Jump to content

புலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன? விளக்கும் அமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் வெளியிடுகையில்,

சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியது.

இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு பிரிவினர் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியையும் இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தவில்லை.

அரசியல்வாதிகளே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்தி வருகின்றனர்.

அத்துடன், இந்த குற்றச்சாட்டுக்களுக்கான நோக்கம், எதிர்கால அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவே.

தமது சுயலாப அரசியலுக்காக இந்த பயங்கரவாத தாக்குதலை வேறொரு திசையை நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.

சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த கால சிங்கள அரசியல்வாதிகள், தமிழ் மொழியை தடை செய்தனர், தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மறுப்பு தெரிவித்தனர். தமிழர்களின் உரிமையை பறித்தனர்.

இவ்வாறான செயற்பாடுகளை சிங்கள அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள், பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது.

தமிழ் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பங்குதாரர்களாக்கிய துரோகத்தை சிங்கள அரசியல்வாதிகளே மேற்கொண்டனர்.

இதேவேளை, இலங்கை மீதான தாக்குதலானது, இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடு என குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/213301?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

Quote

 

இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு பிரிவினர் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியையும் இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தவில்லை.

அரசியல்வாதிகளே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்தி வருகின்றனர்.

அத்துடன், இந்த குற்றச்சாட்டுக்களுக்கான நோக்கம், எதிர்கால அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவே.

 

இரத்த ஆறு ஓடுமென்ற நீங்கள் இப்போ ஏன் பம்முகிறீர்கள்??

தலைநகரில் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைப்பதில் அரசியல்வாதிகள், இராணுவத்தின் பங்கு நிச்சயமாக உண்டு. 

எந்த கட்சி வந்தாலும் அமைச்சர் ஆக பதவி ஏற்கின்றீர்கள். அது எத்தகைய அரசியல் ?

உங்களை கட்சி பேதமின்றி மனோ கணேசனில் இருந்து விமல் வீரவன்ச வரை குற்றம் சாட்டுகிறார்கள். ஆகவே உங்களின் பங்கு உண்டு என மக்கள் சந்தேகப்படுவது நியாயம் தானே?

நீங்களும் அசாத் அலியும் குய்யோ முறையோ என பாராளுமன்றத்தில் அதீதபிரசங்கம் செய்வது ஏன் உங்களில் குற்றம் இல்லை எனில்??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

என்ன  மூஞ்சூறு குறுக்கு  மறுக்கா  ஓடுது????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இதேவேளை, இலங்கை மீதான தாக்குதலானது, இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடு

hqdefault.jpg

சட்டை எனுதில்லை பகிடி.. சூடு சொரணை உள்ள சிங்கன் உடனே ரிஸ்மிஸ் செய்குக.. 😎

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

 

நீங்களும் அசாத் லியும் குய்யோ முறையோ என பாராளுமன்றத்தில் அதீதபிரசங்கம் செய்வது ஏன் உங்களில் குற்றம் இல்லை எனில்??

 

யார் இந்த அசாத் அலி? எங்கே இவரை பற்றி அறிந்தீர்கள்?

இலங்கை பாராளுமன்றத்தில் இப்படி ஒரு அசாத் அலி பேசியது பற்றி செய்தி எதுவும் வந்ததாக தெரியவிவில்லையே?

அசாத் சாலி என்பவர் மேல்மாகாண ஆளுநராக இருக்கிறார். ஆளுநர்கள் பாராளுமன்றத்தில் பெசுவதில்ல்லையே?

அது போக இந்த நுணாவில் அலியும் இவர்களில் ஒருவராமே? இங்கே யாழ் களத்தில் அடிக்கடி எழுதுவார் என்றும் இந்த களத்தில் அவரது பெயர் எதோ நுனாவ் என்று தொடங்குவதாகவும் கதை அடிபட்டது. உங்களுக்கு அவரை தெரியுமா? இப்படியும் யாரும் எழுதலாமா? 🤪, இது ஒரு உதாரனம் தான், தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். அதனால் தான் இந்த நுனாவ் அலி பற்றி எழுதி பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

4 hours ago, Jude said:

யார் இந்த அசாத் அலி? எங்கே இவரை பற்றி அறிந்தீர்கள்?

இலங்கை பாராளுமன்றத்தில் இப்படி ஒரு அசாத் அலி பேசியது பற்றி செய்தி எதுவும் வந்ததாக தெரியவிவில்லையே?

அசாத் சாலி என்பவர் மேல்மாகாண ஆளுநராக இருக்கிறார். ஆளுநர்கள் பாராளுமன்றத்தில் பெசுவதில்ல்லையே?

அது போக இந்த நுணாவில் அலியும் இவர்களில் ஒருவராமே? இங்கே யாழ் களத்தில் அடிக்கடி எழுதுவார் என்றும் இந்த களத்தில் அவரது பெயர் எதோ நுனாவ் என்று தொடங்குவதாகவும் கதை அடிபட்டது. உங்களுக்கு அவரை தெரியுமா? இப்படியும் யாரும் எழுதலாமா? 🤪, இது ஒரு உதாரனம் தான், தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். அதனால் தான் இந்த நுனாவ் அலி பற்றி எழுதி பார்க்கிறேன்.

அசாத் சாலி என்பது அவரது பெயர். சூ , ஜூட் பிழையை கண்டு பிடிச்சிட்டாராம்.

முஸ்லிம் தீவிரவாதிகள் தேவாலயங்களை தாக்கவில்லை என்று சொன்ன பெரியவர் யாரப்பா?1f92a.png

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

அசாத் சாலி என்பது அவரது பெயர். சூ , ஜூட் பிழையை கண்டு பிடிச்சிட்டாராம்.

முஸ்லிம் தீவிரவாதிகள் தேவாலயங்களை தாக்கவில்லை என்று சொன்ன பெரியவர் யாரப்பா?1f92a.png

உண்மையில் இந்த பயங்கரவாதிகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தேவாலயங்களை தாக்கியதாக நான் அறியவில்லை. சிலர் சில இணைப்புகள் தந்திருந்தார்கள். இனித்தான் பார்க்க வேண்டும். இவர்கள் முட்டாள் பயங்கரவாதிகள். தீவிரவாதிகள் என்று ஐப்னா முஸ்லிம் மாதிரி எழுதாதீர்கள். ரோமை பிடிக்க மட்டக்களப்பில் போராடுவதாக வீடியோவில் இந்த எருமைகள் சொன்னதாக எங்கோ படித்த  நினைவு. யாரோ ஏதோ தேவைக்கு உந்த முட்டாள்களை பயன்படுத்துகிறார்கள்.அமெரிக்க அரசு கோத்தாவின் குடி உரிமையை அகற்றி விட்டதாக கடிதம் அனுப்பி இருப்பதாகவும் செய்தி.

Link to comment
Share on other sites

3 hours ago, Jude said:

உண்மையில் இந்த பயங்கரவாதிகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தேவாலயங்களை தாக்கியதாக நான் அறியவில்லை. சிலர் சில இணைப்புகள் தந்திருந்தார்கள். இனித்தான் பார்க்க வேண்டும். இவர்கள் முட்டாள் பயங்கரவாதிகள். தீவிரவாதிகள் என்று ஐப்னா முஸ்லிம் மாதிரி எழுதாதீர்கள். ரோமை பிடிக்க மட்டக்களப்பில் போராடுவதாக வீடியோவில் இந்த எருமைகள் சொன்னதாக எங்கோ படித்த  நினைவு. யாரோ ஏதோ தேவைக்கு உந்த முட்டாள்களை பயன்படுத்துகிறார்கள்.அமெரிக்க அரசு கோத்தாவின் குடி உரிமையை அகற்றி விட்டதாக கடிதம் அனுப்பி இருப்பதாகவும் செய்தி.

அவரின் காணொளியை பார்த்ததால் தான் எழுதினேன். பெயரை எழுதியதில் பிழை இருக்கலாம். 

புனைகதைகளை எழுதி எனக்கு எதுவும் லாபம் வரப்போவதில்லை.

Link to comment
Share on other sites

2 minutes ago, nunavilan said:

அவரின் காணொளியை பார்த்ததால் தான் எழுதினேன். பெயரை எழுதியதில் பிழை இருக்கலாம். 

புனைகதைகளை எழுதி எனக்கு எதுவும் லாபம் வரப்போவதில்லை.

அசாத் சாலி முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். நீங்கள் தவறாக எழுதியதாக நினைத்தேன். இப்போது ஆளுநர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

உண்மையில் இந்த பயங்கரவாதிகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தேவாலயங்களை தாக்கியதாக நான் அறியவில்லை. 

முன்பு  இஸ்லாமியர்கள் உலகம் எங்கேயும் தேவாலயங்களை தாக்கியதில்லை என்றீர்கள்...

இப்போ ஐரோப்பாவுல தாக்கியதில்லை நான் கேள்விபட்டதில்லை என்கிறீர்கள்..;

 

ஆதாரம் தந்தாச்சு  ,

https://www.bbc.com/news/world-europe-36892785

 

இனிமேல் பங்களாதேசில் தேவாலயத்தை யாரும் தாக்கவில்லையென்று ஆரம்பிப்பீர்கள்.

மதத்துக்காக மக்களை கொல்பவர்கள் கொடியவர்கள்,  அந்த கொடிய தீவிரவாதிகளை காப்பாற்ற நினைப்பவர்கள், அவர்களுக்கு முட்டு கொடுப்பவர்கள் அவர்களைவிட கொடியவர்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, valavan said:

இனிமேல் பங்களாதேசில் தேவாலயத்தை யாரும் தாக்கவில்லையென்று ஆரம்பிப்பீர்கள்.

மூக்கு சாத்திரம் பார்க்கும் வியாபாரமா? எப்படி போகிறது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Jude said:

மூக்கு சாத்திரம் பார்க்கும் வியாபாரமா? எப்படி போகிறது?

 

எதையும் சொல்லி சமாளீக்க முடியவில்லையா? பலபேருக்கு இனிமேதான் புரியும் இதுநாள்வரை ஜூட் என்ற பெயரில் ஒளிந்திருந்த இவர்  யூசுப் பதான் என்று.

Link to comment
Share on other sites

1 hour ago, valavan said:

எதையும் சொல்லி சமாளீக்க முடியவில்லையா? பலபேருக்கு இனிமேதான் புரியும் இதுநாள்வரை ஜூட் என்ற பெயரில் ஒளிந்திருந்த இவர்  யூசுப் பதான் என்று.

அஸ்ஸலாமு அலைக்கும் நானா. மூக்கு சாத்திரத்தில் நீங்கள் விண்ணர் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்லாமு அலைக்கும்னா அதுக்கு ஒரு விளக்கம் இந்த செத்துபோன உங்க புனிதரிடம் இருக்கு ...பார்க்குறீங்களா?

பாருங்க...

https://m.facebook.com/story.php?story_fbid=417201635760082&id=100024107465364&hc_location=ufi

https://m.facebook.com/story.php?story_fbid=417201635760082&id=100024107465364&hc_location=ufi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தவாரம் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் பலரும் இத்தாக்குதலில் ஈடுபட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளையும் புலிகளையும் ஒப்பிட்டு நோக்கி, வேறுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் போராட்டம் மதம் சார்ந்ததல்ல என்பதோடு, மற்றைய இனங்களின் மதத்தை அழித்து தமது மதத்திற்கு மாற்றும் நோக்கத்தில் அல்ல என்றும் கூறுகிறார்கள்.

பொதுமக்களை வேண்டுமென்று புலிகள் இலக்குவைக்கவில்லை என்று சிலர் கூறினாலும் கூட, அவப்போது அரந்தலாவை, சிறி மஹா போதி, தெஹிவளைப் புகையிரதம், காத்தான்குடி, ஏறாவூர், கட்டுப்பெத்தை போன்றவை தவிர்க்கமுடியாமல் மனதில் வந்துபோகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

கடந்தவாரம் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் பலரும் இத்தாக்குதலில் ஈடுபட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளையும் புலிகளையும் ஒப்பிட்டு நோக்கி, வேறுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் போராட்டம் மதம் சார்ந்ததல்ல என்பதோடு, மற்றைய இனங்களின் மதத்தை அழித்து தமது மதத்திற்கு மாற்றும் நோக்கத்தில் அல்ல என்றும் கூறுகிறார்கள்.

பொதுமக்களை வேண்டுமென்று புலிகள் இலக்குவைக்கவில்லை என்று சிலர் கூறினாலும் கூட, அவப்போது அரந்தலாவை, சிறி மஹா போதி, தெஹிவளைப் புகையிரதம், காத்தான்குடி, ஏறாவூர், கட்டுப்பெத்தை போன்றவை தவிர்க்கமுடியாமல் மனதில் வந்துபோகிறது.

கனடாவில் உளவியலாளர்களினால் ஒரு ஆராய்சி செய்யப்பட்டது அதில் சூதாடுபவர்கள் சூதாட்டக்குதிரையை தெரிவு செய்ததின் பின் அக்குதிரைகள்தான் வெல்லும் என தீர்க்கமாக நம்புவதைக்கண்டறிந்த்தனர் ஒரே குதிரை தெரிவுக்கு முன்னரை விட தெரிவுக்கு பின்னர் அவர்களது நம்பிக்கையில் வலுவடைகிறது ,நாம் ஒன்றை வரித்து கொண்டுவிட்டால் அதுவே எம்மை ஆட்கொண்டுவிடும் சாதி , மதம் , இனம் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

கனடாவில் உளவியலாளர்களினால் ஒரு ஆராய்சி செய்யப்பட்டது அதில் சூதாடுபவர்கள் சூதாட்டக்குதிரையை தெரிவு செய்ததின் பின் அக்குதிரைகள்தான் வெல்லும் என தீர்க்கமாக நம்புவதைக்கண்டறிந்த்தனர் ஒரே குதிரை தெரிவுக்கு முன்னரை விட தெரிவுக்கு பின்னர் அவர்களது நம்பிக்கையில் வலுவடைகிறது ,நாம் ஒன்றை வரித்து கொண்டுவிட்டால் அதுவே எம்மை ஆட்கொண்டுவிடும் சாதி , மதம் , இனம் போல.

நான் ஏதும் தவறுதலாக எழுதிட்டேனோ? 

சிலவேளை, நான் மேலே சொன்ன தாக்குதல்கள் புலிகளால் நடத்தப்பட்டவை என்று நம்புவதால் அப்படி எழுதுகிறேனோ தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நீங்கள் எங்களைப்போலில்லாமல் , இந்த வட்டத்திற்குள் நிற்காமல் தெளிவாக சிந்திகின்றீர்கள் என்றுதான் குறிப்பிட்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

கொள்கையுடன்,  போராடியமையால்தான்...  புலிகளை தமிழ் மக்கள் ஆதரித்தார்கள். -மைத்திரி-

Link to comment
Share on other sites

On 4/29/2019 at 4:14 AM, ரஞ்சித் said:

புலிகளின் போராட்டம் மதம் சார்ந்ததல்ல என்பதோடு, மற்றைய இனங்களின் மதத்தை அழித்து தமது மதத்திற்கு மாற்றும் நோக்கத்தில் அல்ல என்றும் கூறுகிறார்கள்.

திட்டமிட்ட இனப்படுகொலைகளை மேற்கொண்ட சிங்கள-பௌத்த மத வெறியர்களுக்கு (அரச பயங்கரவாதிகளுக்கு) எதிரான போராட்டமே ஈழத்தமிழரின் (விடுதலைப் புலிகளின்) போராட்டம். விடுதலைப் புலிகள் இல்லாத சூழ்நிலையில் அது இன்றும் ஐ.நா. சபை உட்பட்ட சர்வதேச சக்திகளின் துணையுடன் விக்கினேஸ்வரன், திறமையற்ற சம்பந்தன் போன்றவர்களின் தலைமையில் தொடருகின்றது.

Link to comment
Share on other sites

On 4/27/2019 at 7:50 PM, பெருமாள் said:

சிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசியல்வாதிகளால் தான் தானுடப்பட முஸ்லிம்கள் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளின் பின்னால் நிக்கிறம் என்று ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை காணி திருட்டுகளில் மன்னாதி மன்னனான ரிஷாட் பதியுதீன் மறைமுகமா வழங்கியிருக்கிறார்! முதுகெலுப்பிருந்தா இந்த மனுஷன் இதை நேரடியா சொல்லிருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.