Jump to content

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரருக்கு தண்ணீர் போத்தல் வழங்கிய சிறுமி..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல்  வழங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

________________________________________

கடந்த 21ம் திகதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், இலங்கை மற்றும் வெளிநாட்டினர் என 250 க்கும் அதிகமானோர் பலியாகினர்.

________________________________________

இதையடுத்து தொடர்ந்தும் நாட்டில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலைியில் நேற்று கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனைக்குடி கடற்கரை வீதியில்  தொடங்கி, சாய்ந்தமருது வரையான பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

________________________________________

இதன்போது, கல்முனை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல் வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட அவர், அந்த சிறுமியின் தலையை அன்புடன் வருடிக்கொடுத்தார். ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இந்த புகைப்படம், சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது.

http://www.virakesari.lk/article/55045

Link to comment
Share on other sites

அப்பாவிற்கும் வாப்பாவிற்கும் என்ன வித்தியாசம்? – இதயம் பலவீனமானவர்கள்தவிருங்கள்

இதே சிறிலங்கா இனப்படுகொலை இராணுவத்தினர் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையில் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட சிறுவர்ளின் ஒளிப்படங்களையும் காணொளிகளையும் உங்களுக்கு சிறுதொகுப்பாய் தருகிறோம்.

https://www.thaarakam.com/2019/05/01/அப்பாவிற்கும்-வாப்பாவிற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்...அந்த சின்னன் வீட்டுக்காலை தனிய வெளிக்கிட்டு போய் ஆமிக்கு தண்ணி குடுத்துதாம்....அதை ஒருத்தர் படமெடுத்தாராம்.....அது இப்ப வைரலாகி உலகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்துதாம்...

Link to comment
Share on other sites

ஹெய்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படையினர், சிறுவர்கள் மீது மேற்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை உத்தரவிட்டுள்ளது.

ஹெய்டியில் ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்திருந்த சிறிலங்காவின் மூன்று அதிகாரிகள் உட்பட 114 படைத்தரப்பினர் மீது சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கடந்த வருடம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

அப்பாவிற்கும் வாப்பாவிற்கும் என்ன வித்தியாசம்? – இதயம் பலவீனமானவர்கள்தவிருங்கள்

இதே சிறிலங்கா இனப்படுகொலை இராணுவத்தினர் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையில் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட சிறுவர்ளின் ஒளிப்படங்களையும் காணொளிகளையும் உங்களுக்கு சிறுதொகுப்பாய் தருகிறோம்.

https://www.thaarakam.com/2019/05/01/அப்பாவிற்கும்-வாப்பாவிற/

 

1 hour ago, குமாரசாமி said:

ஓமோம்...அந்த சின்னன் வீட்டுக்காலை தனிய வெளிக்கிட்டு போய் ஆமிக்கு தண்ணி குடுத்துதாம்....அதை ஒருத்தர் படமெடுத்தாராம்.....அது இப்ப வைரலாகி உலகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்துதாம்...

A fire burns Sunday after government shelling, according to a humanitarian group in the region. Ãhnliches Foto Ãhnliches Foto

இந்த ஊடகங்கள்...... எல்லாம், எம்மை.... எவ்வளவு, முட்டாள்கள்  ஆக்கப்  பார்க்கிறார்கள்?

தமிழ் ஈழப் போரில்  இறந்த தாயின்,  மார்பகத்திரிருந்து... பாலை குடித்த படம் எல்லாம் பார்த்தோம்.
இதனை... விட,  ஸ்ரீலங்கா ஆமிக்காரன் நல்லவன் என்று, சொல்லி....
அவனுக்கு..... "தண்ணி" கொடுக்கும் படங்களை, எங்களுக்கு காட்ட வேண்டாம்.

தமிழ் ஈழப் போரில்... பாதிக்கப்  பட்ட குழந்தைகளின் படங்களை இணைத்த  போது..... 
நிர்வாகம் அதனை... நீக்கி  விட்டது.

இப்ப  "ஆமிக்கு...  முஸ்லீம்  சிறுமி"  தண்ணி குடுக்கிற படம் எல்லாம், தேவையா?

இது... ஒரு உளவியல் மனமாற்றத்ததை ஏற்படுத்தும்,  "அபாயம்" உள்ளது. 

Link to comment
Share on other sites

மொத்த தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 350 இக்கு மோல் என உறுதிப்படுத்தப்பட்டுது, ஏன் இந்த வீரகேசரி மட்டும் இன்னும் 250 இக்கு மேல் என்று நிக்குது?

அப்படியே வந்து ஆக 50 திற்கு மேல் தான் என்று நிக்குமோ?😡

Link to comment
Share on other sites

1 hour ago, மலையான் said:

மொத்த தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 350 இக்கு மோல் என உறுதிப்படுத்தப்பட்டுது, ஏன் இந்த வீரகேசரி மட்டும் இன்னும் 250 இக்கு மேல் என்று நிக்குது?

அப்படியே வந்து ஆக 50 திற்கு மேல் தான் என்று நிக்குமோ?😡

350 என்பது அரசின் தவறான கணக்கெடுப்பு. அரசே பிறகு அதை சரி செய்து 253 என்றது

11 hours ago, தமிழ் சிறி said:

 

A fire burns Sunday after government shelling, according to a humanitarian group in the region. Ãhnliches Foto Ãhnliches Foto

இந்த ஊடகங்கள்...... எல்லாம், எம்மை.... எவ்வளவு, முட்டாள்கள்  ஆக்கப்  பார்க்கிறார்கள்?

தமிழ் ஈழப் போரில்  இறந்த தாயின்,  மார்பகத்திரிருந்து... பாலை குடித்த படம் எல்லாம் பார்த்தோம்.
இதனை... விட,  ஸ்ரீலங்கா ஆமிக்காரன் நல்லவன் என்று, சொல்லி....
அவனுக்கு..... "தண்ணி" கொடுக்கும் படங்களை, எங்களுக்கு காட்ட வேண்டாம்.

தமிழ் ஈழப் போரில்... பாதிக்கப்  பட்ட குழந்தைகளின் படங்களை இணைத்த  போது..... 
நிர்வாகம் அதனை... நீக்கி  விட்டது.

இப்ப  "ஆமிக்கு...  முஸ்லீம்  சிறுமி"  தண்ணி குடுக்கிற படம் எல்லாம், தேவையா?

இது... ஒரு உளவியல் மனமாற்றத்ததை ஏற்படுத்தும்,  "அபாயம்" உள்ளது. 

தமிழ் சிறி,

இன்னும் ஒரு படமும் வீடியோவும் வைரலாகிக் கொண்டு இருக்கு. சஃறானின் பெண் பிள்ளை சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் காயம் அடைந்து உயிருக்கு போராடும் போது காப்பாற்றி வெளியே கொண்டு வருவதும், பின் அம்புலன்ஸில் வைத்து முதலுதவி செய்வதும்..... அவற்றை இணைக்கவா😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படம் அரசியல் நோக்கத்திற்காகத் தான் எடுக்கப்பட்டு இருக்கு...ஆனால் மட்டில் தமிழர் ஆரம்ப பிரச்சினை{சீயோன் சேர்ச்யில் குண்டு வெடித்த அடுத்த 2,3 நாட்களுக்கு} நடந்த நேரம் போலீசாருக்கு தண்ணீர் எல்லாம் குடுத்து உபசரித்தார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா அரச பயங்கரவாதம்.. ஐ எஸ் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதத்தை விட திறம் என்று காட்ட விளைவதோடு.. சர்வதேச அரங்கில் எழுந்துள்ள.. 2009 போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான சூழலாகவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.. கச்சிதமாக.

அதாவது சொறீலங்கா சிங்கள அரசும்.. அதன் அரச பயங்கரவாதப் படைகளும்.. ஒரே கல்லில்... பல மாங்காய்களை இலக்கு வைத்துச் செயற்பட்டு வருகின்றன. 

Image result for பாலà®à¯à®à®¨à¯à®¤à®¿à®°à®©à¯

உந்தப் படங்களோடு சேர்த்து இதையும் வைரலாக்க ஆக்களில்லை என்பதை எண்ணினால்.. இந்த உலகம் போற போக்கை எளிதாக விலங்கிக் கொள்ளலாம். 

Link to comment
Share on other sites

விபரமறியாத சிறுகுழந்தைக்கு தெரியாது தான் தண்ணி போத்தல் குடுக்கிறது ஒரு மோசமான கொலைகாரனுக்கு என்று!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.