Jump to content

இரத்தம்


Recommended Posts

நம் உடலில் உள்ள செல்கள் வேலை செய்வதற்கும், வளர்வதற்கும் தேவைப்படும் சத்தையும், பிராண வாயுவையும் எடுத்துச் சென்று வழங்கும் திரவமே ரத்தம்.

எலும்பு மஜ்ஜைகளிலிருந்து ரத்தம் உருவாகிறது. "ஹிமோகுளோபின்' என்ற பொருளின் காரணமாகவே ரத்தம் சிவப்பு நிறமாக உள்ளது.

உடலின் மொத்த ரத்தம், உடல் எடையில் 8 சதவீதமே.

வில்லியம் ஹார்வியால் 1616ல் மனித ரத்த ஓட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு பின் ரத்த இழப்பை சரிசெய்யும் முயற்சியாக ஒரு நாயிடமிருந்து, மற்றொரு நாய்க்கு ரத்தம் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் மருத்துவ விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர்.

ஆனால், ரத்தம் பற்றி ஆராய்ச்சி செய்யக் கூடாது என்று 1678ல் தடை விதித்தார் போப் ஆண்டவர். அதன் பின் 150 ஆண்டுகள் யாரும் ரத்தம் பற்றி தீவிரமாக ஆராயவில்லை. 1818ல் பிரசவித்த ஒரு தாய்க்கு ரத்தம் தேவைப்பட்டது. அப்போது தான் உலகில் முதன், முதலாக ஒருவர் ரத்த தானம் செய்தார்.

எல்லாருக்கும் ரத்தம் சிவப்பு நிறமாக இருந்தாலும், அதிலும் பல்வேறு வகைகள் உள்ளன என்பதை உலகிற்கு அறிமுகம் செய்தவர், ஆஸ்திரியாவைச் சேர்ந்த கார்ல்லேம்ஸ் டெய்னர்.

அமெரிக்காவில் குடியேறிய அந்த மருத்துவ விஞ்ஞானி தான், 1901ல், "ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களில் "ஆன்டிஜன்' எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப, ரத்தம் நான்கு வகைப்படுத்தப்படுகிறது!' என்றார்.

ரத்தத்தில் "ஏ' ஆன்டிஜன் இருப்பின் அது "ஏ' பிரிவு;

"பி' ஆன்டிஜன் இருப்பின், அது "பி' பிரிவு;

"ஏ.பி.' என்ற இரண்டு ஆன்டிஜன்கள் இருந்தால்,

ஏ.பி., பிரிவு என்றும், எந்த விதமான ஆன்டிஜனும் இல்லையெனில், அது "ஒ' குருப் எனவும் பிரிக்கப்படுகிறது என்பதை உலகிற்கு தெரியப்படுத்தினார்.

ரத்த வகையைக் கண்டறிந்த கார்ல்லேம்ஸ் டெய்னரின் பிறந்த தினமான, ஜூன் 14ம் தேதியை ரத்த தானம் செய்வோர் தினமாக ஐ.நா., அறிவித்து, நன்றி செலுத்தியது.

ரசல்ஸ் நகரில் பெல்ஜிய நாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஹஸ்டின் என்பவர் முதல் முறையாக 1914ல் ரத்த மாற்று சிகிச்சையை அளித்தார்.

ரத்தத்தில் ரசாயன சோடியம் சிட்ரேட் கலந்து ஆபரேஷன் செய்தார். ரத்தத்தில் இதை கலந்தால் ரத்தம் உறையாது. எனவே, ஆபரேஷன் செய்யும் போது ரத்தம் தானமாக கொடுப்பவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையை உருவாக்கினார். அது தான் ரத்த சேமிப்பு வங்கிகள் உருவாக காரணமாயின.

லெனின் கிராட்டில் உலகின் முதல் ரத்த வங்கி தொடங்கப்பட்டது. 1939ல் ரத்தப்பிரிவில் ஆர்.எச்., பிரிவுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரோக்கியமான எல்லாரும் ஆண் பெண் என்ற வேறுபாடில்லாமல் ரத்த தானம் செய்யலாம். 18 முதல் 60 வயது வரை ரத்த தானம் செய்யலாம்.

ரத்த தானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ, ஹீமோ குளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும்; ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.

ரத்த தானம் செய்யும்போது ஒருவரது உடலிலிருந்து 300 மி.லி., ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. இந்தளவு ரத்தம் 10 முதல் 21 நாட்களில் உடலில் புதிதாக உற்பத்தியாகி விடும். அதனால், ரத்த தானம் செய்தால் எந்த பின் விளைவும் ஏற்படாது.

ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் ரத்த தானம் செய்யலாம்.

ரத்ததானம் செய்ய 20 நிமிடங்கள் போதுமானது. தானம் செய்த 30 நிமிடங்களுக்கு பின் வழக்கமான பணிகளை செய்யலாம்.

ரத்ததானம் செய்ததில் கின்னஸ் சாதனை படைத்தவர். தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த மவுரிஸ் கிரெஸ்விக். 1944ல் தன் 18வது பிறந்த நாளில் ரத்த தானம் செய்ய ஆரம்பித்தவர், அது முதல் ஒவ்வொரு 56 நாட்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்து இதுவரை 350 முறை ரத்ததானம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். இப்போது அவரின் வயது 79. இதுவரை 195 லிட்டர் ரத்தம் தானமாக வழங்கியுள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.