Jump to content

அவர்களை வடக்கிலிருந்து எவ்வித உயிர் சேதமும் இல்லாமல் வெளியேற்றியது நியாயமான விடயமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை வடக்கிலிருந்து எவ்வித உயிர் சேதமும் இல்லாமல் வெளியேற்றியது நியாயமான விடயமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

வெளியேற்றப்  பட்டவர்களில்.... குழந்தைகள், பெண்கள். முதியோர் என பலரும் இருந்ததால்...
அவர்களை உயிர்ச் சேதம் இல்லாமல், அனுப்பி வைத்தது தான், சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.

Link to comment
Share on other sites

58 minutes ago, சாமானியன் said:

அவர்களை வடக்கிலிருந்து எவ்வித உயிர் சேதமும் இல்லாமல் வெளியேற்றியது நியாயமான விடயமா

அசையும் சொத்துக்களை கொண்டுபோக விட்டு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

Quote

 

இஸ்லாமியர்கள் வெளியேற்றத்திறக்கு விடுதலைப் புலிகள் பின்னாளில் வருத்தம் தெரிவித்தது அனைவரும் அறிந்தது. 

வெளியேற்றியதற்கு தவறு என்ற கருத்து அதன் பின் விழைவில் இருந்தே ஆரம்பிக்கின்றது. மதவாரியாக ஒரு மக்கள் கூட்டத்தை செந்தநாட்டில் தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி அகதியாக்கியதில் இருந்து இனவிடுதலைப்போராட்டம் பயங்கரவாதமாக சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் புலிகளின் அரசியல் படுகொலைகள் தற்கொலைத் தாக்குதல்கள் எல்லாம் பயங்கரவாதத்திற்கு பக்கபலமாக இணைக்கப்பட்டது. இறுதியில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாக இனவிடுதலைப்போராட்டம் ஒழிக்கப்பட்டது. இதன் போக்கறிந்தே புலிகள் வருத்தம் தெரிவித்தனர். புலிகளின் வெளியேற்ற நடவடிக்கைக்கான விழைவு நடந்துவிட்டது. அதன் பின்னர் தற்போதைய சம்பவங்களை வைத்து அதை நியாயப்படுத்த முனைவது கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதுபோன்றது. 

 

 

வேறு திரியில் எழுதியதையே இங்கும் மேற்கோள் காட்டியுள்ளேன். 

இவ்வாறான கேள்விகள் சிந்தனை முறைகள் எந்தவகையில் இனத்திற்கு ஆரோக்கியமானது என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும். நம் வலிந்து பகையை வளர்ப்பதுக்கும்  பிரிவினையை தக்கவைப்பதற்கும் வருத்தம் தெரிவித்து முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பழைய துன்பியல் சம்பவங்ளை தோண்டியெடுப்பது தூரநோக்கில் நன்மை தருமா என்ற கேள்வி அவசியமானது. 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சண்டமாருதன் said:

 

வேறு திரியில் எழுதியதையே இங்கும் மேற்கோள் காட்டியுள்ளேன். 

இவ்வாறான கேள்விகள் சிந்தனை முறைகள் எந்தவகையில் இனத்திற்கு ஆரோக்கியமானது என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும். நம் வலிந்து பகையை வளர்ப்பதுக்கும்  பிரிவினையை தக்கவைப்பதற்கும் வருத்தம் தெரிவித்து முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பழைய துன்பியல் சம்பவங்ளை தோண்டியெடுப்பது தூரநோக்கில் நன்மை தருமா என்ற கேள்வி அவசியமானது. 

 

 

 

பகை,  பிரிவினை,  சூரிய நமஸ்காரம்  என்பன எல்லாம் விரிவாக ஆராய வேண்டிய விடயங்களே.

 சம்பவங்களில் இருந்து படிப்பினைகளை கற்பதற்கு காலவரையறைகள் இருப்பதாக தெரியவில்லை.

 மன்னிக்க வேண்டும்,  துன்பியல் முடிவிற்கு கொண்டுவரப்படவில்லை என்று தான் எண்ணத்  தோன்றுகிறது . அது ஒரு அத்தியாயம் மட்டுமே;  புத்தகம் எழுதி முடிந்து விட்டது எனவும் தோன்றவில்லை.

 சரி இன்னும் இரண்டு கேள்விகள்;

  1.  அவர்களை வெளியேற்றாமல் விட்டிருக்கலாமா?

  2. ஏன்  அவர்களை வெளியேற்ற வேண்டி வந்தது.   அவை நியாயப்படுத்தக் கூடிய காரணிகளாக அப்போது இருந்ததா இப்போதும் இருக்கின்றதா

     

பழைய நடப்புகளில் , உணர்ச்சி வசப்படாமல் சுய பரிசோதனைகள்  (ஏங்களுக்குள்ளேயே) செய்து கொள்வது ஓர் ஆரோக்கியமான விடயமாக தோன்றி நிற்கின்றது.  நீண்ட காலப் பயன்பாடு உடையதாகவும் இருக்கலாம்;  சுயபரிசோதைக்கு எடுக்கப்படும் நேரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் இருக்கக் கூடும்.

 

 

Link to comment
Share on other sites

12 minutes ago, சாமானியன் said:

பகை,  பிரிவினை,  சூரிய நமஸ்காரம்  என்பன எல்லாம் விரிவாக ஆராய வேண்டிய விடயங்களே.

 சம்பவங்களில் இருந்து படிப்பினைகளை கற்பதற்கு காலவரையறைகள் இருப்பதாக தெரியவில்லை.

 மன்னிக்க வேண்டும்,  துன்பியல் முடிவிற்கு கொண்டுவரப்படவில்லை என்று தான் எண்ணத்  தோன்றுகிறது . அது ஒரு அத்தியாயம் மட்டுமே;  புத்தகம் எழுதி முடிந்து விட்டது எனவும் தோன்றவில்லை.

 சரி இன்னும் இரண்டு கேள்விகள்;

  1.  அவர்களை வெளியேற்றாமல் விட்டிருக்கலாமா?

  2. ஏன்  அவர்களை வெளியேற்ற வேண்டி வந்தது.   அவை நியாயப்படுத்தக் கூடிய காரணிகளாக அப்போது இருந்ததா இப்போதும் இருக்கின்றதா

     

பழைய நடப்புகளில் , உணர்ச்சி வசப்படாமல் சுய பரிசோதனைகள்  (ஏங்களுக்குள்ளேயே) செய்து கொள்வது ஓர் ஆரோக்கியமான விடயமாக தோன்றி நிற்கின்றது.  நீண்ட காலப் பயன்பாடு உடையதாகவும் இருக்கலாம்;  சுயபரிசோதைக்கு எடுக்கப்படும் நேரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் இருக்கக் கூடும்.

 

 

 

புலிகள் நியாயமற்றது என்பதன் அடிப்படையிலேயே அதற்கு வருத்தம் தெரிவித்தனர். அநத சம்வத்தின் பின்னர் சர்வதேசத்தின் போக்கு என்ன தமிழர் விடுதலைப்போராட்டம் குறித்த அணுகுமுறையில் என்ன மாற்றம் நிகழ்ந்தது. என்ற பல்வேறு சுய பரிசோதனைகளின் பின்னரே அதற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. புலிகள் எந்த இடத்திலும் தாம் செய்ததை நியாயப்படுத்தவில்லை.  அவர்கள் நடவடிக்கைக்கு அவர்களே வருத்தம் தெரிவித்ததோடு இந்த சம்பவம் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவே அர்த்தம். அதவது இச்சம்பவம் குறித்து புலிகள் செய்தது பாதகமான செயல் என்ற கருத்தை முன்வைப்பவர்களுக்கு நாம்  சொல்லக் கூடியது அதற்கு புலிகளே வருத்தம் தெரிவித்துவிட்டனர் என்பதுவே. இதை இப்போது நியாயப்படுத்துவது அவர்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதுகின்றேன். 

போரின் பின் இறந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் காணாமல் போனவர்கள் என்பது போக ஒரு முப்பது லட்சம் தமிழர்களும்  இருபது லட்சம் இஸ்லாமியத் தமிழர்களும் இலங்கையில் வாழ்கின்றார்கள்.. குறிப்பிட்ட ஆண்டுகள் செல்ல இந்த எண்ணிக்கை சம நிலைக்கு வரும். இவர்களுக்கு இடையில் எந்தவகையில் பகை வளர்ந்தாலும் புலம்பெயர்ந்த எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் அங்குள்ள மக்களுக்கு  எந்த நன்மையும்  எதிர்காலத்தில் கிடையாது. சிங்கள பேரினவாதத்திற்கு மட்டுமே நன்மையானது. இஸ்லாமிய மத இறுக்கம் அடிப்படை வாதம் அவர்களுக்கும் எமக்கும் இடையில் நடந்த கசப்பான சம்பவங்கள் பகை உணர்வுகள் என அனைத்தும் யாவரும் அறிந்ததே. அவைகளின் தன்மையை குறைப்பதே நன்மை தரும் தவிர வளர்பது எந்த விதத்திலும் எதிர்காலத்தில் நன்மை தராது. சுய பரிசோதனை என்பது வேறு பழைய புண்களை சொறிவது என்பது வேறு. இதற்கு மேல் இத்திரியில் எனது கருத்து எதுவுமில்லை. நீங்கள் என்ன பரிசோதனை வேண்டுமானாலும் செய்யுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

 

புலிகள் நியாயமற்றது என்பதன் அடிப்படையிலேயே அதற்கு வருத்தம் தெரிவித்தனர். அநத சம்வத்தின் பின்னர் சர்வதேசத்தின் போக்கு என்ன தமிழர் விடுதலைப்போராட்டம் குறித்த அணுகுமுறையில் என்ன மாற்றம் நிகழ்ந்தது. என்ற பல்வேறு சுய பரிசோதனைகளின் பின்னரே அதற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. புலிகள் எந்த இடத்திலும் தாம் செய்ததை நியாயப்படுத்தவில்லை.  அவர்கள் நடவடிக்கைக்கு அவர்களே வருத்தம் தெரிவித்ததோடு இந்த சம்பவம் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவே அர்த்தம். அதவது இச்சம்பவம் குறித்து புலிகள் செய்தது பாதகமான செயல் என்ற கருத்தை முன்வைப்பவர்களுக்கு நாம்  சொல்லக் கூடியது அதற்கு புலிகளே வருத்தம் தெரிவித்துவிட்டனர் என்பதுவே. இதை இப்போது நியாயப்படுத்துவது அவர்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதுகின்றேன். 

போரின் பின் இறந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் காணாமல் போனவர்கள் என்பது போக ஒரு முப்பது லட்சம் தமிழர்களும்  இருபது லட்சம் இஸ்லாமியத் தமிழர்களும் இலங்கையில் வாழ்கின்றார்கள்.. குறிப்பிட்ட ஆண்டுகள் செல்ல இந்த எண்ணிக்கை சம நிலைக்கு வரும். இவர்களுக்கு இடையில் எந்தவகையில் பகை வளர்ந்தாலும் புலம்பெயர்ந்த எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் அங்குள்ள மக்களுக்கு  எந்த நன்மையும்  எதிர்காலத்தில் கிடையாது. சிங்கள பேரினவாதத்திற்கு மட்டுமே நன்மையானது. இஸ்லாமிய மத இறுக்கம் அடிப்படை வாதம் அவர்களுக்கும் எமக்கும் இடையில் நடந்த கசப்பான சம்பவங்கள் பகை உணர்வுகள் என அனைத்தும் யாவரும் அறிந்ததே. அவைகளின் தன்மையை குறைப்பதே நன்மை தரும் தவிர வளர்பது எந்த விதத்திலும் எதிர்காலத்தில் நன்மை தராது. சுய பரிசோதனை என்பது வேறு பழைய புண்களை சொறிவது என்பது வேறு. இதற்கு மேல் இத்திரியில் எனது கருத்து எதுவுமில்லை. நீங்கள் என்ன பரிசோதனை வேண்டுமானாலும் செய்யுங்கள். 

சண்டமாருதன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

 விவாதம் செய்வது எனது நோக்கமல்ல ஆயினும் கருத்துப் பரிமாற்றம் எப்போதுமே நன்மையான விடயமொன்று என்று தான் பல வருட வாழ்க்கை சொல்லி நிற்கின்றது.

 இந்த விடயம் அல்ல எந்த விடயம் என்றாலுமே உரிய நேரங்களில் விமர்சனத்திற்கு எடுத்து அதன் அக புறக்  காரணிகளை பழைய புதிய  தரவுகளுக்கூடாக அலசுவது மிகவும் பிரயோசனமான  விடயமொன்று என்று கருதி வந்திருக்கிறேன். அலசலின் விளைவாக பெறப்படும் முடிவுகள் அவரவர் சார்பானவை,  ஒருவரின் முடிவு மற்றயவருடன் எல்லா நேரமும் ஒத்துப் போக வேண்டுமென்பதில்லை.

சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஒருவர் இருக்கும் போது  இவ்வகையான ஏற்கெனவே மேற்கொண்டிருந்த செயற்பாடுகள்,  முடிவு எடுத்தலை நேரான வழியில் இலகுப்படுத்துகின்றன.

 எனது அறிவுக்கு எட்டியபடி ………..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.