Jump to content

உயிர்த்த ஞாயிறுப்படுகொலையும் இந்தியாவும் ஈழத்தமிழர் கதியும்.–அகரமுதல்வன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறுப்படுகொலையும் இந்தியாவும் ஈழத்தமிழர் கதியும்.–அகரமுதல்வன்

jessu.jpg

 

“This who benefits question has even led some to speculate that Gotabhaya himself may have had   a hand in Sunday`s Bombings” – Phi. Miller , (morning star,British newspaper)

தமிழர்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறைகளை மேற்கொண்டால் இலங்கை வல்லரசுகளின் வேட்டைக்காடாக மாறும் என்று 1955ம் ஆண்டில் டாக்டர்.என் .எம்.பெரேரா நாடாளுமன்ற உரையில் எச்சரித்தார்.கிட்டத்தட்ட அறுபத்து நான்கு ஆண்டுகளில் அது முழு உண்மையாக தோற்றம் பெற்றுவிட்டது. இலங்கைத்தீவில் நிகழ்ந்திருக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச்சம்பவங்கள்உலகம் பூராகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டிற்கு பிறகான இத்தனை ஆண்டுகால அமைதியில் மீண்டும் ஆயுதங்கள் அப்பாவி மக்களைக் காவுவாங்கியிருக்கின்றன.

இந்த  மனிதநேயமற்ற குரூரத்தன்மை வாய்ந்த தற்கொலைத்தாக்குதல்களை உள்நாட்டு அமைப்பான தேசிய தவ்ஜீத் ஜமாத் மூலம் தாமே நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற மானுடகுலத்திற்கு எதிரான உலகப் பயங்கரவாத அமைப்பு பொறுப்புக்கூறியிருக்கிறது.கிறிஸ்துவ மதத்தினரின் புனிதநாளை தேர்ந்தெடுத்து அவர்களுக்குரிய வழிபாட்டுத்தலங்களில் இந்தத்தாக்குதல் ஏன் திட்டமிடப்பட்டது?இதன் பின்னணியில் யாருடைய கரங்கள் மறைந்திருக்கின்றன?தெற்காசியப் பிராந்தியத்தில் குறிப்பாக பவுத்தத்தை தனது அரசமதமாக கொண்டிருக்கும் ஒருநாட்டில் உலகை அச்சுறுத்தும் இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதம் ஏன் தலைநீட்டுகிறது?இலங்கைத்தீவில் தோன்றியிருக்கும் இந்தப்பதற்றமான சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த போகும் மேற்குலகத்தின் தொலைநோக்கு ஆசைதான் என்ன?இத்தனை கேள்விகளுக்கு மத்தியில் கொல்லப்பட்ட முந்நூறுக்கும் மேற்பட்டவர்களின் உயிருக்கும்பொறுப்பானவர்கள் இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள்.

இந்தத் தாக்குதலின் விளைவு “நல்லிணக்க அரசு”என பெயரளவில் அழைக்கப்படும் மைத்திரி-ரணில் ஆட்சிக்கு பெரியதொரு நெருக்கடியை வழங்கியிருக்கிறது.மேலும் தமிழர்களின் அடிப்படை வாழ்வுரிமைக்கான போராட்டத்தை தமிழ்ப்பயங்கரவாதம் எனக்கூறி இனப்படுகொலையை நிகழ்த்திய சிங்கள –பவுத்த அரசாங்கம்இந்தத்தாக்குதலை முன்வைத்து தமிழ் –முஸ்லிம் உறவுகளுக்குள்ளிருக்கும் நீண்டகாலப் பகைமையை கூர்தீட்டும்.சமநேரத்தில் தனது சிங்கள பவுத்த மேலாதிக்கத்தையும் வளர்த்தெடுக்கும் என்பது உறுதியானது.

இப்படியொரு படுகொலைத்தாக்குதல் நடைபெறப்போவதனை இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி(NIA)அமைப்பு ராஜந்திர வழிமுறைக்குள்ளால் இலங்கைக்கு அறிவித்திருந்தும் அதுபொருட்படுத்தப்படவில்லை.ஆனால் இப்படியாக வந்ததகவல்கள் போலியானவையா?மெய்யானதா என்று சோதனை செய்வதற்கிடையில் இந்தத் தாக்குதல் நடந்துவிட்டது என இலங்கை அரசதரப்பு அறிவித்திருப்பதானது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.இந்தத்தகவலில் இருக்கும் போலி,மெய் என்கிற பரிசோதனைகளைக் கடந்து உயிர்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில் சிறுபிள்ளைத்தனமான அசட்டையை அரசாங்கம் கடைப்பிடித்திருக்கத் தேவையில்லை.கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள்.ஏனையவர்கள் பவுத்தர்கள் அல்லாத கிறிஸ்துவ சிங்களவர்கள் என்பதனையும் இந்தக் கட்டுரை அடிக்கோடிட்டு சுட்டிக்காட்டவிரும்புகிறது.

இந்தத் தாக்குதல் வெளிப்படுத்தப்போகும் விளைவுகள் யாருக்கு சாதகமாக மாற இருக்கிறது என்பது வரை இலங்கையின் அரசியலில் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம்.நன்கு செப்பனிடப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்க வாய்ப்புண்டு.செப்டெம்பர் -11ம் திகதி என்று அறியப்படும் இரட்டைக்கோபுர தாக்குதல் ஏற்படுத்திய விளைவுகளால் உலகம் பூராகவும் தோன்றிய உலக ஒழுங்கைப் போல இலங்கை அரசியலின் ஒழுங்கு இந்தத் தாக்குதலின் பின்னர் வேறொருவடிவம் கொள்ளும்.

அரசற்ற ஈழத்தமிழர்கள் அரசியல் வெளியில் இன்று கையாலாகதவர்கள்.அவர்களுக்கென்று இலங்கைத்தீவில் சமூக,மத நிறுவனங்கள் கூட இல்லை.ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அவர்களின் பாதுகாப்பு,உயிர்வாழும் உரிமை போன்றவை இந்தத்தாக்குதலின் பேரால் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் மூலம் நெருக்கடியைச் சந்திக்கும்.

இலங்கையின் இராணுவக்கோட்பாடானது அதனது அர்த்தத்தில் தமிழர்களுக்கு எதிரானது.இன்றைய அவசரநிலைப் பிரகடனத்தின் வாயிலாக மீண்டும் அதிகாரம் பெறுகிற இராணுவம் மீண்டும் தமிழ்மக்களை தனது துப்பாக்கி முனையில் நிறுத்தும்.பயங்கரவாத பூச்சாண்டியை தமிழ்மக்களின் மீது சுமத்தி தனது இராணுவ கொடுங்கோன்மையை நிகழ்த்துவதற்கு இந்தத்தாக்குதல் அரண் அமைத்திருக்கிறது.

மேலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான சர்வதேச விசாரணை புறந்தள்ளப்பட்டு சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான கருத்தியல் அம்சம் மேலோங்கப்போகிறது.இந்த இருவேறு நிலைகளும் தமிழர்க்கே தீமையான விளைவுகளைத் தரவல்லது.ஒன்று தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு கிடைக்கவேண்டிய நீதி பறிபோகிறது.இன்னொன்று யாரோ நிகழ்த்திய அநீதிக்கு விசாரணையெனும் பேரில் தமிழர்கள் மீது இராணுவ ஒடுக்குமுறை படரப்போகிறது.

அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பின்னராக ஏற்பட்ட உலக ஒழுங்கின் மாற்றம் போலவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரான இலங்கை அரசியலின் ஒழுங்கும் மாற்றம் காண்கிறது.இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் (Fanatics) குண்டுத்தாக்குதலால் சிங்கள பவுத்த அடிப்படைவாதிகள் மீண்டும் இலங்கை அரசியலை வென்றெடுக்கும் வாய்ப்பு உறுதியாகிவிட்டது.

மக்களைப் பாதுகாக்க தவறிய அரசு என்று குற்றஞ்சுமத்திக்கொண்டு எதிர்வரும் தேர்தலை சந்திக்க தயாராகியிருக்கிறது ராஜபக்ச ஆதரவு அலை. அவசரகால சூழலில் இயல்பாகவே அதிகாரத்தைப்பெறும் இராணுவ ஆளணி மற்றும் மகா சங்கம் ஆகியவை கோத்தபாயவின் பக்கம் திசை திரும்பும் என்பதை ஊகிக்கமுடிகிறது.புலிகளுக்கு பின்னரான இலங்கை அரசியலில் இல்லாமல் போயிருந்த பயங்கரவாத அச்சுறுத்தல் போன்ற சொல்லாடல்கள் மீண்டும் தென்னிலங்கை அரசியலுக்கு கிடைத்திருக்கிறது.இதனை தத்தமது நலன் சார்ந்து உபயோகிக்க இப்போதே இருபெரும் சிங்களக் கட்சிகளுக்கிடையில் போட்டிகள் உருவாகியிருக்கின்றன.

2009ம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் கலைக்கப்பட்ட ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இந்தத்தாக்குதலை நடத்தியிருப்பதாக தாக்குதல்கள் நடந்து சிலமணி நேரங்களுக்குள் இலங்கையின் பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்த கருத்து,கடந்த காலத்தில் இலங்கையில் ஜிகாத் அமைப்பு இருந்ததனை உறுதிப்படுத்துகிறது.அரசின் ஒட்டுக்குழுக்களாக இயங்கிய தமிழ் அமைப்புக்களை விடவும்,அரசாங்கத்தினால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரே அமைப்பாக இந்த இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் இருந்திருக்கிறது. இதனை தமிழர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எதிராக ஆயுதம் தாங்கிய “ஜிகாத்” அமைப்பு இலங்கை அரசு உதவியோடு இயங்கி வருவதாக ஜெனிவா பேச்சுவார்த்தையில் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த காலத்தின் சரி தவறுகளைக் கடந்து இப்போது சர்வதேச பயங்கரவாத அமைப்பை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டிய பொறுப்பு அங்கிருக்கும் சிங்கள –தமிழ் –முஸ்லிம் போன்ற மூவினங்களுக்கும் உண்டு.

இப்படியொரு தாக்குதலை முதலே எதிர்வுகூறியிருந்த இந்தியாவின் புலனாய்வுத் தகவல்களை பொருட்படுத்தாமல் இலங்கை அரசு புறந்தள்ளியமை இராணுவ-ராஜாங்க ரீதியாக இந்தியப்பேரரசுவை அவமதிக்கும் செயலாகும்.பிராந்தியத்தின் பெரும் சக்தியான இந்தியா இந்த விடயத்தில் இலங்கையை எச்சரித்தும்,எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தமை ஆராயப்படவேண்டியது. குண்டுத்தாக்குதல்கள் நடந்து ஓரிரு நாட்களில் சர்வதேச காவல்துறையும் அமெரிக்க புலனாய்வு அமைப்பும் இலங்கையில் களமிறங்கியிருப்பதை இந்தியா கருத்தில் கொள்ளவேண்டும்.யுத்தமுடிவுக்கு பின்னர்  சீனாவிற்கு தன்னை ஒப்புக்கொடுத்த இலங்கைத்தீவில் இன்று மேற்குலகப் பேரரசுகளுக்கு கதவு திறந்திருக்கிறதுஇந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்.எப்போதும் இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் இறுக்கமான நேசப் பிணைப்பை கொண்டிருக்கும் சிங்கள ஆட்சியாளர்களையும் இலங்கை பவுத்த அரசியலையும் இந்தியாவின் அயலக கொள்கைவகுப்பாளர்கள் சரியாக இனங்கண்டுகொள்ளவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட கிறிஸ்துவர்களுக்காய் ரோம் முதற்கொண்டு உலகெங்கும் உள்ள கத்தோலிக்க நாடுகள் பிரார்த்தனையில் ஈடுபட்டன.உலகம் பூராகவும் அப்பாவி மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைக்கு எதிராக அணிதிரண்டு தமது கண்டனங்களை தெரிவித்தன.இறந்தவர்களை காப்பாற்ற முடியாது. எனிலும் இப்படியான உலகத்தின் அனுதாபங்களும் உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களை பலப்படுத்தும்.

ஆனால் இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது அரைநூற்றாண்டு காலமாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு உலகம் ஏன் செவிசாய்க்கவில்லை.இலங்கையில் தேவலாயங்கள், வணக்கஸ்தலங்கள் குண்டுகளாலும் குருதியாலும் மூழ்கடிக்கப்படுவது இது முதல்தடவையன்று.சிங்கள ஆட்சியாளர்கள் நிகழ்த்திய பெரும்பான்மை படுகொலைகள் இப்படித்தான் நடந்தேறின.ஆனால் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட கிறிஸ்துவ மக்களுக்காய் பிரான்ஸ் ஈபிள் கோபுரத்தின் விளக்குகளை அணைத்து தனது அஞ்சலியை செலுத்துகிறது.இது உலகத்தின் கவனத்தை ஈர்த்தவிடயம்.ஆனால் இத்தனையாண்டு காலமாக ஈழத்திலுள்ள இந்துக்கோவில்கள் மீது இலங்கை அரசினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் வகை தொகையின்றி வேட்டையாடப்பட்டனர்.கோவில்கள் இடிக்கப்பட்டன.இப்படியானவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலாவது இந்தியாவின் ஒரு தெருவிளக்காவது அணைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதா?பெரும்பான்மையாக இந்துக்களாக அடையாளம் காணப்படும் ஈழத்தமிழ் மக்களின் படுகொலைகளை இந்துநாகரீகம் கொண்ட இந்தியா ஏன் ஒருபொழுதும் கண்டிக்காமல் போகிறது? அங்கிருக்கும் தமிழர்களை அழிப்பதில் பவுத்த சங்கங்கள் காட்டும் தீவிரம் எதன்  பின்னணியில்கருக்கொண்டிருக்கிறது என்பதைக் கூட ஏன் இன்னும் இந்தியத்தரப்பு ஆராயவில்லை?இன்றைக்கு இந்தியாவில் ஆட்சிபீடத்தில் இருக்கும் பா.ஜ.கஇந்தப்பிரச்சனையை கூர்மையோடு அணுகவேண்டும் என்பதே இந்தக்கட்டுரையின் கோரிக்கை.

நிகழ்ந்திருக்கும் இந்தக்குண்டுத்தாக்குதலில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள்கொல்லப்பட்டனர். முன்னைய காலங்களைவிடவும் சமகாலத்தில் தமிழ்-முஸ்லிம் முரண்கள் அதிகரித்திருக்கும் மட்டக்களப்பு பகுதியில் கொல்லப்பட்ட அனைவரும் தமிழர்கள்.இன்றைய நாள்வரைக்கும் கொழும்பின் ஏதோவொரு பகுதியில் குண்டுகள் வெடித்துக்கொண்டே இருக்கின்றன.கைதுகள் நடந்தபடியிருக்கின்றன. இலங்கை மீண்டும் சோதனைச்சாவடிகளுக்குள் தனது நாட்களை சந்திக்கத்தொடங்கியிருக்கிறது.சமூக மத நிறுவனங்கள் ஏதுமற்று கதியற்ற தமிழர்களின் பரிதாபம் சர்வதேச சக்திகளாலும் சர்வதேச பயங்கரவாதிகளாலும் அதிகரிக்கப்படுகிறது என்பதே இந்தத்தாக்குதல் புதிதாக கையளித்திருக்கும் இரத்தம் தோய்ந்த அத்தியாயம்.

அகரமுதல்வன்

 

https://m.jeyamohan.in/121421#.XMiWqC_TWaM

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.