Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கனம் ஈழப்பிரியன் ஐயா அவர்கட்கு,

விண்ணப்பம்

போட்டியில் முதலாவதாய் வருபவருக்கு விருது கொடுப்பது என்பது காலகாலாமாக எல்லோரும் கடைப்பிடிக்கும் உளுத்துப் போன உத்தி.

நீங்கள் ஒரு புதுமை விரும்பி என்பதும், எதையும் வித்தியாசமாக செய்து அணுகுபவர் என்பதும் எல்லாரும் அறிந்ததே.

அந்தவகையில் இந்த போட்டியில் கடைசியாக வருபவரே வெற்றியாளர் என நீங்கள் அறிவிக்கும் பட்சத்தில், யாழில் போட்டி நடாத்திய யாரும் இதுவரை செய்யாத புதுமையை செய்தவர் என அனைவரும் உங்களை பாராட்டுவர் என்பது என் தாழ்மையான அபிப்ராயம் மட்டுமல்ல நீங்கள் அப்படியே செய்ய வேண்டும் என்பது என் மன்றாட்டமான வேண்டுகோளுமாகும்.

இவ்வண்ணம்,

உங்கள் நிரந்தர ரசிகன்

கோஷான் சே

நீங்கள் எப்பிடியாவது ஒரு விருது எடுத்திட முனைகிறீர்கள். ஆனாலும், இங்கு  பார்க்கும்போது , கடைசியாக வருவதும் இலகுவானது மாதிரி தெரியவில்லை, அதுக்கு மிக கடுமையான போட்டி இருக்கும் போலுள்ளது😂

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நீர்வேலியான் said:

நீங்கள் எப்பிடியாவது ஒரு விருது எடுத்திட முனைகிறீர்கள். ஆனாலும், இங்கு  பார்க்கும்போது , கடைசியாக வருவதும் இலகுவானது மாதிரி தெரியவில்லை, அதுக்கு மிக கடுமையான போட்டி இருக்கும் போலுள்ளது😂

அட்ரா சக்க...அட்ரா சக்க.....அட்ராசக்க......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் கோசான் சே

இந்த வருட ஐபிஎல்லை யாருமே நடாத்த முன்வரவில்லை.உலககிண்ண போட்டியும் நெருங்கி கொண்டிருந்த போதும் யாரும் போட்டி நடாத்த முன்வரவில்லை.அதனால்த் தான் நான் முன்வந்தேன்.அந்த நேரம் பரிசு கொடுப்பதைப் பற்றி சிந்தித்தேன்.சுமையைக் கூட்ட வேண்டாமே என்று விட்டுவிட்டேன்.

இப்போதும் யாரும் பரிசுகள் கொடுக்க முன்வந்தால் அதையும் முன்னுக்கு வருபவருக்கா பின்னுக்கு வருபவருக்கா என்பதை போட்டியில் கலந்து கொண்டவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.ஏனெனில் வழமையில் முன்னுக்கு வருபவருக்கு தான் பரிசில்கள் கொடுப்பது.

யாருக்கு பரிசில்கள் கொடுக்கலாம்?பரிசில்களை யார் வழங்குவார்கள் என்பதை புதியதொரு திரி திறந்து போட்டியாளர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடாத்தி பாருங்கள்.அதன் முடிவுகளை செயல்படுத்தலாம்.
நன்றி.

முன்னுக்கு வாறவர்கள் சொதப்பினாலும் பின்னுக்குள்ளவர்களால் விளையாட்டை மாற்றலாம்.மனம் தளர வேண்டாம்.

2023 ல ஒரு கை பாப்பம் எண்டுறியள். அப்ப சரி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நீர்வேலியான் said:

நீங்கள் எப்பிடியாவது ஒரு விருது எடுத்திட முனைகிறீர்கள். ஆனாலும், இங்கு  பார்க்கும்போது , கடைசியாக வருவதும் இலகுவானது மாதிரி தெரியவில்லை, அதுக்கு மிக கடுமையான போட்டி இருக்கும் போலுள்ளது😂

அப்ப அதுவும் இல்லையா😂

53 minutes ago, குமாரசாமி said:

அட்ரா சக்க...அட்ரா சக்க.....அட்ராசக்க......🤣

அம்மன் கோயில் புக்கை. கோட்டை முனியப்பர் கைவிட்டுட்டாரா? அல்லது நீங்கள் கற்பூரம் கொழுத்தேல்லயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                          Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நந்தன் said:

ஒரு நாள் முதல்வர் சேகுவாரா எங்கேப்பா

46 வது ஓவர் மட்டும் நிரந்தர முதல்வர் என்றுதால் நினைத்தேன்😎! கார்லோஸ் பிராத்வைற் போனதோடு எல்லாம் போய்விட்டது! ஆனால்.....

மீண்டும் வருவேன்!

கோஷான் சே இன்றைக்கு கடைசியாக வந்ததற்கான அவார்ட் உங்களுக்குத்தான்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றைய போட்டி முடிவில்

1 நீர்வேலியான் 16
2 எப்போதும் தமிழன் 16
3 வாத்தியார் 16
4 கந்தப்பு 16
5 நந்தன் 14
6 கிருபன் 14
7 ராசவன்னியன் 14
8 ஏராளன் 14
9 தமிழினி 14
10 மருதங்கேணி 14
11 கறுப்பி 14
12 குமாரசாமி 14
13 அஹஸ்தியன் 12
14 ஈழப்பிரியன் 12
15 சுவி 12
16 புத்தன் 12
17 ரஞ்சித் 12
18 சுவைப்பிரியன் 12
19 ரதி 12
20 பகலவன் 12
21 கல்யாணி 12
22 நுணாவிலான் 12
23 வாதவூரன் 10
24 காரணிகன் 10
25 கோஷான் சே 8
     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான் சே 😁😁

Link to comment
Share on other sites

6 hours ago, goshan_che said:

கனம் ஈழப்பிரியன் ஐயா அவர்கட்கு,

விண்ணப்பம்

போட்டியில் முதலாவதாய் வருபவருக்கு விருது கொடுப்பது என்பது காலகாலாமாக எல்லோரும் கடைப்பிடிக்கும் உளுத்துப் போன உத்தி.

நீங்கள் ஒரு புதுமை விரும்பி என்பதும், எதையும் வித்தியாசமாக செய்து அணுகுபவர் என்பதும் எல்லாரும் அறிந்ததே.

அந்தவகையில் இந்த போட்டியில் கடைசியாக வருபவரே வெற்றியாளர் என நீங்கள் அறிவிக்கும் பட்சத்தில், யாழில் போட்டி நடாத்திய யாரும் இதுவரை செய்யாத புதுமையை செய்தவர் என அனைவரும் உங்களை பாராட்டுவர் என்பது என் தாழ்மையான அபிப்ராயம் மட்டுமல்ல நீங்கள் அப்படியே செய்ய வேண்டும் என்பது என் மன்றாட்டமான வேண்டுகோளுமாகும்.

இவ்வண்ணம்,

உங்கள் நிரந்தர ரசிகன்

கோஷான் சே

கடைசியாக வருபவரை வெற்றியாளர் என அறிவிப்பார்கள் என்றால் நானும் போட்டியில் பங்கு பற்றியிருப்பேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

 

 

இன்றைய போட்டி முடிவில்

1 நீர்வேலியான் 16
2 எப்போதும் தமிழன் 16
3 வாத்தியார் 16
4 கந்தப்பு 16
5 நந்தன் 14
6 கிருபன் 14
7 ராசவன்னியன் 14
8 ஏராளன் 14
9 தமிழினி 14
10 மருதங்கேணி 14
11 கறுப்பி 14
12 குமாரசாமி 14
13 அஹஸ்தியன் 12
14 ஈழப்பிரியன் 12
15 சுவி 12
16 புத்தன் 12
17 ரஞ்சித் 12
18 சுவைப்பிரியன் 12
19 ரதி 12
20 பகலவன் 12
21 கல்யாணி 12
22 நுணாவிலான் 12
23 வாதவூரன் 10
24 காரணிகன் 10
25 கோஷான் சே 8
     

 

tenor-1.gif

நீர்வேலியான் நீ கலக்கிட்டாய், இது போதும், ரெண்டு முண்டு நாளைக்கு இதை வைச்சு சமாளிக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பையன்26 said:

கோஷான் சே 😁😁

பையா வெந்த புண்ணில வேல் பாச்சிறீங்ளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நீர்வேலியான் said:

tenor-1.gif

நீர்வேலியான் நீ கலக்கிட்டாய், இது போதும், ரெண்டு முண்டு நாளைக்கு இதை வைச்சு சமாளிக்கலாம்

எதுக்கும் இன்றைய போட்டி முடிவுகளை படம் எடுத்து வையுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ர‌ஸ்சிலின் அவ‌ச‌ர‌ம் தான் வெஸ்சின்டீஸ் தோல்வி அடைய‌ கார‌ன‌ம் , இது ஒன்றும் 20ஓவ‌ர் விளையாட்டு இல்லை , 50 ஓவ‌ர் விளையாட்டுக்கு பொறுமை வேனும் 68 ப‌ந்துக்கு 73 ஓட்ட‌ம் வ‌டிவாய் எடுக்க‌லாம் கைவ‌ச‌ம் நிறைய‌ விக்கேட் இருக்கு / 


நான் வெஸ்சின்டீஸ் அணியின் தீவிர‌ ர‌சிக‌ன் /  சுனில் நர‌ன‌ உல‌க‌ கோப்பையில் சேர்காம‌ விட்ட‌து , வெஸ்சின்டீஸ் அணிக்கு தான் பாதிப்பு  / 

13 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா வெந்த புண்ணில வேல் பாச்சிறீங்ளா?

என்ன‌ தான் கிரிகெட்டில் பெரிய‌ ர‌சிக‌ரா இருந்தாலும் அண்ணா , நாம் நினைப்ப‌து ஒன்று விளையாட்டில் ந‌ட‌ப்ப‌து இன்னொன்ரு 😁, அது தான் சிரிச்சேன் , ம‌ற்ற‌ம் ப‌டி அவ‌ர் க‌ட‌சியா நிக்கிறார் என்று கேலியா சிரிக்க‌ வில்லை 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

25 கோஷான் சே 8

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

 

 

கோசான் பாடுறார்.

போனால் போகட்டும் போடா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னவோ பாருங்கோ பள்ளிக்கூட நாள்களில் இருந்து இதுதான் கதை. யாராவது ஒரு அறிவாளி படிச்சு முதலாம் பிள்ளையா வந்திருபான். ஆனால் பரிசளிப்பு விழாவுக்கு வந்த சனமெல்லாம் கடைசிபிள்ளை கோஷான் சே நடிச்ச நகைச்சுவை நாடகத்தை பற்றித்தான் கதைக்கும். 

இது என்ர ராசி போல கிடக்கு. 😂

1 hour ago, பையன்26 said:

ர‌ஸ்சிலின் அவ‌ச‌ர‌ம் தான் வெஸ்சின்டீஸ் தோல்வி அடைய‌ கார‌ன‌ம் , இது ஒன்றும் 20ஓவ‌ர் விளையாட்டு இல்லை , 50 ஓவ‌ர் விளையாட்டுக்கு பொறுமை வேனும் 68 ப‌ந்துக்கு 73 ஓட்ட‌ம் வ‌டிவாய் எடுக்க‌லாம் கைவ‌ச‌ம் நிறைய‌ விக்கேட் இருக்கு / 


நான் வெஸ்சின்டீஸ் அணியின் தீவிர‌ ர‌சிக‌ன் /  சுனில் நர‌ன‌ உல‌க‌ கோப்பையில் சேர்காம‌ விட்ட‌து , வெஸ்சின்டீஸ் அணிக்கு தான் பாதிப்பு  / 

என்ன‌ தான் கிரிகெட்டில் பெரிய‌ ர‌சிக‌ரா இருந்தாலும் அண்ணா , நாம் நினைப்ப‌து ஒன்று விளையாட்டில் ந‌ட‌ப்ப‌து இன்னொன்ரு 😁, அது தான் சிரிச்சேன் , ம‌ற்ற‌ம் ப‌டி அவ‌ர் க‌ட‌சியா நிக்கிறார் என்று கேலியா சிரிக்க‌ வில்லை 😁

விளையாட்டில மட்டுமல்லா, வாழ்கையிலேயே இதவிட பெரிய மூக்குடைவெல்லாம் நடந்திருக்குப்பா ...😂 free யா விட்டுட வேண்டியதுதான். 

அதுவும் பாருங்கோ, கூட போட்டி போட ஆள் இருக்கும் என்றெல்லாம் பயப்படுத்தியும் ரசள் அண்ணன் புண்ணியத்தில தனி ஆளாக, கீழ் இருந்து மேல் முறையில் தனிப்பெரும் வெற்றி கிடைச்சிருக்கு. 

இது சாதராண வெற்றி இல்லை -இமாலய வெற்றி!

இதுக்கு ஏன் எல்லாரும் சோகப் பாட்டா போடீனமோ தெரியேல்ல. 

இந்த வெற்றியை கொண்டாட கீழ் கண்ட பாடலை ரசள், ஹோல்டர் மற்றும் பெரைத்வேயிற்றுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அதென்னவோ பாருங்கோ பள்ளிக்கூட நாள்களில் இருந்து இதுதான் கதை. யாராவது ஒரு அறிவாளி படிச்சு முதலாம் பிள்ளையா வந்திருபான். ஆனால் பரிசளிப்பு விழாவுக்கு வந்த சனமெல்லாம் கடைசிபிள்ளை கோஷான் சே நடிச்ச நகைச்சுவை நாடகத்தை பற்றித்தான் கதைக்கும். 

இது என்ர ராசி போல கிடக்கு. 😂

விளையாட்டில மட்டுமல்லா, வாழ்கையிலேயே இதவிட பெரிய மூக்குடைவெல்லாம் நடந்திருக்குப்பா ...😂 free யா விட்டுட வேண்டியதுதான். 

அதுவும் பாருங்கோ, கூட போட்டி போட ஆள் இருக்கும் என்றெல்லாம் பயப்படுத்தியும் ரசள் அண்ணன் புண்ணியத்தில தனி ஆளாக, கீழ் இருந்து மேல் முறையில் தனிப்பெரும் வெற்றி கிடைச்சிருக்கு. 

இது சாதராண வெற்றி இல்லை -இமாலய வெற்றி!

இதுக்கு ஏன் எல்லாரும் சோகப் பாட்டா போடீனமோ தெரியேல்ல. 

இந்த வெற்றியை கொண்டாட கீழ் கண்ட பாடலை ரசள், ஹோல்டர் மற்றும் பெரைத்வேயிற்றுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்.

 

கொதிக்காதீங்க கோசான் எல்லாம் ஒரு டமாஸ் தானே...... 😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கொதிக்காதீங்க கோசான் எல்லாம் ஒரு டமாஸ் தானே...... 😂 

கடைசில நின்று பார்த்தா தான் தெரியும்.

இரண்டு நாளுக்கு முதல் ரதி பட்ட பாடை பாக்கலியோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அதென்னவோ பாருங்கோ பள்ளிக்கூட நாள்களில் இருந்து இதுதான் கதை. யாராவது ஒரு அறிவாளி படிச்சு முதலாம் பிள்ளையா வந்திருபான். ஆனால் பரிசளிப்பு விழாவுக்கு வந்த சனமெல்லாம் கடைசிபிள்ளை கோஷான் சே நடிச்ச நகைச்சுவை நாடகத்தை பற்றித்தான் கதைக்கும். 

இது என்ர ராசி போல கிடக்கு. 😂

விளையாட்டில மட்டுமல்லா, வாழ்கையிலேயே இதவிட பெரிய மூக்குடைவெல்லாம் நடந்திருக்குப்பா ...😂 free யா விட்டுட வேண்டியதுதான். 

அதுவும் பாருங்கோ, கூட போட்டி போட ஆள் இருக்கும் என்றெல்லாம் பயப்படுத்தியும் ரசள் அண்ணன் புண்ணியத்தில தனி ஆளாக, கீழ் இருந்து மேல் முறையில் தனிப்பெரும் வெற்றி கிடைச்சிருக்கு. 

இது சாதராண வெற்றி இல்லை -இமாலய வெற்றி!

இதுக்கு ஏன் எல்லாரும் சோகப் பாட்டா போடீனமோ தெரியேல்ல. 

இந்த வெற்றியை கொண்டாட கீழ் கண்ட பாடலை ரசள், ஹோல்டர் மற்றும் பெரைத்வேயிற்றுக்கு டெடிகேட் பண்ணுகிறேன்.

 

உண்மை தான் , 
ஒரு சில‌ வீர‌ர்க‌ள் செய்யும் சிறு த‌வ‌றுக‌ளால் வெற்றி ம‌ற்ற‌ அணிக்கு போய் விடும் ,

இந்த‌ விளையாட்டில் வெஸ்சின்டீஸ் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து , 

250 ஓட்ட‌த்துக்கை அவுஸ்ரேலியாவை ம‌ட‌க்கி இருக்க‌லாம் , வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் கூட‌ ஓட்ட‌த்த‌ குடுத்திட்டின‌ம் ,

அம்பிய‌ர் மாருக்கு க‌ண்ணிலையும் காதிலையும் ஏதோ பிர‌ச்ச‌னை உட‌ன‌ விர‌ல‌ தூக்கி காட்டின‌ம் /

கிறிஸ் கெயிலுக்கு இர‌ண்டு அவுட் குடுத்த‌வ‌ அம்பிய‌ர் மார் உட‌ன‌ , கெயில்(  ரிவியு ) கேட்டார் , மூன்றாவ‌து ந‌டுவ‌ர் அவுட் இல்லலை என்று சொல்ல‌ மீண்டும் கெயில் விளையாட‌ ஆர‌ம்பிச்சார் , அடுத்த‌ சில‌ ஓவ‌ர்க‌ளில் மீண்டும் கெயிலுக்கு அவுட் குடுத்தார் அம்பிய‌ர் , கெயில் மீண்டும் (ரிவியு) கேக்க‌ மூன்றாவ‌து ந‌டுவ‌ர் அத‌ அவுட் இல்லை என்று சொன்னார் /

சில‌ ச‌மைய‌ம் ந‌டுவ‌ர்க‌ளின் மூஞ்சையில் காரி துப்ப‌னும் போல‌ இருக்கும் 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

,

 

அம்பிய‌ர் மாருக்கு க‌ண்ணிலையும் காதிலையும் ஏதோ பிர‌ச்ச‌னை உட‌ன‌ விர‌ல‌ தூக்கி காட்டின‌ம் /

 

சில‌ ச‌மைய‌ம் ந‌டுவ‌ர்க‌ளின் மூஞ்சையில் காரி துப்ப‌னும் போல‌ இருக்கும் 😠

நானும் உதைபந்தாட்டத்திற்கு  நடுவராக செல்வேன்
கிட்டத்தட்ட 25  வருமா இந்த வேலையைச்  செய்கின்றேன்
சில   நேரங்களில் பிழைகளும் விட்டுள்ளேன்.
அதன் பாதிப்பால் தோற்ற அணியின் வீரர்களும் ரசிகர்களும் என்னை
எப்படித் திட்டியிருப்பார்கள்  என்பதை இப்போது தான் யோசிக்கின்றேன்.

இப்படியெல்லாமா திட்டுவார்கள் பையன் 26 ?😯😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நானும் உதைபந்தாட்டத்திற்கு  நடுவராக செல்வேன்
கிட்டத்தட்ட 25  வருமா இந்த வேலையைச்  செய்கின்றேன்
சில   நேரங்களில் பிழைகளும் விட்டுள்ளேன்.
அதன் பாதிப்பால் தோற்ற அணியின் வீரர்களும் ரசிகர்களும் என்னை
எப்படித் திட்டியிருப்பார்கள்  என்பதை இப்போது தான் யோசிக்கின்றேன்.

இப்படியெல்லாமா திட்டுவார்கள் பையன் 26 ?😯😁🤣

எல்லாம் முன் கோவ‌ம் தான் வார்த்தியார் பிடிச்ச‌ அணி விளையாடும் போது கோவ‌ம் வ‌ருவ‌து இய‌ல்வு தானே , 
ந‌ல்ல‌ திற‌மையான‌ அம்பிய‌ர் மார் ப‌ல‌ர் இருக்கின‌ம் , 

சில‌ அம்பிய‌ர் மார் ஏனோ தானோ என்று , அவையை தான் 
க‌ழுவி ஊத்தினான் , 


வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள‌ எப்ப‌வும்
ம‌திச்சு ந‌ட‌க்கிர‌  நான் 
,  


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Fri 07 June
02:30 (PDT) (YOUR TIME)
Bristol County Ground, Bristol 10:30AM UK
 
PAKISTAN
SRI LANKA

இன்றைய போட்டியில்
பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று 18 பேரும்

இலங்கை வெற்றி பெறும் 7 பேரும்

விடையளித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

நானும் உதைபந்தாட்டத்திற்கு  நடுவராக செல்வேன்
கிட்டத்தட்ட 25  வருமா இந்த வேலையைச்  செய்கின்றேன்
சில   நேரங்களில் பிழைகளும் விட்டுள்ளேன்.
அதன் பாதிப்பால் தோற்ற அணியின் வீரர்களும் ரசிகர்களும் என்னை
எப்படித் திட்டியிருப்பார்கள்  என்பதை இப்போது தான் யோசிக்கின்றேன்.

இப்படியெல்லாமா திட்டுவார்கள் பையன் 26 ?😯😁🤣

இன்றில் இருந்து வாத்தியார் யாருக்குமே பெனால்ட்டி குடுக்க மாட்டார்  என்று இத்தால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது....... பையன் வாழ்க .....!   👍

                 Image associée

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.