Jump to content

பேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன? பி.மாணிக்கவாசகம் (கட்டுரை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆர­வா­ர­மின்றி நாட்­டுக்குள் நுழைந்­துள்ள உலக பயங்­க­ர­வாதம், உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களில் 253 அப்­பா­வி­களின் உயிர்­களை கொடூ­ர­மாகக் குடித்­தி­ருக்­கின்­றது.

பயங்­க­ர­வா­தத்தின் இந்தப் பிர­வேசம் குறித்து சர்­வ­தேச உளவுத் தக­வல்­களின் மூலம் இலங்கை அர­சுக்கு எச்­ச­ரிக்கை செய்­யப்­பட்­டி­ருந்த போதிலும், அதனை நாட்டின் பாது­காப்­புத்­துறை தீவி­ர­மாகக் கவ­னத்தில் எடுத்துக் கொள்­ள­வில்லை.

இந்­திய உளவுத் தக­வல்கள் மட்­டு­மல்­லாமல், உள்ளூர் உளவுத் தக­வல்­களும் கூடிய கால இடை­வெ­ளியில் பயங்­க­ர­வா­தி­களின் உரு­வாக்கம் குறித்தும், அவர்­களின் நோக்­கங்கள் குறித்தும் தக­வல்­களை வழங்­கி­ய­துடன் எதிர்­கால நிலை­மைகள் குறித்த எச்­ச­ரிக்­கை­யையும் விடுத்­தி­ருந்­தன. 

இந்த நிலை­மைகள் குறித்து காலம் கடந்து பல தக­வல்கள் வெளி­வந்த வண்ணம் இருக்­கின்­றன.

விடு­த­லைப்­ பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் வெற்­றி­கொண்ட இலங்கை அர­சுகள், புலிப்  பயங்­க­ர­வா­தத்­தையே இலக்கு வைத்து பாது­காப்பு ஏற்­பா­டு­களைச் செய்­தி­ருந்­தன. அள­வுக்கு மிஞ்­சிய எச்­ச­ரிக்கை உணர்­வுடன் பாது­காப்புப் பிரி­வினர் அந்தச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­னரே தவிர, உண்­மை­யான தேசிய பாது­காப்பு குறித்த நட­வ­டிக்­கை­களில் கவனம் செலுத்­தி­யி­ருக்­க­வில்லை.

தடுக்­கப்­பட்­டி­ருக்கக் கூடிய உயிர்த்த ஞாயிறு தின பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களைத் தடுக்க முடி­யாமல் போன­தற்­காக ஆட்­சி­யா­ளர்­க­ளி­னாலும், தேசிய பாது­காப்­புக்குப் பொறுப்­பா­ன­வர்­க­ளி­னாலும் ஆளை ஆள் குற்­றம்­சாட்டி வெளி­யிட்டு வரு­கின்ற கருத்­துக்கள் இதனை உறுதி செய்­வ­தாக உள்­ளன.

விடு­த­லைப்­ பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடி­வ­டைந்­ததன் பின்­ன­ரான கடந்த பத்து ஆண்­டு­க­ளிலும், அந்த யுத்த வெற்­றியின் அர­சியல் ரீதி­யான மம­தை­யி­லேயே ஆட்­சி­யா­ளர்கள் மூழ்கிக் கிடந்­தார்கள். அந்த வெற்றி என்­பது, தேசிய நலன்­சார்ந்த நிலையில்  வெறு­மனே போதை தரு­கின்ற ஒரு மாயை என்­பதை இன்­னுமே அவர்­களால் புரிந்து கொள்ள முடி­ய­வில்லை. 

தேசிய பாது­காப்­புக்­கான பொறுப்­புக்­களில் ஏற்­பட்­டி­ருந்த கவ­னக்­கு­றைவு அல்­லது மோச­மான சரிவு கார­ண­மா­கவே 253 அப்­பா­விகள் மடிந்து போனார்கள். அத்­துடன் அந்த உயி­ரி­ழப்­புக்கள் முற்றுப் பெற­வில்லை. பல்­வேறு இடங்­க­ளிலும் பதுங்­கி­யி­ருக்­கின்ற பயங்­க­ர­வா­தி­களைப் படை­யினர் நெருங்கும் போது, இடம்­பெற்று வரு­கின்ற தற்­கொ­லைக்­குண்டு வெடிப்­புக்­க­ளினால் ஏற்­ப­டு­கின்ற உயி­ரி­ழப்­புக்­களும் தொடர்ந்த வண்ணம் இருக்­கின்­றன.

இந்தச் சம்­ப­வங்­களில் அடிப்­படை இஸ்­லா­மிய மத­வாத உணர்வில் ஆழ்ந்து மத வெறியின் உச்­ச­நி­லையில் உள்ள பூவு­லகப் பயங்­க­ர­வா­திகள் மட்டும் உயி­ரி­ழக்­க­வில்லை. அவர்­க­ளுடன் அவர்­க­ளு­டைய குடும்­பத்­தி­னரும் எல்­லா­வற்­றுக்கும் மேலாகப் பச்­சிளம் குழந்­தை­களும் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

இது, புலிப்­ப­யங்­க­ர­வாத எண்­ணத்­திலும், அந்த அர­சியல் சாயம் தோய்ந்த மோகத்­திலும் மூழ்­கி­யி­ருந்த அரச பாது­காப்புத் துறை­யி­ன­ருக்கு, பூவு­லகப் பயங்­க­ர­வா­தத்­திடம் இருந்து ஒரு பேரி­டி­யா­கவே உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் வந்து இறங்­கி­யி­ருக்­கின்­றன.  அரச தலை­வர்­க­ளினால் தேசிய பாது­காப்பு புறக்­க­ணிக்­கப்­பட்ட ஒரு மோச­மான கட்­டத்தை நாடு, கடந்து வந்­தி­ருக்­கின்­றது. இதனை பாது­காப்பு அமைச்­ச­ரா­கிய ஜனா­தி­ப­தியும், சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்ட வேண்­டிய பொறுப்­புக்­கு­ரிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்­துக்கள் உறு­திப்­ப­டுத்தி இருக்­கின்­றன.

அரச தலை­வர்­க­ளான இரு­வ­ருக்கும் இடையில் ஏற்­பட்­டி­ருந்த அர­சியல் ரீதி­யான பிளவு மற்றும் அதி­காரப்  போட்டி கார­ண­மாக 2018 ஆம் ஆண்டு அக்­டோபர் மாதம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அர­சி­ய­ல­மைப்­புக்கு முற்­றிலும் முர­ணான வகையில் பதவி நீக்கம் செய்து ஆட்­சியைக் குலைத்­தி­ருந்தார். 

உச்ச நீதி­மன்றம் தனது அர­சி­ய­ல­மைப்புப் பொருள்­கோ­டலின் ஊடாக அன்­றைய அர­சியல் ஸ்திரத்­தன்­மையை நிவர்த்தி செய்து ஜன­நா­ய­கத்­திற்கு மீண்டும் உயி­ரூட்டி இருந்­தது. அந்தச் சந்­தர்ப்­பத்­திற்குப் பின்னர், தேசிய பாது­காப்பு விட­யங்­களில் ஜனா­தி­பதி, பிர­த­மரைப் புறந்­தள்ளி தன்­னிச்­சை­யான போக்­கி­லேயே முடி­வு­களை மேற்­கொண்­டி­ருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தற்­கொ­லைக்­குண்டுத் தாக்­கு­தல்­களின் போது சிங்­கப்­பூ­ருக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த ஜனா­தி­பதி, தனக்குப் பதி­லாகப் பதில் பாது­காப்பு அமைச்­ச­ரையோ பதில் ஜனா­தி­ப­தி­யை­யோ­கூட நிய­மித்­தி­ருக்­க­வில்லை. இதனால் உட­ன­டி­யாக, நாட்டின் பாது­காப்புச் சபை கூட்டத்தைக் கூட்­டு­வ­தற்கு, பிர­தமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்த போதிலும், பாது­காப்புத் துறை­யினர் அதற்கு ஒத்­து­ழைக்­க­வில்லை. இதனால் பாது­காப்­புத்­து­றை­யி­ன­ரு­டைய இடங்­க­ளுக்கே செல்ல வேண்­டிய நிலை­மைக்கு அவர் உள்­ளா­கி­யி­ருந்தார். அந்தக் கூட்­டத்­திற்கு அவரே தலைமை தாங்­கி­யி­ருந்தார்.

இருப்­பினும், பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அவ­ச­ர­மாக நாடு திரும்­பி­யதும் ஜனா­தி­பதி கூட்­டிய பாது­காப்புச் சபை கூட்­டத்­திற்கு தன்னை அழைக்­க­வில்லை என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பகி­ரங்­க­மாகத் தெரி­வித்­தி­ருந்தார். அதே­போன்று சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை என்று நாட்டு மக்­க­ளுக்குத் தெரி­விக்­கப்­பட்­டது.  தேசிய பாது­காப்பு தொடர்­பான முடி­வு­களை மேற்­கொள்­கின்ற பாது­காப்புச் சபைக் கூட்­டங்­க­ளுக்கு (2018 ஒக்டோர் ஆட்சி கவிழ்ப்­புக்குப் பின்னர் 37 தட­வைகள் பாது­காப்புச் சபை கூட்­டப்­பட்­ட­தாக ஒரு தகவல் உண்டு) நாட்டின் பிர­த­ம­ரா­கிய தன்னை ஜனா­தி­பதி அழைக்­க­வில்லை என்ற தக­வலை ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டு மக்­க­ளுக்கு ஏன் இது­கால வரை­யிலும் வெளிப்­ப­டுத்­த­வில்லை என்ற கேள்வி பல தரப்­பி­ன­ராலும் எழுப்­பப்­பட்­டி­ருக்­கின்­றது.

அதுமட்­டு­மல்­லாமல் நாடு மோச­மான பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களை எதிர்­கொண்­டதன் பின்­ன­ரான சந்­தர்ப்­பத்தைத் தேர்வு செய்து அந்த விட­யத்தை அவர் வெளிப்­ப­டுத்­தி­ய­தற்குக் காரணம் என்ன? பத்­தொன்­ப­தா­வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் பின்னர் அர­சாங்­கத்தின் தலைமைப் பொறுப்பைக் கொண்­டுள்ள பிர­தமர் பத­வியை வகிக்­கின்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதன் மூலம் தனது பாரிய பொறுப்பைப் புறக்­க­ணித்­துள்ளார் அல்­லவா என்ற வினாக்­களும் வின­வப்­பட்­டி­ருக்­கின்­றன. 

பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் பற்­றிய புல­னாய்வுத் தக­வல்கள் பாது­காப்புத் தரப்­பி­ன­ருக்கு வேளைக்கே கிடைக்கப் பெற்­றி­ருந்த போதிலும், எவரும் அவற்றைத் தங்­க­ளுக்குத் தெரி­விக்­க­வில்லை என்று ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கூறி­யி­ருப்­பது வேடிக்­கை­யாகத் தோன்­று­கின்­றது. பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களின் பின்னர் நாட்டு மக்­க­ளுக்குத் தக­வல்­களை வழங்கும் வகையில் பல்­வேறு விட­யங்கள் குறித்து கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­கூட்­டியே கிடைத்த பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் பற்­றிய தக­வல்­களைத் தன்­னிடம் இருந்து மறைத்­த­தற்குப் பாது­காப்புச் செய­லா­ளரே காரணம் என கூறி­யி­ருந்தார்.

தமிழ், சிங்­களப் புத்­தாண்டு தினத்­தன்று தனக்கு வெற்­றிலை கொடுத்து வர­வேற்ற சந்­தர்ப்­பத்­தி­லும்­கூட இந்தத் தாக்­கு­தல்கள் பற்­றிய முன்­கூட்­டிய தக­வல்­களை அவர்கள் தெரி­விக்­க­வில்லை என்று கூறி­யி­ருப்­பது சிறு­பிள்­ளைத்­த­ன­மான கூற்­றா­கவே தோன்­று­கின்­றது. நாட்டின் தலை­வர்­க­ளா­கிய ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகிய இரு­வ­ருக்கு மட்­டுமே பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் பற்­றிய அபாய எச்­ச­ரிக்கைத் தக­வல்கள் கிடைக்­க­வில்லை என்­ப­தையே அது பற்றி வெளி­யா­கிய ஊடகத் தக­வல்­களும் பொறுப்பு வாய்ந்த அர­சியல் தலை­வர்கள், அர­சி­யல்­வா­தி­களின் கருத்­துக்­களும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

அரச தலை­வர்­களும், பாது­காப்புப் பிரி­வி­ன­ரா­கிய முப்­ப­டை­களும் இரு­கூறாக துரு­வ­ம­ய­மாகி நாட்டில் அர­சாங்கம் பிள­வு­பட்டு பல­வீ­ன­ம­டைந்­திருக்கின்­றது என்­ப­தையே இந்த நிலை­மைகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. 

திட்­ட­மிட்ட வகையில் துணி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பின்னர், தேசிய பாது­காப்பில் விழுந்­துள்ள ஓட்டை எவ்­வ­ளவு மோச­மா­னது என்­பதை பலரும் பல்­வேறு வடி­வங்­களில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

 ‘அர­சாங்கம் எங்­களைக் கைவிட்டு விட்­டது. நாங்கள் அநா­தை­க­ளாக ஆக்­கப்­பட்டு விட்டோம்’ என்று, கொச்­சிக்­கடை புனித அந்தோனியார் தேவா­லய பயங்­க­ர­வாதத் தாக்­குதல் குறித்து, மனம் உடைந்த நிலையில் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரி­வித்­துள்ளார்.

தற்­கொலைத் தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வ­தற்கு மூன்று தினங்­க­ளுக்கு முன்னர் பாது­காப்புத் துறை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்ற மூன்­றா­வது எச்­ச­ரிக்­கை­கூட உரிய தரப்­பி­னரால் கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற தகவல் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றது. இந்த நிலை­யி­லா­வது உரிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் மேற்­கொண்­டி­ருக்­கலாம். அதன் மூலம் முற்­றாகப் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களைத் தடுத்­தி­ருந்­தி­ருக்க முடி­யாது போயி­ருந்­தாலும், உயி­ரி­ழப்­புக்­க­ளை­யா­வது கூடிய அளவில் குறைத்­தி­ருக்­கலாம்.

பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் பற்­றிய எச்­ச­ரிக்­கை­யா­வது தங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்தால் தாங்கள் அதற்­கேற்ற நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்­தி­ருக்­கலாம் என்று அவர் ஆதங்­கத்­துடன் வெளி­நாட்டு ஊடகம் ஒன்­றுக்குத் தகவல் தெரி­விக்கும் போது கூறி­யி­ருக்­கின்றார்.

‘இனிமேல் என்ன செய்­வது எங்­க­ளுக்கு உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டு­விட்­டன. யாரை நோவது? யாரைக் குற்றம் சுமத்­து­வது என்று தெரி­ய­வில்லை. தவ­றி­ழைத்­த­வர்­களைத் தண்­டிப்­பதால் இழந்த உயிர்­களை மீளப் பெற முடி­யாதே….’ என்று மிகுந்த ஆதங்­கத்­துடன் கர்­தினால் மல்­கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

அவ­ரு­டைய கூற்று கொடூ­ர­மான குண்டுத் தாக்­கு­தல்­களில் உயி­ரி­ழந்­துள்ள நூற்­றுக்­க­ணக்­கான ஆன்­மாக்­களின் இறந்­த­வர்­க­ளு­டைய நேசம் நிறைந்த, பல நூற்­றுக்­க­ணக்­கான உற­வி­னர்­க­ளி­னதும், இந்தத் தாக்­கு­தல்­க­ளினால் அதிர்ச்­சி­ய­டைந்து உறைந்து போயுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­க­ளி­னதும் உள்ளக் குமு­ற­லா­கவும் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

மறு­பு­றத்தில் புதிய அவ­ச­ர­கால சட்­ட­வி­திகள் பற்­றிய விவா­தத்­தின்­போது பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய முன்னாள் இரா­ணுவத் தள­ப­தியும் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா வெளி­யிட்­டுள்ள உணர்வு ரீதி­யான கருத்­துக்கள் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தவை.

‘நாட்டின் பாது­காப்பு என்­பது கேலிக்­கு­ரி­ய­தா­கி­விட்­டது. இரா­ணுவ நுண்­ண­றிவுக் (புல­னாய்வுக்) கருவி நாட்டைத் தோல்­வி­ய­டையச் செய்­துள்­ளது’ என்று அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

‘இங்கு நடை­பெற்­றது போன்ற குழப்ப நிலை­மை­யொன்று வேறு நாட்டில் ஏற்­பட்­டி­ருந்தால் அந்த அரசு முழு­மை­யாக பதவி துறக்க நேரிட்­டி­ருக்கும். ஆனால் இங்கு ஒரு­போதும் அது நடை­பெறப் போவ­தில்லை’ என்றும் அவர் அறு­தி­யிட்டுக் கூறி­யுள்ளார்.

விடு­த­லைப்­ பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் இரா­ணுவத் தள­ப­தி­யாகப் பொறுப்­பேற்று செய­ற­்பட்ட அனு­ப­வத்தைக் கொண்­டுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, உயிர்த்த ஞாயிறு தின தற்­கொ­லைக்­குண்­டுத்­தாக்­கு­தல்கள் ஓரி­ரவில் திட்­ட­மிட்டு நடத்­தப்­ப­ட­வில்லை. குறைந்­தது ஏழு அல்­லது எட்டு வரு­ட­காலம் திட்­டத்தில் இருந்­தி­ருக்க வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

சரத் பொன்­சே­கா­வு­டைய இந்தக் கூற்று, தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்கள் நியூசி­லாந்தின் கிறிஸ்சேர்ச் பள்­ளி­வா­சல்கள் மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்­திற்குப் பழி­வாங்கும் வகை­யி­லேயே நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது என்ற பாது­காப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்­த­னவின் கூற்றை கேள்­விக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றது.

பயங்­க­ர­வா­திகள் தாக்­குதல் நடத்தும் வரையில் நாட்டைப் பாது­காப்­ப­தற்கு அர­சி­யல்­வா­தி­களும் பாது­காப்புத் துறை­சார்ந்த திணைக்­களத் தலை­வர்­களும் காத்­தி­ருக்க வேண்­டி­ய­தில்லை. நாங்கள் ஒரு யுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றோமோ இல்­லையோ எந்த வேளை­யிலும் நாட்டைப் பாது­காக்க வேண்­டி­யது அவர்­க­ளு­டைய பொறுப்­பாகும். அர­சாங்கம் என்ற வகையில் நாங்கள் தவ­றி­ழைத்­தி­ருக்­கின்றோம். அதற்கு­பல கார­ணங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாது. ஏற்­பட்­டுள்ள துன்­பி­ய­லுக்கு நாங்­களே பொறுப்­பேற்க வேண்டும்  என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டதில் இருந்து ஒருவர் மீது ஒருவர் மாறி­மாறி அதற்­கான பழியை சுமத்திக் கொண்­டி­ருந்த நிலைமை குறித்து பாராளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம வெளி­யிட்­டுள்ள கருத்தும் முக்­கிய கவ­னத்­திற்­கு­ரி­யது.

‘பாராளு­மன்­றத்தில் உள்ள 225 உறுப்­பி­னர்­களும் இந் தத் தாக்­கு­தல்­க­ளுக்­கான பொறு ப்பை ஏற்க வேண்டும். நாங் கள் எல்­லோரும் இங்கு வந்து ஆளா­ளுக்கு சண்டை பிடித்துக் கொண்­டி­ருக்­கின்றோம். நாங்கள் ஒவ்­வொ­ரு­வரும் எங்­களைப் பற்றி மட்­டுமே கரி­சனை கொண்­டி­ருக்­கின்றோம். நாட்­டைப்­பற்றி கரி­சனை கொண்­டி­ருக்­க­வில்லை என அவர் இடித்­து­ரைத்­தி­ருக்­கின் றார். 

இந்தத் தாக்­கு­தல்­க­ளுக்கு ஈராக் மற்றும் சிரி­யாவின் இஸ்­லா­மிய பேர­ரசு என்ற பொருளைக் கொண்­டுள்ள ஐ.எஸ்.­ஐ.எஸ். என்ற சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்பு உரிமை கோரி­யி­ருக்­கின்­றது. உண்­மையில் அந்த அமைப்பின் பயிற்சி மற்றும் அறி­வூட்டல் வழி­ந­டத்­தலின் கீழ் பயங்­க­ர­வா­தத்தில் பயிற்­றப்­பட்­டுள்ள தேசிய தவ்ஹித் ஜமா அத் என்ற அமைப்­பி­னரே இந்தத் தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களை  நடத்­தி­யி­ருக்­கின்­றனர் என்­பது விசா­ர­ணை­களின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் இந்தத் தாக்­கு­தல்­களில் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி இயக்கம் என்ற அமைப்­பினர் உட­னி­ருந்து உதவிபுரிந்­துள்­ள­தா­கவே பாது­காப்புத் தரப்­பினர் தமது விசா­ர­ணை­களின் பின்னர் தெரி­வித்­துள்­ளனர்.

முஸ்­லிம்­களின் மத ரீதி­யான நலன்­களை மேம்­ப­டுத்­தவும், அதனை மட்­டுமே நிலவச் செய்ய வேண்டும் என்ற அடிப்­ப­டை­வா­தத்தை வகுத்­துப்­பி­ரிக்க முடி­யாத வகையில் கொள்­கை­யாக வரித்­துக்­கொண்­டுள்ள ஐ.எஸ்.­ஐ.எஸ். அமைப்­பினர் இலங்­கையில் கத்­தோ­லிக்­கர்­க­ளையும், கிறிஸ்­த­வர்­க­ளையும், சுற்றுலாப் பய­ணி­க­ளை­யுமே இலக்கு வைத்து தற்­கொலைத் தாக்­கு­தல்­களை நடத்தி கொன்­றி­ருக்­கின்­றார்கள்.

உண்­மையில் இங்­குள்ள கத்­தோ­லிக்­கர்­களும் கிறிஸ்­த­வர்­களும் இஸ்லாம் மதத்­திற்கு எதி­ரா­ன­வர்­க­ளு­மல்ல. பகை­யா­ளி­க­ளு­மல்ல. இந்த நிலையில் மற்­று­மொரு முக்­கிய விட­யமும் கவ­னத்­திற்­கொள்­ளப்­பட வேண்­டி­யி­ருக்­கின்­றது.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொ­லைக்­குண்டுத் தாக்­கு­தல்­களில் தமிழ் மக்­களே கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். தமி­ழர்­களை இலக்கு வைத்து தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்கு அல்­லது அவர்­களைக் கூட்டம் கூட்­ட­மாகக் கொன்­றொ­ழிப்­ப­தற்கு உலக பயங்­க­ரவாத அமைப்­பா­கிய ஐ.எஸ்.­ஐ.எஸ். அமைப்­புக்கும் சரி, அதன் வழி­ந­டத்­தலில் இயங்­கு­கின்ற தேசிய தவ்ஹித் ஜமா அத் மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி என்ற இரண்டு உள்ளூர் அமைப்­புக்­க­ளுக்கும் சரி­யான கார­ணங்கள் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

குறு­கிய நேரத்­தி­லான தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் என்ற கொடூரமான தாக்குதல்கள் இலங்கைக்குப் புதிய பயங்கரவாத அனுபவமாகும். இந்தத் தாக்குதல்களினால் நாடே நிலைகுலைந்து போயுள்ளது. தற்கொலைத் தாக்குதல்கள் எந்த இடத்திலும் எந்தவேளையிலும் நடைபெறலாம் என்று நாட்டு மக்கள் அனைவருமே இனந்தெரியாத அச்சத்தில் உறைந்து போயுள்ளார்கள். நிம்மதி இழந்த நிலையில் அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள் சீர்குலைந்திருக்கின்றன. இந்த நிலைமை எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்ற கேள்வி அவர்கள் மனங்களில் விசுவரூபமெடுத்து மிரட்டிக் கொண்டி ருக்கின்றது.

தாக்குதல்களினால் ஏற்பட்ட கொடூரமான பேர னர்த்தத்தையடுத்து, தேசிய அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பல்வேறு மட்டங்களில் நாடளா விய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு இடங்களிலும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். பெருந்தொகையான வெடிபொருட்களும், துப்பாக்கிகள் மட்டுமல்லாமல் கத்தி,  வாள்கள் போன்ற ஆயுதங்களும், தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுகின்ற உபகர ணங்கள் பொருட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டு, இவற்றுடன் நேரடியாக சம்பந்தப் பட்டவர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கின்றன. பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழு கைகளை இரத்து செய்யுமாறு கோரியிருந்த அரசாங்கம், மே தின ஊர்வலங்கள், கூட்டங்கள் என்பவற்றையும் ரத்துச் செய்துள்ளது. சுற்றிவளைப்புக்கள் தேடுதல் நடவடிக்கைகளினால் மக்கள் அசௌகரியமும், அச்ச மும் கொண்டிருக்கின்றார்கள்.

மொத்தத்தில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பத்து வருடங்களில் நாடு தோல் வியடைந்த நாடாகத் தவித்து, தடுமாறிக் கொண்டி ருக்கின்றது. இந்த நிலைமையை அரசாங்கத்தினால் எத்தனை நாட்களுக்குள் அல்லது எத்தனை வாரத் திற்குள், எத்தனை மாதத்திற்குள் சீராக்க முடியும் என் பது தெரியவில்லை.

பி.மாணிக்கவாசகம்

http://ilakkiyainfo.com/பேரிடியான-தாக்குதலுக்கு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

மொத்தத்தில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பத்து வருடங்களில் நாடு தோல் வியடைந்த நாடாகத் தவித்து, தடுமாறிக் கொண்டி ருக்கின்றது. இந்த நிலைமையை அரசாங்கத்தினால் எத்தனை நாட்களுக்குள் அல்லது எத்தனை வாரத் திற்குள், எத்தனை மாதத்திற்குள் சீராக்க முடியும் என் பது தெரியவில்லை.

இனவாதம் இருக்கும் வரையிலும் சொறிலங்கா தோல்வி அடைந்த நாடுதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

இனவாதம் இருக்கும் வரையிலும் சொறிலங்கா தோல்வி அடைந்த நாடுதான் .

100%

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.