Jump to content

ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல்... இலங்கையின் அரசியல் வியாபாரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல், உலகின் முன்னாள் சிக்கிக் கொண்ட, இலங்கையின் அரசியல் வியாபாரிகள்

இலங்கையின் இன்றைய அரசியல் தலைமைகள் இன்றுதான் அரசியலுக்கு வந்த புதியவர்கள் அல்ல, காலத்திற்கேற்ற புதிய சிந்தனைகளைக் காவி மாற்றங்களை ஏற்படுத்தவல்ல புனிதர்களுமல்ல, என்பதை கடந்த ஞாயிறு இலங்கையில் நடந்தேறிய ஒரு பெரும் நரபலி மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, தமது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்காக, இன, மத முரண்பாடுகளை தொடாந்தும் வளர்த்து, அதில் அப்பாவி மக்களைப் பலியிட்டு, அதனூடாக தமது ரத்த அரசியல் வியாபாரத்தை தொடர்ந்தும் அரங்கேற்றும் அதே சாத்தான்களே, அரசியல் சிம்மாசனத்தை தொடர்ந்தும் கடந்த 50 ஆண்டுகளாக அலங்கரித்து வருகின்றனர். இன்றைய சூழல் ஒரு சனாநாயக நாட்டில் ஏற்ப்பட்டிருந்தால், பல அரசியல் தலைகள் உடன் உருண்டிருக்க வேண்டும். ஆனால் அதுதான் இலங்கையில் என்றுமே நடைபெறாது. இந்நிலையில் ஞாயிறு நடந்தேறிய படுகொலைகளுக்கு, இந்த அரசியளாலர்களே முழுப்பொறுப்பு என்பது முழுமையாக நிரூபணமாகிவரும் நிலையில், இதன் பின்னணிகளை கட்டம் கட்டமாக விரிவாகப் பார்ப்போம்.

ஞாயிறு படுகொலைகளின் பின்னணியில் இருந்த தீவிரவாதக் குழுவான, தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பு, முன்னர் அறியப்படாத அமைப்பு என்ற விம்பம் உருவாக்கப்படுகிறது. அது உண்மையா? என்றால், இல்லை என்பதே பதில். எப்படி? என்றீர்களானால், அது குறித்துப் பார்ப்போம். பல பின்னணிகளை நீண்ட காலம் பின்னோக்கி ஆரம்பிக்க முடியும். அதாவது ராஜபக்ச, கோத்தபாயா காலத்தில் இருந்து மூலத்தை ஆதாரத்துடன் அலசலாம். அதை பின்னர் பார்ப்போம். தற்போது சமீபத்தில் இருந்தே வருவோம். தாக்குதலுக்கு முன்னர் ஏப்ரல் 11 எனத் திகதியிடப்பட்டு, பாதுகாப்பு உயர் வட்டாரங்களில் பகிரப்பட்ட இரகசியத் தகவல்களில் என்ன உள்ளது?

உதவிப் பொலீஸ் மாஅதிபர் பிரியலால் டசநாயக்காவால், முக்கிய பாதுகாப்பு அங்கங்களான, அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, தூதராலங்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, நீதிக்கட்டமைப்புக்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, மற்றும் முன்னாள் சனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவு என்பவற்றிற்கு, பின்வரும் விடயங்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் இவ்விடயங்கள் பாதுகாப்பு அமைச்சினால், பொலீஸ் மாஅதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் பொலீஸ் மா அதிபரால் ஏப்ரல் 9ஆம் நாள் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையையும், இதனுடன் இணைத்துப் பார்க்கவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் அச்சுற்றறிக்கையின் 2 முதல் 4ஆம் பக்கங்களில் உள்ள விடயங்களில் அதீத கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தேசிய தாவுகீத் ஜமாத்" எனத் தலைப்பிட்டு அதன் தலைவன் மொகமட் சகரன் இந்நாட்டில் தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராகியுள்ளமை குறித்தது, என்று வேறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒன்றைக் கவனத்தில் கொள்ளவும் பாதுகாப்பு அமைச்சில் இருந்தே விடயம் ஆரம்பிக்கிறது.

இந்த மொகமட் சகரன் தான் தற்போது ஜசஸ் என்ற மத்திய கிழக்கு தீவிரவாத அமைப்பு, இலங்கைத் தாக்குதலுக்கு உரிமைகோரி வெளியிட்டுள்ள காணொளியில், முகத்தை மறைக்காது நடுவில் உள்ள நபர். குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு வெடித்தவர்களில் இவனும் ஒருவன். ஏப்ரல் 11ஆம் நாள் இரகசிய பாதுகாப்பு சுற்றறிக்கையில், வேறு என்ன விடயங்கள் தெவிக்கப்பட்டுள்ளன? தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பின் தலைவன் மொகமட் சகரன் மேற்கொள்ளவுள்ள தற்கொலைத் தாக்குதல்களின் விபரங்கள் வருமாறு, என அது தொடர்கிறது. வெளிநாட்டு உளவு அமைப்பொன்று எமக்கு சகரன் கஷ்மி என்றழைக்கப்படும், மொகமட் காசிம் மொகமட் சகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட, தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பின் தலைவனும், அவனைப் பின்பற்றுபவர்களும் இந்நாட்டில் தற்கொலைத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டுள்ளனர் என அறியத்தந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் அத்தகவலில் கத்தோலிக்க தேவாலயங்களும், இந்தியத் தூதரகமும் இலக்குகள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகலை வழங்கிய வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு வேறுயாருமல்ல, இந்தியா தான். அவர்களுக்கு இது எவ்வாறு தெரியுமென்றால்? அவர்களிடம் ஒரு தீவிரவாதி மாட்டிக் கொண்டான். அவனிடம் மேற்கொண்ட விசாரணைகளிலேயே அவன் இலங்கையில் சகரனிடம் தீவிரவாதப் பயிற்சிகளைப் பெற்றதையும், சகரனின் திட்டத்தையும் கக்கியுள்ளான். இத்தகவல் ஏப்ரல் 4ஆம் நாள் பகிரப்பட்டுள்ளது என்பது வேறு விடயம். ஈற்றில் தாக்துதல்கள் நடாத்தப்பட்டது ஏப்ரல் 21ஆம் நாள். ஆனால் தமக்கு எதுவும் தெரியாது என்பதை அமெரிக்க உளவுத்துறை வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளது. மேலும் ஏப்ரல் 11ஆம் நாள் இரகசிய சுற்றறிக்கையில், டிசம்பர் 26ஆம் நாள் 2018இல், மாவனெல்லவில் சமயச் சிலைகள் சேதமாக்கப்பட்டதின் பின், சகரன் கஷ்மி மற்றும் சகீட் இருவரும் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில், உள்ள ஒலுவில் கிராமத்தில் ஒளிந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக வேறு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேகாலை மாவட்டத்தில், கேகாலை நகருக்கும் கடுகனாவைக்கும் இடையில், கொழும்பு கண்டி வீதியில் அமைந்துள்ளது தான் மாவனெல்ல. இங்கு தான் டிசம்பர் 26ஆம் நாள் புத்தர் சிலைகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால், சுட்டியல்கள் கொண்டு அடித்துச் சேதமாக்கப்பட்டன. மானெல்லவில் சிங்கள சமூகத்துடன் கணிசமான முஸ்லீம் மக்களும் வாழுகின்றனர். இப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தான் தற்போதைய அமைச்சர் கபீர் கசீம். இங்கு இரு சமூகங்களுக்குமான முறுகல் நிலை, 2001இல் இருந்தே வியாபித்தே இருக்கிறது. அது ஒரு பெரும் கதை. புத்தர் சிலைகள் உடைப்புச் சம்பவம் பரபரப்பாக நடாளாவிய ரீதியில் பேசப்பட்ட விடயம் வேறு. அது குறித்து அரச பத்திரிகை சண்டே ஒப்சேவர் டிசம்பர் 30 நாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றைப் பாருங்கள், Seven suspects had been taken in for questioning for destroying the Buddha statues in the Mawanella police division, while two more suspects are on the run. It was later found that they had already left the Mawanella police division, police sources said. இது குறித்து அப்போது பேசிய ரணில் ஜயா, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னாள் நிறுத்தப்படுவார்கள், எனப் பிரதமராக சூளுரைத்திருந்தார் வேறு. ஆக மொத்தத்தில் ஏப்ரல் ரகசிய குறிப்பில் குறிப்பிட்ட இருவர் (சகரன் கஷ்மி மற்றும் சகீட்) குறித்து கடந்த டிசம்பர் மாதத்திலேயே தெரியும், தேடிக் கொண்டிருந்திருக்கிறீர்கள். அதற்கு முன்னரே இவர்களுக்கு சகரன் கஷ்மியையும், தேசிய தாவுகீத் ஜமாத் என்ற அமைப்பையும் தெரியும் என்றது வேறு விடயம்.

அடுத்து, அவ்விரகசிய சுற்றறிக்கையில் ரில்வான் என்பவர் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் யார் என்றால், சகரன் கஷ்மியின் இளைய சகோதரர். இவர் தான் சகரனுக்கு ஆட்களை சேர்த்துக் கொடுப்பவர் என்றும், அவரது முழுப்பெயர் முகமட் காசிம் மொகட் ரில்வான் எனவும், தெரிவிக்கப்பட்டு அவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் 903432624V எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, காத்தான்குடி பொலிஸ் பகுதியில், இந்த முகவரியை நிரந்தரவதிவிடமாகக் கொண்டவர், எனவேறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அம்முகவரி இங்கு தவிர்க்கப்படுகிறது. என்ன உங்களுக்கு தலைசுற்றுகிறதா? முகநூலில் லைக் போட்ட தமிழர்களையும், கணணியில் பாட்டுக் கேட்ட தமிழர்களையும், ஆய்ந்து, அறிந்து இன்றும் கைது செய்யும் சிறீலங்கா உளவுத்துறையும் பாதுகாப்புத்துறையும், இவ்வளவு விபரங்களை கொண்டிருந்தும் எதுவும் செய்யாதது ஏன்? ஆழமாக யோசியுங்கள்...

மார்ச் 10இ 2018இல், காத்தான்குடியில் தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பிற்கும், மற்றுமொரு மத அமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, ரில்வான் தனது நெருங்கிய சகா ஒருவரின் வீட்டில் ஒலுவில் பிரதேசத்தில, ஒளிந்து வாழுவது கண்டறியப்பட்டுள்ளது என அடுத்து வருகிறது. ஒளிந்திருந்தாலும் ரில்வான் சகரனுக்காக அக்கரைப்பற்று (அம்பாறை மாவட்டம்), குளியாப்பிட்டிய (குருநாகல் மாவட்டம்), புத்தளம் (பு;த்தளம் மாவட்டம்), மாவனெல்ல (கேகாலை மாவட்டம்) மற்றும் திகாரிய (கம்பகா மாவட்டம்) பகுதிகளில் ஆட்கைளச் சேர்த்த வண்ணமேயுள்ளான் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே கடந்த டிசம்பரில் அல்ல, கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இவர்களைப் பற்றி நன்கு தெரியும். இது தவிர அவர்கள் ஆட்களைச் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைப் பாருங்கள். ஏப்ரல் 21 தாக்குதலில் தற்போது அடையாளம் காணப்பட்டோரில், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தோரும் உண்டு என்பது வேறு. இவை அனைத்திற்கும் சிகரம் வைப்பது போன்றது தான் அடுத்த விபரம். ரில்வான் தனது மனைவியையும் பிள்ளைகளையும், இரவு 11 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் இடையில் குறித்த முகவரியில் சென்று சந்திப்பதாக வேறு மேலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது தான். அந்த முகவரி இங்கு தவிர்க்கப்படுகிறது. உங்களுக்கு கோபம் வந்தால் கோபப்பட்டுக் கொள்ளுங்கள், இலலை சிரிப்புவந்தால் வாய்விட்டுச் சிரித்துக் கொள்ளுங்கள். இல்லை இன்று அநியாயமாக அரசியல் காட்டேரிகளுக்கு பலியிடப்பட்ட மக்களுக்காக அழுகை வந்தால், வாய்விட்டு அழுது கொள்ளுங்கள். அடுத்த பதிவில் மேலதிக விபரங்களுடனும் ஆதாரங்களுடனும் சந்தித்துக் கொள்வோம்...

 
#################   ####################   #########################  #######################
 

Image may contain: 3 people, crowd

Image may contain: 6 people, people standing, crowd and outdoor

ஓடவும் முடியாமல்... ஒளியவும் முடியாமல்... பகுதி 2:

ஒரு பொய்யை மறைக்க, ஓராயிம் பொய்கள் சொல்லும் நிலை,,, அவிழ மறுக்கும் முடிச்சுக்கள்.

சிரிப்பவர்கள் சிரித்து வயிறைப் புண்ணாக்கிவிட்டீர்கள்.. கோபப்பட்டவர்கள் கோபத்தில் எதை எதையோ குத்திக் கையை காயப்படுத்திக் கொண்டீர்கள்.. அழுகை வந்தவர்களோ ஏதைஏதையே நனைத்துக் அதனை கரைத்துவிட்டீர்கள்... இப்படியோ உங்கiளை விட்டுவைத்தால் நிலைமை விபரீதமாகிவிடும் வாருங்கள் தொடர்ந்தும் பயணிப்போம். ஆனால் ஒன்றில் தெளிவாகிக் கொண்டிருப்பீர்கள்.. இலங்கையின் அரசியல் காட்டேறிகள் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதில்... ஏற்கனவே முதற்பதிவில் பகிரப்பட்ட விடயங்களிலேயே உள்ள குழப்பங்களை முதலில் கவனத்தில் கொள்வோம். தன் மனைவியைப் பார்க்க இரவு 11 மணிக்கும் அதிகாலை 4 மணிக்கும் இடையில் ஒளிந்திருக்கும் சகரனின் தம்பி ரில்வான் எந்த முகவரிக்குச் செல்வான் என்று சிறீலங்காவின் இரகசிய பாதுகாப்பு அறிக்கையில் இருந்த தகவலைப் பார்த்தோம். இதில் நகைச்சுவை என்னவென்றால் இவர்களுக்கு முகவரி, தொலைபேசி இலக்கம் உட்பட பல தகவல்களை வழங்கியது இந்தியா, தான் தானென மார்பு தட்டிக் கொண்டுள்ளது. புலனாய்வு என்பது, கிடைக்கும் தகவலை சரியா? என ஒன்றுக்கு பலமுறை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்வது.

இன்று சிறீலங்காவின் புலனாய்வுத் திணைக்களம் 3 ஆண்கள், 3 பெண்கள் அடங்கிய 6 பேரின் பெயரையும் படத்தையும் தருகிறோம், இவர்கள் தான் தேடப்படும் முக்கியமானவர்கள் என அடையாளப்படுத்தி பொலீசிடம் கையளிக்க, அவர்களும் அதனை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர். வெளியிட்டு குறுகிய நேரத்திலேயே, அதில் பெயரிடப்பட்ட பெண் அப்துல் காதர் பாத்திமாவின் படம் அதுவல்ல, என படத்தை மீளப்பெற்றார்கள். இப்பெயர் சகரனின் தாயாரின் பெயரை நெருங்கியிருக்கிறது. சிலவேளை அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம். இதிலும் விநோதம் என்னவென்றால் நாம் ஏற்கனவே பகுதி ஒன்றில் பார்த்த, இரு பெயர்கள், சகரனின் தம்பி ரில்வான் மற்றும் மாவனெல்லவில் கடந்த ஆண்டு இறுதியில் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்திவிட்டு தப்பிய, இருவர் என அடையாளம் காணப்பட்ட சகரனும் சாகிட்டும் குறித்த தகவலில் உள்ள சாகிட்டும் தேடப்படும் 6 பேரில் அடக்கம். அதேவேளை முகமட் இவுகிம் சாகிட் அப்துல் கக் என்ற ஒரே பெயரைக் கொண்ட இருவர் தேடப்படும் பட்டியலில் உள்ளனர்.

அதாவது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், நடமாட்டம் என விலாவாரியாக தகவல்களை வைத்திருப்பதாக இரகசிய அறிக்கையில் பதிவு செய்துவிட்டு, இப்போது மக்களே இவர்களை கண்டுபிடிக்க உதவுங்கள் என பகிரங்கமாக அறிக்கை வெளியிடுவது, புலனாய்வுவின் நிலைமையை உங்களுக்குத் துல்லியமாக வெளிப்படுத்தும் என்று நினைக்கிறேன். இதில் உள்ள வேதனை என்னவென்றால், இப்படி ஏதோ இயங்குகிறோம் என கணக்குக்காட்டுவது, மக்களின் ஆபத்து நிலையை எவ்விதத்திலும் தணிக்காது என்பதுவே. இருக்க கடந்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களை மேற்கொண்டவர்களில் ரில்வான் மற்றும் சாகிட் கிடையாது என்பதை தற்போது அவர்களை தேடுவதனூடாக உறுதிப்படுத்துகின்றனர். அவ்வாறானால் இவர்களது இரகசிய அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட சகரன், சாகிட் மற்றும் ரில்வானில் இருவர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். சகரன் குறித்து தொடர்ந்தும் குழப்பநிலையே தொடர்கிறது. இருக்க அவ்வறிக்கையில் மேலும் உள்ள இருவர் மில்கான் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த முன்னாள் முகைடீன் குறித்து தொடர்ந்து பார்ப்போம். அவர்கள் குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. அதேவேளை சகரனின் குடும்பமே ஏப்ரல் 18இல் இருந்து, அதாவது தாக்குதலுக்கு முன்பிருந்தே காணாமல் போயுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் யாரென்றால், சகரனின் 55 வயது நிரம்பிய தந்தை கயத் மொகமட் கசீம், தாயார் 50 வயது நிரம்பிய அப்துல் காதர் சமீமா. சிறீலங்காவின் இரகசிய அறிக்கையில் சகரன் கஷ்மி என்றிருந்தது ஆனால் சகரன் கசீமே சரியானது. சகரன் கசீமுக்கு 33 வயதாகிறது. கயத் மொகமட் கசீமின் 5 பிள்ளைகளில் மூத்தவன் சகரனே. இவனுக்கு குருநாகலை மாவட்டத்தின் கேகனுவெலவைச் சேர்ந்த, முகமட் கடியா என்ற 23 வயது மனைவி உண்டு. இவர்களுக்கு 8 வயதில் ஒரு ஆண்பிள்ளையும், 4 வயதில் ஒரு பெண்பிள்ளையும் உண்டு. இவனுக்கு எந்த வயதில் திருமணம் நடைபெறிருக்கும்? அப்போது இவனது மனைவியின் வயதென்ன? என்ற ஆராச்சிகளை விட்டுவிடுவோமே! இவனது அடுத்த சகோதரன் மொகமட் செயின் கசீம் 30 வயது நிரம்பியவன். அவனுக்கு 23 வயது நிரம்பிய அப்துல் கபூர் அவ்ரின் என்ற மனைவியும், 5 வயதில் ஆண்பிள்ளையும், 3 வயதில் பெண்பிள்ளையும் உண்டு. மூன்றாவது சகோதரனே நாம் பலமுறை பார்த்துவிட்ட, தற்போது தேடப்படும் பட்டியலில் உள்ள 28 வயதுடைய மொகமட் ரில்வான் கசீம். இவனுககு 20 வயதில் நவ்கா என்ற மனைவவியும், 5 வயதிலும் 6 மாதத்திலும் என இரு ஆண்பிள்ளைகள் உண்டு. சகரனுடைய இளைய சகோதரி 20 வயது மொகமட் ஜசீரா கசீம். இவருடைய கணவர் 22 வயது முகமட் ரிசாட். 1 வயதில் ஆண்குழந்தை உண்டு. மேற்கண்ட அனைவருமே காணாமல் போயுள்ளதாக சொல்லப்படுகிறது. இவனது சகோதரி 25 வயது மொகமட் மடனியா கசீமே தற்போது வெளிப்படையக உள்ளார். இவருக்கு 10 மாதக் குழந்தை உட்பட மூன்று பிள்ளைகள் உண்டு.

கடந்த பதிவில் இரகசிய அறிக்கையில், மார்ச் 10, 2018இல் காத்தான்குடியில் தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பிற்கும், மற்றுமொரு மத அமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து ரில்வான் தனது நெருங்கிய சகா ஒருவரின் வீட்டில் ஒலுவில் பிரதேசத்தில ஒளிந்து வாழுவது கண்டறியப்பட்டுள்ளது என்றிருந்தேன். அத் தகவலும் தவறு. சம்பவம் நடைபெற்ற நாள் மார்ச் 10 2017. 2018 அல்ல. அதாவது ஒரு வருடத்திற்கு முன்னர். காத்தான்குடியில் 63 பள்ளிவாசல்கள் உண்டாம். அதில் 8 பள்ளிவாசல்களில் அடிப்டைவாத அல்லது தீவிரவாத இஸ்லாத்தை வெளிப்படையாக பின்பற்றுகின்றனவாம். மேலும் 3 பள்ளிவாசல்களில் அடிப்படைவாதம் பல்வேறு நிலைகளில் பின்பற்றப்படுகிற தாம். மார்ச் 10, 2017 இல் காத்தான்குடியின் அலியா சந்தியில் நடைபெற்ற மதம் சார்ந்த கூட்டம் ஒன்றில், சகரன் பேசுவதாக இருந்தது. அதிலேயே அடிப்படைவாதிகளுக்கும், மிதவாதிகளுக்கும் இடையே ஆயுத மோதல் மூண்டுள்ளது. இது தொடர்பாக சகரனின் தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 9 பேர், சகரனின் சகோதரன் செயின் கசீம் உட்பட கைது செய்யப்பட்டனர். மறுதரப்பில் இருவர் கைது செய்யப்பட்டனர். தேடப்பட்ட நிலையிலேயே, ரில்வான் மட்டுமல்ல முதன்மையாக தேடப்பட்ட சகரனும் அப்போதிருந்தே தலைமறைவாகினர். இப்போது சொல்லுங்கள், சகரனையும் தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பையும், இரகசிய அறிக்கையைத் தயாரித்த புலனாய்வுத்துறைக்கு எவ்வளவு காலம் தெரியும்?

இருக்க, சிறீலங்காவில், சிறீலங்கா தாவுகீத் ஜமாத் என்ற அமைப்பு உண்டு. அதில் முரண்பட்டே 2011இலேயே, தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பிற்கு சகரன் அத்திவரம் போட ஆரம்பித்து விட்டதாக விசயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்த ஞாயிறு பேரனத்திற்கும் முழுமையான பொறுப்பு அரசியல் இரத்தக்காட்டேரிகளே எனப் பார்த்திருந்தோம். தாங்கள் நல்லவர்கள், பாவப்பட்டவர்கள் எனக் காட்ட, பாதுகாப்பு செயலரை முதலாவதாக சாத்தான்கள் பலியிட்டுள்ளன. இங்கு அவர்களிடம் சில கேள்விகள்? உங்கள் தரவுகளில் இருந்தே, 2017 மார்ச் 10இல் காத்தான்குடி ஆயுத மோதல் காரணமாக, சகரனையும், ரில்வானையும் தேட ஆரம்பித்தீர்கள். பின்னர் மாவனெல்லவில் புத்தர் சிலைகள் உடைப்புக் காரணமாக, டிசம்பர் 28 2018இல் மீண்டும் சகரனையும், சகீட்டையும் தேட ஆரம்பிப்பதாக சொன்னீர்கள். ரணில் ஜயா! மாத்திரி ஜயா! கூடவே மகிந்தா ஜயா! புத்தம் அரச மதம். புத்தத்தை வளர்ப்பதுவும், காப்பதுமே அரசின் கடமை என அரசியல் அமைப்பில் எழுதி, அதில் எவ்வித விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை என முரசறையும் நீங்கள், புத்தரையே ஒரு நகர் முழுதும் உடைத்துப் போட்ட சகரனைப் பிடிப்பதில் நான்கு மாதங்களாக என்ன செய்தீர்கள்? ரணில் ஜயா நினைவுபடுத்துகிறோம், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன், என்ற உங்கள் சூளுரை என்னவானது? நீங்கள் சரியாக இவ்விடயத்தில் இயங்கியிருந்தால், இன்று இவ்வளவு அப்பாவி உயிர்கள் பலியிடப்பட்டிருக்குமா? ஆகமொத்தத்தில், உங்கள் அரசியல் இருப்பிற்காக மத, இன முரண்பாடுகளை வளர்த்து, அதில் குளிர்காயும் சாத்தான்களே! இன்னும் கேள்விகள் இருக்கிறது பின்னர் வருகிறேன்.

இருக்க, இரகசிய அறிக்கையில் உள்ள மேலதிக சில விடயங்களையும் பார்த்துவிடுவோம். மில்கான் என்பவன் அதில் அறிமுகப்படுத்தப் படுகிறான். இவன் கல்முனை சகீரா கல்லூரியில் கல்வி கற்றவன். சகரனை கண்மூடித்தனமாக பின்பற்றுபவன். அதேவேளை தாங்கள் சார்ந்த தீவிரவாத இஸ்லாத்தைத் தவிர ஏனையவர்கள் மீது ஆழமான வெறுப்புக் கொண்டவனாக அதில் அறிமுகப்படுத்தப்படுகிறான். இவன் தான் சகரன் சார்ந்த சமூக வலைத்தளங்களைப் பராமரிப்பவன். மொகமட் மில்கான் என்ற தனது தனிப்பட்ட சமூக வலைத்தளக் கணக்கைத் தவிர, சகரன் சம்பந்தப்பட்டதிலும் இவனே தரவேற்றுவான். மார்ச் 15, 2019இல் நியூசிலாந்தின் கிரைஸ்சேர்சில் பள்ளிவாசல்கள் மீது வெள்ளையினவாதி ஒருவன் நடாத்திய தாக்குதல்களின் பின், முஸ்லீம் அல்லாதோர் மீதான இனவாதக் கருத்துக்கள் நாளும் தொடர்ச்சியாக பல தரவேற்றப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்து எனவும், அவ்விரகசிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கொண்டே நியூசிலாந்து தாக்குதலுக்குப் பழிவாங்கும் தாக்குதலே, இலங்கையின் தேவாலங்கள் மீதான தாக்குதல் என்ற கருதுகோள் வலுப்பெற்றது. எனினும் இதனையும் கடந்து அக்கருதுகோளை வலுப்படுத்தும் சான்றுகள் உண்டு. அதனைப் பின்னர் பார்ப்போம். இதுதவிர மில்கான் பயன்படுத்தும் தொலைபேசியின் இலக்கம் வேறு அங்கு பகிரப்பட்டிருந்தது.

அடுத்து 5ஆவதும் இறுதியாக அடையாளப்படுத்தப்பட்ட, அந்த முக்கிய நபர் குறித்துப் பார்ப்போம். நான் முன்னர் குறிப்பிட்டது போல், இராணுவத்தைச் சேர்ந்த முன்ளாள் வீரர் முகைடீன். காத்தான்குடி அன்வர் மசூதிக்கு அருகில் வதியும், 760683126V என்ற தேசிய அடையாள அட்டையைக் கொண்ட பகருடீன் மொகமட் முகைடீன் என்ற இயற்பெயரைக் கொண்ட ஆமி முகைடீன் என அழைக்கப்படும், முன்னாள் இராணுவ வீரரும் கவனத்தில் கொள்ளப்பட்டுளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எதனால் அவர் கவனத்தில் கொள்ளப்படுகின்றார் என்ற விபரம் அதில் கிடையாது. இறுதியாக, எங்கும் சகரன் தேவாலயங்களையோ, இந்திய தூதுவலாலயத்தையோ தாக்குங்கள் என நேரடியாக தனது ஆதரவாளர்களை வேண்டவில்லை என்றும், ஆனால் 2016இன் பின் இஸ்லாத்தை பின்பற்றாதவர்களைக் கொலை செய்வது, புனிதச் செயல் என்றும், அவ்வாறான செயற்பாடுகளினூடாக இஸ்லாத்தைப் பரப்பலாம் எனவும், தன் ஆதரவாளர்களுக்கு ஓதுகிறான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சகரன் வெளிப்படையாக சொல்லிவிட்டுத் தான், தாக்குவான் என நம்பிக் காத்திருக்கிறதாம் சிறீலங்காவின் உளவுத்துறை. இப்பொழுது சொல்லுங்கள் ஈற்றில் சகரன் குறித்துத் தெரிந்த விடயங்கள் 2016 இல் இருந்து அவ் இரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? இவ்வளவு அழிவுகளின் பின்னரும் மக்களே கண்டுபிடித்துத் தாருங்கள் என்ற நிலையே தொடருமானால் நிலைமை என்ன? இதையும் கடந்து பல அரசியலாளர்களின் பின்புலமும், மேலும் பல தகவல்களும் பேசுச வேண்டும். 2018 டிசம்பர் புத்தர் சிலைகள் உடைப்பில் கைது செய்யப்பட்டு அரசியல் தலையீட்டால் விடுவிக்கப்பட்ட ஒருவன், தற்போது கொழும்புத் தாக்குதலில் ஒருவன் என்றால், இவ்விடயத்தில் உங்கள் பதில் என்ன? 2019 சனவரியில் புத்தளத்தில், 100 கிலோ வெடிமருந்துகளுடன் மறைவிட பயிற்சித்தளம் கைப்பற்றப்பட்டதே! அதன் விசாரணைகளுக்கு என்ன நடந்தது? அதில் கைதான ஒருவன் எந்த அரசியல் தலையீட்டால் விடுவிக்கப்பட்டான்? ஆம் முடிச்சுக்கள் பல... ஆனால் அரசியல் காட்டேரிகளுக்கு விடைகள் சிலவே... ஏமாறும் மக்கள் கூட்டம் இருக்கும் வரையும், ஏமாற்றும் அரசியல்வாதிகள் உலகெங்கும் நிறைந்தே கிடப்பார்கள்... அதுபோலவே, கைக் கொள்ளும் மதம் குறித்து எவ்வித தெளிவும், கேள்வியும் இன்றிப் அதனுள் புதைந்துகிடந்தால், அதை வைத்தே போதையேற்றி, அழிவையே அறுவடை செய்வோர், உலகின் அனைத்து மதங்களிலும், நிறைந்தே கிடக்கின்றனர்... அடுத்த பதிவில் (ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் பகுதி3) மேலதிக தகவல்களுடன் சந்தித்துக் கொள்வோம்...

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.