Jump to content

இரண்டாவது தேனிலவு... ஏன் அவசியம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"உங்களைப் பெற்றவர் என்ற காரணத்துக்காக உங்கள் அம்மாவை எப்படி மதிக்கிறீர்களோ, நேசிக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் குழந்தைகளின் அம்மாவையும் நேசியுங்கள். தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் நேசிக்கிற கணவனைத்தான், மனைவி மனதுக்குள் `ஆண்' என்று கொண்டாடுவாள்."

இரண்டாவது தேனிலவு... ஏன் அவசியம்? - டாக்டர் ஷாலினி விளக்கம்

ரண்டாவது தேனிலவு... தேனிலவுக்கே போகாத தம்பதியர்தான் நம்மிடையே அதிகம் பேர். இருந்தாலும், இரண்டாவது தேனிலவு செல்வது ஏன் அவசியம்; திருமணமான எத்தனை வருடங்கள் கழித்து இரண்டாவது தேனிலவுக்குச் செல்லலாம்? இதனால், ஒரு கணவன் - மனைவிக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன? டாக்டர். ஷாலினியிடம் கேட்டேன். அவருடைய விளக்கமான பதில்களை படியுங்கள்.

தேனிலவு

தேனிலவு ஏன் அவசியம்?

`திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். `காலையில் எழுந்தோம்; காபி குடித்தோம்; சமைத்தோம் சாப்பிட்டோம்; வீட்டுவேலை பார்த்தோம்' என்று இருந்தால், பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாது. தேனிலவு என்று சில நாள்கள் வெளியே செல்லும்போது, வேலை பளு இல்லாதது, அருகருகே அமர்ந்து பயணம் செய்வது, பேசுவது, கூடவே ஒருவரையொருவர் உடலாகவும் மனமாகவும் தெரிந்துகொள்வது என்று தாம்பத்தியத்தை இறுக்கமாக்கும் பல அனுபவங்கள் நிகழும். அந்தக் காலத்தில் எப்போது தாம்பத்தியம் வைத்துக்கொண்டால், குழந்தை பிறக்கும் என்பது தெரியாது. அதனால், நிலவு வளர்கிற காலத்தில் தேனெல்லாம் சாப்பிட்டு ஆரோக்கியமான உடலுடன் தம்பதியர் இணைந்தால், குழந்தை பிறக்கும் என்று சில தினங்களைக் கடைபிடித்தார்கள். அதுதான் தேனிலவு. இந்தக் காலத்தில், எந்தெந்த நாள்களில் இணைந்தால் குழந்தை பிறக்கும் என்று தெரிந்திருந்தாலும்கூட, பரஸ்பரம் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள தேனிலவுதான் உதவி செய்யும்.''

செவன் இயர் இட்ச்-ல் இருந்து ஒரு தாம்பத்தியத்தை இரண்டாவது தேனிலவு காப்பாற்றுமா?

``முதலில் செவன் இயர் இட்ச் என்றால் என்ன என்று சொல்லி விடுகிறேன். பொதுவாக செவன் இயர் இட்ச் திருமணமான 6 அல்லது 7-வது வருடத்தில் வரும் என்று சொல்லப்பட்டாலும், இந்த உணர்வு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதுதான் உண்மை. இது மன அழுத்தம் மாதிரியான உணர்வு. தம்பதியரில் யாருக்கு வேண்டுமானால் வரலாம். மனைவிக்கு, `தன்னுடைய திறமைகள் எதையுமே கணவன் பாராட்டவில்லை; நான் ஏதோ வேலைக்காரி மாதிரி இந்த வீட்டில் வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். என் உழைப்பை இவர் அனுபவிக்கிறார்' என்று கோபம் வரும். கணவனுக்கு, `வெளியுலகத்தில் இருக்கிற பெண்கள் தன்னை எப்படியெல்லாம் ரசிக்கிறார்கள். தன்னுடைய திறமையைப் பார்த்து எப்படிப் பயப்படுகிறார்கள். ஆனால், என் மனைவி மட்டும் என்னையும் மதிப்பதில்லை, என் பெற்றோரையும் மதிப்பதில்லை. வீட்டுக்கு வந்தால் ஒரு அழுக்கு நைட்டி போட்டுக்கொண்டிருக்கிறாள்' என்று மனம் நிறைய மனைவி மீது குற்றச்சாட்டுகள் இருக்கும். இதை பரஸ்பரம் பேசிச் சரி செய்துகொள்ள மாட்டார்கள். மனதுக்குள்ளே வைத்து குமுறிக் கொண்டிருப்பார்கள். இதன் விளைவாகச் சிடுசிடுப்பு, சண்டை என்று பிரச்னைகள் நீண்டுகொண்டே போகும். இந்த நேரத்தில் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ வெளிநபர் யாராவது அன்பு காட்டினாலோ அல்லது அவர்களுடைய திறமையை சிறிதளவு பாராட்டினாலோ, `நம்முடைய பழைய உறவிலிருந்து வெளிவந்து இந்தப் புது உறவில் ஈடுபடலாமோ' என்கிற தடுமாற்றம் அவர்களுக்கு வரும். அந்தத் தடுமாற்றத்தின் பெயர்தான் செவன் இயர் இட்ச். நாலைந்து நாள்கள், தனிமையில் மனம்விட்டுப் பேசிக் கொள்கிற இரண்டாம் தேனிலவு, செவன் இயர் இட்ச் பாதிப்பை நிச்சயம் மாற்றும். 

தம்பதி

பல குடும்பங்களில் குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகு, கணவன் - மனைவி பிரிந்து தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதையெல்லாம் மாற்றி, தம்பதியரிடையே மீண்டும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், கணவன் - மனைவி மட்டும் சேர்ந்து செல்கிற தனிமைப் பயணங்கள் அதற்கு உதவும். இதற்கு இரண்டாவது தேனிலவு மிக நல்ல சாய்ஸ். இரண்டாம் தேனிலவு என்றால், நிறைய பேர் `அது செக்ஸ் ஆக்ட்டிவிட்டீஸ்க்கானது' என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது. அதில் செக்ஸும் இருக்கும் என்றாலும், மனதின் ஆழத்துக்குள் போய்விட்ட தாம்பத்தியத்தைப் புதுப்பித்துக் கொள்கிற ஒரு வழிதான் இந்த இரண்டாம் தேனிலவு. ஆனால், அங்கே போய் சொந்தக் கதை, சோகக்கதை பேசுவது, பழைய பிரச்னைகளை மனதில் வைத்துக்கொண்டு செல்வதெல்லாம், இரண்டாவது ஹனிமூனுக்கான அடிப்படையையே அசைத்துவிடும்.''

 

 

இரண்டாவது தேனிலவு... பிள்ளைகளை உடன் அழைத்துச் செல்லலாமா? 

``அழைத்துச் செல்லாமல் இருப்பதுதான் நல்லது. சின்னக் குழந்தைகள் என்றால், உடன் அழைத்துச் சென்று விடுங்கள். வளர்ந்த பிள்ளைகள் என்றால், நம்பிக்கையான யாரிடமாவது அவர்களை விட்டு விட்டுச் செல்லுங்கள். உங்கள் டிரிப்பை 2 அல்லது 3 நாள்கள் மட்டுமாக வைத்துக்கொள்ளுங்கள். டீன் ஏஜ் பிள்ளைகள் என்றால், `அப்பா - அம்மாவுக்கு மனம் விட்டுப் பேச வேண்டும்' என்று நாகரிகமாகச் சொல்லிவிட்டுக் கிளம்புங்கள்.''

ஒரு ஃப்ரெண்ட்லியான தாம்பத்தியத்துக்குக் கணவனும் மனைவியும் என்ன மாதிரி முன்னெடுப்புகள் செய்ய வேண்டும்?

``ஒரு கணவன், தன் மனைவியை ஒரு டீச்சர் மாதிரி, ஒரு போலீஸ்காரி மாதிரி, ஒரு வக்கீல் மாதிரி நினைத்துவிட்டான் என்றால், மனைவி உலக அழகியாகவே இருந்தாலும் அவள் மீது ஈர்ப்பு வராது. ஆணுடைய செக்ஸுவல் இயல்பு இதுதான். அதனால், மனைவிகள் கணவரை அவ்வப்போது அப்பர் ஹேண்ட் எடுக்க விடுங்கள்; அவரைக் கொஞ்சம் ஸ்பெஷலாக நடத்துங்கள். ரொமான்ஸ்க்கான, ஃப்ரெண்ட்லியான தாம்பத்தியத்துக்கான நல்ல யுக்தி இதுதான். 

அடுத்து, மனைவிகளின் உடையலங்காரம். `என் புருஷந்தானே. அவர் முன்னாடி நான் எப்படி டிரெஸ் பண்ணிக்கிட்டிருந்தா என்ன' என்று மனைவிகள் நினைப்பது சரியாக வராது. பெண்களின் தோற்றத்தைப் பார்த்துத்தான் ஆண்களுக்கு ரொமான்ஸ் உணர்வே வரும். ஆண்களுடைய மூளையின் வடிவமைப்பே இப்படித்தான் எனும்போது, இதற்கு ஏற்றபடி மனைவிகள் நடந்துகொள்வதுதான் புத்திசாலித்தனம். இதில் கணவர்களுக்கும் சொல்ல வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. வீட்டு வேலைகள், வெளி வேலைகள், குழந்தைகளுக்கான வேலைகள், வீட்டில் இருக்கிற பெரியவர்களுக்கான வேலைகள் எல்லாம் செய்து களைத்துப் போயிருக்கிற மனைவி, தினமும் உங்கள் கண்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள். 

காதல்

அடுத்தது மிக மிக முக்கியமான இரண்டு பாயின்ட்ஸ். மனைவிகளுக்குக் கணவர்களிடம் முக்கியமான எதிர்பார்ப்பொன்று இருக்கிறது. தன் கணவன் தன்னை எங்கேயும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதுதான் அதில் முதல் பாயின்ட். இரண்டாவது, தன்னை மற்ற  பெண்களுடன் கம்பேர் செய்து, `எங்கம்மாவைப் பாரு எவ்வளவு நல்லா சமைக்கிறா, நீயும் சமைக்கிறியே', `குடும்பம் நடத்துறதுன்னா என் ஃப்ரெண்டோட வொய்ஃபைப் பார்த்துக் கத்துக்கோ' என்று சொல்கிற கணவர்களைப் பார்த்தாலே மனைவிகளுக்குக் கோபம்தான் வரும். இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், கணவர்கள் தங்கள் மனைவிகளை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காதீர்கள். உங்களைப் பெற்றவர் என்ற காரணத்துக்காக உங்கள் அம்மாவை எப்படி மதிக்கிறீர்களோ, நேசிக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் குழந்தைகளின் அம்மாவையும் நேசியுங்கள். தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் நேசிக்கிற கணவனைத்தான், மனைவி மனதுக்குள் `ஆண்' என்று கொண்டாடுவாள். 

மொத்தத்தில் செக்ஸ் தவிர மற்ற விஷயங்களில் எல்லாம், கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் காயப்படுத்திவிட்டு, தாம்பத்தியம் மட்டும் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைத்தால் அது நடக்காது. ஸோ, வெளி விஷயங்களில் ஒருவரையொருவர் மரியாதையாக நடத்துங்கள். தாம்பத்தியம் தானாகவே ஃப்ரெண்ட்லியாக மாறும். 

இரண்டாவது தேனிலவை, உங்கள் அன் கண்டிஷ்னல் லவ்வை உங்கள் துணைக்குப் புரிய வைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டால், உங்கள் உறவு இரண்டாம் தேனிலவில் நிச்சயம் புதுப்பிக்கப்படும்.''

இந்தக் கோடை விடுமுறையில் ஒரு வாரத்தை உங்கள் இரண்டாம் தேனிலவுக்கு ஒதுக்குங்களேன்.

https://www.vikatan.com/news/miscellaneous/156332-why-should-a-couple-go-to-the-second-honeymoon-psychiatrist-shalini-explains.html?artfrm=trending_vikatan

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25 - 30 வயதில்... கலியாணம் கட்டும்  போது,  அவ்வளவு அனுபவம் இருக்காது. 😎
"குருட்டுப் பூனை...  விட்டத்தில்  பாய்ந்த மாதிரி"   இருக்கும். :grin:

இரண்டாவது  தேனிலவின்  போது.... 
தம்பதிகள்... நன்றாக அனுபவம் வாய்ந்தவர்களாக மாறி விடுவதால்.... 
எல்லோருக்கும்... இரண்டாவது,  தேனிலவு  தேவை.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்கப்பா வாழ்க்கையில ரெண்டே தேனிலவுதானா..?

ரொம்ப கம்மியா இருக்கே..! 

loving02.gif

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

என்னங்கப்பா வாழ்க்கையில ரெண்டே தேனிலவுதானா..?

ரொம்ப கம்மியா இருக்கே..!  http://smileys.smilchat.net/smiley/love/loving01.gif

Ãhnliches Foto

ராஜ வன்னியரே..... நெடுகவும்,  "மல்லிகைப்பூ"  கட்டிலில் படுத்தால்....
தேன் நிலவின்.... அருமை தெரியாமல் போய் விடும். 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ராசவன்னியன் said:

என்னங்கப்பா வாழ்க்கையில ரெண்டே தேனிலவுதானா..?

ரொம்ப கம்மியா இருக்கே..!  http://smileys.smilchat.net/smiley/love/loving01.gif

 

அது இந்த  தலைமுறைக்கு...

எங்களுக்கல்ல

நீங்க  தொடருங்க  ராசா...😍😍😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

அது இந்த  தலைமுறைக்கு...

எங்களுக்கல்ல

நீங்க  தொடருங்க  ராசா...😍😍😍

ஆ.. இந்த நினைப்புதான், தலை நரைத்தாலும் இளமையாக வாழ உதவுகிறது. loveyou.gif

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/30/2019 at 6:51 PM, ராசவன்னியன் said:

என்னங்கப்பா வாழ்க்கையில ரெண்டே தேனிலவுதானா..?

ரொம்ப கம்மியா இருக்கே..! 

loving02.gif

 

 

எனக்கு தெரிஞ்ச கூட்டு மாசிலாமணி சொன்னான் தனக்கு 67 வயதிலையும் டெய்லி  தேனிலவாம்......😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்கு தெரிஞ்ச கூட்டு மாசிலாமணி சொன்னான் தனக்கு 67 வயதிலையும் டெய்லி  தேனிலவாம்......😃

உங்களுக்கு இப்படி எதுவும் சொன்னதாக ஞாபகமில்லையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு இப்படி எதுவும் சொன்னதாக ஞாபகமில்லையே!

அப்பாடா  இஞ்சைவந்து வெளியிலை போறதுக்குள்ளை எத்தினை சலசலப்பு சச்சரவுகளை சந்திக்க வேண்டிக்கிடக்கு....:cool:

Bildergebnis für vadivelu funny gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அப்பாடா  இஞ்சைவந்து வெளியிலை போறதுக்குள்ளை எத்தினை சலசலப்பு சச்சரவுகளை சந்திக்க வேண்டிக்கிடக்கு....:cool:

தேன்+நிலவு என்றால் என்ன சாமி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தேன்+நிலவு என்றால் என்ன சாமி :)

ராஜா புதுமாப்பிள்ளைக்கே இந்தக் கேள்வி வரலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தேன்+நிலவு என்றால் என்ன சாமி :)

 இதுக்குத்தான் ஊரில் கத்தரிக்காயை முத்த  விடக்கூடாது  என்பார்கள்...😋😋😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறக்காத கிளிக்கு பட்டுக்குஞ்சம் கட்டும் முயற்சி  🐧

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இதில் உடன்பாடில்லை. துணை இருவருக்கும் திருமண நாளில் இருந்து தேன்நிலவு தான்.. வாழ்வின் முடிவு வரை. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

பறக்காத கிளிக்கு பட்டுக்குஞ்சம் கட்டும் முயற்சி  🐧

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தேன்+நிலவு என்றால் என்ன சாமி :)

Nellie and Joe Graham, NI's 'oldest married couple'

Nellie and Joe Graham

https://www.bbc.co.uk/news/uk-northern-ireland-48121313

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

பறக்காத கிளிக்கு பட்டுக்குஞ்சம் கட்டும் முயற்சி  🐧

சும்மா நகைச்சுவைக்காக எழுதுகிறேன். ஊரில முந்தி கடிப்பான்கள்: "செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு"

On 4/30/2019 at 9:45 AM, தமிழ் சிறி said:

25 - 30 வயதில்... கலியாணம் கட்டும்  போது,  அவ்வளவு அனுபவம் இருக்காது. 😎
"குருட்டுப் பூனை...  விட்டத்தில்  பாய்ந்த மாதிரி"   இருக்கும். :grin:

இரண்டாவது  தேனிலவின்  போது.... 
தம்பதிகள்... நன்றாக அனுபவம் வாய்ந்தவர்களாக மாறி விடுவதால்.... 
எல்லோருக்கும்... இரண்டாவது,  தேனிலவு  தேவை.  🤣

இது உண்மைதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தேன்+நிலவு என்றால் என்ன சாமி :)

  தேன்+நீ லவ்வு எண்டால்  ஆணும் பெண்ணும் எங்கையும் போய் அமைதியாய் நித்திரை கொண்டுட்டு வாறது.......கேக்கிறாரு பார் கேள்வி....:cool:

Romance Couples GIF - Romance Couples Anime GIFs

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

ராஜா புதுமாப்பிள்ளைக்கே இந்தக் கேள்வி வரலாமே?

ஹாஹா பெரிய கட்டைகள் இதுக்க பிரண்டு அடிக்க சும்மா எட்டிப்பார்த்துவிட்டு செல்லலாம் என்று  ஒரு கேள்வி கேட்டுப்போனதுதான் 

 

8 hours ago, விசுகு said:

 இதுக்குத்தான் ஊரில் கத்தரிக்காயை முத்த  விடக்கூடாது  என்பார்கள்...😋😋😋

ஆஹான்  கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதான் ஆகணும் 

 

35 minutes ago, குமாரசாமி said:

  தேன்+நீ லவ்வு எண்டால்  ஆணும் பெண்ணும் எங்கையும் போய் அமைதியாய் நித்திரை கொண்டுட்டு வாறது.......கேக்கிறாரு பார் கேள்வி....:cool:

Romance Couples GIF - Romance Couples Anime GIFs

 

ஓ இதானா மேட்டர்  இதுக்கேன் வேற ஊர் போகணும் ஒரு பாயும் ரெண்டு தலையணையும் போதுமே ( தரைதான் சேவ்டி) சாமியோவ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா பெரிய கட்டைகள் இதுக்க பிரண்டு அடிக்க சும்மா எட்டிப்பார்த்துவிட்டு செல்லலாம் என்று  ஒரு கேள்வி கேட்டுப்போனதுதான் 

ஊரடங்குச் சட்டம் பெரிய உதவியாக இருந்திருக்குமே?

இப்போ கறன்ற் கட் வேறை. எல்லா விதத்திலும் உங்களுக்கு சாதகமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

எங்களுக்கு இதில் உடன்பாடில்லை. துணை இருவருக்கும் திருமண நாளில் இருந்து தேன்நிலவு தான்.. வாழ்வின் முடிவு வரை. 😂

இதே நெடுக்கரை ஒரு எட்டு வருசத்துக்கு முன் யாழில் பார்த்ததிற்கும், இப்பொழுது பார்ப்பதற்கும் மலைக்கும் மடுவிற்குமுள்ள வித்தியாசமல்லவா இருக்கு..? சந்தோசம்..!

ஒரு ஆணின் வாழ்க்கையில், பெண் வந்ததும் இத்தனை மாற்றங்களா..? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

இதே நெடுக்கரை ஒரு எட்டு வருசத்துக்கு முன் யாழில் பார்த்ததிற்கும், இப்பொழுது பார்ப்பதற்கும் மலைக்கும் மடுவிற்குமுள்ள வித்தியாசமல்லவா இருக்கு..? சந்தோசம்..!

ஒரு ஆணின் வாழ்க்கையில், பெண் வந்ததும் இத்தனை மாற்றங்களா..? :grin:

இதுக்குத்தான்... "கால்கட்டு"  போட்டால், எல்லாம் சரிவந்திடும் என்று பெரிசுகள் சொல்வார்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இல்லாதான் இல் வாழ்வில் நிம்மதி எது"

அங்குபோயும் மோர்ட்கேட்ஜ் பில்  கார் லோன் கோட்டல் பில் 
என்று புதுசா ஒன்று வர அங்கு போய்  சண்டை பிடிப்பதிலும் விட 
இங்கேயே  சண்டையை போட்டுவிட்டு வேலைக்கு போகலாம்.

இவர்களுக்குத்தான் திருவள்ளுவர் 
ஊடலுக்கு பின் கூடல் என்று மூன்றாம் பாலில் வச்சு இழுத்து இருக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

ஊரடங்குச் சட்டம் பெரிய உதவியாக இருந்திருக்குமே?

இப்போ கறன்ற் கட் வேறை. எல்லா விதத்திலும் உங்களுக்கு சாதகமே.

ஹாஹா ம்ம் ஆனால் ஊருக்குள் நாங்கள் சுற்றி திரிவது வழமை மெயின் வீதிகள் மட்டுமே பூட்டு  கரண்ட் இப்ப கட்டாவதில்லை   சாதகம்தான் ( என்ன ஓர் அக்கறை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா ம்ம் ஆனால் ஊருக்குள் நாங்கள் சுற்றி திரிவது வழமை மெயின் வீதிகள் மட்டுமே பூட்டு  கரண்ட் இப்ப கட்டாவதில்லை   சாதகம்தான் ( என்ன ஓர் அக்கறை)

கரண்ட் இருந்தால் மட்டும் திண்ணைதான் தஞ்சமாக்கும்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா ம்ம் ஆனால் ஊருக்குள் நாங்கள் சுற்றி திரிவது வழமை மெயின் வீதிகள் மட்டுமே பூட்டு  கரண்ட் இப்ப கட்டாவதில்லை   சாதகம்தான் ( என்ன ஓர் அக்கறை)

இவருக்கு எப்படி புரிய  வைக்கலாம்....???😋😋😋😋

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.