Jump to content

பயங்கரவாதமும் இலங்கை பொருளாதாரமும்


Recommended Posts

பயங்கரவாதமும் இலங்கை பொருளாதாரமும் - அனுதினன் சுதந்திரநாதன்

இலங்கை வரலாற்றில், கடந்துவந்தப் பாதையை மீண்டும் நினைவுபடுத்துவதாக அல்லது கடந்துவந்த பாதையிலேயே, மீண்டும் பயணிக்க வைப்பதாக, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் அமைந்துள்ளது.   

உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்பு, அபிவிருத்தி பாதையை நோக்கி, மெல்ல மெல்ல பயணித்துக் கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரம், மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறது. உள்நாட்டுப் போரைக் கையாண்ட அரசாங்கம், இப்போது உள்நாட்டின் ஒத்துழைப்புடன், சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான, அறிவிக்கப்படாதப் போரை நிகழ்த்தும் நிலைக்கு வந்துவிட்டது

இவையனைத்துமே, இலங்கைப் பொருளாதாரத்தையும் அபிவிருத்தியையும் அத்திபாரத்துடன் ஆட்டம்காண வைத்துவிட்டன.   

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் விளைவாக, சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், அவற்றில் 35க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகிறார்கள்.

இந்தப் பத்தியை எழுதும்வரை, இலங்கையில் தாக்குதலுக்குப் பின்னரான அசாதாரண நிலை தொடர்ந்து கொண்டிருப்பதுடன், அதன் வாயிலாக மக்களின் இயல்புவாழ்க்கையும் பாதிக்கப்பட்டதாகவே அமைந்துள்ளது. இவை அனைத்துமே, தாக்குதலின் தொடர்விளைவாகப் பார்க்கப்பட்டாலும் இந்தத் தாக்குதலால், இலங்கை அரசாங்கத்துக்கு, நீண்டகால அடிப்படையில் ஏற்படக்கூடிய இழப்பானது, நேரடியாக கண்களுக்குத் தெரியாத, இதைவிட பன்மடங்கான இழப்பாகும்.

இந்தத் தாக்குதல், இலங்கையின் பொருளாதாரத்தையும் சாமானிய இலங்கை மக்களையும் எந்தவகையில் பாதிக்கப்போகிறது என்பதே, தற்போதைய நிலையில் பல்வேறு ஆய்வாளர்களின் விவாதப்பொருளாக உள்ளது.  

சுற்றுலாத்துறை 

போருக்குப் பின்னான இலங்கையின் மிக முக்கியமான வருமான மூலமாக சுற்றுலாத்துறை அமைந்துள்ளது. தற்போது, தொடர்ச்சியாக நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையானது, சுற்றுலாத்துறையை முழுமையாகப் புரட்டிப்போடுவதாக அமைந்துள்ளது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் பிரபல இணையதளங்களினால், சுற்றுலா பயணிகள் செல்லத்தகுந்த இடங்களில் இலங்கைக்கு முதன்மையான இடம் வழங்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக, கடந்த வருடம் சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொண்ட சுற்றுலாத்துறை, இம்முறை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும், தற்போதைய அசம்பாவித நிலையானது, இதைத் தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது. இதன்போது, கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற சுற்றுலாத்துறை வருமானத்தில் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைவாகவே கிடைக்கப்பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது, இலங்கையின் பொருளாதாரத்துக்கும் சுற்றுலாத்துறையை நம்பியிருந்தோர்களுக்கும் பேரிழப்பாகும்.

உண்மையில், இலங்கையின் முறைப்படுத்தப்பட்ட சுற்றுலாத்துறைக்கே இத்தகைய வருமான இழப்புள்ளபோது, முறைப்படுத்தப்படாத பருவத்தின் அடிப்படையில், சுற்றுலா வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும், அதனை நம்பியிருக்கும் உரிமையாளர்கள், திறன் குன்றிய தொழிலாளர்கள் (Unskilled Workers) ஆகியவர்களின் வருமானம் மிகப்பாரிய அளவில் பாதிக்கப்படுவதாக அமையும்.  

குறிப்பாக, தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு அடுத்த நாளே, கொழும்பிலுள்ள பிரபல விடுதிகளின் முன்பதிவு வீதமானது (Advance Booking Occupancy Rate), 76சதவீதத்திலிருந்து 4சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதுவே, தற்போதைய சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியை சரிவரக் காட்டி நிற்கிறது.

நாட்டின் அசாதாரண நிலை முடிவுக்கு கொண்டுவரப்படாத நிலையில், இலங்கைக்குள் மீளவும் சுற்றுலாப் பயணிகள் வருவதையோ அல்லது சர்வதேச நாடுகள் தமது பிரஜைகளை இலங்கைக்குள் அனுமதிப்பதையோ குறைந்தது ஒரு வருடகாலத்துக்கு நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, சுற்றுலாத்துறை மூலமாக வருமானத்தின் மீளவும் நாம் கட்டியெழுப்ப காலமெடுக்கும் என்பதுடன், அதுவரை குறித்தத் தொழில்முறையை நம்பியிருப்பவர்களின் நிலை என்னவாவது என்கிற கேள்வியும் நம்மிடையே மேலோங்கி நிற்கிறது.  

ரூபாவின் பெறுமதி 

இலங்கையில் கடந்தாண்டின் இறுதியில் இடம்பெற்ற அரசியல் குழப்பநிலைகளின் விளைவாக, இலங்கை நாணயத்தின் பெறுமதியானது மிகப்பெரும் வீழ்ச்சியைக் கண்டிருந்ததுடன், தற்போதே அது மெல்ல மெல்ல வலுவடைந்து வந்துகொண்டிருந்தது.

ஆயினும், தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி சூழ்நிலையானது, இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களது முதலீடு தொடக்கம் அந்நிய செலவாணி உள்வருகை ஆகியவற்றுக்கு முட்டுக்கட்டையாய் அமைந்துள்ளது. இதன்விளைவாக வலுவடைந்து கொண்டிருந்த இலங்கையின் நாணயப்பெறுமதியானது, மீளவும் வீழ்ச்சி பாதையைநோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த வாரத்தில்  அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக இலங்கையின் பெறுமதியானது, சுமார் 172 ரூபாயாக வலுவடைந்திருந்தது. ஆனால், தற்போது ஓர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் பெறுமதியானது 175 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அசாதார நிலை மேலும் தொடருகின்றபோது, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.  

இலங்கையின் பொதுபடுக்கடன் 

2018ஆம் ஆண்டைப்போல 2019ஆம் ஆண்டிலும் இலங்கை அரசாங்கமானது, மிகப்பாரிய பொதுபடுகடனை மீளச்செலுத்த வேண்டிய ஆண்டாக உள்ளது. இதற்கான வருமானங்களை ஒழுங்குபடுத்தும் விதமாகவும் பொதுபடுகடனை மீளச்செலுத்த திட்டமிடும் முகமாகவும், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ள நிலையில் இந்த அசாம்பாவிதமானது, இந்தச் செயல்பாடுகள் முழுமையாகவே பாதிப்பதாக அமைந்துள்ளது.

இதன்காரணமாக, இம்முறை இலங்கை பொதுப்படுகடனை முழுமையாக மீளச்செலுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. கடனை வழங்கியுள்ள நாடுகள், குறித்த நிலைமைகளை ஆராய்ந்து இலங்கைக்கு மேலதிக காலவசதியை  வழங்காதவிடத்து, நாட்டின் வருமானமும் பொருளாதாரமும் பொதுப்படுகடனை மீளச்செலுத்த முடியாத நிலையில் மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கக்கூடும்.   

இலங்கை மக்களின் நிலை 

மேற்கூறிய எல்லாவற்றுக்கும் மேலதிகமாக, இலங்கையில் வாழும் மக்களின் நிலையும் அவர்களின் பொருளாதாரமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கடந்த வார இறுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாக்குதலின் விளைவாக, கிட்டதட்ட கடந்தவாரத்தில் முழு இலங்கையினதும் அன்றாட செயற்பாடுகள் முழுமையாகவே பாதிக்கப்பட்டிருந்தன. இதில், மாதாந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் ஊழியப்படையாகவுள்ளத் தரப்பினர் சற்றே தப்பித்துக்கொள்ள, நாளாந்த வருமானத்தையும் தமது வணிக வருமானத்தையும் நம்பியிருப்பவர்கள் நிலை மோசமானதாக மாறியுள்ளது.

குறிப்பாக, கொழும்பையே எடுத்துக்கொண்டால், மிகப்பிரபலமான சகல பொதுஇடங்கள், திரையரங்குகள், ஹொட்டல்கள், உல்லாச விடுதிகளென பெரும்பாலான இடங்கள் இயங்காத நிலையிலேயே உள்ளன. இதன்காரணமாக, திறன் குறைந்த (unskilled) ஊழியர்களின் வருமானமும் அவர்களது எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியுள்ளன.   

இலங்கையின் முறைப்படுத்தப்படாத பொருளாதாரமானது, திறன் குறைந்த ஊழியர்களின் வருமானத்தில்தான் மறைமுகமாக தங்கியிருக்கிறது. எனவே, இவர்களது நிலை மோசமடையும்போது, 2009ஆம் ஆண்டுக்கு முன்பதாகவிருந்த பொருளாதார சூழ்நிலையை நோக்கி நாம் நகர்வதைத் தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.  

இலங்கையின் பொருளியல் வல்லுநர்களின் எதிர்பார்க்கைகளின் பிரகாரம், தற்போது இடம்பெற்றுள்ள தாக்குதல் சம்பவங்களானது இலங்கையின் பொருளாதாரத்தை மிகக் குறுகிய காலத்துக்கே பாதிக்குமெனவும், நீண்டகால அடிப்படையில் மிகவிரைவாக பழைய நிலைக்கு திரும்ப முடியுமெனவும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

ஆயினும், கடந்த வாரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளைக் கோர்வையாகப் பார்க்கும்போது, குறித்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர நீண்டகாலம் எடுக்குமென்றே தோன்றுகிறது. இதன் காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்தில் நீண்டகால அடிப்படையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படவுள்ளதுடன், அதனை இந்த நிச்சயமற்ற அரசு, எவ்வாறு கையாளப்போகின்றது என்பது தொக்கி நிற்கும் கேள்வியாகவே உள்ளது.   

 

http://www.tamilmirror.lk/business-analysis/பயங்கரவாதமும்-இலங்கை-பொருளாதாரமும்/145-232515

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

கடந்த வாரத்தில்  அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக இலங்கையின் பெறுமதியானது, சுமார் 172 ரூபாயாக வலுவடைந்திருந்தது. ஆனால், தற்போது ஓர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் பெறுமதியானது 175 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அசாதார நிலை மேலும் தொடருகின்றபோது, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.  

இன்னும் ஐந்து வருடங்களில் ஊருக்கு போய் வருபவர்கள் இலங்கை ரூபா வை தூக்குவதுக்கு இன்னொரு சூட்ஸ் கேஸ் கொண்டு போகவேண்டி வரும் .

Link to comment
Share on other sites

வெறிச்சோடியுள்ள உல்லாச பிரயாணிகள் னமாடும் இடங்கள் :

http://www.dailymirror.lk/caption_story/Deserted/110-166173

 

சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப உபகுழு

அண்மையில், பயங்கரவாதத் தாக்குதல்களால் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் சுற்றுலாத்துறை, ஹோட்டல்கள் சார்ந்த வர்த்தகத் துறையை மீண்டும் கட்டியெழுப்பி, அதை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு, அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்காக, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கான அமைச்சரவை உப குழுவொன்றை இன்று (30) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது நியமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்காக, சலுகை அடிப்படையில் நிதியுதவிகளை வழங்குதல் உள்ளிட்ட உதவிகள் தொடர்பாக, இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுற்றுலாத்துறை, ஹோட்டல் துறை சார்ந்த வர்த்தகர்களுடன், நேற்று (29), ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சுற்றுலாத்துறையை-கட்டியெழுப்ப-உபகுழு/175-232566

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.