Jump to content

வேண்டாம் வெளிநாட்டுப் படைகள் – ஐ.நாவிடம் கூறினார் சிறிலங்கா அதிபர்


Recommended Posts

வேண்டாம் வெளிநாட்டுப் படைகள் – ஐ.நாவிடம் கூறினார் சிறிலங்கா அதிபர்

 

Miguel-Angle-Moratinos-maithri-300x200.jசிறிலங்காவில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நாவிடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, ஐ.நா பொதுச்செயலர், தமது சிறப்புப் பிரதிநிதியாக, நாகரீகங்களின் கூட்டமைப்புக்கான ஐ.நா உதவிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினசை, கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஐ.நா உதவசிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினஸ் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, அவர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, நிலைமைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வர துரிதமாக நடவடிக்கை எடுத்தமைக்கு சிறிலங்கா அதிபருக்கு  வாழ்த்து தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபரின் நடவடிக்கைகளை பாராட்டிய ஐ.நா உதவிச்செயலர், இஸ்லாமிய தீவிரவாதத்தை அகற்றும் இந்த முயற்சிகளுக்கு அனைத்துலக சமூகம் தோள்கொடுக்கும் என குறிப்பிட்டார்.

அத்துடன், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு நிபுணத்துவ உதவிகளை வழங்க, தீவிரவாத முறியடிப்பு நிபுணர்களின் குழுவொன்றை ஐ.நா பொதுச்செயலர் கொழும்புக்கு அனுப்பவுள்ளார் என்றும் ஐ.நா உதவிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினஸ் தெரிவித்தார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் முன்னாள் தலைவரான மிக்வேல் ஏஞ்சல் மொராடினஸ், தமது நாடான ஸ்பெய்னும் கூட 2004இல் அல்கெய்டா தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு அமைதியான நட்பு நாடுகளான சிறிலங்காவும் ஸ்பெய்னும், தீவிரவாதிகளால் இலக்கு வைக்கப்பட்டமை ஏமாற்றம் அளிக்கிறது என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிடுகையில்,  இந்த இக்கட்டான சூழலில்  ஆதரவு வழங்க முன்வந்த ஐ.நா பொதுச்செயலருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

“தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு நிபுணத்துவம் மற்றும் ஏனைய உதவிகள் தேவைப்படுகின்றன.

ஆனாலும், சிறிலங்கா படையினர் போதுமான திறனைக் கொண்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டுப் படையினர் தேவையில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

Miguel-Angle-Moratinos-maithri.jpghttp://www.puthinappalakai.net/2019/05/01/news/37729

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

சிறிலங்காவில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நாவிடம் தெரிவித்துள்ளார்.

அரச பயங்கரவாதக் கட்டமைப்புகள் ஊடாக செய்த சதித்திட்டங்களை, சமூக விரோத  செயல்களை, சட்டவிரோத விரோத நடவடிக்கைகளை, அடித்த கொள்ளைகளை மறைக்க இதைவிட்டால் வேறு வழியில்லை!

Link to comment
Share on other sites

இவை யாவும் கற்பனையே !
ஆண்டு 2098 : இலங்கை தீவு 64000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நாடாக இருந்து புவி வெப்பமடைந்து கடல் நீர்மட்டம் உயர்ந்தமையால் இப்பொழுது  59000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நாடாக உள்ளது.

நாட்டில் மூன்று வேறு இனமக்களை காணக்கூடியதாக உள்ளது. கருப்பு தோல் கொண்டவர்கள் அதிகமாகவும் ஐரோப்பிய பூர்வீகத்தை கொண்டவர்கள் மற்றும் மஞ்சள் தோலைக்கொண்டவர்களும் காணப்படுகின்றனர்.

காவி உடை போர்த்தியவர்கள் ஆங்காங்கே வெள்ளை உடுப்பு போட்டவர்களுடன் விவாதத்தில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது. மீண்டும் 1948 மாசி மாத நிலைக்குள் சென்றுவிட்டதாக கூறுவது போலுள்ளது.

பெரும்பான்மை மக்கள் கையில் சீனாவில் செய்து அமெரிக்காவில் வடிவமைத்த ஐபோனுடன் லீவைஸ் ஜீன்ஸ் அணிந்திருப்பத்தையும் பிஸ்ஸா மற்றும் பேர்கர் உணவு சாலைகளை அதிகமாக உள்ளன. ஓடும் வாகனங்களில் சாரதிகள் இல்லை. வானத்தில்  பறவைகள் இல்லை ஆனால் டரோன்கள் பறக்கின்றன.

வழிபாட்டுத்தலங்கள் செறிச்சோடி இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது,. அதேவேளை கணிசமான மக்கள் அன்றாட வாழ்க்கைக்கும் வசதி இல்லாமல் இருக்கின்றார்கள்.

ஆனால் சிங்க கோடி மட்டும் அதே இடத்தில் பறந்த வண்ணம் உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுப் படைகள் வெளிப்படையாக இல்லாமல்.. ரகசியமாக தாராளமாக வரலாம். இதுதான் சொறீலங்கா ஆட்சியாளர்களின் நிலைப்பாடு எப்போதும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.