Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

அப்படி எல்லாம் மனம் துவண்டு போகாதேங்கோ. 96 வரை எங்காத்து காரரும் கோட்டுக்கு போறார் எண்டு விளையாடிய அணி இலங்கை. 96-2006 தரமான அணியாக இருந்ததில்லையா?

மேஇதீ வைபாருங்கள். எவ்வளவு திறமை இருந்தும் அடிப்படை முகாமைத்துவம் இல்லாதாபடியால் பிரகாசிக்க முடியவில்லை.

நவீன கிரிகெட்டில் உட்கட்டமைப்பு முக்கியம். ஒரு கொன்வேயெர் பெல்ட் போல வீரர்கள் வர வேண்டும். வரும் போதே சச்சின் போல ஜீனியல் ஆக இருக்க வேண்டியதில்லை. ஸ்டீவ் ஸ்மித், பெயர்ஸ்டோவ், போல சாதாரண வீரர்களாய் வந்தும் பின்னாளில் பிரகாசிக்கலாம்.

இந்த கட்டமைப்பு முன்பு அவுஸ், தெஆ விடம் இருந்தது. அவுசில் இப்போதும் உண்டு. இந்தியாவில் கடந்த 20 வருடமாயும் இங்கிலாந்தில் 10 வருடமாயும் இது கட்டமைக்க பட்டு வருகிறது. ஆனால் தெஆ வில் முன்பு போல இல்லை.

உள்கட்டமைப்பு வினைத்திறன் மிக்கதாக இருக்கும் போது, உள்ளூர் விளையாட்டில் பணம் பிழங்கும், grass root மட்டத்தில் கிரிகெட் வளரும், இதுதானாகவே elite மட்டத்தில் நல்ல வீரர்களை தரும்.

நான் சொன்னது போல, 2005 க்கு பிறகு இங்கிலாந்தில் கிரிகெட்டை வளர்ப்பதில் பல கரிசனையான முன்னெடுப்புகள் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்தது. முன்பு இங்கிலாந்தில் கிரிகெட் ஒரு பணக்கார விளையாட்டு. Soft ball cricket, அரிதிலும் அரிது. மைதானம், மட்டை, காப்பு, எல்லாம் வாங்கும் வசதி படைத்த பள்ளிகளில் மட்டுமே ஆடப்படும் மேல்தட்டு விளையாட்டு.

ஆனால் இப்போ, அப்படியில்லை, ECBயே ஆல் ஸ்டார்ஸ் போன்று பல திட்டங்கள் மூலம்   கிரிகெட்டை ஜனரஞ்சகப் படுத்துகிறது. டிகெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்கிறன.

இன்னொரு முக்கியமான விடயம் தெற்காசியர்களின் பங்களிப்பு, உலக மகா ஸ்பின்னர்கள் இலாவிடினும் மொயினும், லதீபும் நல்ல ஸ்பின்னர்கள். ஜான் எம்பூரி, ஸ்வான் இருவருக்கும் பின் இங்கிலாந்தில் இருக்கும் பெயர் சொல்லக் கூடிய ஸ்பின்னர்கள்.

ஒன்றை கவனியுங்கள். பாகிஸ்தான், இந்தியா, பங்களதேஸ், விளையாடும் எல்லா போட்டிகளும் சோல்ட் அவுட். இலங்கை, மேஇதீ போட்டிகள் பெரும்பாலும் சோல்ட் அவுட். இன்று இப்படி வெறிதனமாக கிரிகெட்டை ரசிக்கும் இந்த குடும்பங்களின் பிள்ளைகளும் நாளைக்கு இங்கிலாந்து அணிக்கே விளையாடுவார்கள். இன்னொரு நசீர் ஹுசைனாக, மொயின் அலியாக, ஜொவ்ரா ஆச்சராக. 

நல்ல உட்கட்டமைப்பு, சாதகமான இனப்பரம்பல், திறமைக்கு முக்கியத்துவம் இது மூன்றும் உள்ள நாடு விளையாட்டில் சோடை போகாது. எப்போதும் 1வதாக வராவிடினும், முதல் வரிசையில் இருக்கும். அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா இந்தவகை.

எவ்வளவு திறமை இருந்தும் இந்த 3இல்லாவிடில் பயனில்லை. பாகிஸ்தான், இலங்கை, மேஇதீ, தெஆ இந்தவகை.

 

இல‌ங்கை அணி 1996 இருந்து 2015ம் ஆண்டு வ‌ர‌ ந‌ல்ல‌ நிலையில் தான் இருந்த‌து /

இனி இல‌ங்கை அணியால் ஒரு போதும் மீழ‌ முடியாது /

இல‌ங்கை அணிக்கு 2014ம் ஆண்டு உல‌க‌ கோப்பை தான் க‌ட‌சி கோப்பை / சிங்க‌ள‌வ‌ன் த‌ல‌ கீழா நின்றாலும் இனி அவ‌ர்க‌ளால் ஆசியா கோப்பையை கூட‌ தூக்க‌ முடியாது /

இல‌ங்கை பேய் என்றால் இந்தியா பிசாசு /
பேயின் க‌தை முடிந்து விட்ட‌து , பிசாசு விஸ்ப‌ரூப‌ம் எடுக்குது 

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Eppothum Thamizhan said:

சுவி  நான் பங்களாதேஷை குறைவாக மதிப்பிடவில்லை. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மாதிரி one dimensional  டீம் இல்லை என்றுதான் சொல்லவந்தேன். அத்துடன் ஆஸ்திரேலியா அணி வேர்ல்ட் கப் விளையாடும்போது ஒரு வித்தியாசமான அணியாகவும் மிகவும் கடினமான அணியாகவும் மாறிவிடுவதை முன்னைய உலக கோப்பை பந்தயங்களை அலசினால் புரியும். ஆனால் பங்களாதேஷ் அணி டாஸ் வின் பண்ணினால்  ஆட்டம் சுவாரஷ்யமாக இருக்க வாய்ப்பு கூட இருக்கிறது!

உண்மை தான்.....எப்போதும் தமிழன்....!

அவுஸ்திரேலிய மானிலங்களை ....ஒரு தேசமாக இணைத்து வைத்திருப்பதில்....விளையாட்டு மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது!

இல்லாவிட்டால் ஒவ்வொரு மானிலமும்.....கல்முனையும்....காத்தான் குடியும் தான்!

சிங்களம் விட்ட மாபெரும் தவறும் இது தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Fri 21 June
02:30 (PDT) (YOUR TIME)
Headingley, Leeds 10:30AM UK
 
ENGLAND
SRI LANKA
இன்றைய போட்டியில்
இங்கிலாந்து வெல்லும் என்று 19 பேரும்
இலங்கை வெல்லும் என்று 6பேரும் விடையளித்துள்ளனர்.
இலங்கை வெல்லும் என்று சுவி, ராசவன்னியன்,வாதவூரான், மருதங்கேணி,ரதி ,கறுப்பி,ஆகியோர் விடையளித்துள்ளனர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி சுவிக்கும் கோசான் சேயுக்குமான போட்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து வென்றால் நான் கோசானிடம் வாடகையை பெற்றுக்கொண்டு அனுப்பி விடுவேன். ஆனால் ஸ்ரீலங்காதான் வெல்லும், அப்படி வெல்லும்போது இங்கிலாந்து தலை குப்புற தேம்ஸ் நதிக்குள் விழுந்திருக்கும்..... நாங்கள் கூரைக்கு மேலே இருப்போம்.....!   😁

Image associée

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா வெல்லும் என்று இப்போதும் நம்புகின்றவர்களை நினைக்கச் சிரிப்பாக இருக்கு😂🤣🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அப்படி எல்லாம் மனம் துவண்டு போகாதேங்கோ. 96 வரை எங்காத்து காரரும் கோட்டுக்கு போறார் எண்டு விளையாடிய அணி இலங்கை. 96-2006 தரமான அணியாக இருந்ததில்லையா?

மேஇதீ வைபாருங்கள். எவ்வளவு திறமை இருந்தும் அடிப்படை முகாமைத்துவம் இல்லாதாபடியால் பிரகாசிக்க முடியவில்லை.

நவீன கிரிகெட்டில் உட்கட்டமைப்பு முக்கியம். ஒரு கொன்வேயெர் பெல்ட் போல வீரர்கள் வர வேண்டும். வரும் போதே சச்சின் போல ஜீனியல் ஆக இருக்க வேண்டியதில்லை. ஸ்டீவ் ஸ்மித், பெயர்ஸ்டோவ், போல சாதாரண வீரர்களாய் வந்தும் பின்னாளில் பிரகாசிக்கலாம்.

இந்த கட்டமைப்பு முன்பு அவுஸ், தெஆ விடம் இருந்தது. அவுசில் இப்போதும் உண்டு. இந்தியாவில் கடந்த 20 வருடமாயும் இங்கிலாந்தில் 10 வருடமாயும் இது கட்டமைக்க பட்டு வருகிறது. ஆனால் தெஆ வில் முன்பு போல இல்லை.

உள்கட்டமைப்பு வினைத்திறன் மிக்கதாக இருக்கும் போது, உள்ளூர் விளையாட்டில் பணம் பிழங்கும், grass root மட்டத்தில் கிரிகெட் வளரும், இதுதானாகவே elite மட்டத்தில் நல்ல வீரர்களை தரும்.

நான் சொன்னது போல, 2005 க்கு பிறகு இங்கிலாந்தில் கிரிகெட்டை வளர்ப்பதில் பல கரிசனையான முன்னெடுப்புகள் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்தது. முன்பு இங்கிலாந்தில் கிரிகெட் ஒரு பணக்கார விளையாட்டு. Soft ball cricket, அரிதிலும் அரிது. மைதானம், மட்டை, காப்பு, எல்லாம் வாங்கும் வசதி படைத்த பள்ளிகளில் மட்டுமே ஆடப்படும் மேல்தட்டு விளையாட்டு.

ஆனால் இப்போ, அப்படியில்லை, ECBயே ஆல் ஸ்டார்ஸ் போன்று பல திட்டங்கள் மூலம்   கிரிகெட்டை ஜனரஞ்சகப் படுத்துகிறது. டிகெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்கிறன.

இன்னொரு முக்கியமான விடயம் தெற்காசியர்களின் பங்களிப்பு, உலக மகா ஸ்பின்னர்கள் இலாவிடினும் மொயினும், லதீபும் நல்ல ஸ்பின்னர்கள். ஜான் எம்பூரி, ஸ்வான் இருவருக்கும் பின் இங்கிலாந்தில் இருக்கும் பெயர் சொல்லக் கூடிய ஸ்பின்னர்கள்.

ஒன்றை கவனியுங்கள். பாகிஸ்தான், இந்தியா, பங்களதேஸ், விளையாடும் எல்லா போட்டிகளும் சோல்ட் அவுட். இலங்கை, மேஇதீ போட்டிகள் பெரும்பாலும் சோல்ட் அவுட். இன்று இப்படி வெறிதனமாக கிரிகெட்டை ரசிக்கும் இந்த குடும்பங்களின் பிள்ளைகளும் நாளைக்கு இங்கிலாந்து அணிக்கே விளையாடுவார்கள். இன்னொரு நசீர் ஹுசைனாக, மொயின் அலியாக, ஜொவ்ரா ஆச்சராக. 

நல்ல உட்கட்டமைப்பு, சாதகமான இனப்பரம்பல், திறமைக்கு முக்கியத்துவம் இது மூன்றும் உள்ள நாடு விளையாட்டில் சோடை போகாது. எப்போதும் 1வதாக வராவிடினும், முதல் வரிசையில் இருக்கும். அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா இந்தவகை.

எவ்வளவு திறமை இருந்தும் இந்த 3இல்லாவிடில் பயனில்லை. பாகிஸ்தான், இலங்கை, மேஇதீ, தெஆ இந்தவகை.

 

கிரிக்கெட் பற்றி இவ்வளவு ஆழமாக சிந்தித்து கருத்தெழுதும் நீங்கள் போட்டியில் ஏன்  சரியான அணிகளை தேர்வு செய்யவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கிருபன் said:

சிறிலங்கா வெல்லும் என்று இப்போதும் நம்புகின்றவர்களை நினைக்கச் சிரிப்பாக இருக்கு😂🤣🤪

கிருபன் அண்ணா எனக்கு இங்கிலாந்து வெல்லும் எண்டு தெரியும் ஆனால் ஏதாவது அதிசயம்நடந்து இலங்கை வெல்லாதா என்ற ஒரு நப்பாசை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இங்கிலாந்து வென்றால் நான் கோசானிடம் வாடகையை பெற்றுக்கொண்டு அனுப்பி விடுவேன். ஆனால் ஸ்ரீலங்காதான் வெல்லும், அப்படி வெல்லும்போது இங்கிலாந்து தலை குப்புற தேம்ஸ் நதிக்குள் விழுந்திருக்கும்..... நாங்கள் கூரைக்கு மேலே இருப்போம்.....!   😁

Image associée

 

மைண்டாய்ஸ்: அவசரப்பட்டு வார்த்தையை விடாதடா கோஷான். மேட்ச் முடியட்டும் அப்புறம் விளையாடலாம் 😂

23 minutes ago, Eppothum Thamizhan said:

கிரிக்கெட் பற்றி இவ்வளவு ஆழமாக சிந்தித்து கருத்தெழுதும் நீங்கள் போட்டியில் ஏன்  சரியான அணிகளை தேர்வு செய்யவில்லை?

விநாச காலே, விபரீத புத்தி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

உண்மை தான்.....எப்போதும் தமிழன்....!

அவுஸ்திரேலிய மானிலங்களை ....ஒரு தேசமாக இணைத்து வைத்திருப்பதில்....விளையாட்டு மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது!

இல்லாவிட்டால் ஒவ்வொரு மானிலமும்.....கல்முனையும்....காத்தான் குடியும் தான்!

சிங்களம் விட்ட மாபெரும் தவறும் இது தான்!

அவுஸ்ரேலியாவிலும் பிரிவினைவாதம் இருக்கா? tw_grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

அவுஸ்ரேலியாவிலும் பிரிவினைவாதம் இருக்கா? tw_grin:

வெளிப்படையாக இல்லை! பொதுவாகத் தேசீய் ரீதியில் பெறப்படும் வரியைப் பங்கு போடுவதில் பிடுங்குப் படுவார்கள்! பின்னர் தங்களுக்குள்ளேயே தீர்த்தும் கொள்வார்கள்! தனியாகப் பிரிந்து போனால் தனிமைப் பட்டு விடுவோம் என்ற பயம் எல்லோருக்கும் உண்டு!

ஆனால் பிரிவினை இல்லை! கருத்து வேறு பாடுகள் உண்டு!

மேற்கு அவுஸ்திரேலிய மானிலத்தில் தென்னாபிரிக்கர் அதிகம்! அது போல தென் அவுஸ்திரேலிய மானிலத்தில் ஜேர்மனியர் அதிகம்! விக்டோரியா மானிலத்தில் கிறீக் அதிகம்! இத்தாலியர் எல்லா மாநிலங்களிலும் உள்ளார்கள்! குயின்ஸ்லாந்து மானிலத்தில் பிரிட்டிஷ் அதிகம்!

சீனர்கள் எல்லா மானிலங்களிலும் உள்ளார்கள்! லெபனிஸ்ஸும், துருக்கியர்களும் எல்லா மானிலங்களிலும் உள்ளார்கள்! ஆட்சி மொழி ஆன்கிலம் எனினும் எல்லா மொழிகளிலும் வானொலிகளும், பத்திரிகைகளும் உண்டு! பல் மொழித் தேசீய தொலைக்காட்சி நிலையம் ஒன்றும் உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

வெளிப்படையாக இல்லை! பொதுவாகத் தேசீய் ரீதியில் பெறப்படும் வரியைப் பங்கு போடுவதில் பிடுங்குப் படுவார்கள்! பின்னர் தங்களுக்குள்ளேயே தீர்த்தும் கொள்வார்கள்! தனியாகப் பிரிந்து போனால் தனிமைப் பட்டு விடுவோம் என்ற பயம் எல்லோருக்கும் உண்டு!

ஆனால் பிரிவினை இல்லை! கருத்து வேறு பாடுகள் உண்டு!

மேற்கு அவுஸ்திரேலிய மானிலத்தில் தென்னாபிரிக்கர் அதிகம்! அது போல தென் அவுஸ்திரேலிய மானிலத்தில் ஜேர்மனியர் அதிகம்! விக்டோரியா மானிலத்தில் கிறீக் அதிகம்! இத்தாலியர் எல்லா மாநிலங்களிலும் உள்ளார்கள்! குயின்ஸ்லாந்து மானிலத்தில் பிரிட்டிஷ் அதிகம்!

சீனர்கள் எல்லா மானிலங்களிலும் உள்ளார்கள்! லெபனிஸ்ஸும், துருக்கியர்களும் எல்லா மானிலங்களிலும் உள்ளார்கள்! ஆட்சி மொழி ஆன்கிலம் எனினும் எல்லா மொழிகளிலும் வானொலிகளும், பத்திரிகைகளும் உண்டு! பல் மொழித் தேசீய தொலைக்காட்சி நிலையம் ஒன்றும் உள்ளது!

தகவல்களுக்கு நன்றி புங்கையர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

வெளிப்படையாக இல்லை! பொதுவாகத் தேசீய் ரீதியில் பெறப்படும் வரியைப் பங்கு போடுவதில் பிடுங்குப் படுவார்கள்! பின்னர் தங்களுக்குள்ளேயே தீர்த்தும் கொள்வார்கள்! தனியாகப் பிரிந்து போனால் தனிமைப் பட்டு விடுவோம் என்ற பயம் எல்லோருக்கும் உண்டு!

ஆனால் பிரிவினை இல்லை! கருத்து வேறு பாடுகள் உண்டு!

மேற்கு அவுஸ்திரேலிய மானிலத்தில் தென்னாபிரிக்கர் அதிகம்! அது போல தென் அவுஸ்திரேலிய மானிலத்தில் ஜேர்மனியர் அதிகம்! விக்டோரியா மானிலத்தில் கிறீக் அதிகம்! இத்தாலியர் எல்லா மாநிலங்களிலும் உள்ளார்கள்! குயின்ஸ்லாந்து மானிலத்தில் பிரிட்டிஷ் அதிகம்!

சீனர்கள் எல்லா மானிலங்களிலும் உள்ளார்கள்! லெபனிஸ்ஸும், துருக்கியர்களும் எல்லா மானிலங்களிலும் உள்ளார்கள்! ஆட்சி மொழி ஆன்கிலம் எனினும் எல்லா மொழிகளிலும் வானொலிகளும், பத்திரிகைகளும் உண்டு! பல் மொழித் தேசீய தொலைக்காட்சி நிலையம் ஒன்றும் உள்ளது!

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி புங்கையூர‌ன் ஜ‌ய்யா /

இல‌ங்கையின் ம‌க்க‌ள் தொகை தான் அவுஸ்ரேலியாவில் /
இல‌ங்கை சிறு தீவு , ஆனால் அவுஸ்ரேலியா பெரிய‌ நில‌ப் ப‌ர‌ப்ப‌ கொண்ட‌ ஒரு நாடு  /

இந்த‌னை மொழி பேசும் ம‌க்க‌ள் அவுஸ்ரேலியாவில் இருக்கிறார்க‌ளா , 

அப்ப‌ அவுஸ்ரேலியாவிலும் , 
ஜேர்ம‌ன் இந்தாலி நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ஏன் ஜ‌யா உங்கை வ‌ந்தார்க‌ள் குழ‌ப்ப‌மாய் இருக்கு /

இந்தியா அமெரிக்கா போல‌ ப‌ல‌ மொழி பல‌ இன‌ங்க‌லை கொண்ட‌ நாடா அவுஸ்ரேலியா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sl  4 - 2 = 3 over ....!

இத்தால் அறியத் தருவது யாதெனில் கோசான் சே  அவர்கள் இன்று வீட்டை காலி பண்ணுகின்றார்.....!   😘

                              Résultat de recherche d'images pour "leave to house gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பையன்26 said:

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி புங்கையூர‌ன் ஜ‌ய்யா /

இல‌ங்கையின் ம‌க்க‌ள் தொகை தான் அவுஸ்ரேலியாவில் /
இல‌ங்கை சிறு தீவு , ஆனால் அவுஸ்ரேலியா பெரிய‌ நில‌ப் ப‌ர‌ப்ப‌ கொண்ட‌ ஒரு நாடு  /

இந்த‌னை மொழி பேசும் ம‌க்க‌ள் அவுஸ்ரேலியாவில் இருக்கிறார்க‌ளா , 

அப்ப‌ அவுஸ்ரேலியாவிலும் , 
ஜேர்ம‌ன் இந்தாலி நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ஏன் ஜ‌யா உங்கை வ‌ந்தார்க‌ள் குழ‌ப்ப‌மாய் இருக்கு /

இந்தியா அமெரிக்கா போல‌ ப‌ல‌ மொழி பல‌ இன‌ங்க‌லை கொண்ட‌ நாடா அவுஸ்ரேலியா 

பையன்...அவுஸ்திரேலியா கனடாவைப் போல ஒரு குடியேறிகள் நாடு! 1788 ‘ல் கப்டன் குக் அவுஸ்திரேலியாவைக் கண்டு பிடித்ததாகக் கூறப் பட்டாலும், ஒல்லாந்தர், சீனர் அவுஸுக்கு வந்துள்ளனர்! ராஸ்மானிய மானிலத்துக்கு ஒல்லாந்தர் வைத்த பெயர் வாண்டிமன் தீவு! ஆனால் கப்ரின் குக் தான் முதலில் உரிமை கோரியவர்! பின்னர் இங்கிலாந்திலிருந்து முதலில் சிறைக் கைதிகளும்...பின்னர் ஆங்கிலேய்ர்களும் வந்தனர்! பின்னர் 1960 வரையும் வெள்ளையர்கள் அல்லது ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் மட்டும் தான் குடி பெயரலாம் என்று சட்டமிருந்தது! அப்போது தான் இத்தாலியர், கிரீக், ஜேர்மனியர், தென்னாபிரிக்கர் , துருக்கியர், லெபனியர் எல்லாம் வந்த்னர்! பின்னர் தங்கம் கண்டு பிடிக்கப் பின்னர் சீனர்கள் கூலிகளாக மட்டும் அனுமதிக்கப் பட்டார்கள்! உண்மையில் ஏதென்ஸுக்கு அடுத்ததாகக் கிறீக் மொழி பேசும் மக்களைக் கொண்ட நகரம் மெல்பேர்ண் ஆகும்! 1960 களின் பின்னர் தச்ன் மற்றைய நாட்டவர்கள் வரக் கூடியதாக இருந்த்து! அதிக வியட்னாமியர்கள் வியட்னாம் யுத்தத்தின் பின்னர் குடியேறியவர்களாவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புங்கையூரன் said:

பையன்...அவுஸ்திரேலியா கனடாவைப் போல ஒரு குடியேறிகள் நாடு! 1788 ‘ல் கப்டன் குக் அவுஸ்திரேலியாவைக் கண்டு பிடித்ததாகக் கூறப் பட்டாலும், ஒல்லாந்தர், சீனர் அவுஸுக்கு வந்துள்ளனர்! ராஸ்மானிய மானிலத்துக்கு ஒல்லாந்தர் வைத்த பெயர் வாண்டிமன் தீவு! ஆனால் கப்ரின் குக் தான் முதலில் உரிமை கோரியவர்! பின்னர் இங்கிலாந்திலிருந்து முதலில் சிறைக் கைதிகளும்...பின்னர் ஆங்கிலேய்ர்களும் வந்தனர்! பின்னர் 1960 வரையும் வெள்ளையர்கள் அல்லது ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் மட்டும் தான் குடி பெயரலாம் என்று சட்டமிருந்தது! அப்போது தான் இத்தாலியர், கிரீக், ஜேர்மனியர், தென்னாபிரிக்கர் , துருக்கியர், லெபனியர் எல்லாம் வந்த்னர்! பின்னர் தங்கம் கண்டு பிடிக்கப் பின்னர் சீனர்கள் கூலிகளாக மட்டும் அனுமதிக்கப் பட்டார்கள்! உண்மையில் ஏதென்ஸுக்கு அடுத்ததாகக் கிறீக் மொழி பேசும் மக்களைக் கொண்ட நகரம் மெல்பேர்ண் ஆகும்! 1960 களின் பின்னர் தச்ன் மற்றைய நாட்டவர்கள் வரக் கூடியதாக இருந்த்து! அதிக வியட்னாமியர்கள் வியட்னாம் யுத்தத்தின் பின்னர் குடியேறியவர்களாவர்!

அவுஸ்ரேலியாவின் வ‌ர‌லாற‌ தெரிய‌ ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி ஜ‌யா 🙏 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புங்கையூரன் said:

பையன்...அவுஸ்திரேலியா கனடாவைப் போல ஒரு குடியேறிகள் நாடு! 1788 ‘ல் கப்டன் குக் அவுஸ்திரேலியாவைக் கண்டு பிடித்ததாகக் கூறப் பட்டாலும், ஒல்லாந்தர், சீனர் அவுஸுக்கு வந்துள்ளனர்! ராஸ்மானிய மானிலத்துக்கு ஒல்லாந்தர் வைத்த பெயர் வாண்டிமன் தீவு! ஆனால் கப்ரின் குக் தான் முதலில் உரிமை கோரியவர்! பின்னர் இங்கிலாந்திலிருந்து முதலில் சிறைக் கைதிகளும்...பின்னர் ஆங்கிலேய்ர்களும் வந்தனர்! பின்னர் 1960 வரையும் வெள்ளையர்கள் அல்லது ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் மட்டும் தான் குடி பெயரலாம் என்று சட்டமிருந்தது! அப்போது தான் இத்தாலியர், கிரீக், ஜேர்மனியர், தென்னாபிரிக்கர் , துருக்கியர், லெபனியர் எல்லாம் வந்த்னர்! பின்னர் தங்கம் கண்டு பிடிக்கப் பின்னர் சீனர்கள் கூலிகளாக மட்டும் அனுமதிக்கப் பட்டார்கள்! உண்மையில் ஏதென்ஸுக்கு அடுத்ததாகக் கிறீக் மொழி பேசும் மக்களைக் கொண்ட நகரம் மெல்பேர்ண் ஆகும்! 1960 களின் பின்னர் தச்ன் மற்றைய நாட்டவர்கள் வரக் கூடியதாக இருந்த்து! அதிக வியட்னாமியர்கள் வியட்னாம் யுத்தத்தின் பின்னர் குடியேறியவர்களாவர்!

அதெல்லாம் சரி.....அவிசை, கனடாவை, அமெரிக்காவை விடாதவையல், இந்தியாவை, முக்கியமாக இலங்கையை, ஏன் விட்டு, விட்டு போனவையள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அதெல்லாம் சரி.....அவிசை, கனடாவை, அமெரிக்காவை விடாதவையல், இந்தியாவை, முக்கியமாக இலங்கையை, ஏன் விட்டு, விட்டு போனவையள்?

உலகத்தில் ... நாய்க்குட்டி வடிவமான ஒரு சிறிய தீவிலிருந்து..அதனை விடவும் இருநூறு மடங்கான உலகின் வளமான பகுதிகளைக் கையகப் படுத்திய ...இரத்தக் கறை படிந்த வரலாறு கொண்டது பிரித்தானியா!  காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்துடன் நின்று பிடிக்க இயலாமல் விட்டுச் சென்றது! According to Ghandi-600,000 British cannot control 600 million Indians, if we do not corporate.இந்தியா போனதும்...இலங்கையை வைத்திருப்பது பொருளாதார நோக்கில்... பிரயோசனம் இல்லாமல் போய் விட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புங்கையூரன் said:

உலகத்தில் ... நாய்க்குட்டி வடிவமான ஒரு சிறிய தீவிலிருந்து..அதனை விடவும் இருநூறு மடங்கான உலகின் வளமான பகுதிகளைக் கையகப் படுத்திய ...இரத்தக் கறை படிந்த வரலாறு கொண்டது பிரித்தானியா!  காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்துடன் நின்று பிடிக்க இயலாமல் விட்டுச் சென்றது! According to Ghandi-600,000 British cannot control 600 million Indians, if we do not corporate.இந்தியா போனதும்...இலங்கையை வைத்திருப்பது பொருளாதார நோக்கில்... பிரயோசனம் இல்லாமல் போய் விட்டது!

காந்தீண்ட கதையை விடுங்கோ. அவங்களுக்கு எப்படி, 600 மில்லியனை சமாளிக்கலாம் எண்ட வித்தை தெரியும். 1756ல் இருந்து 1947 வரை சமாளிச்சு தான் இருக்கிறான்.

உந்த பிராமணர் சாப்பிட்ட இலையில உருளுற கோஸ்ட் டிகளை பார்த்தனியள்  தானே.

உதுகளையும் வைச்சுக்குண்டு, வெள்ளை எப்படி, உது தனது நாடு எண்டு சொல்ல ஏலும்.

எலிவளை எண்டாலும், தனி வளை வேண்டும் எண்டு, எங்கெங்க, கொஞ்சமா, காடுகள் சார்ந்து வாழும், ஆதி குடிகள் இருந்திச்சுதோ, அங்கங்க செட்டில் பண்ணி விட்டான். 

ஐரோப்பாவில் இருந்து 17,000 கிலோ மீட்டருக்கு அப்பால், உலகின் மறுபுறம், ஒரு நாடு, அவுஸ்திரேலியாவை பிடித்து செட்டில் பண்ணி வெள்ளைகளை பெரும் பான்மையாக கொண்ட  நாடாக்கி இருக்கிறானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

அதெல்லாம் சரி.....அவிசை, கனடாவை, அமெரிக்காவை விடாதவையல், இந்தியாவை, முக்கியமாக இலங்கையை, ஏன் விட்டு, விட்டு போனவையள்?

பிரித்தானிய காலனியகாலம் அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது ஆங்கில வம்சாவளி குடியேறிகளின் தலைமையில் ஏனைய ஐரோப்பிய குடியேறிகளின் வம்சாவளிகள் ஒன்று சேர்ந்து நடத்திய அமெரிக்க சுதந்திரப் போரினால். அமெரிக்காவை விட்டு பிரிட்டன் வெளியேறவில்லை துரத்தப்பட்டது.

இந்த படிப்பினையை கொண்டு பின்னர் ஏற்படுத்திய வெள்ளையின குடியேற்ற நாடுகளில் மட்டுப்பட்ட சுயாட்சி அனுமதிக்கப் பட்டது. அவுஸ், கனடா, நியூசீலாந்து, கனடா எல்லாவற்றிக்கும் டொமினியன் அந்தஸ்து எப்பவோ வழங்கப் பட்டு விட்டது, ஆனால் அப்போதும் இலங்கையும் இந்தியாவும் crown colony யாக நேரடி ஆளுகையில்தான் இருந்தன.

இந்தியா இலங்கையிலும் போராட்டம் முதலில் டொமினியன் அந்தஸ்து கோரியே அமைந்தது. பின்னர்தான் முழு சுதந்திரக் கோரிக்கை எழுந்தது.

2’ம் உலக யுத்த முடிவில், அமெரிக்கா கை ஓங்கியது. அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையாக decolonisation இருந்தது. 

இந்த கட்டத்தில் அவுஸ், கனடா போன்ற நாடுகள் பெயரளவில் முடிக்கு கீழ்வரும்  ஏற்பாட்டுக்கு வந்தன. இந்தியா இலங்கை என்பன சுதந்திரம் அடையும் போது இப்படி ஒரு ஏற்பாட்டிலேயே இருந்தன. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் - ராணியின் மாமன் மவுண்ட்பேட்டன் பிரபு.

பின்னர் இந்தியா தன் ராணியுடனா முழு தொடர்பையும் முறித்து குடியரசாகி, தன் ஜனாதிபதியை தானே நியமித்தது. இதைதான் இப்போ ரிபப்ளிக் டே என்பர்.

இலங்கை 1972 யாப்பின் மூலம் குடியரசாகியது.

அவுஸ் கனடா இன்னும் இந்த தொடர்பை வைத்துள்ளன. இந்த தொடர்பை அறுக்க வேண்டுமா என அவுசில் 90 களின் பிற்பகுதியில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தது. மிக குறைந்த விதியாசத்தில், குடியரசாகும் தெரிவு தோற்றது.

:பிகு அவுஸ் ஒரு ஒற்றை ஆட்சி நாடல்ல. அது ஒரு confederation of states. Australian Commonwealth என்பார்கள். 

1 hour ago, suvy said:

sl  4 - 2 = 3 over ....!

இத்தால் அறியத் தருவது யாதெனில் கோசான் சே  அவர்கள் இன்று வீட்டை காலி பண்ணுகின்றார்.....!   😘

                              Résultat de recherche d'images pour "leave to house gif"

மத்யூஸ், மெண்டிஸ் எண்டு ரெண்டு தடியங்களோட வந்திருக்கிறன். Evict பண்ணுவது கஸ்டம்தான் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

     Image associée

ஸ்ரீலங்கா .....!   😘

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறில‌ங்கா அணி , இதெல்லாம் ஒரு அணியா 😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

சொறில‌ங்கா அணி , இதெல்லாம் ஒரு அணியா 😉
 

சிங்கள புத்தநாடு வென்றால் என்ன.தோற்றால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கந்தப்பு said:

சிங்கள புத்தநாடு வென்றால் என்ன.தோற்றால் என்ன?

புத்தர் கைவிட்டுட்டார்  இனி கர்த்தர் காப்பாத்தினால்தான் உண்டு.....!   😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.