Jump to content

இலங்கை தாக்குதல், முடிவல்ல என ISIS எச்சரிக்கை - சாய்ந்தமருது தாக்குதலுக்கும் பொறுப்பேற்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

0066FEAC-0B39-4B14-85E2-B8CE9FD41B74-600x554.jpg

 

எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்து.
 
நேற்று முன்தினம் இரவு சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலியான  தீவிரவாதி ஒருவரும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின்  தலைவரான சஹரான் ஹசீம் ஆகிய இருவரும் ஒன்றாக எடுத்துள்ள புகைப்படங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதென SITE  இணைய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
2
 
கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸுடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்துள்ளது.
 
துப்பாக்கியுடன் இருக்கும் சகோதரர் றிழ்வானுடன் , ஸஹ்ரான் இருக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, colomban said:

0066FEAC-0B39-4B14-85E2-B8CE9FD41B74-600x554.jpg

கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸுடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்துள்ளது.

அதில்... நால்வர் பத்துவயதும் நிரம்பாத சிறுவர்கள். இருவர் பெண்கள்.
இதனை.... தாக்குதல் என்பதிலும் பார்க்க...
குடும்பத்துடன்... தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல்குழுவின் முக்கிய தலைவர்  பந்தாவுக்கு தானும் வேறு ஒரு இடத்தில் அதே சமயத்தில் தாக்குதல் நடத்த போவதாக சாக்கு சொல்லி மற்றவர்களுடன் அல்லாவுக்கு உறுதிமொழி  கொடுத்து புறப்பட்டபின் சேர்ந்து வந்த அடிநிலை சீடர்கள் திட்டமிட்டபடி தாக்குதலில் இறந்துவிட குறித்த தலைவர் மட்டும் தாக்குதல் எதுவும் செய்யாமல் வேறுவழியால் சென்று தப்பித்து இன்னும் உயிருடன் இருப்பதாக தகவல் ஒன்று சொல்கிறது. 

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

அதில்... நால்வர் பத்துவயதும் நிரம்பாத சிறுவர்கள்.

தவறான பிள்ளை வளர்ப்பு பல்வேறு வடிவங்களில் முசுலீம் சமூகத்தில் இருப்பதை மறுக்க முடியாது. உதரணமாக, இவர்கள் வாழும் பகுதிகளில் ஒருவர் வாகன விபத்தில் அகப்பட்டால் காயமுற்றவரைக் கவனத்தில் கொள்வதற்குமுன்பாக, வாகனச் சாரதியை உண்டு இல்லை எனப்பண்ணுவதில் முன்நிற்பார்கள், அதில் சிறுவர்களின் பங்கும் பெருமளவு இருக்கும். விபத்து ஏற்பட்டால் அந்த இடத்தில் நிற்காது உடனே காவல் நிலையத்திற்கு வந்துவிடவேண்டும் என்று காவற்துறையே வாகன சாரதிகளுக்கு அறிவுரை கூறுமளவிற்கு, இவர்கள் சமூக வளர்ச்சி சிறுவர்களையும் வளர்த்தெடுக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

தாக்குதல்குழுவின் முக்கிய தலைவர்  பந்தாவுக்கு தானும் வேறு ஒரு இடத்தில் அதே சமயத்தில் தாக்குதல் நடத்த போவதாக சாக்கு சொல்லி மற்றவர்களுடன் அல்லாவுக்கு உறுதிமொழி  கொடுத்து புறப்பட்டபின் சேர்ந்து வந்த அடிநிலை சீடர்கள் திட்டமிட்டபடி தாக்குதலில் இறந்துவிட குறித்த தலைவர் மட்டும் தாக்குதல் எதுவும் செய்யாமல் வேறுவழியால் சென்று தப்பித்து இன்னும் உயிருடன் இருப்பதாக தகவல் ஒன்று சொல்கிறது. 

Ãhnliches Foto

தலைவர்.... அடிநிலை சீடர்களுக்கு,  "அல்வா"  கொடுத்து விட்டு.....
வேறு ஆட்களுக்கு... பயிற்சி கொடுக்கப் போயிருப்பார். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.