Jump to content

பயங்கரவாதமும் இலங்கை பொருளாதாரமும்


Recommended Posts

பயங்கரவாதமும் இலங்கை பொருளாதாரமும் - அனுதினன் சுதந்திரநாதன்

இலங்கை வரலாற்றில், கடந்துவந்தப் பாதையை மீண்டும் நினைவுபடுத்துவதாக அல்லது கடந்துவந்த பாதையிலேயே, மீண்டும் பயணிக்க வைப்பதாக, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் அமைந்துள்ளது.   

உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்பு, அபிவிருத்தி பாதையை நோக்கி, மெல்ல மெல்ல பயணித்துக் கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரம், மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறது. உள்நாட்டுப் போரைக் கையாண்ட அரசாங்கம், இப்போது உள்நாட்டின் ஒத்துழைப்புடன், சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான, அறிவிக்கப்படாதப் போரை நிகழ்த்தும் நிலைக்கு வந்துவிட்டது

இவையனைத்துமே, இலங்கைப் பொருளாதாரத்தையும் அபிவிருத்தியையும் அத்திபாரத்துடன் ஆட்டம்காண வைத்துவிட்டன.   

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் விளைவாக, சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், அவற்றில் 35க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகிறார்கள்.

இந்தப் பத்தியை எழுதும்வரை, இலங்கையில் தாக்குதலுக்குப் பின்னரான அசாதாரண நிலை தொடர்ந்து கொண்டிருப்பதுடன், அதன் வாயிலாக மக்களின் இயல்புவாழ்க்கையும் பாதிக்கப்பட்டதாகவே அமைந்துள்ளது. இவை அனைத்துமே, தாக்குதலின் தொடர்விளைவாகப் பார்க்கப்பட்டாலும் இந்தத் தாக்குதலால், இலங்கை அரசாங்கத்துக்கு, நீண்டகால அடிப்படையில் ஏற்படக்கூடிய இழப்பானது, நேரடியாக கண்களுக்குத் தெரியாத, இதைவிட பன்மடங்கான இழப்பாகும்.

இந்தத் தாக்குதல், இலங்கையின் பொருளாதாரத்தையும் சாமானிய இலங்கை மக்களையும் எந்தவகையில் பாதிக்கப்போகிறது என்பதே, தற்போதைய நிலையில் பல்வேறு ஆய்வாளர்களின் விவாதப்பொருளாக உள்ளது.  

சுற்றுலாத்துறை 

போருக்குப் பின்னான இலங்கையின் மிக முக்கியமான வருமான மூலமாக சுற்றுலாத்துறை அமைந்துள்ளது. தற்போது, தொடர்ச்சியாக நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையானது, சுற்றுலாத்துறையை முழுமையாகப் புரட்டிப்போடுவதாக அமைந்துள்ளது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் பிரபல இணையதளங்களினால், சுற்றுலா பயணிகள் செல்லத்தகுந்த இடங்களில் இலங்கைக்கு முதன்மையான இடம் வழங்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக, கடந்த வருடம் சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொண்ட சுற்றுலாத்துறை, இம்முறை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும், தற்போதைய அசம்பாவித நிலையானது, இதைத் தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது. இதன்போது, கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற சுற்றுலாத்துறை வருமானத்தில் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைவாகவே கிடைக்கப்பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது, இலங்கையின் பொருளாதாரத்துக்கும் சுற்றுலாத்துறையை நம்பியிருந்தோர்களுக்கும் பேரிழப்பாகும்.

உண்மையில், இலங்கையின் முறைப்படுத்தப்பட்ட சுற்றுலாத்துறைக்கே இத்தகைய வருமான இழப்புள்ளபோது, முறைப்படுத்தப்படாத பருவத்தின் அடிப்படையில், சுற்றுலா வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும், அதனை நம்பியிருக்கும் உரிமையாளர்கள், திறன் குன்றிய தொழிலாளர்கள் (Unskilled Workers) ஆகியவர்களின் வருமானம் மிகப்பாரிய அளவில் பாதிக்கப்படுவதாக அமையும்.  

குறிப்பாக, தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு அடுத்த நாளே, கொழும்பிலுள்ள பிரபல விடுதிகளின் முன்பதிவு வீதமானது (Advance Booking Occupancy Rate), 76சதவீதத்திலிருந்து 4சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதுவே, தற்போதைய சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியை சரிவரக் காட்டி நிற்கிறது.

நாட்டின் அசாதாரண நிலை முடிவுக்கு கொண்டுவரப்படாத நிலையில், இலங்கைக்குள் மீளவும் சுற்றுலாப் பயணிகள் வருவதையோ அல்லது சர்வதேச நாடுகள் தமது பிரஜைகளை இலங்கைக்குள் அனுமதிப்பதையோ குறைந்தது ஒரு வருடகாலத்துக்கு நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, சுற்றுலாத்துறை மூலமாக வருமானத்தின் மீளவும் நாம் கட்டியெழுப்ப காலமெடுக்கும் என்பதுடன், அதுவரை குறித்தத் தொழில்முறையை நம்பியிருப்பவர்களின் நிலை என்னவாவது என்கிற கேள்வியும் நம்மிடையே மேலோங்கி நிற்கிறது.  

ரூபாவின் பெறுமதி 

இலங்கையில் கடந்தாண்டின் இறுதியில் இடம்பெற்ற அரசியல் குழப்பநிலைகளின் விளைவாக, இலங்கை நாணயத்தின் பெறுமதியானது மிகப்பெரும் வீழ்ச்சியைக் கண்டிருந்ததுடன், தற்போதே அது மெல்ல மெல்ல வலுவடைந்து வந்துகொண்டிருந்தது.

ஆயினும், தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி சூழ்நிலையானது, இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களது முதலீடு தொடக்கம் அந்நிய செலவாணி உள்வருகை ஆகியவற்றுக்கு முட்டுக்கட்டையாய் அமைந்துள்ளது. இதன்விளைவாக வலுவடைந்து கொண்டிருந்த இலங்கையின் நாணயப்பெறுமதியானது, மீளவும் வீழ்ச்சி பாதையைநோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த வாரத்தில்  அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக இலங்கையின் பெறுமதியானது, சுமார் 172 ரூபாயாக வலுவடைந்திருந்தது. ஆனால், தற்போது ஓர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் பெறுமதியானது 175 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அசாதார நிலை மேலும் தொடருகின்றபோது, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.  

இலங்கையின் பொதுபடுக்கடன் 

2018ஆம் ஆண்டைப்போல 2019ஆம் ஆண்டிலும் இலங்கை அரசாங்கமானது, மிகப்பாரிய பொதுபடுகடனை மீளச்செலுத்த வேண்டிய ஆண்டாக உள்ளது. இதற்கான வருமானங்களை ஒழுங்குபடுத்தும் விதமாகவும் பொதுபடுகடனை மீளச்செலுத்த திட்டமிடும் முகமாகவும், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ள நிலையில் இந்த அசாம்பாவிதமானது, இந்தச் செயல்பாடுகள் முழுமையாகவே பாதிப்பதாக அமைந்துள்ளது.

இதன்காரணமாக, இம்முறை இலங்கை பொதுப்படுகடனை முழுமையாக மீளச்செலுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. கடனை வழங்கியுள்ள நாடுகள், குறித்த நிலைமைகளை ஆராய்ந்து இலங்கைக்கு மேலதிக காலவசதியை  வழங்காதவிடத்து, நாட்டின் வருமானமும் பொருளாதாரமும் பொதுப்படுகடனை மீளச்செலுத்த முடியாத நிலையில் மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கக்கூடும்.   

இலங்கை மக்களின் நிலை 

மேற்கூறிய எல்லாவற்றுக்கும் மேலதிகமாக, இலங்கையில் வாழும் மக்களின் நிலையும் அவர்களின் பொருளாதாரமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கடந்த வார இறுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாக்குதலின் விளைவாக, கிட்டதட்ட கடந்தவாரத்தில் முழு இலங்கையினதும் அன்றாட செயற்பாடுகள் முழுமையாகவே பாதிக்கப்பட்டிருந்தன. இதில், மாதாந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் ஊழியப்படையாகவுள்ளத் தரப்பினர் சற்றே தப்பித்துக்கொள்ள, நாளாந்த வருமானத்தையும் தமது வணிக வருமானத்தையும் நம்பியிருப்பவர்கள் நிலை மோசமானதாக மாறியுள்ளது.

குறிப்பாக, கொழும்பையே எடுத்துக்கொண்டால், மிகப்பிரபலமான சகல பொதுஇடங்கள், திரையரங்குகள், ஹொட்டல்கள், உல்லாச விடுதிகளென பெரும்பாலான இடங்கள் இயங்காத நிலையிலேயே உள்ளன. இதன்காரணமாக, திறன் குறைந்த (unskilled) ஊழியர்களின் வருமானமும் அவர்களது எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியுள்ளன.   

இலங்கையின் முறைப்படுத்தப்படாத பொருளாதாரமானது, திறன் குறைந்த ஊழியர்களின் வருமானத்தில்தான் மறைமுகமாக தங்கியிருக்கிறது. எனவே, இவர்களது நிலை மோசமடையும்போது, 2009ஆம் ஆண்டுக்கு முன்பதாகவிருந்த பொருளாதார சூழ்நிலையை நோக்கி நாம் நகர்வதைத் தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.  

இலங்கையின் பொருளியல் வல்லுநர்களின் எதிர்பார்க்கைகளின் பிரகாரம், தற்போது இடம்பெற்றுள்ள தாக்குதல் சம்பவங்களானது இலங்கையின் பொருளாதாரத்தை மிகக் குறுகிய காலத்துக்கே பாதிக்குமெனவும், நீண்டகால அடிப்படையில் மிகவிரைவாக பழைய நிலைக்கு திரும்ப முடியுமெனவும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

ஆயினும், கடந்த வாரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளைக் கோர்வையாகப் பார்க்கும்போது, குறித்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர நீண்டகாலம் எடுக்குமென்றே தோன்றுகிறது. இதன் காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்தில் நீண்டகால அடிப்படையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படவுள்ளதுடன், அதனை இந்த நிச்சயமற்ற அரசு, எவ்வாறு கையாளப்போகின்றது என்பது தொக்கி நிற்கும் கேள்வியாகவே உள்ளது.   

 

http://www.tamilmirror.lk/business-analysis/பயங்கரவாதமும்-இலங்கை-பொருளாதாரமும்/145-232515

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

கடந்த வாரத்தில்  அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக இலங்கையின் பெறுமதியானது, சுமார் 172 ரூபாயாக வலுவடைந்திருந்தது. ஆனால், தற்போது ஓர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் பெறுமதியானது 175 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அசாதார நிலை மேலும் தொடருகின்றபோது, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.  

இன்னும் ஐந்து வருடங்களில் ஊருக்கு போய் வருபவர்கள் இலங்கை ரூபா வை தூக்குவதுக்கு இன்னொரு சூட்ஸ் கேஸ் கொண்டு போகவேண்டி வரும் .

Link to comment
Share on other sites

வெறிச்சோடியுள்ள உல்லாச பிரயாணிகள் னமாடும் இடங்கள் :

http://www.dailymirror.lk/caption_story/Deserted/110-166173

 

சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப உபகுழு

அண்மையில், பயங்கரவாதத் தாக்குதல்களால் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் சுற்றுலாத்துறை, ஹோட்டல்கள் சார்ந்த வர்த்தகத் துறையை மீண்டும் கட்டியெழுப்பி, அதை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு, அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்காக, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கான அமைச்சரவை உப குழுவொன்றை இன்று (30) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது நியமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்காக, சலுகை அடிப்படையில் நிதியுதவிகளை வழங்குதல் உள்ளிட்ட உதவிகள் தொடர்பாக, இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுற்றுலாத்துறை, ஹோட்டல் துறை சார்ந்த வர்த்தகர்களுடன், நேற்று (29), ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சுற்றுலாத்துறையை-கட்டியெழுப்ப-உபகுழு/175-232566

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.