Jump to content

தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்த தகவல்களை இந்தியா அறிந்திருந்தும் தலையிடாமைக்கான காரணத்தை தெரிவிக்கிறார் கேர்ணல் ஹரிகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்த தகவல்களை இந்தியா அறிந்திருந்தும் தலையிடாமைக்கான காரணத்தை தெரிவிக்கிறார் கேர்ணல் ஹரிகரன்

 

தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்களை இந்தியா அறிந்திருந்தும் இலங்கையின் உள்நாட்டு விடயமான பாதுகாப்பில் அளவுக்கு மீறி தலையிட்டால் அது இலங்கை அரசியலில் இந்திய எதிர்ப்பை மேலெழச் செய்வதற்கே வழி வகுக்கும் என்பதாலேயே பொறுமையாக இருந்தது என்று இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவரும் எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். 

colonel-hariharan.jpg

அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,

கேள்வி:- தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் டிதாடர்பாக இந்திய பாதுகாப்பு துறைக்கு தகவல்கள் கிடைத்ததாகவும், இந்தியப் புலனாய்வுத்துறை தகவல்களை வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. இது குறித்த தகவல்களை தாங்கள் அறிவீர்களா?

பதில்:- இந்த தகவல் இந்திய பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களுக்கு எதிராக விசேடமாக அமைக்கப்பட தேசிய ஆய்வுக் குழு (NIA -National Investigation Agency) சந்தேகத்தின் பேரில் கைதான ஒரு தீவிரவாதியை விசாரணை செய்யும் போது தற்செயலாகத் தெரியவந்தது. ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த தகவலை இந்தியா இலங்கை அரசுக்கு அளித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்தியது. இலங்கை அரசுக்கு அளித்த குறிப்பில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் தாக்கப் படலாம் என்ற விவரமும் அளிக்கப்பட்டு இருந்தது. 

மேலும் தற்கொலைத் தாக்குதல்களை தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைவர் முகமது சஹ்ரான் நடத்த திட்டமிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி:- இந்தியா புலனாய்வு கட்டமைப்புக்கு இந்த தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் கிடைத்திருக்கின்றது என்றால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குழுவில் இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டு கலந்துரையாடப்பட்டதா?

பதில்:- இந்திய அரசியல் அமைப்பின் பிரகாரம் தேசிய பாதுகாப்பு குழு மற்றும் இறுதி முடிவை எடுக்கும் இந்திய அமைச்சர்சபையின் பாதுகாப்பு குழு ஆகிய இரு அமைப்புகளும் தீவிரவாதம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் விவாதிப்பது வழக்கம்.

2014 இல் சென்னையில் இலங்கையைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞர் ரயிலில் ஒரு வெடிகுண்டை வெடித்த பின்பு, பாகிஸ்தான் அரசின் உதவியுடன் இலங்கை மூலமாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவலை தவிர்க்க இலங்கை உளவு நிறுவனங்களுடன் இந்திய உளவு நிறுவனங்கள் ஒத்துழைத்து வருகிறார்கள்.

2014 இல் இருந்து உள்துறையும் தவ்ஹீத் இயக்கங்களின் செயல்பாடுகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆகவே, சஹ்ரான் காசீம் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாஅத் நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்களை அறிந்திருப்பார்கள். ஆகவே, ஏப்ரல் மாதத்தில் இந்தியா இலங்கைக்கு அனுப்பிய ஜமாஅத் அமைப்பின் தாக்குதல் பற்றிய விவரங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குழுவில் நிச்சயம் அளிக்கப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும்.

கேள்வி:- நியூஸிலாந்து சம்பவத்திற்கு பழிதீர்ப்பதற்கு இலங்கை இலக்கு வைக்கப்பட்டது என்ற கருத்தினை ஏற்றுக்கொள்ளமுடியுமா?

பதில்;:- இத்தகைய பெரும் தாக்குதலை ஈஸ்டர் திருநாள் அன்று நடத்த நிச்சயித்து அதற்கான செயல்பாடுகளை ஒருங்கிணைக்க பல மாதங்களுக்கு முன்பே பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி இருக்க வேண்டும். ஆனால், நியூஸிலாந்து தாக்குதலுக்குப் பின்னர் இந்த தாக்குதல்கள் நடத்தியதால் உலகுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் சிரியாவிலும் ஈராக்கிலும் ஏற்பட்ட இழப்புகளுக்கு பின்பும் தனது வலிமை குறையவில்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. 

ஆகவே, தோல்வியால் மனம் சோர்ந்த ஐ.எஸ். போராளிகளுக்கு, இந்த தாக்குதல்கள் ஊக்கமூட்டுவதாக இருக்கின்றன.

கேள்வி:- இலங்கையினை தீவிரவாதிகள் இலக்குவைப்பதற்கு அடிப்படையில் என்ன காரணம் இருக்கும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:- இலங்கையில் மதவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும் பல ஆண்டுகளாகத் தொடரும் காழ்ப்புணர்ச்சி ஓரளவு குறைந்தாலும் அது முழுமையாக மறையவில்லை. மத, இன வாதிகளை அரசியல் கட்சிகள் முக்கியமாக பௌத்த மதப் பேரினவாதிகளை தங்களது ஆதாயத்திற்காக தூண்டிவிட்டு முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்களை 2014 மற்றும் 2018 இலும் நிகழ்த்தினார்கள். அவர்களை உடனுக்குடன் களைந்து எறிய அரசாங்கம் மெத்தனமாக இருந்ததோடு, கையாலாகாத்தன்மையில் இருந்ததும் நாடறிந்த உண்மை. இதனால் இஸ்லாமிய மக்கள் மனக்கசப்பு அடைய, அவர்களிடையே தௌஹீத் ஜமாஅத் போன்ற மதவாத இணைப்புகள் நடத்திய கடும்போக்கில் நடத்திய தீவிரவாத ஆதரவுப் பிரசாரமும் ஓரளவு வெற்றி கண்டது. 

மேலும், இந்த கலக்கமானதும் குழப்பமானதுமான உள்நாட்டு சூழ்நிலையையும் அரசின் உட்பூசலால் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு ரீதியான செயற்பாடுகளில் காணப்பட்ட மெத்தனப்போக்கும் தாக்குதல்கள் வெற்றி காணும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளமை கண்கூடு.

கேள்வி:- இலங்கையில் தாக்குதல்கள் நடைபெறும் என்பதை அறிந்தும் இந்தியா பிராந்திய பாதுகாப்பு கருதி தலையீடு செய்யாமைக்கு அல்லது அதிக கரிசனை கொண்டு விழிப்பூட்டாமைக்கான காரணம் என்ன?

பதில்:- இலங்கையுடன் இந்தியா நெருங்கிய நட்புறவு கொண்ட நாடு. ஆனால், இந்தியா வலிமைவாய்ந்த நாடு என்பதால் இலங்கையின் உள்நாட்டு விடயமான பாதுகாப்பில் அளவுக்கு மீறி தலையிட்டால் அது இலங்கை அரசியலில் இந்திய எதிர்ப்பை மேலெழச் செய்வதற்கே வழி வகுக்கும். 1987 இல் இந்தியா பெருமளவில் இலங்கையின் விடயங்களில் தலையிட்டதால் ஏற்பட்ட பக்க விளைவுகள் தற்போதுவரை நீடித்துக்கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததொன்றாகும்.

கேள்வி:- இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கட்டமைப்பில் பலவீனம் இருக்கின்றது என்று கருதுகின்றீர்களா?

பதில்:- இலங்கை பாதுகாப்பு படைகள் திறமை வாய்ந்தவை என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், இலங்கையைப் போன்ற ஜனநாயக நாட்டில் அவை எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அரசாங்கமே நிர்ணயிக்க வேண்டும். அத்தகைய வழிநடத்துதலில் உள்ள குறைபாடுகளை ஈஸ்டர் தாக்குதல்கள் எடுத்து காட்டியுள்ளன. அதனால் பாதுகாப்பு படைகளை குறை சொல்லுவதில் பயனில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.

கேள்வி:- இலங்கை மீதான தீவிரவாத தாக்குதல் பிராந்திய பாதுகாப்பில் செல்வாக்கினை செலுத்துவதால் இந்தியா இதுபற்றி எத்தகைய கரிசனையை கொள்கின்றது?

பதில்:- நான் ஏற்கனவே உங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில் இதுபற்றி விரிவாக கூறியுள்ளேன். இந்தியாவும் இலங்கையும் பூகோள ரீதியாக தொப்புள் கொடி இணைப்புக் கொண்டவை.

ஆகவே, ஒரு நாட்டுக்கு ஏற்படும் பாதுகாப்பு விளைவுகள் மற்றவரையும் பாதிக்கும். ஆகவே, இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி எந்த அரசு பதவி ஏற்றாலும் இந்த விசேட உறவை நினைவு கொண்டே செயல்படும். அந்த வகையிலேயே இந்தியா கரிசனை கொள்ளும்.

கேள்வி:- இலங்கையின் கடற்படை கட்டமைப்பு மற்றும் கடலோரக் காவல் பற்றி உங்களது பார்வை எவ்வாறு உள்ளது?

பதில்:- கடலோரக்காவல் கட்டமைப்பு எவ்வளவு திறமையுடன் செயற்பட்டாலும் திரைகடல் பரப்பில் ஊடுருவலை நூற்றுக்கு நூறுவீதம் நிறுத்துவது கடினம். எனினும் இலங்கையின் கடற்படை மேலும் வலுவாகவும் எந்நேரமும் கண்காணிப்புடனும் இருக்க வேண்டும்.

கேள்வி:- உயிர்த்த ஞாயிறில் நடைபெற்ற வெடிப்புச் சம்பவங்களில் ரி.ஏ.ரி.பி குண்டுகளே பயன்படுத்தப்பட்டதாக படைத்தரப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ள நிலையில் இதனை உள்நாட்டில் தயாரித்திருக்க முடியுமா? அவ்வாறாயின் இக்குண்டுகளுக்கான இரசாயன பதார்த்தங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்குமா?

பதில்:- ரி.ஏ.ரி.பி (TATP ) தயாரிப்புக்கான மூலப் பொருட்களான அசிடோன் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியன இலங்கையில் எளிதாக கிடைக்க கூடியவை. உதாரணமாக அசிடோன் வர்ணப்பூச்சுக்கு உதவும் பொருளாகும். அதுபோல் ஹைட்ரஜன் பெராக்சைடும் மருத்துவ தேவைக்காக உபயோகிக்கப்படுகிறது. ஆகவே, அவற்றை வியாபார ரீதியாக இலங்கையில் இறக்குமதி செய்ய எந்தவிதமான தடையும் இருந்திருக்காது. ஆனால், அவற்றை உபயோகித்து வெடிகுண்டு தயாரிப்பின் நுணுக்கம் கற்றவர் யார் என்பதே கேள்வி.

கேள்வி:- தீவிரவாத ஒழிப்புக்கு இலங்கை மற்றும் பிராந்திய நாடுகள் உடனடியாக எவ்வாறான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முன்மொழிகின்றீர்கள்?

பதில்:- நாட்டின் மக்களிடையே நல்லுணர்வு வளர சில செயல்பாடுகளை மாற்ற வேண்டும். அதில் மொழி மற்றும் இன ரீதியான ஆளுமைப் பிரிவுகள். உதாரணமாக இலங்கை பிரஜைக்கான அடையாளச் சீட்டில் சிங்களவர், தமிழரா அல்லது இஸ்லாமியரா என்ற குறிப்பு எதற்கு என்று ஒரு முறை, நான் மறைந்த தலைவர் காமினி திசாநாயக்கவிடம் கேட்டது நினைவுக்கு வருகிறது. இது மாதிரி பல விடயங்களில் அடிப்படையில் அணுகுமுறை மாற்றம் ஏற்படுத்துவது அவசியம்.

தெற்காசிய அளவில் பயங்கரவாத விவரங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் தோற்றம்பெற வேண்டும். அதற்கு முதலில் இலங்கை அரசாங்கத்தின் உள்ளக செயற்பாடுகள்  மாற்றப்படவேண்டும்.

பொலிஸார் பொதுமக்களுடன் நேசத்துடன் செயல்பட ஊக்குவிக்கும் வழிமுறைகளை செயலாக்குவது அவசியம். அவர்கள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கே பயங்கரவாத சட்டம் ஊக்குவிக்கிறது. ஆகவே, அவ்வாறு நடப்பதைத் தவிர்க்க கடுமையான கட்டுப்பாடுகளை நிர்ணயிக்க வேண்டும். ஜனநாயக ஆட்சியில் அரசியல் தலையீடு தவிர்க்க முடியாதது. ஆனால், அது சட்ட மன்றம் என்ற வேலிக்குள் அடைக்க நீதிமன்றம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஊராரைக் குறைகாணும் ஊடகங்கள், சில சமூக வலைத்தளங்கள் பொய்யான செய்திகளைப் பரப்பி சமூகத்தில் பீதியைக் கிளப்பி விடுவது அதிகமாகி வருகிறது. இதைத் தடுக்க சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு பல விடயங்களில் உடனடியாக மாற்றம் அவசியமாகின்றது. இந்தக் கருத்துக்களை உள்வாங்கும் சிலர் பின்னர் இந்தியாவின் குறைபாடுகளை சுட்டிக் காட்டலாம். உண்மைதான். மேற்கூறிய அத்தனையும் இந்தியாவுக்கும் ஏனைய தெற்காசிய நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால், நான் இங்கே கூற வந்தது இலங்கையைப் பற்றியே என்பது முக்கியமானதாகின்றது.

நேர்காணல் ஆர்.ராம்

http://www.virakesari.lk/article/54871

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கிந்தியாவின் சுத்தப் பொய்யும் புரட்டும்.

இந்த தாக்குதல்கள் முதலில் தமிழ் பகுதிகளில் நடப்பதாகவும், சிங்களத்துக்கு  பெரியளவில் விளைவுகள் இருக்காது எனவும் கிந்தியவும் சிங்களமமம் நன்கு அறிந்து  இருந்தது.

இந்தா அடிப்படையிலேயே, தாக்குகித்தல் நடத்தப்பட்டால் அழிவை தமிழர்களே எதிர்கொள்ளுவார்கள் என்பதும், சிங்கள அரசுக்கும், சிங்களத்துக்கு முற்றான  நன்மைகளும், மாற்றின அரசியல் தீர்வை முற்றாக நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கி விடலாம் என்பதும் கிந்தியாவினதும், சிங்களத்தினதும் திட்டமாகும்.

இதை மறைப்பதத்திற்கு, கிந்தியா மலையாள பழியை இறக்கி இருக்கிறது பிரச்சாரத்திற்கு.

ஹிந்தியா,  சிங்கள, மலையாள பயங்கரவாதத்தை அழிப்பதே இந்த போயிரத்தியத்தின் பாதுகாப்பையம், அமைதியையும் நிலை நாட்டும்.         

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.