Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

பங்களாதேஷ் இன் formஐ பார்க்கும்போது, ஆஸ்திரேலியா தோற்றாலும் ஆச்சரியம் இல்லை 

வெஸ்ட் இண்டீஸ்  இன் பந்து வீச்சுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்து வீச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதனால பங்களாதேஷுக்கு  இது அவ்வளவு இலகுவான மேட்ச் இல்லை.  அதோட weather forecast  வேற cloudy with scattered showers எண்டு இருக்கு. அவுஸ்  toss  வின் பண்ணினால் பங்களாதேஷ் பாடு அதோ கதிதான் !!

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

வெஸ்ட் இண்டீஸ்  இன் பந்து வீச்சுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்து வீச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதனால பங்களாதேஷுக்கு  இது அவ்வளவு இலகுவான மேட்ச் இல்லை.  அதோட weather forecast  வேற cloudy with scattered showers எண்டு இருக்கு. அவுஸ்  toss  வின் பண்ணினால் பங்களாதேஷ் பாடு அதோ கதிதான் !!

எப்போதும் தமிழன் வசதியான இடத்தில் 2 வதாக  இருந்து தனது கருத்தை சொல்வதால் யாரும் அவர் கருத்தை ஏற்று கொள்வார்கள். இது சகஜமானதே.....!

Résultat de recherche d'images pour "status of rich and poor gif"

நான் கொஞ்சம் கீழே 24ல்  இருந்து  எனது கருத்தை சொன்னாலும் அது சபை ஏறாது, ஆனாலும் சொல்கிறேன் பங்களாதேஷை தவறாக எடை போட்டு விட்டொமோ என்று.......!

Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

கோசான் கூட  இந்த முறை சரியாகக் கணித்திருக்கிறார்..!  

அவர் எனது கணிப்புக்களைப் பின்பற்றி அதற்கு மேலால் தனது வித்துவத்தைக் காட்ட வெளிக்கிட்டவர்!😂

நாங்கள் படிக்கும்போது கஷ்டப்பட்டு லாப்பில் எக்ஸ்பெரிமென்ற் செய்து ரிபோர்ட் எழுதி A எடுக்க😎 அந்த ரிபோர்ட்டை வாங்கி இன்னும் மெருகுபடுத்தி A* எடுக்க விரும்பிய அடுத்த பட்ச் நண்பர்களின் நினைவுதான் வருகின்றது🥶

அதில் ஒருத்தன் நான் படித்துமுடித்த பின்னர் ரிப்போர்ட்டைக் கடன்வாங்கி கொண்டுபோய்க் கொப்பி அடித்துக் கொடுக்க புரபஸர் உடனேயே கூப்பிட்டாராம்.😶 அந்த ரிப்போர்ட்டுக்கான லாப் எக்ஸ்பெரிமென்றை அந்த வருடம் நீக்கியிருந்தார்களாம்.😱 லாப்புக்கு போகாததால் அதுகூடத் தெரியாமல் ரிப்போர்ட்டைக் கொடுத்த நண்பனைப் போல சிலர் இங்கும் ஈஸியாக புள்ளிகள் எடுக்கலாம் என்று திரிகின்றனர்🤯🤬. #தமிழேண்டா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

எப்போதும் தமிழன் வசதியான இடத்தில் 2 வதாக  இருந்து தனது கருத்தை சொல்வதால் யாரும் அவர் கருத்தை ஏற்று கொள்வார்கள். இது சகஜமானதே.....!

 

நான் கொஞ்சம் கீழே 24ல்  இருந்து  எனது கருத்தை சொன்னாலும் அது சபை ஏறாது, ஆனாலும் சொல்கிறேன் பங்களாதேஷை தவறாக எடை போட்டு விட்டொமோ என்று.......!

 

சுவி  நான் பங்களாதேஷை குறைவாக மதிப்பிடவில்லை. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மாதிரி one dimensional  டீம் இல்லை என்றுதான் சொல்லவந்தேன். அத்துடன் ஆஸ்திரேலியா அணி வேர்ல்ட் கப் விளையாடும்போது ஒரு வித்தியாசமான அணியாகவும் மிகவும் கடினமான அணியாகவும் மாறிவிடுவதை முன்னைய உலக கோப்பை பந்தயங்களை அலசினால் புரியும். ஆனால் பங்களாதேஷ் அணி டாஸ் வின் பண்ணினால்  ஆட்டம் சுவாரஷ்யமாக இருக்க வாய்ப்பு கூட இருக்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

அவர் எனது கணிப்புக்களைப் பின்பற்றி அதற்கு மேலால் தனது வித்துவத்தைக் காட்ட வெளிக்கிட்டவர்!😂

நாங்கள் படிக்கும்போது கஷ்டப்பட்டு லாப்பில் எக்ஸ்பெரிமென்ற் செய்து ரிபோர்ட் எழுதி A எடுக்க😎 அந்த ரிபோர்ட்டை வாங்கி இன்னும் மெருகுபடுத்தி A* எடுக்க விரும்பிய அடுத்த பட்ச் நண்பர்களின் நினைவுதான் வருகின்றது🥶

அதில் ஒருத்தன் நான் படித்துமுடித்த பின்னர் ரிப்போர்ட்டைக் கடன்வாங்கி கொண்டுபோய்க் கொப்பி அடித்துக் கொடுக்க புரபஸர் உடனேயே கூப்பிட்டாராம்.😶 அந்த ரிப்போர்ட்டுக்கான லாப் எக்ஸ்பெரிமென்றை அந்த வருடம் நீக்கியிருந்தார்களாம்.😱 லாப்புக்கு போகாததால் அதுகூடத் தெரியாமல் ரிப்போர்ட்டைக் கொடுத்த நண்பனைப் போல சிலர் இங்கும் ஈஸியாக புள்ளிகள் எடுக்கலாம் என்று திரிகின்றனர்🤯🤬. #தமிழேண்டா!

நியூஸிலாந்து  அணி அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு கூட என்ற எனது கணிப்பு அவர்களின் முந்தய உலக கோப்பைகளில் அவர்களின் achievements இல் இருந்து வந்ததே! அதைவிட பல நியூசிலாந்து வீரர்கள் இங்கிலாந்தில் county அணிகளுக்கு விளையாடுவதும் அவர்களுக்கு கூடிய வெற்றி வாய்ப்பைப்பெற உதவும் என்று நினைக்கிறேன். அத்துடன் கேப்டன் கூல் Kane Williamson , Stephan Fleming  போல் ஒரு master tactician. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இனி ரதி அக்கா போலை கடைசி இடத்தை நோக்கி நகரப்போறன். கோசான் பயப்பிட தேவையில்லை நாங்கள் இருக்கிறம் போட்டிக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நீர்வேலியான் said:

பங்களாதேஷ் இன் formஐ பார்க்கும்போது, ஆஸ்திரேலியா தோற்றாலும் ஆச்சரியம் இல்லை 

இதை  நான் நேற்றே எழுதி விட்டன் , இன்று வ‌ங்கிளாதேஸ் வெல்லுற‌துக்கு வாய்ப்பு அதிக‌ம் இருக்கு 👌

6 hours ago, புங்கையூரன் said:

இருபத்தைந்து உறவுகளுக்கும்....எனது தலை சாய்கின்றது...!😀

கோசான் கூட  இந்த முறை சரியாகக் கணித்திருக்கிறார்..!  
கோசான்...ஒருநாளூம் கோபிக்க மாட்டார் எனும் நம்பிக்கை நிறையவே உண்டு..!

புங்கையூர‌ன் ஜ‌யா , நீங்க‌ளும் போட்டியில் க‌ல‌ந்து இருக்க‌லாம் தானே உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல்  😁/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

வெஸ்ட் இண்டீஸ்  இன் பந்து வீச்சுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்து வீச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதனால பங்களாதேஷுக்கு  இது அவ்வளவு இலகுவான மேட்ச் இல்லை.  அதோட weather forecast  வேற cloudy with scattered showers எண்டு இருக்கு. அவுஸ்  toss  வின் பண்ணினால் பங்களாதேஷ் பாடு அதோ கதிதான் !!

அருன் பீன்ஸ்  சிறு த‌வ‌று செய்த‌ மாதிரி இருக்கு , நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டையை தெரிவு செய்து இருக்கிறார் / உந்த‌ மைதாண‌த்தில் இர‌ண்டாவ‌து இனிங்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிக‌ம் , பொறுத்து இருந்து பாப்போம் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்ளாதேஸ்சின் தோல்வி உறுதி / ஓட்ட‌ம் கூட‌ குடுத்திட்டின‌ம் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் விளையாட்டு நிறுத்த‌  ப‌ட்டு இருக்கு 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

அவர் எனது கணிப்புக்களைப் பின்பற்றி அதற்கு மேலால் தனது வித்துவத்தைக் காட்ட வெளிக்கிட்டவர்!😂

நாங்கள் படிக்கும்போது கஷ்டப்பட்டு லாப்பில் எக்ஸ்பெரிமென்ற் செய்து ரிபோர்ட் எழுதி A எடுக்க😎 அந்த ரிபோர்ட்டை வாங்கி இன்னும் மெருகுபடுத்தி A* எடுக்க விரும்பிய அடுத்த பட்ச் நண்பர்களின் நினைவுதான் வருகின்றது🥶

அதில் ஒருத்தன் நான் படித்துமுடித்த பின்னர் ரிப்போர்ட்டைக் கடன்வாங்கி கொண்டுபோய்க் கொப்பி அடித்துக் கொடுக்க புரபஸர் உடனேயே கூப்பிட்டாராம்.😶 அந்த ரிப்போர்ட்டுக்கான லாப் எக்ஸ்பெரிமென்றை அந்த வருடம் நீக்கியிருந்தார்களாம்.😱 லாப்புக்கு போகாததால் அதுகூடத் தெரியாமல் ரிப்போர்ட்டைக் கொடுத்த நண்பனைப் போல சிலர் இங்கும் ஈஸியாக புள்ளிகள் எடுக்கலாம் என்று திரிகின்றனர்🤯🤬. #தமிழேண்டா!

ஒத்துகிறேன் நீங்க பத்தினிதான் 😂.

மண்டைகாய வேண்டாம் கிருபன் - நாங்கெல்லாம் கொப்பி அடிச்சாலும் சொல்லிப்போட்டுதானே அடிக்கிறம். அப்ப யார் வெண்டாலும் பெருமை உங்களுக்குதானே😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்னை பார்த்து கொப்பி அடித்த மாதிரித்தான் கள நிலவரங்கள் கூறுது.....!  😁

              Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

சுவி  நான் பங்களாதேஷை குறைவாக மதிப்பிடவில்லை. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மாதிரி one dimensional  டீம் இல்லை என்றுதான் சொல்லவந்தேன். அத்துடன் ஆஸ்திரேலியா அணி வேர்ல்ட் கப் விளையாடும்போது ஒரு வித்தியாசமான அணியாகவும் மிகவும் கடினமான அணியாகவும் மாறிவிடுவதை முன்னைய உலக கோப்பை பந்தயங்களை அலசினால் புரியும். ஆனால் பங்களாதேஷ் அணி டாஸ் வின் பண்ணினால்  ஆட்டம் சுவாரஷ்யமாக இருக்க வாய்ப்பு கூட இருக்கிறது!

உண்மைதான், ஆஸ்திரேலியா வேர்ல்ட் கப் இல் விளையாடும் பொழுது அவர்களின் தொனி மாறிவிடும், மோசமான டீம்ஆக வந்தால்கூட, ஒருமாதிரி pick up பண்ணி, மேலே வந்து, cup உம் எடுத்துவிடுவார்கள். Game plan அந்தமாதிரி. 

முன்பு நான் கிரிக்கெட் பார்க்கும் காலத்தில், chasing மிகவும் கடினமானது, முதலாவது டீம் 270-280 ஓட்டங்கள் எடுத்துவிட்டாலே போதும், வெற்றி நிச்சயம். இப்பொழுது 350 என்ற இலக்கை எல்லாம் சாதாரணமாக chase செய்கிறார்கள். 

பங்களாதேஷ் இம்முறை ஆச்சரியப்படுத்துகிறார்கள்,  எப்பிடி இருந்தவர்கள். தென்னாபிரிக்கா போன்ற அணிகளை இலகுவாக வெல்லுகிறார்கள். 300+ ஓட்டங்களை எல்லாம் chase செய்கிறார்கள். 

தென்னாப்பிரிக்கா மிகவும் ஏமாற்றிக்கொண்டு இருக்கு, அரை இறுதிக்கு வருவார்கள் என்று கணித்திருந்தேன், ஆஸ்திரேலியாவுக்கு மேலாக இவர்களை செலக்ட் பண்ணியிருந்தேன், இனி முடியாது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நீர்வேலியான் said:

உண்மைதான், ஆஸ்திரேலியா வேர்ல்ட் கப் இல் விளையாடும் பொழுது அவர்களின் தொனி மாறிவிடும், மோசமான டீம்ஆக வந்தால்கூட, ஒருமாதிரி pick up பண்ணி, மேலே வந்து, cup உம் எடுத்துவிடுவார்கள். Game plan அந்தமாதிரி. 

முன்பு நான் கிரிக்கெட் பார்க்கும் காலத்தில், chasing மிகவும் கடினமானது, முதலாவது டீம் 270-280 ஓட்டங்கள் எடுத்துவிட்டாலே போதும், வெற்றி நிச்சயம். இப்பொழுது 350 என்ற இலக்கை எல்லாம் சாதாரணமாக chase செய்கிறார்கள். 

பங்களாதேஷ் இம்முறை ஆச்சரியப்படுத்துகிறார்கள்,  எப்பிடி இருந்தவர்கள். தென்னாபிரிக்கா போன்ற அணிகளை இலகுவாக வெல்லுகிறார்கள். 300+ ஓட்டங்களை எல்லாம் chase செய்கிறார்கள். 

தென்னாப்பிரிக்கா மிகவும் ஏமாற்றிக்கொண்டு இருக்கு, அரை இறுதிக்கு வருவார்கள் என்று கணித்திருந்தேன், ஆஸ்திரேலியாவுக்கு மேலாக இவர்களை செலக்ட் பண்ணியிருந்தேன், இனி முடியாது  

தென்னாபிரிக்க அணிக்கு pressure situations ஐ  கையாள தெரியாது. எப்போதும் சொதப்புவார்கள். இம்முறை 5 வெள்ளையல்லாத வீரர்கள் கட்டாயம் அணியில் இடம்பெறவேண்டும் என்று வேறு கட்டுப்பாடு உள்ளது. சொல்லவா வேண்டும்?? AB  டிவில்லியர்ஸ்  விளையாடியிருந்தால் ஒருவேளை அரை இறுதிக்கு வர சான்ஸ் இருந்திருக்கும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 ஓவ‌ர் விளையாட்டு அறிமுக‌மான‌ பிற‌க்கு / ஒரு நாள் தொட‌ரில் 300 ஓட்ட‌ம் என்ப‌து சுல‌ப‌மா அடிச்சு ஆடி எடுக்கின‌ம் / 

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் கிரிக்கெட் உல‌கில்  இந்தியாவின் ஆதிக்க‌ம் தான் /

இங்லாந் அணி இப்போது ப‌ல‌மாய் இருக்கு / இன்னும் கொஞ்ச‌ வ‌ருடம் போனா இப்ப‌ இருக்கிர‌ இங்லாந் அணி மாதிரி இருக்காது / இங்லாந் வீர‌ர்க‌ள் 34 வ‌ய‌தோடு ஓய்வை அறிவிக்கிர‌வை , இப்ப‌ இருக்கிர‌ பெரிய‌ இங்லாந் ஜ‌ம்ப‌வான்க‌ள் 2023ம் ஆண்டு உல‌க‌ கோப்பை வ‌ர‌ விளையாட‌ கூடிய‌வை / அதுக்கு பிற‌க்கு அவ‌ர்க‌ளின் இட‌த்தை நிர‌ப்ப‌ ந‌ம்பிக்கையான‌ 
வீர‌ர்க‌ள் பெரிசா இல்லை /

எப்போதும் இல்லாத‌ அள‌வுக்கு 
இங்லாந் அணி இப்போது தான் ப‌ல‌மாய் இருக்கு / 

இந்தியா அணியில் இட‌ம் பிடிக்க‌
வீர‌ர்க‌ள் இடையே க‌டும் போட்டி / 
இந்தியாவில் எத்த‌னையோ திற‌மையான‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் என்ப‌த‌ ஜ‌பிஎல் மூல‌ம் பார்க்க‌ தெரியும் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான் 38
எப்போதும் தமிழன் 38
ரஞ்சித் 36
கந்தப்பு 36
ஈழப்பிரியன் 34
எராளன் 34
தமிழினி 34
பகலவன் 34
கல்யாணி 34
அகஸ்தியன் 32
கிருபன் 32
ரதி 32
கறுப்பி 32
நந்தன் 30
புத்தன் 30
குமாரசாமி 30
வாத்தியார் 30
நுணாவிலான் 30
ராசவன்னியன் 28
வாதவூரான் 28
சுவைப்பிரியன் 28
மருதங்கேணி 28
காரணிகன் 28
சுவி 24
கோசான் சே 24
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா இந்த‌ பெரிய‌ ர‌ன்ஸ் எடுத்தும் / வ‌ங்ளாதேஸ் அணி 48 ர‌ன்னால் தோல்வி /

சொறில‌ங்காவிலும் பார்க்க‌ வ‌ங்கிளாதேஸ் ந‌ல்லா விளையாடுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவை நம்பி பல போட்டிகளில் அவர்கள் வெல்வார்கள் என்று கணித்துவிட்டேன். இப்போது நியூஸிலாந்து அரையிறுதிக்குப் போவது உறுதி. ஆனால் வழமைபோல் அவர்களின் ஸ்ரீம் குறைந்துவிடும் என்பதால் இறுதிப்போட்டிக்குப் போகமாட்டார்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஒத்துகிறேன் நீங்க பத்தினிதான் 😂.

மண்டைகாய வேண்டாம் கிருபன் - நாங்கெல்லாம் கொப்பி அடிச்சாலும் சொல்லிப்போட்டுதானே அடிக்கிறம். அப்ப யார் வெண்டாலும் பெருமை உங்களுக்குதானே😎.

நாங்கள் இப்போது ஒரே கோட்டில் இணைகின்றோம். 😂

என்னை கொஞ்சநாள் அளவு கணக்கில்லாமல் வறுத்தெடுத்தாங்களப்பா.....சொல்லி வேலையில்லை..🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலைக்குத் தான் வாழ்வா,சாவா போராட்டம்...இலங்கையணிக்கு கொஞ்சசமாவது இரக்கம் இருந்தால் எனக்காவது🙃 போட்டியில் வெல்லுவார்கள்/வெல்ல வேண்டும்...அல்லது அவர்களும் சவுத் ஆபிரிக்கா மாதிரி மூட்டையை கட்ட வேண்டியது தான் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

20 ஓவ‌ர் விளையாட்டு அறிமுக‌மான‌ பிற‌க்கு / ஒரு நாள் தொட‌ரில் 300 ஓட்ட‌ம் என்ப‌து சுல‌ப‌மா அடிச்சு ஆடி எடுக்கின‌ம் / 

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் கிரிக்கெட் உல‌கில்  இந்தியாவின் ஆதிக்க‌ம் தான் /

இங்லாந் அணி இப்போது ப‌ல‌மாய் இருக்கு / இன்னும் கொஞ்ச‌ வ‌ருடம் போனா இப்ப‌ இருக்கிர‌ இங்லாந் அணி மாதிரி இருக்காது / இங்லாந் வீர‌ர்க‌ள் 34 வ‌ய‌தோடு ஓய்வை அறிவிக்கிர‌வை , இப்ப‌ இருக்கிர‌ பெரிய‌ இங்லாந் ஜ‌ம்ப‌வான்க‌ள் 2023ம் ஆண்டு உல‌க‌ கோப்பை வ‌ர‌ விளையாட‌ கூடிய‌வை / அதுக்கு பிற‌க்கு அவ‌ர்க‌ளின் இட‌த்தை நிர‌ப்ப‌ ந‌ம்பிக்கையான‌ 
வீர‌ர்க‌ள் பெரிசா இல்லை /

எப்போதும் இல்லாத‌ அள‌வுக்கு 
இங்லாந் அணி இப்போது தான் ப‌ல‌மாய் இருக்கு / 

இந்தியா அணியில் இட‌ம் பிடிக்க‌
வீர‌ர்க‌ள் இடையே க‌டும் போட்டி / 
இந்தியாவில் எத்த‌னையோ திற‌மையான‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் என்ப‌த‌ ஜ‌பிஎல் மூல‌ம் பார்க்க‌ தெரியும் /

2023க்கு பிறகு விளையாடக்கூடிய பொடியள் இப்ப 10ம் ஆண்டுச் சோதனையில் பிசியா இருப்பாங்கள் 😂. 2005க்கு பிறகு இங்கிலாந்தின் அணுகுமுறை ரொம்ப மாறிவிட்டது. 20/20 போட்டியை கண்டு பிடித்து கவுண்டி மட்டத்தில் அறிமுகம் செய்த காலம் தொட்டு வெள்ளை பந்து கிரிகெட்டில் இங்கிலாந்துக்கு ஏறுமுகம்தான். 

அடம் ஹோலியோக், நிக் நைட், நீல் பியர்பிரதர் எண்டு பந்துக்கு நோகாம அடிக்கிற ஆக்கள் போய், ரோய், லம்ப், ஹேல்ஸ், பட்லர், பிரயர் போன்ற அதிரடி ஆட்டக்காரரின் வரவு இதன் பின்னரே நிகழ்தது. 

இப்போ 100 பந்துகள் வீசும் இன்னொரு வகை ஆட்டத்தை இங்கிலாந்து கவுண்டியில் அறிமுகம் செய்யப் போகிறாரகள்.

விளையாட்டில் மேலே கீழே நாடுகள் போவது வழமை, ஆனால் அதிரடி ஆட்ட முறை இங்கிலாந்தில் கொஞ்ச காலத்துக்கு நிலைக்கும் என்றே படுகிறது.

3 hours ago, குமாரசாமி said:

நாங்கள் இப்போது ஒரே கோட்டில் இணைகின்றோம். 😂

என்னை கொஞ்சநாள் அளவு கணக்கில்லாமல் வறுத்தெடுத்தாங்களப்பா.....சொல்லி வேலையில்லை..🤠

நம்ம தொழில் கஸ்டம் புரியாத சனங்கள்😂 

2 hours ago, ரதி said:

நாலைக்குத் தான் வாழ்வா,சாவா போராட்டம்...இலங்கையணிக்கு கொஞ்சசமாவது இரக்கம் இருந்தால் எனக்காவது🙃 போட்டியில் வெல்லுவார்கள்/வெல்ல வேண்டும்...அல்லது அவர்களும் சவுத் ஆபிரிக்கா மாதிரி மூட்டையை கட்ட வேண்டியது தான் 
 

இஞ்ச, இவவாவுக்கு தங்கட டீம் சவுத் ஆபிரிக்காவை விட திறம் எண்ட நினைப்பு 😂. ஆப்கனிஸ்தானோடயே தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்.

4 hours ago, கிருபன் said:

தென்னாபிரிக்காவை நம்பி பல போட்டிகளில் அவர்கள் வெல்வார்கள் என்று கணித்துவிட்டேன். இப்போது நியூஸிலாந்து அரையிறுதிக்குப் போவது உறுதி. ஆனால் வழமைபோல் அவர்களின் ஸ்ரீம் குறைந்துவிடும் என்பதால் இறுதிப்போட்டிக்குப் போகமாட்டார்கள்!

 

Chokers ஐ நம்பினால் ஆகுவீர்கள jokers!

வழமையா குவாட்டரல, செமில தான் குப்புற விழுறது, இந்த முறை ஆரம்பத்திலேயே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/19/2019 at 6:12 PM, ரதி said:

ஊரில் இருப்பவை கேட்க்கினம் எங்கட நாட்டில மட்ச் நடக்கேக்குள்ள மழை வந்தால் முழு  மைதானத்தையும்  மூடக்  கூடிய வசதி இருக்குது...நீங்கள் பணக்கார நாடாக இருந்து கொண்டு உங்களிட்ட அந்த வசதி இல்லையோ  என்றினம் 🤫

 

 

ரதி அக்கா,

கவர் போடாமைக்கு இதுதான் காரணம்.

ஊரில் ஒரு மைதானத்திலும் ஒழுங்கான நீர்வடிப்பு (டிரைனேஜ்) இல்லை. அதனால் அவுட் பீல்டில் சின்ன மழைக்கே வெள்ளம் தேங்கி விடும். இங்கே அப்படி இல்லை. எல்லா பெரிய கிரவுண்டுமே ஒரு டிரைன் வலைஅமைப்பின் மீதுதான் இருக்கும். ஆகவே விழும் மழை தங்காது உடனடியாக கீழே போய்விடும். எனவே இங்கே முழு கிரவுண்டையும் மூட வேண்டிய தேவை இல்லை. பிரிஸ்டல், தோண்டன் போன்ற டெஸ்ட் போட்டிகள் நடவாத இரு சின்ன கிரவுண்டுகளில் மட்டும் இந்தளவுக்கு டிரைனேஜ் வசதி இல்லை. தவிரவும் அன்றைக்கு அடிச்ச அடைமழைக்கு கவர் போட்டும் கண்டிராது. அடைமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுதால், மழை நீர் கவருக்கு கீழாலேயும் பரவும்.

On 6/19/2019 at 10:46 AM, பையன்26 said:

அண்ணா , அன்மையில் இர‌ண்டு பேரும் சேர்ந்து தானே அப்கானிஸ்தான் அணிய‌ புக‌ழ்ந்த‌ நாங்க‌ள் , அவைக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு என்று ,

அப்ப‌டி புக‌ழ் பாடி போட்டு இப்ப‌டி எழுதினத‌க்கு என‌து வ‌ன்மையான‌ க‌ண்ட‌ன‌ங்க‌ள் 😁😁😁 /

அது வேறவாய் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

2023க்கு பிறகு விளையாடக்கூடிய பொடியள் இப்ப 10ம் ஆண்டுச் சோதனையில் பிசியா இருப்பாங்கள் 😂. 2005க்கு பிறகு இங்கிலாந்தின் அணுகுமுறை ரொம்ப மாறிவிட்டது. 20/20 போட்டியை கண்டு பிடித்து கவுண்டி மட்டத்தில் அறிமுகம் செய்த காலம் தொட்டு வெள்ளை பந்து கிரிகெட்டில் இங்கிலாந்துக்கு ஏறுமுகம்தான். 

அடம் ஹோலியோக், நிக் நைட், நீல் பியர்பிரதர் எண்டு பந்துக்கு நோகாம அடிக்கிற ஆக்கள் போய், ரோய், லம்ப், ஹேல்ஸ், பட்லர், பிரயர் போன்ற அதிரடி ஆட்டக்காரரின் வரவு இதன் பின்னரே நிகழ்தது. 

இப்போ 100 பந்துகள் வீசும் இன்னொரு வகை ஆட்டத்தை இங்கிலாந்து கவுண்டியில் அறிமுகம் செய்யப் போகிறாரகள்.

விளையாட்டில் மேலே கீழே நாடுகள் போவது வழமை, ஆனால் அதிரடி ஆட்ட முறை இங்கிலாந்தில் கொஞ்ச காலத்துக்கு நிலைக்கும் என்றே படுகிறது.

 

இங்லாந் அணியிட‌ம் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை ,
இப்ப‌ இருக்கிர‌ மோர் அலி ம‌ற்றும் ர‌சித் இவ‌ர்க‌ள் அங்கினேக்க‌ ப‌ந்தை சுழ‌ட்டி போடின‌ம் /

இங்லாந் அணியில் ( ப‌ட்லர்) (மோர்க‌ன்) ( ரோட் ) இவ‌ர்க‌ளின் ஓய்வோடு ம‌ற்றும் ஒரு சில‌ வீர‌ர்க‌ளின் ஓய்வோடு இங்லாந் அணி பின்ன‌டைவை ச‌ந்திக்கும் /

இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை /

ப‌ட்ள‌ர் ம‌ற்றும் மோர்ன் அலியின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் இங்லாந் அணி ப‌ல‌மான‌ அணியா வ‌ந்த‌து /

இந்தியாவில் எத்த‌ன திற‌மையான‌ சுழ‌ல் ப‌ந்து வீச‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் , 

என‌க்கு இந்தியா அணிய‌ பிடிக்காது

உண்மையை சொல்ல‌ போனால் 
( இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இந்தியாவின் ஆதிக்க‌ம் தான் கிரிக்கேட் உல‌கில் ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

இதை  நான் நேற்றே எழுதி விட்டன் , இன்று வ‌ங்கிளாதேஸ் வெல்லுற‌துக்கு வாய்ப்பு அதிக‌ம் இருக்கு 👌

புங்கையூர‌ன் ஜ‌யா , நீங்க‌ளும் போட்டியில் க‌ல‌ந்து இருக்க‌லாம் தானே உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல்  😁/

சோம்பேறிக் குணம் தான்...காரணம் பையா...!

மாடு மரத்தின் கீழ் படுத்து இரை மீட்டுவது போல.....தனிமையில்...இனிமை காண்பதில்....இப்போதெல்லாம் ஒரு சுகம்!

பார்வையாளராக இருக்கத் தான் ...எண்னினேன்!

இப்போது பங்காளியாகி இருக்கலாமோ என்று கவலைப்படுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எல்லாம் மனம் துவண்டு போகாதேங்கோ. 96 வரை எங்காத்து காரரும் கோட்டுக்கு போறார் எண்டு விளையாடிய அணி இலங்கை. 96-2006 தரமான அணியாக இருந்ததில்லையா?

மேஇதீ வைபாருங்கள். எவ்வளவு திறமை இருந்தும் அடிப்படை முகாமைத்துவம் இல்லாதாபடியால் பிரகாசிக்க முடியவில்லை.

நவீன கிரிகெட்டில் உட்கட்டமைப்பு முக்கியம். ஒரு கொன்வேயெர் பெல்ட் போல வீரர்கள் வர வேண்டும். வரும் போதே சச்சின் போல ஜீனியல் ஆக இருக்க வேண்டியதில்லை. ஸ்டீவ் ஸ்மித், பெயர்ஸ்டோவ், போல சாதாரண வீரர்களாய் வந்தும் பின்னாளில் பிரகாசிக்கலாம்.

இந்த கட்டமைப்பு முன்பு அவுஸ், தெஆ விடம் இருந்தது. அவுசில் இப்போதும் உண்டு. இந்தியாவில் கடந்த 20 வருடமாயும் இங்கிலாந்தில் 10 வருடமாயும் இது கட்டமைக்க பட்டு வருகிறது. ஆனால் தெஆ வில் முன்பு போல இல்லை.

உள்கட்டமைப்பு வினைத்திறன் மிக்கதாக இருக்கும் போது, உள்ளூர் விளையாட்டில் பணம் பிழங்கும், grass root மட்டத்தில் கிரிகெட் வளரும், இதுதானாகவே elite மட்டத்தில் நல்ல வீரர்களை தரும்.

நான் சொன்னது போல, 2005 க்கு பிறகு இங்கிலாந்தில் கிரிகெட்டை வளர்ப்பதில் பல கரிசனையான முன்னெடுப்புகள் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்தது. முன்பு இங்கிலாந்தில் கிரிகெட் ஒரு பணக்கார விளையாட்டு. Soft ball cricket, அரிதிலும் அரிது. மைதானம், மட்டை, காப்பு, எல்லாம் வாங்கும் வசதி படைத்த பள்ளிகளில் மட்டுமே ஆடப்படும் மேல்தட்டு விளையாட்டு.

ஆனால் இப்போ, அப்படியில்லை, ECBயே ஆல் ஸ்டார்ஸ் போன்று பல திட்டங்கள் மூலம்   கிரிகெட்டை ஜனரஞ்சகப் படுத்துகிறது. டிகெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்கிறன.

இன்னொரு முக்கியமான விடயம் தெற்காசியர்களின் பங்களிப்பு, உலக மகா ஸ்பின்னர்கள் இலாவிடினும் மொயினும், லதீபும் நல்ல ஸ்பின்னர்கள். ஜான் எம்பூரி, ஸ்வான் இருவருக்கும் பின் இங்கிலாந்தில் இருக்கும் பெயர் சொல்லக் கூடிய ஸ்பின்னர்கள்.

ஒன்றை கவனியுங்கள். பாகிஸ்தான், இந்தியா, பங்களதேஸ், விளையாடும் எல்லா போட்டிகளும் சோல்ட் அவுட். இலங்கை, மேஇதீ போட்டிகள் பெரும்பாலும் சோல்ட் அவுட். இன்று இப்படி வெறிதனமாக கிரிகெட்டை ரசிக்கும் இந்த குடும்பங்களின் பிள்ளைகளும் நாளைக்கு இங்கிலாந்து அணிக்கே விளையாடுவார்கள். இன்னொரு நசீர் ஹுசைனாக, மொயின் அலியாக, ஜொவ்ரா ஆச்சராக. 

நல்ல உட்கட்டமைப்பு, சாதகமான இனப்பரம்பல், திறமைக்கு முக்கியத்துவம் இது மூன்றும் உள்ள நாடு விளையாட்டில் சோடை போகாது. எப்போதும் 1வதாக வராவிடினும், முதல் வரிசையில் இருக்கும். அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா இந்தவகை.

எவ்வளவு திறமை இருந்தும் இந்த 3இல்லாவிடில் பயனில்லை. பாகிஸ்தான், இலங்கை, மேஇதீ, தெஆ இந்தவகை.

Just now, goshan_che said:

 

27 minutes ago, பையன்26 said:

உண்மையை சொல்ல‌ போனால் 
( இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இந்தியாவின் ஆதிக்க‌ம் தான் கிரிக்கேட் உல‌கில் ) 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.