Jump to content

கடலில் வாழும் இரண்டு லட்சம் வகை வைரஸ்கள் கண்டுபிடிப்பு - நீங்கள் பயப்பட வேண்டுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஹெலன் பிரிக்ஸ் பிபிசி
 
கடலில் வாழும் இரண்டு லட்சம் வகையான வைரஸ்கள் கண்டுபிடிப்பு - நீங்கள் பயப்பட வேண்டுமா?படத்தின் காப்புரிமை ANNA DENIAUD, FONDATION TARA OCÉAN

உலகம் முழுவதும் கடல் பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த வைரஸ்கள் உள்ளது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த வைரஸ்கள் கடலின் உள்ளே சுமார் 4,000 மீட்டர்கள் ஆழத்தில் வட துருவம் முதல் தென் துருவம் வரை உள்ள பகுதிகளில் காணப்படுவதாக அந்த ஆராய்ச்சி முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், இவை திமிங்கலம், இரால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

பல அதிசயங்கள் நிறைந்த கடல்வாழ் உயிரிகளின் வாழ்க்கையில் இந்த வைரஸ்களின் பங்கு குறித்த ஆய்வுகளை இப்போதுதான் ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட கடல் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீரின் மாதிரிகளை அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததன் ஊடாகவே இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதில் குறிப்பாக, மொத்தமுள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வைரஸ்களை அவற்றின் இடம் மற்றும் ஆழத்தை பொறுத்து ஐந்தே குழுக்களில் வகைப்படுத்த முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

"ஐந்து வகைப்பாடுகளிலுள்ள வைரஸ்களின் மரபணுக்களை நாங்கள் பரிசோதித்தபோது, அவை தாங்கள் வாழும் பகுதிக்கேற்ப தகவமைத்து கொள்ளும் திறனை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது," என்று அந்த ஆராய்ச்சிக் குழுவை சேர்ந்த ஒருவரான ஆன் கிரிகோரி கூறுகிறார்.

அதேபோன்று, ஆர்டிக் பெருங்கடலில் பெறப்பட்ட தண்ணீர் மாதிரியில் பல்வேறு வகையான வைரஸ்கள் இருந்தது தங்களை ஆச்சர்யப்படுத்தியதாகவும், மேலதிக சோதனையில் அந்த குறிப்பிட்ட கடல் பகுதி வேறுபட்ட வைரஸ்களை பிரிக்கும் இடமாக விளங்குவது தெரியவந்ததாக ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

வைரஸ்கள் கடலில் என்ன செய்கின்றன?

கடலில் வாழும் இரண்டு லட்சம் வகையான வைரஸ்கள் கண்டுபிடிப்பு - நீங்கள் பயப்பட வேண்டுமா?படத்தின் காப்புரிமை Getty Images

உலகம் முழுவதும் சூழ்ந்துள்ள கடல்களில் வைரஸ்கள் நிறைந்துள்ளன. அவை கடல் உயிரிகளின் ஆரோக்கியத்தையும், செயல்பாட்டையும் எப்படி பாதிக்கிறது என்பது குறித்த ஆய்வின் விளிம்பு நிலையிலே ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட சில வகை வைரஸ்கள் கடலில் மிகுந்து காணப்படும் பாசிகளின் பெருக்கத்தை தடை செய்கின்றன என்று விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.

ஒரு லிட்டர் கடல் நீரில் கிட்டதட்ட பல பில்லியன் கணக்கான வைரஸ்கள் காணப்படுகின்றன; அவற்றில் பெரும்பாலானவை இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. தற்போது வெளிவந்துள்ள இந்த ஆராய்ச்சி முடிவுகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வைரஸ்களில் 90%, இதுவரை உருவாக்கப்பட்டுள்ள குழுக்களில் ஒன்றில்கூட வகைப்படுத்த முடியவில்லை.

கடல் வைரஸ்கள் கடலிலுள்ள மற்ற நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் பூஞ்சை உள்ளிட்டவற்றின் மீது செல்வாக்கு செலுத்துவதால் அவை குறித்து அறிந்துகொள்ள அவசியமானதாக கருதப்படுகிறது.

யூடியூப் இவரது பதிவு BBC News Tamil: கடலில் மிதக்கும் நகரங்கள் - எதிர்காலத்தின் கனவுத் திட்டம் இதுதானா?புகைப்பட காப்புரிமை BBC News Tamil BBC News Tamil <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="யூடியூப் இவரது பதிவு BBC News Tamil: கடலில் மிதக்கும் நகரங்கள் - எதிர்காலத்தின் கனவுத் திட்டம் இதுதானா?" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.youtube.com/watch?v=Rpg5xqaArIE~/tamil/science-48078611" width="500" height="269"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை BBC News Tamil</span> <span class="story-image-copyright" aria-hidden="true">BBC News Tamil</span> </span> </figure>

வளிமண்டலத்தில் இருந்து கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்ஸைடு) உறிஞ்சி, நாம் சுவாசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மிதவை வாழிகள் (பிளாங்டன்கள்) உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் வாழ்க்கையில் வைரஸ்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

"நுண்ணுயிரிகள் இல்லை என்றால் இந்த உலகம், அதிலுள்ள கடல்கள், மனிதர்களின் என அனைத்தின் செயல்பாடும் நின்றுவிடும். அப்பேற்பட்ட நுண்ணுயிரிகளை இந்த வைரஸ்கள் எப்படி பாதிக்கின்றன என்று நாங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்" என்று ஒஹாயோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் மாத்யூ சல்லிவன் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சி குறித்த தகவல்கள் 'செல்' என்னும் சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.

https://www.bbc.com/tamil/science-48078611

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.