Jump to content

கிளிநொச்சி சுற்றிவளைப்பில் கமரா, துப்பாக்கி ரவைகள் மீட்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி சுற்றிவளைப்பில் கமரா, துப்பாக்கி ரவைகள் மீட்பு!

 

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

kilinochi.jpg

கிளிநாச்சி பொலிசாரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். 

இதன்போது பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து கையடக்க தொலைபேசிகள், கமரா, துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டன. 

எனினும் குறித்த வீட்டில் தங்கியிருப்பவர் இரும்பு வியாபாரி என அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டினர். இரும்புடன் கலந்து வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை கமரா, தொலைபேசி ஆகியன அவர் பயன்படுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வருகின்றது. எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.

 

http://www.virakesari.lk/article/54923

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈயம், பித்தளைக்கு பேரீச்சம் கொடுத்து வியாபாரி சேகரித்த பொருட்களை மீட்டுள்ளமைக்கு பாராட்டுக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ராசவன்னியன் said:

ஈயம், பித்தளைக்கு பேரீச்சம் கொடுத்து வியாபாரி சேகரித்த பொருட்களை மீட்டுள்ளமைக்கு பாராட்டுக்கள்..

x1080-zMr.jpg

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

ஈயம், பித்தளைக்கு பேரீச்சம் கொடுத்து வியாபாரி சேகரித்த பொருட்களை மீட்டுள்ளமைக்கு பாராட்டுக்கள்..

பேரீச்சம்பழம் பற்றி இத்தனை அறிவுள்ள தாங்கள் நான் துபாய் வந்தபோது ஒரு பழம்கூட வாங்கித் தரவில்லையே.... ஏன்??  😭

துபாயில் பேரீச்சை மரங்கள் குறைவு. அவை சவூதியிலிருந்து துபாய்க்கு இறக்குமதியாகிறது என்பதாலா..?? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Paanch said:

பேரீச்சம்பழம் பற்றி இத்தனை அறிவுள்ள தாங்கள் நான் துபாய் வந்தபோது ஒரு பழம்கூட வாங்கித் தரவில்லையே.... ஏன்??  😭

துபாயில் பேரீச்சை மரங்கள் குறைவு. அவை சவூதியிலிருந்து துபாய்க்கு இறக்குமதியாகிறது என்பதாலா..?? 🤔

ஹலோ சார், நமது ஊர்களில் வீதிகளிலும், சாலையோரங்களில் வளரும் புளியமரம்,வேப்ப மரங்களில்  பழங்கள் பழுத்து உதிர்ந்து வீதிகளில் சிதறிக்கிடக்கும், ஒரு பயல்களும் சீந்த மாட்டார்கள்..

அம்மாதிரியே இங்கே துபாயில் அனைத்து சாலைகளின் நடுவே வளர்ந்திருக்கும் பேரீச்சை மரங்களில் பழுத்து சாலைகளில் உதிரும் பழங்களை யாரும் சீந்துவது இல்லை.

வாராத பெரியவர் வந்திருக்கிறீர்களென உயரத்திற்கு கூட்டி சென்றால், நீங்கள் துபாயில் மிகவும் சல்லிசான பொருளை  தேடுகிறீர்களே?

காத்தான்குடி ஆட்கள் அதை தேடினால் ஓரளவு ஒத்துக்கொள்ளலாம், நீங்கள் கேட்கலாமோ? :)

 

அமீரகத்திலும் பல பகுதிகளில் பேரீச்சம் பழ பண்ணைகள் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போத்தல் பித்தளை அலுமினியம் இருக்கா என்று கத்தி திரிந்தவர்கள் சேர்த்த பொருட்களாக இருக்கிறதே?

Link to comment
Share on other sites

5 hours ago, ராசவன்னியன் said:

ஹலோ சார், நமது ஊர்களில் வீதிகளிலும், சாலையோரங்களில் வளரும் புளியமரம்,வேப்ப மரங்களில்  பழங்கள் பழுத்து உதிர்ந்து வீதிகளில் சிதறிக்கிடக்கும், ஒரு பயல்களும் சீந்த மாட்டார்கள்..

தெருவோரப் புளிய மரங்களும் எங்கள் வீட்டுப் பொருளாதாரத்திற்கு சற்றுப் பக்கபலமாக விளங்குகின்றது. விடிய 4மணிக்கே எழும்பிச் செல்லாவிட்டால் ஒரு புளியம் பழம்கூடக் கிடைக்காது, அத்தனை போட்டி. தெருவும் சுத்தமாகிவிடும்.

வேப்பம்பழம் பொறுக்குவதால் நுளம்புக்கடியிருந்து தப்பி நோய்களின்றி வாழ்கிறோம். நாங்கள் இந்தியாவுக்குச் செல்லும்போதும். திரும்பி வந்தபின்பும் ஏன் எங்களுக்கு ஊசிபோடுகிறார்கள் என்பது இப்போதுதான் சந்தேகமின்றிப் புரிகிறது. 🤣😜  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.