்கிறது 
சீனா வேண்டும் என்றே வட கொரிய அதிபரை புட்டினை சந்திக்க வைத்துள்ளது. 

ரணில் விக்கிரமசிங்கவும் அமெரிக்க சார்பானவர்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய முட்டாள்களின், குண்டு வெடிப்பிற்கு பின்னால்....
கொடுங்கோலன்... கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி ஆகுவது  சாத்தியப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ரணில் விக்கிரமசிங்கவும் அமெரிக்க சார்பானவர்தானே?

அமெரிக்க சார்பு  சிங்கப்பூர் சார்பு இப்போ பிரச்சனை இல்லை 
இலங்கை சார்பு இல்லாமல் சுயநல சார்பாக மட்டும் இருக்க வேண்டும் 
வெட்டு கொலை கொள்ளை என்பதை காலை உணவு மாலை உணவு போல 
சாப்பிட தெரியவேண்டும். 
இந்தியாவை பொறுத்தவரை பாஜகாவை விட காங்கிரஸ் கட்சிதான் ஊழல் 
மிகுந்து மேற்கு உலகுடன் பல காலமாக குலவி கொண்டிருக்கும் கட்சி 
ஆனால் இவர்களை நம்பி குண்டு வைக்க முடியாது.
மோடியிடம் சொன்னால் ராமர் கோவிலிலேயே வைப்பார். இவர்கள்தான் தற்போதைய 
வலதுசாரி போக்கு உடையவர்கள்.

ரணிலால் ஒரு பிராமருக்கு உரிய வேலைகளை கூட 
செய்ய முடியாதவர் 
சம்மந்தன் கூட ஒரு சுயலவாதி என்றாலும் தமிழ் 
மக்களை அடக்கி ஆடசி செய்ய கூடிய ஆளுமை இல்லாதவர் 
இவர்களை நம்பி அவர்கள் இறங்க மாட்டார்கள்  டக்ளஸ்  கருணா 
போன்றவர்களைத்தான் நாடுவார்கள் முதன்மை படுத்தி ஆடசியில் 
ஏற்ற முயற்சி செய்வார்கள். அவர்கள் கொலை பாலியல் வல்லுறவு என்றால் சொந்த 
தாயையும் காசுக்கு வெட்டி விட்டு வருவார்கள். பின்பு அவற்றை வைத்து 
அவர்களை கட்டுப்படுத்தியும் வைக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

வேணாம் பிலிப்சு..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.